என் மலர்
நீங்கள் தேடியது "புதிய பஸ் நிலையம்"
- ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
- 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகள் வசதிக்காகவும், செங்கல்பட்டு கோர்ட்டு அருகே மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்த புதிய பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில், 9.95 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய பஸ் நிலையத்தில், 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், 55 கார்கள், 325 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கு போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன.
பஸ் நிலையத்தில் 35 கடைகள், உணவகங்கள், பயணிகளுக்கான ஓய்வறைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படுகின்றன.
இந்த பஸ் நிலைய வளாகத்தில் அரசு பஸ்களுக்கான பணிமனையும் அமைக்கப்படுகிறது. தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் அரசு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
செங்கல்பட்டில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவை நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து மிகுந்த சாலையில் இருப்பதால், செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்படுவதோடு, அரசு பஸ்களின் பணிமனையும் இதே வளாகத்தில் அமைக்கப்படுவதால், இந்த புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் வரும் தீபாவளிக்கு முன்னதாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற தகவல் செங்கல்பட்டு நகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இருட்டில் தவிக்கும் பயணிகள்
- காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறதுஎஎ8520
வேலூர்,
வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும்.
மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் ஒரு நுழைவு வாயில் உள்ளது.மின் சிக்கனத்திற்காக பஸ் நிலையம் முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.
கிழக்கு பகுதியில் செல்லியம்மன் கோவில் அருகே மின்விளக்கு குறைவாக இருக்கும் காரணத்தினால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. அந்த பகுதியில் தற்போது ஒரு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வெளிச்சம் போதுமானதாக இல்லை. காலி இடம் பரப்பளவு அதிகமாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
செல்லியம்மன் கோவில் நுழைவு வாயிலில் மின் விளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. கோவிலுக்கு பின்புறம் பஸ் நிலைய வளாகத்திலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது
காட்பாடியில் இருந்து ரெயில்களில் வரும் பொது மக்கள் இரவு நேரங்களில் புதிய இறங்கி செல்லியம்மன் கோவில் முன்பு பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். நுழைவு வாயில் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.
இதனை தடுக்க செல்லியம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
- மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான பூமி பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-ன் கீழ்
தமிழக அரசு ரூ.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.
புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.
இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாஸ்துபடி 6 லிருந்து 7 மணிக்குள் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலையில், திருக்கடையூர் மகேஷ் குருக்கள், பாலச்சந்திர சிவாச்சாரியார் ஆகியோர் பூஜை செய்ய தருமபுர ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினரும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விஜய், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்வு முகாம் இன்று காலை நடந்தது. முகாமிற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திற னாளிகளுக்கு வீடுகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பலர் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஊனத்திற்கு ஏற்ப பெற்று வரும் உதவித்தொகை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை உள்ளிட்ட சலுகைகள் கொண்டு வர அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
அரசு அலுவலங்களில் மாற்றுத்திறனாளிகள் நடப்பது சிரமமாக உள்ளது. எனவே அவர்கள் எளிதாக செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புக்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தொழில் பயிற்சி பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பதிலளித்து பேசுகையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கி தருவது தொடர்பாக மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அனுமதி கிடைக்கப்பெற்ற பின் கடைகள் ஒதுக்கப்படும். வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்பாக மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பட்டா கேட்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிக்கான கடன் தள்ளுபடி குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் மேலும் உங்களது கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
- கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மந்தை தெற்கு தெருவில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கொட்டாம்பட்டி கூட்டுறவு சங்க பதிவாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் வெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கொட்டாம் பட்டி பகுதி வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வருகிறேன். இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.5 கோடி அரசு ஒதுக்கி உள்ளது என்றார்.
மேலும் கொட்டாம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் 2400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலு வலர் முருகேஸ்வரி, மேலூர் மேலாண்மை இயக்குனர் பாரதிதாசன், கொட்டாம்பட்டி கூட்டு றவு சங்கத் தலைவர் வெங்கடாசலம், மேலூர் வட்ட வழங்க அலுவலர் அரவிந்தன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் அன்பரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.
- அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாநகர புதிய பஸ் நிலையம் செல்வதற்கு அதிக தூரம் இருப்பதால் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திருமணத்தை திரும்ப பெற வேண்டும். கடலூர் மாநகராட்சிக்கு அளித்துள்ள வல்லுனர் குழு அறிக்கை தவறான தகவலை கொடுப்பதால் திரும்ப பெற வேண்டும். கொண்டங்கி ஏரி அருகில் பஸ் நிலையம் அமைத்ததால் சுற்றுச்சூழல் மாசுபடும். கலெக்டர் அலுவலகம் அருகே வெள்ள அபாய பகுதி என கூறி பஸ் நிலையம் அமைப்பதை தடுக்க கூடாது.
புதிய பஸ் நிலையம் அமைக்க பொருத்தமான இடம் கிடைக்கும் வரை தற்போது உள்ள பஸ் நிலையத்தை நவீனப்படுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர், அனைத்து பொது நல அமைப்புகளின் செயலாளர் ரவி, பொது நல அமைப்பு தலைவர் திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜ், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, தமிழ்நாடு மீனவர் பேரமைப்பு தலைவர் சுப்புராயன், தனியார் பஸ் பேருந்து தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
- ஏ.டி.எம். அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் 9.25 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.53.13 கோடி செலவில் கட்டப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
புதிய பஸ் நிலைய வளாகத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன.இதில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த ப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கடை எண் 16 ஒதுக்கப்பட்டுள்ளது. கடையின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. 540 சதுரடி, 800 சதுரடி, 1,200 சதுரடி மற்றும் 1,600 சதுரடி கொண்ட பெரிய கடைகளும் உள்ளன.
வேலூர் மாநகராட்சி டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இதன் விளைவாக, புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.
பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை.
இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கி அவதிப்படுகின்றனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடைகள் வெகுதூரத்தில் இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதையும் தவிர்க்க முடியவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-
கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கான அடிப்படை விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விண்ணப்ப தாரர்களிடம் இருந்து டெண்டர் கோரும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும்.
புதிய பஸ் நிலையத்தில் தரை தளத்தில் 1,800 சதுர அடி மற்றும் 900 சதுர அடி அளவில் 2 உணவகங்களும் வருகின்றன. தவிர, ஆவின் விற்பனை நிலையங்களும் இருக்கும்.
ஒரு மருந்தகம், காலணிகள், ஆடைகள் மற்றும் ஆடம்பரமான பொருட்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஒரு பேக்கரி அமைய உள்ளது. புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபடுகிறது.
இந்த புதிய கடைகளில் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றனர்.
- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
- 83 கடைகளில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இதில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளன.
வேலூர் மாநகராட்சி டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இதன் விளைவாக, புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.
பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை. இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கி அவதிப்படுகின்றனர்.
புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தபடுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடுவதற்கு எதிராக கோர்ட்டில் 14 வழக்குகள் தொடரப்பட்டது. இதை பல கட்டங்களாக மாநகராட்சி எதிர்கொண்டது. ஒரு வழியாக அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.
வருகிற 25-ந் தேதி புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் விட அறிவிப்பு செய்யப்ப ட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த தடையும் இல்லை. ஏலம் முடிந்து கடைகள் கண்டிப்பாக இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என்றார்.
- தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக நாமக்கல் விளங்குகிறது.
- இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ,வெளிநாடுகளுக்கும் தினமும் 4.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக நாமக்கல் விளங்குகிறது. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ,வெளிநாடுகளுக்கும் தினமும் 4.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது .
முட்டை ஏற்றுமதியில் நாமக்கல் மண்டலம் முன்னிலை வகிக்கிறது. அதேபோல கறிக்கோழி ஏற்றுமதியில் தமிழகத்தில் நாமக்கல் மண்டலம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் லாரி தொழிலிலும் நாமக்கல் முக்கிய இடத்தை பிடித்து உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து அதிக அளவில் நாமக்கல் நகருக்குள் லாரிகள் வந்து செல்கின்றன.
மேலும் நாமக்கல் வழியாக திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர் ,ஓசூர் ,பெங்களூர், கோவை ,திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் இருந்து மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் நாமக்கல் நகரில் முக்கிய சாலையான சேலம் சாலை, மோகனூர், திருச்சி சாலை மற்றும் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து நகரின் வெளிப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை மாவட்ட தி.மு.க.செயலாளரும் எம்.பி.யுமான ராஜேஷ்குமார் , அமைச்சர் மதிவேந்தன், ராமலிங்கம் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சா லையில் முதலைப்பட்டி பைபாஸ் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 20 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது . சேலம், தர்மபுரி, மதுரை , திருச்சி, நாகை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையம் பிரமாண்டமாக ரிங் ரோடு வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4 நடைமேடைகளுடன் 60 பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் நிற்கும் வகையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணிகள் அமர நவீன இருக்கைகளுடன் கட்டிடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளது .
இந்த பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்கும்
வகையில் திட்டமி டப்பட்டுள்ளது.இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் போது நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மொத்தம் 84 கடைகள் உள்ளது
- கடைகளை ஏலம் விடுவதில் மாநகராட்சி தாமதம்
வேலுார்:
வேலுார் மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கிலும், பயணிகள் வசதிக்காகவும், வேலுார் புது பஸ் நிலையத்தில் தரை மற்றும் முதல் தளத் தில் 84 கடைகள் கட்டப்பட்டன.
இவற்றின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. இதுதவிர, பரப்பளவு அதிகமாகவும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு கட்டப்பட்ட கடைகள் பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட ஏற்பா டுகள் செய்யப்பட்டது. முதல்கட்டமாக இந்த கடைகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏலம் நடத்த மாநகராட்சி திட்டமிட்டது.
தொடர்ந்து திட்டமிட்டு கொண்டே இருக்கும் மாநகராட்சி இன்று வரை கடைகளை ஏலம் விடவில்லை.
இந்த நிலையில் பஸ் நிலையத்தில் 66-ம் எண் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "புதிய பஸ் நிலையத்தில் கடந்த முறை கடை வைத்திருந்தவர்கள் புதிய கடைகள் கட்டி ஏலம் விடுவதற்கு முன்னதாக தங்களுக்கு கடைகளை வாடகை விடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
கோர்ட் உத்தரவின்படி வழக்கு தொடர்ந்தவர்க ளுக்கு குலுக்கல் முறை யில் கடைகள் ஒதுக்க, கடந்த நவம்பர் மாதம் கடைகளுக்கான குலுக்கல் நடந்தது. இதில் 4 பேர் கலந்து கொண்டனர்.
குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
குலுக்கலின் முடிவின்படி அருண் குமார் என்பவருக்கு தரை தளத்தில் 66-ம் எண் கடையும் மற்ற 3 பேருக்கு முதல் தளத்தில் கடையும் ஒதுக்கப்பட்டது.அருண் குமார் மட்டும் கடையை ஏற்றுக் கொண்டார்.
மற்ற 3 பேரும் முதல் தளத்தில் கடை வேண்டாம் என்று கூறிவிட்டனர். அதன்படி அருண்குமாருக்கு கடை ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
- ஆம்னி பஸ், லாரிகள் நுழைய அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட வேண்டும்.
- இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம்
கீழக்கரையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் கீழக்கரை கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி சார்பில் மனு அளித்தனர்.
இது குறித்து அந்த நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி அவைத்தலைவர் சீனா தானா (எ) செய்யது அப்துல் காதர் தலைமையில் குழுவினர் கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து கீழக்க ரையில் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த வி. ஏ. ஓ. அலுவலகம் மற்றும் பீசா பேக்கரி பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து கண்காணிப்பதோடு அதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஊருக்குள் வரும் கனரக வாகனங்கள், லாரிகள், ஆம்னி பஸ்களை ஊருக்குள் அனுமதிக்காமல் புதிய பஸ் நிலையத்திற்குள் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.
திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி செல்லும் தொலைதூர பஸ்கள் கீழக்கரை புதிய பஸ் நிலையம் வரை வந்து செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். விரைவில் கீழக்கரையில் போக்குவரத்து காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம், துணை தலைவர்கள் உமர் களஞ்சியம், செய்யது அபுதாஹிர், பொருளாளர் ஷபீக், சமூக ஆர்வலர் ஜஹாங்கீர் ஆலிம், ஏர்வாடி தீயணைப்பு நிலைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் கூறு கையில், கலெக்டரின் அறிவுரையின்படி, முதற்கட்டமாக நகராட்சி சேர்மன், அதிகாரிகள், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு தீர்மானிக்கப்படும். அதன் பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் உள்ளே செல்வதற்கு தடை ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது என்றார்.
- தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இருக்கையின்றி நின்று கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருச்சி, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டு மின்றி அண்டை மாநில மான கேரளா விற்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கேரளா பகுதிக ளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தினுள் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் கேரளாவிற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு இருக்கையின்றி நின்று கொண்டே இருக்கும் சூழ்நிலை மற்றும் அருகில் இருக்கும் மற்ற சுவர்களில் வயது முதிர்ந்தவர்கள் ஏறி அமரும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அதிலும் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவசரத் திற்கு அவர்கள் தரையில் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக் கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி கேரளா செல்லும் பஸ்கள் இயக்கப்படும் பகுதியில் கூடுதல் அமரும் இருக்கைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.