search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • ரெயிலில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் நடந்திருப்பது மத்திய உளவு துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • அரசின் திறமையின்மை காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தின் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். என்றாலும் ரெயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுதொடர்பாக கேரள ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் ரெயில் பெட்டியின் அருகே கேன்களுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இது தொடர்பான கண்காணிப்பு காட்சிகளை பார்த்த போது, ஒரு கும்பல் தீ வைப்பில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

    இதையடுத்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த நாய், ரெயில்நிலைய யார்டில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு மீண்டும் யார்டுக்கு வந்தது.

    இதற்கிடையே தீப்பிடித்து எரிந்த ரெயில் பெட்டியில் கைரேகை நிபுணர்கள் நடத்திய சோதனையில் 10 கைரேகைகள் சிக்கியது. அதனை போலீஸ் ஆவண காப்பகத்தில் இருந்த கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து குற்றவாளியை அடையாளம் காணும்பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் கண்ணூர் ரெயில் நிலையப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு குப்பைகளை எரித்ததாக வடமாநில தொழிலாளி ஒருவரை ரெயில்வே போலீசார் பிடித்தனர். அந்த நபரின் கைரேகையுடன், தீ பிடித்த ரெயில் பெட்டியில் கிடைத்த கைரேகையை போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.

    இதில் 4 கைரேகைகள் அந்த நபரின் கைரேகையுடன் ஒத்து போனது. இதையடுத்து போலீசார் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு அந்த நபர் பிடிப்பட்டார்.

    அந்த நபரின் பெயர் புஷன்ஜித் சித்கர் (வயது 40). மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் போலீசாரிடம் கூறும்போது, ரெயில் நிலைய பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாகவும், தனக்கு வேறுஎதுவும் தெரியாது என்றும் கூறினார். என்றாலும் போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான புஷன்ஜித் சித்கர், ரெயில் நிலைய பகுதியில் சுற்றி திரிந்தது ஏன்? அவரது கைரேகை தீப்பிடித்த ரெயில் பெட்டியில் இருந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீஸ் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.

    கண்ணூரில் நேற்று தீப்பிடித்து எரிந்த ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2 -ந் தேதி டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற நபர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இப்போது அதே ரெயிலில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் நடந்திருப்பது மத்திய உளவு துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று தீப்பிடித்து எரிந்த ரெயிலின் அருகில் தான் பெட்ரோல் சேமிப்பு நிலையமும், பெட்ரோல் ஏற்றிய டேங்கர் வேகனும் நின்றிருந்தது. அந்த பகுதிக்கு தீ பரவும் முன்பு அணைக்கப்பட்டதால் அங்கு நடக்க இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே நேற்று நடந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.

    கண்ணூர் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த சம்பவத்திற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய உளவு துறையின் நடவடிக்கை காரணமாகவே கேரளாவில் பெரும் விபத்துக்களும், அசம்பாவிதங்களும் தடுக்கப்பட்டு வருகிறது. இல்லையேல் கேரள மக்கள் தினமும் விபரீதங்களை சந்திக்க வேண்டியதிருக்கும், இதற்கு மாநில அரசே காரணம் என்றும் குற்றம் சாட்டியது.

    இதுபோல கேரள காங்கிரஸ் கட்சியும், ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசை குற்றம் சாட்டியுள்ளது. அரசின் திறமையின்மை காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

    • புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரியாக செயல்படுபவர் பாண்டி. இவர் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் கரூர் பைபாஸ் ரோடு தனியார் திருமண மண்டபம் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த, பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சீனிவாசன் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் ஆறு லட்சத்து 57 ஆயிரம் மற்றும் செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றி உள்ளனர்.

    இதே போன்று திருச்சி ஜீவா நகர் அண்ணா தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக மளிகை கடையில் உள்ள பாண்டியன் (வயது47) என்பவரை போலீசார் கைது செய்து அவரிமிருந்து புகையிலைப் பொருட்கள், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கல்லடை அண்ணாநகரில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி ஜல்ஜா (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செஞ்சேரிவலசை சேர்ந்த சதீஷ்குமார் ( 37) என்பவர் அப்பகுதியில் உள்ள காட்டுபகுதியில் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யபட்டார்
    • முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் (வயது 42) . இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டம், கடியாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் மனைவி ராதிகா (28), அதே நிறுவனத்தை சேர்ந்த முகவர் தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சிவா, குமார், பிரபாகரன் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 11 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தி கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை கடந்த 23ம்தேதி அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகியிருந்த முகவர் தர்மலிங்கத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார்
    • ஜெயக்கொண்டம் கிளைச்சிறையில் அடைப்பு

    செந்துறை,

    பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயா (வயது 23). தந்தை இறந்து விட்ட நிலையில் தனது தாயார், தங்கை, தம்பியுடன் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் குடும்ப வறுமை காரணமாக அரியலூரில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 30-ந்தேதி மதியம் உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கடையில் இருந்து சென்றவர் வீடு திரும்ப–வில்லை. இந்தநிலையில் உடை–யார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி கிரா–மத்தில் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி–னார்.

    விசாரணையில் தஞ்சா–வூர் மாவட்டம் பந்தநல் லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பார்த்தி–பன் (32) என்பவர் அரிய–லூரில் உள்ள ஒரு டீக்கடை–யில் கேஷியராக வேலை பார்த்து வந்ததும், இவரும் அபிநயாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது.

    ஆனால் அவர்களது கா தலுக்கு எதிர்ப்பு கிளம் பிய நிலையில், வருகிற 6-ந்தேதி பார்த்திபனுக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் பந்தநல்லூரில் திருமணம் நடக்க இருந்தது. இந்த பத்திரிகையை நண்பர்க–ளுக்கு வழங்க உடையார்பா–ளையத்துக்கு பார்த்திபன் வந்துள்ளார்.

    இதனை அறிந்த அபி–நயாவும் உடையார்பாளை–யம் வந்து பார்த்திபனை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா மர்ம–மான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்து வீட்டில் இருந்த பார்த்தி–பனை கைது செய்ததோடு அவரது மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பார்த்திபன் தன்னை சந்திக்க வந்த அபிநயாவை நள்ளிரவில் அரியலூரில் கொண்டு விட வேகமாக சென்றதாகவும், அந்த சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் அபிநயா பலத்த காயமடைந்து சுயநினைவு இழந்து விட்டதாகவும், இதனால் அச்சம் அடைந்து அபிநயாவை சாலை ஓரம் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் பார்த்திபன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    காயமடைந்து உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சி செய்யா–மல் காதலன் மனிதாபம் இல்லாமல் தப்பிச் சென்றது போலீசார் இடையே சந்தே–கத்தை ஏற்படுத்தியது. எனவே இது விபத்து தானா அல்லது பார்த்திபன் வேறு பெண்ணை திருமணம் செய்வதால் ஏற்பட்ட தக–ராறில் அடித்து கொலை செய்து வீசி சென்றாரா என்கிற கோணத்தில் விசா–ரணை நடத்தினர். விசாரணை முடிவில் பார்த்திபன் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி காதலியை கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை இன்ஸ்பெக்டர் வேலுசாமி கைது செய்து ஜெயங்கொண்டம் நீதி–மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
    • சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தாரமங்கலம் அருகே துட்டம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கோனேரி வளவு என்ற பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார், மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மது அருந்த அனுமதி இல்லை என சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி உள்ளிட்ட 3 பேரும் போன் செய்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் சந்திரசேகரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சையாக அனு மதிக்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளரை கும்பல் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சக்தி, அவரது சகோதரர்கள் அருள் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் சந்திரசேகரனின் உறவினர்கள் ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர்
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெங்களூருவில் இருந்து வந்த பஸ்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜன் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கைதானவர்கள் சங்ககிரி தாலுகா அரசிராமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பூபதி ராஜா, சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஆனந்தராஜ் ஆந்திர மாநிலத்தில் இருந்து பலமுறை கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்கு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் ஆட்களை வைத்து ஆந்திராவில் இருந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி பஸ்களில் கஞ்சாவை கடத்தி வந்து ஓமலூர் எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஓமலூர் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், தொடர்ந்து தற்போது 21 கிலோ கஞ்சா கடத்தி வந்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர்.
    • நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக 30 கிலோ மீட்டர்தூரத்தில் இலங்கை நாட்டின் தலைமன்னாரை சென்றடைய முடியும்.

    இதன் காரணமாக 2 நாடுகளுக்கும் இடையே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இங்கிருந்து கடல் அட்டை, மஞ்சள் கிழங்கு, வலி நிவாரண மாத்திரைகள், பீடி இலைகள் மற்றும் அந்த நாட்டில் தட்டுப்பாடுடைய பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் இலங்கையில் இருந்து கஞ்சா, தங்க கட்டிகள் உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது. தற்போது மதுரை, திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களில் சுங்கத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை அதிக அளவில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.

    கடத்தல்காரர் ஒருவரின் செல்போன் நம்பரை கண்டறிந்து அதனை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த போன் மூலம் நடந்த உரையாடல்களும் சேகரிக்கப்பட்டது. அப்போது கடந்த 31-ந்தேதி பிளாஸ்டிக் படகு மூலம் 3 பேர் தங்க கட்டிகளை கடல் வழியாக கடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினர். இதைத்தொடர்ந்து இரு துறையினரும் கூட்டாக செயல்பட்டு மண்டபம் அருகே உள்ள கடல் வழித்தடத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது மணாலி தீவு அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த 3 பேர் ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர். இதை கண்ட அதிகாரிகள் மற்றும் கடலோர போலீசார் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததும், அதிகாரிகளை கண்டதும் அந்த பார்சல்களை கடலில் வீசியதும் தெரியவந்தது.

    மேலும் 3 பேர் கொடுத்த தகவலின்பேரில் அதே நாள் இரவு மற்றொரு படகில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 21.26 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்தனர்.

    இதற்கிடையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். கடந்த 2 நாட்களாக மணாலி தீவு அருகே இரவும், பகலுமாக கடற்படை வீரர்கள், நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் ஆகியோர் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டி பார்சல்களை தேடினர்.

    கடலுக்கு அடியில் சென்று தேடும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் நவீன எந்திரங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட முயற்சிக்கு பிறகு நேற்று மதியம் கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சல் கண்டெடுக்கப்பட்டது. மண்டபம் கடற்கரை முகாமுக்கு கொண்டு வரப்பட்ட பார்சல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    அப்போது அதில் 11.60 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.இந்த கடத்தல் சம்பவத்தில் மட்டும் மொத்தம் 32.80 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ20.20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தன.

    இதற்கிடையில் இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை 2 படகுகளில் கடத்தி வந்த 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை தெற்கு தெருவை சேர்ந்த முகமது நாசர் (வயது 35), சாதிக் அலி (32), முகமது அசார் (30), அப்துல் அமீது (33), தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ரவிக்குமார் (46) என தெரியவந்தது.

    அவர்களை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மதுரையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு இன்று அழைத்து வந்தனர். அங்கு தங்கக்கட்டிகள் கடத்தல் தொடர்பாக 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தங்க கட்டிகள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? யாருக்காக தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டது? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    வளைகுடா நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பண பரிமாற்றங்கள் அதிகளவில் நடந்து வந்தன. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடு பிடியால் ஹவாலா பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் கடத்தல்காரர்கள் அரபுநாடுகளில் இருந்து ஹவாலா பணம் மூலம் தங்க கட்டிகளை வாங்கி இலங்கைக்கு கொண்டு வருகின்றனர். அந்த நாட்டில் கெடுபிடிகள் குறைவு காரணமாக கடத்தல்காரர்களுக்கு தங்க கட்டிகளை கொண்டு வருவது எளிதாக உள்ளது.

    அங்கிருந்து படகுகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி கொண்டு வந்து இங்குள்ள சிலரிடம் கொடுத்து பணமாக மாற்றி வருவதாக தெரிகிறது. அது தொடர்பாக கைதான வர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.
    • தனது உறவினரின் வீட்டில் தங்கி இருந்து திருட்டு தொழிலில் ஈடுப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள காய்கறி கடை, பழக்கடை, உணவகம், கறி கடைகள் உள்ளிட்ட 6 கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.

    இது குறித்து வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திட்டச்சேரி கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்பகோணம் செட்டிமண்டபம் மேலப்புளி யம்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 38) என்பதும், இவர் துண்டம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி கொண்டு திட்டசேரி கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தார்.

    மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • 8 கிலோ கஞ்சா பறிமுதல்; சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சம்பவத்தன்று எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    மாடக்குளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு கும்பல் மறைந்திருந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். இதைப்பார்த்து உடனே போலீசார் அவர்களை துரத்தினர். இதில் 5 பேர் பிடிபட, 2 பேர் தப்பினர்.

    சிக்கிய 5 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் 7 கிலோ 700 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் புது ஜெயில் ரோட்டை சேர்ந்த சகோதரர்களான ஜாக்கி என்ற பிரசாத் (வயது22), பாண்டியராஜன் (23) மற்றும் திருப்பாலை அன்பு நகர் முருகன் மகன் முத்துகிருஷ்ணன் (24), வில்லாபுரம் உருவாட்டி மகன் ஈஸ்வரன் 35, ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெரு ஆறுமுகம் மகன் பாலசுப்பிரமணியன் (24) என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    • ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அனுமதியின்றி தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது அங்குள்ள பட்டாசு கடையின் பின்புறம் உள்ள இடத்தில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் பட்டாசுகள் இருந்தன. மொத்தம் 60 பெட்டிகளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அந்த பட்டாசுகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்த சித்துராஜபுரம் பால்பாண்டி, சாமிபுரம் காலனி விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வங்கி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அசோக் (வயது 21). கோவையில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள குக்குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படு கிறது.

    இதை அறிந்த உறவி னர்கள், அந்த பெண் தங்கை முறை என்று அசோக்கிடம் தெரியப் படுத்தினர். இதையடுத்து அந்த பெண்ணுடன் பேசி பழகுவதை அசோக் நிறுத்தி விட்டார்.

    இந்த நிலையில் அசோக்கின் சகோதரிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அசோக் ஊருக்கு வந்தி ருந்தார். அப்போது ஊர் திருவிழாவும் நடந்து கொண்டிருந்தது.

    பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அசோக் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இளம்பெண்ணின் உறவினர் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அவர் அசோக்கை வழி மறித்து இளம்பெ ண்ணுடன் பேசி பழகுவதை நிறுத்தி யதை கண்டித்து ள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அசோக்கை கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள் திரண்டதால் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சதீஷ்குமார் தப்பி சென்றார். இதில் காயம் அடைந்த அசோக் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கொடுத்தபுகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.

    ×