search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.
    • போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உதவி ஆய்வாளர் விஜய் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது போலீசை கண்டதும் கஞ்சா பொட்டலங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

    அவர் மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த பசுபதி (28) என்பதும், இவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டதுடன், வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருணாச்ச லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கரூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு ெரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்புற பகுதியில் சாலையோரம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கரூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 31) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கறம்பக்குடியில் தாமிர கம்பிகளை திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி வாணியத்தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 62). இவருக்கு சொந்தமான குடோனில் இருந்த தாமிர கம்பிகளை காணவில்லை. இது குறித்து அவர் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் தாமிர கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.



    • தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பென்சில் பேக்டரி பஸ் நிலையத்தில் மீன்பாடி வண்டியில் தூங்கி கொண்டிருந்தார்.
    • கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    சென்னை:

    தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்பவர் பென்சில் பேக்டரி பஸ் நிலையத்தில் மீன்பாடி வண்டியில் தூங்கி கொண்டிருந்தார். முன்விரோதம் காரணமாக அவரை வினோத்குமார், பாபுலால் ஆகியோர் தண்டவாளம் பக்கமாக இழுத்து சென்று கல்லால் தாக்கினர். அவரை கொலை செய்ய முயற்சி செய்து பின்னர் அங்கிருந்து ஓடி விட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சுரேஷ்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் மேம்பாலத்திற்கு கீழே நின்ற வினோத்குமார், பாபுலால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே விற்பனைக்காக 80 கிராம் கஞ்சா வைத்திருந்த வெள்ளகோவில், தீரன் சின்னமலை நகர் பகுதியை சேர்ந்த பழனிகுமார் மகன் ஸ்ரீநாத் (23,)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வெள்ளகோவில் போலீசார், அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுவையில் இருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.
    • சுப்பரமணியிடம் சந்தனகட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்?, இவர் அதனை கொடுக்க வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பனையபுரம் சோதனை சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் படி விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை சூப்பிரண்டு பழனி தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 7 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் துண்டு துண்டாக இருந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், புதுவை மாநிலம் சோரப்பட்டு மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பரமணி (வயது 52) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த பையை எடுத்துச் சென்று பனையபுரம் பெட்ரோல் பங்க் அருகில் நிற்பவர்களிடம் அளித்து வந்தால் கூலி தருவதாக ஒருவர் கூறியதும், அதனால் இந்த பையை சுப்பரமணி எடுத்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து புதுவையில் இருந்து சுமார் 7 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை கடத்தி வந்த சுப்பரமணியை வன சரக அலுவலர்களிடம் போலீசார் ஓப்படைத்தனர்.

    மேலும், சுப்பரமணியிடம் சந்தனகட்டைகளை கொடுத்து அனுப்பியவர் யார்?, இவர் அதனை கொடுக்க வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் 1-வது வார்டு செட்டியார் வீதியை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் கடந்த 10-ந்தேதி இரவு 11 மணியளவில் லுங்கியுடன் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து, அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை கண்ட மருத்துவமனை பணியாளர் ஒருவர் மணிகண்டனை தடுக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மருத்துவமனை பணியாளரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து பிடிக்க ஓடிய மருத்துவ பணியாளருக்கு, மணிகண்டன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இதையடுத்து அந்த நர்சு தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, பலாத்காரம் செய்ய முயன்ற மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு முன்னதாக மணிகண்டன் பெரம்பலூர் உப்போடையில் டாஸ்மாக் பாரில் ஊழியர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • அரியலூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டார்
    • மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று கோமதியை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர்ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சிலம்பூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோமதி (வயது 41). இவர் மதுபானங்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்று வந்தாக கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோமதி தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் மீது ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட மது குற்ற வழக்குகள் உள்ளது. இதன் காரணமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று கோமதியை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர்ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    • மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து பொம்மை வியாபாரி பாலமுருகனை தேடி வந்தார்.
    • நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவன் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

    இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி பிரிந்து வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பாலமுருகன் ஊர் ஊராக சென்று திருவிழா கூட்டங்களில் பொம்மை விற்கும் தொழில்செய்து வந்தார்.

    இவர் கடந்த ஆண்டு பண்ருட்டி அம்பேத்கர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி வியாபாரம் செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும்13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தியுள்ளார். பின்னர் சிறுமியை பழனிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமியை உளுந்தூர்பேட்டையில் விட்டு விட்டு தலைமறைவானார்.

    இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் செய்தனர். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து பொம்மை வியாபாரி பாலமுருகனை தேடி வந்தார். நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவுபடி பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா சிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து டி.எஸ்.பி. குழு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, தனிப்படை போலீஸ்காரர்கள் ஆனந்த், ராஜி, கணேசமூர்த்தி ஆகியோருடன் தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று திருவிழா கூட்டங்களில் வலை வீசி தேடினர். பாலமுருகனின் செல்போன் இந்தி வாலிபர் ஒருவரிடம் ரூ.800-க்கு விற்றது தெரிய வந்தது. வெறும் புகைப்பட ஆதாரத்துடன் சுற்றி வந்த தனிப்படை போலீசாருக்கு அவன் இருக்கும் இடம் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து பாலமுருகனை சுற்றி வளைத்து கைது செய்த தனிபடையினர் அவரை பண்ருட்டிக்கு அழைத்து வந்தனர். பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத காலமாக கிடப்பில் கிடந்த சிறுமி பாலியல் குற்றவாளியை அதிரடியாக கைது செய்த பண்ருட்டி போலீசாருக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.

    • கொள்ளை கும்பல் பயன்படுத்திய ஒரு மொபட், கிரிக்கெட் பேட் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைதான வாலிபர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காணலாம்.

    பவானி:

    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் என்பவர் நடத்தி வரும் இந்த சிகிச்சை மையத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த சிகிச்சை மையத்தில் நேற்று இரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த சிகிச்சை மையத்தின் உள்ளே புகுந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கிரிக்கெட் மட்டை மற்றும் பெரிய கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பணியாற்றி கொண்டு இருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கழுத்தில் கத்தியை வைத்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்தனர்.

    இதை தொடர்ந்து உரிமையாளர் கீர்த்தன் இந்த நிறுவனத்தின் உள்ளே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நிறுவனத்தில் புகுந்து பணம் மற்றும் நகை பறித்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உரிமையாளர் கீர்த்தன் உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் கிடைத்த தும்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூடப்பட்டு இருந்த ஷெட்டரை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை கிரிக்கெட் பேட்டாலும், கத்தியாலும் தாக்கி 4 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் மற்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை கும்பல் பயன்படுத்திய ஒரு மொபட், கிரிக்கெட் பேட் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் அவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கவுதம் என தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய 4 பேர் குறித்து லட்சுமி நகர் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க தேடுதல் பணியில் தீவிரபடுத்தி உள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அந்த நிறுவன பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதிக நடமாட்டம் உள்ள லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் கொள்ளை கும்பல் உள்ளே புகுந்து கிரிக்கெட் மட்டை மற்றும் பெரிய கத்தியுடன் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகை பறித்துச் சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்தும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை கும்பல் நடத்திய முதல் சம்பவமா? அல்லது வேறு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.கைதான வாலிபர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காணலாம்.

    • தனிப்படை போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • தாமோதரன் மீது காஞ்சிபுரம் சித்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் அடுத்த இ.பி. கூட்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து கடையில் மது விற்பனை மூலம் வசூலான ரூ. 2 லட்சத்து 57ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது பைக்கில் காட்பாடி நோக்கி சென்றார்.

    அவரை பின்தொடர்ந்து மர்ம கும்பல் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென அசோக்குமார் வாகனத்தை மறித்து அவரை தாக்கினர்.

    அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    திருவலம் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து 3 பேரை தேடி வந்தனர்.

    தனிப்படை போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    திருவலம் பகுதியில் உள்ள கேமராவில் கொள்ளையர்கள் 3 பேர் உருவங்கள் பதிவாகி இருந்தது. இதன்மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் அவர்கள் ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன் என்கிற குட்லு ( வயது 32), காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் தாமோதரன் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சரவணன் மீது சென்னை முக்தியால்பேட்டை, திருத்தணி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    தாமோதரன் மீது காஞ்சிபுரம் சித்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×