search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மின்னல் ராஜா( 36) என்பது தெரிய வந்தது .
    • திடீரென கத்தியை காட்டி, அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பியோட முயன்றார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்தவர் கணேச மூர்த்தி (வயது 52). இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- கணபதிபாளையம் ரோட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த ஒருவர் திடீரென கத்தியை காட்டி, அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பியோட முயன்றார்.

    இதற்குள் கணேசமூர்த்தி திருடன் திருடன் என சத்தம் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மின்னல் ராஜா( 36) என்பது தெரிய வந்தது .இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 25) , பனியன் தொழிலாளி.
    • உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன்(22), மணிரத்தினம்(29),காமராஜ்(29) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 25) , பனியன் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை தட்டிக்கேட்ட அவரை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவரை தாக்கிய உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன்(22) ,மணிரத்தினம்(29) ,காமராஜ்(29) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகராறில் அய்யப்பன், தனது கூட்டாளியான ராஜி என்கிற குள்ள ராஜூடன் சேர்ந்து ஜோசப்பை அரிவாளால் வெட்டினார்.
    • கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி அய்யப்பனை கைது செய்தனர்.

    அம்பத்தூர், பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். ரவுடியான இவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது.

    அய்யப்பனுக்கும் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த சோகன் ஜோசப்(23) என்பவருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் அய்யப்பன், தனது கூட்டாளியான ராஜி என்கிற குள்ள ராஜூடன் சேர்ந்து ஜோசப்பை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி அய்யப்பனை கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவனது கூட்டாளியான ராஜியை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாலக்காபாடி ஆற்றுபாலம் அடியில் 2 பேர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டியை அடுத்த மாலக்காபாடி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மாலக்காபாடி ஆற்றுபாலம் அடியில் 2 பேர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். உடனே போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    இதில் குருமியம்பட்டியைச் சேர்ந்த அலெக்சாண்டர் (வயது25), மாலக்காபாடியை சேர்ந்த சூர்யதீபக் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறை அடைத்தனர்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று எனது 3 வயது மகள் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எங்களது வீட்டின் அருகே வசிக்கும் 16 வயது சிறுவன் எனது மகளை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அவர் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். எனது மகள் சத்தம் போடவே சிறுவன் அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

    பின்னர் எனது மகள் அழுதபடியே வீட்டிற்கு வந்தார். என்ன நடந்தது என்று கேட்ட போது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.

    மதுரை

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்று அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சமூக விரோதிகள் வழிப்பறி, நகை பறிப்பு, பணம் பறித்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் தைரியமாக ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பயமின்றி சித்திரை திருவிழாவுக்கு செல்ல முடியவில்லை.

    இந்தநிலையில் திருவிழா வின்போது வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை முடக்கத்தான் தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் சின்னான் (வயது53). இவர் சம்பவத் தன்று கள்ளழகரை தரிசிப்பதற்காக வெளியே சென்றார். ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000 பறித்துச் சென்றது.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணம் பறிப்பில் ஈடுபட்டது பி.பி.குளம், முல்லை நகர், செல்வம் மகன் சுபாஷ் (வயது 21), ஆத்திகுளம், அங்கயற்கண்ணி காலனி, ராமராஜ் மகன் சுந்தரேஸ் வரன் ( 22), மீனாம்பாள்புரம், பாரதிதாசன் தெரு, முருகன் மகன் சந்தோஷ் (19) மற்றும் முல்லை நகர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சித்திரை திருவிழாவுக்கு வந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்ததாக சோலையழகு புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை விளக்குத்தூண் போலீசார் கைது செய்தனர்.

    • சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
    • தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக கருதப்படுவது சாட்ஜிபிடி.

    இங்கு சாட் ஜி.பி.டி. எனும் செயற்கை நுண்ணறிவு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக, விரிவாக பதில்களை அளித்து விடும்.

    இது தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினாலும் அதில் அதிக ஆபத்துகளும் உள்ளன என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சாட் ஜி.பி.டி.யை தவறாக பயன்படுத்தியதற்காக சீனாவில் முதல் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் ரெயில் விபத்தில் 9 பேர் பலியான தாக இணையத்தில் போலி செய்தி ஒன்று பரவியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலி செய்தியை பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஹாங் என்ற குடும்பப் பெயர் கொண்ட சந்தேக நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

    தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகள் சீனாவில் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

    அதன்பிறகு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஹாங், போலி செய்திகளை உருவாக்கி அவற்றை தனது கணக்குகளில் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    • கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
    • திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் காந்தி புரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி இந்திரா. இவர் திருவள்ளூர் நகராட்சி 16-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    இவரது மகன் கலைவாணன். இவர் தி.மு.க.வில் நகர மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 4-ந்தேதி கலைவாணன், வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியா வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கலைவாணனுக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த திருவள்ளூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், சந்தோஷ், சந்துரு என்கிற சந்திரசேகர், மற்றும் ஒரு சிறுவன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.

    • வாலிபரிடம் தகராறு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மது அருந்திய போது நடந்த சம்பவம்

    கரூர்.

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மணல் மேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், (வயது 38) கூலி தொழிலாளி. இவர், அரவக்குறிச்சி அருகே டெக்ஸ் பார்க் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது கவுதம் (26), பிரவின் (26), ராகுல் (23), ஜீவானந்தம் (20), சுதர்சன் (21) ஆகிய 5 பேர், சக்திவேலுவிடம் தகராறு செய்து மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
    • மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் பகுதியில் நேற்று முன்தினம் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள்.

    படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த படகுக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை படகு உரிமையாளர் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    விபத்து நடந்ததும் படகு உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சிக்னல் மூலம் போலீசார் அவர் மறைந்து இருந்த இடத்தை கண்டு பிடித்து கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

    இதுபோல கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் இந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பொறுப்பு தனூர் டி.எஸ்.பி. பென்னியிடம் வழங்கப்பட்டு உள்ளது. அவர் உடனடியாக விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளார்.

    படகில் 37 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 10 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. 22 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

    இதில் பலியானவர் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இதுபோல மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படுகிறது.

    • கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார்.
    • வீரமணி (வயது 53), ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இணை சார் பதிவாளராக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 53), இதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் ராஜா (39) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கிரயம் செய்த பத்திரம் நிலுவையில் உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இணை சார்பதிவாளர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இணை சார் பதிவாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பிரிவுகளில் கீழ் வீரமணி மற்றும் ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை அருகே சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    பழங்காநத்தம் நேரு நகர் முருகன் மகன் கார்த்தீசுவரன் (23). இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை திருமணம் செய்துள்ளார். அவர் சிறுமி என்பது தெரிந்தும் கட்டாயமாக வல்லுறவு செய்தார்.

    இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமடை ந்தார். அவருக்கு மதுரை ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தீசுவரனை கைது செய்தனர்.

    ×