search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • குதிரை வண்டி பந்தய தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யபட்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்

    திருச்சி:

    திருச்சி உறையூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சண்முகம் (வயது 25). குதிரை வண்டி வைத்திருந்த இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குதிரை வண்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வந்தார். இவர் நேற்று பகல் 12.30 மணியளவில் குழுமணி டாக்கர் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த உறையூர் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன் அடிப்படையில் கொலையில் தொடர்புடைய உறையூர் பகுதியை சேர்ந்த கோபி, ஹரி, விஜி ஆகிய 3 வாலிபர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.அதில் திருவரும்பூரில் சமீபத்தில் நடந்த குதிரை பந்தய போட்டியில் கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் குதிரை முதல் இடத்துக்கு வந்ததாகவும் அந்த போட்டில் மேற்கண்ட குற்றவாளிகள் கலந்து கொண்டு போட்டியில் பின்தங்கியதாகும் அந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி அனுப்பி வைத்த பணத்திலிருந்து குடிப்பதற்கு பணம் கேட்டு வீரய்யா மகனிடம் தகராறு செய்தார்.
    • மகனின் தலையை ஒரு பையில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக சுற்றி வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அடுத்த குள்ளப்பாவை சார்ந்தவர் வீரய்யா. கூலி தொழிலாளி.இவரது மனைவி அலிவேலம்மா. தம்பதியின் மகன் அசோக் (வயது 25) ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    அலிவேலம்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் வீட்டு வேலைக்கு சென்றார். அசோக்கின் மனைவி லட்சுமி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    வீட்டில் தந்தையும் மகனும் மட்டும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அலிவேலம்மா தனது மகனின் வங்கி கணக்கிற்கு ரூ.5 ஆயிரம் அனுப்பி வைத்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி அனுப்பி வைத்த பணத்திலிருந்து குடிப்பதற்கு பணம் கேட்டு வீரய்யா மகனிடம் தகராறு செய்தார். அசோக் தந்தைக்கு குடிப்பதற்கு பணம் தர மறுத்தார்.

    இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக சென்று மது அருந்திவிட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அசோக் தந்தையை அடித்தார்.

    இதில் ஆத்திரமடைந்த வீரய்யா அருகில் இருந்த கல்லை தூக்கி மகனின் தலையில் போட்டார். இதில் அசோக்கின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகனின் தலையை தனியாக வெட்டி எடுத்தார். மகனின் தலையை ஒரு பையில் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக சுற்றி வந்தார்.

    பின்னர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். மகனின் தலையை மேஜையில் வைத்தபடி மது வாங்கி குடித்தார்.

    வீரய்யா தனது மகனின் தலையை பையில் போட்டுக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஊரை சுற்றி வந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் மதுபான கடைக்கு வந்து அங்கு மது குடித்துக் கொண்டு இருந்த வீரய்யாவை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென சித்திக் மாயமானார்.

    பாலக்காடு :

    கேரளாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (வயது 58). இவருக்கு சொந்தமான ஓட்டல் கோழிக்கோடு எலத்திபாலம் அருகே உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென சித்திக் மாயமானார். இதனால், அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஓட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சித்திக்கின் மகன், கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சித்திக் தொடர்பான விவரங்கள், ஆவணங்களை போலீசார் சோதனை செய்தபோது அவரது ஏ.டி.எம். கார்டு காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்திக்கின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்தனர். அதில் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து பெரிய அளவில் பணம் எடுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனால் சித்திக் பணத்திற்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகளி வனப்பகுதியில் பெரிய சூட்கேஸ் ஒன்று திறந்து கிடந்தது. அதில் ஆண் ஒருவர் வெட்டப்பட்டு உடல் துண்டு துண்டாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு இதுபற்றி உடனடியாக அகளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அகளி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில், உடல் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பது மாயமான ஓட்டல் அதிபர் சித்திக் என்பது தெரியவந்தது.

    ஆனால் அவரை கொன்றது யார், என்ன காரணத்திற்காக கொன்றனர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து கோழிக்கோடு, அகளி, மலப்புரம் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சித்திக்கின் ஓட்டலில் வேலை செய்து வந்த பாலக்காடு செற்புழச்சேரி நகரை சேர்ந்த சிபில் (36) மற்றும் பர்ஹானா (34) ஆகியோர் மாயமானதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அவர்கள் 2 பேரும் சென்னையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஓட்டல் அதிபர் சித்திக்கை வெட்டி கொன்றதாகவும், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் போட்டுவிட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து பாலக்காடு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    'வேலையை விட்டு நீக்கியதால் கொன்றோம்' - கைதான பெண் உள்பட 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்

    ஓட்டல் அதிபர் கொலை வழக்கில் கைதான 2 பேரும் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

    சித்திக்கின் ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தோம். ஆனால் கடந்த 18-ந்தேதி சித்திக், எங்கள் 2 பேரையும் வேலையில் இருந்து திடீரென நீக்கி வேலை பார்த்த வரையிலான சம்பளத்தை தந்துவிட்டார். இந்த கோபத்திலும், அவரிடம் இருந்து பணம் பறிக்கவும் கடந்த 23-ந்தேதி சித்திக்கை அவரது சொந்த காரிலேயே கடத்தி கோழிக்கோடு அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றோம்.

    பின்னர் அங்கு வைத்து அவரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து அடைத்தோம். பின்னர் காரில் சென்று அட்டப்பாடி அகளி வனப்பகுதியில் வீசி சென்றதாக தெரிவித்தனர். இவர்களுக்கு உடந்தையாக பர்ஹானாவின் தம்பி ஆஷிக்கும் இருந்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். கைதான 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி, பெருமாள்நகர்,10-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். நேற்றுமாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பலத்த வெட்டுக்காயத்துடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக கொலையுண்ட வெங்கடேசனின் நண்பர்களான, பெருமாள் நகரை சேர்ந்த நரேஷ் குமார், தினேஷ் ஆகிய2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது நண்பர்கள் அனைவரும் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும்இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆறுமுகம் மற்றும் கவிதா இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர்.
    • ஆறுமுகம் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் பட்டாணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்தார். இதேபோல விருத்தாசலம் அருகேயுள்ள முருகன்குடியை சேர்ந்த கவிதா (28). இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர். ஆறுமுகத்தின் பட்டாணி கடைக்கு உளுந்தூர்பேட்டை பு.கிள்ளனூரை சேர்ந்த வைத்தி (55) அடிக்கடி வந்து சென்றார். இதில் வைத்திக்கும், கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை ஆறுமுகம் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வைத்தியும், கவிதாவும் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கவிதா தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக ஆறுமுகத்திடம் கூறிச் சென்றார். ஆனால், அவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள வைத்தி வீட்டில் சென்றது ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆறுமுகம் கவிதாவை எரித்துக்கொல்ல முடிவெடுத்து பெட்ரோல் பாட்டிலுடன் உளுந்தூர்பேட்டைக்கு சென்றார். அங்கு வைத்தியின் வீட்டில் இருந்த கவிதாவின் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். அங்கிருந்த வைத்தி பாட்டிலை பிடுங்கி ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஆறுமுகம் முற்றிலும் எரிந்த நிலையில் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் வைத்திக்கும் லேசான தீக்காயங்களுடன் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஆகியோர் கவிதா, வைத்தி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
    • கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது31), சூர்யா(வயது29) என்ற டிரைவர்கள் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர்.

    அப்பொழுது மண் ஏற்றுக் கொண்டு இரண்டு லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை, ஒருவர் தள்ளிக் கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    இதில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில், சூர்யாவுக்கும் பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிரச்சினையால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பு நிலவுகிறது.

    • கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம், ஐதரபாத்தில் உள்ள முசி ஆறு அருகே கடந்த 17ம் தேதி அன்று பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த உள்ளூர் குடிமைப் பணியாளர்கள் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியையும், உடல் பாகங்களையும் கண்டுபிடிக்க 8 போலீஸ் குழுக்களை அமைத்தனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில், ஐதரபாத்தை சேர்ந்த 48 வயது நபர் 55 வயதான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததும், ரூ.7 லட்சம் கடனை கேட்டதற்காக பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (தென் கிழக்கு மண்டலம்) சி.எச்.ரூபேஷ் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட நபர், உள்ளூர் நிதி முகவராக இருந்த 55 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் செலுத்த வேண்டிய ரூ.7 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு அந்த பெண் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணை கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றுள்ளார்.

    பின்னர், அந்த நபர் பெண்ணின் தலையை துண்டித்து, உடற்பகுதியில் இருந்து கால்கள் மற்றும் கைகள் மற்றும் உறுப்புகளை வெட்டி, தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்துள்ளார்.

    பின்னர், மே 15ம் தேதி பெண்ணின் தலையை கருப்பு கவரில் வைத்து முசி ஆறு கரை அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.

    மேலும், அந்த நபர் தான் தங்கியிருந்த பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்" என்றார்.

    • ஷாஜியின் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை.
    • சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டு கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா வெம்பிரஞ்சன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷாஜிக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் இருவரும் கடந்த வாரம் 16-ந்தேதி 2-வது திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்பு அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனின் 3 குழந்தைகளும் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் ஷாஜியின் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டு கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பார்த்த போது வீட்டுக்குள் ஸ்ரீஜா வெம்பிரஞ்சனும், அவரது 2-வது கணவர் ஷாஜியும் தூக்கில் பிணமாக தொங்கினர். வீட்டில் இன்னொரு அறையில் அவர்களின் 3 குழந்கைளும் இறந்து கிடந்தனர். அவர்கள் 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கான காரணம் தெரியவில்லை.

    போலீசார் 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வயதான தம்பதி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
    • மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    கரூர்,

    திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், இவரது மனைவி மயிலி. இவர்கள் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே ஓடையூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான மாங்காய் தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள குடிசையில் தங்கவேலும், மயிலியும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். மேலும் மயிலி அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் குடிசை வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த கொலை சம்பவம் வாங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க திருச்சி டி.ஐ.ஜி., சரவணசுந்தர் உத்தரவுபடி கரூர் எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் வெங்கடேஸ்வரா நகர் கழுகா சலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார்(வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 18-ந்தேதி இரவு புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் கற்கூரணி குளத்தின் தெற்கே மேற்கு நோக்கி செல்லும் காத்தாடி மண் பாதையில் 100 மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ரத்தக் காயங்களுடன் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை கைப்பற்றி இது குறித்து புதியம்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் வரும் போது அங்கு குடிபோதையில் நின்ற மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிகரன் (23), வெங்கடேஷ்( 22) ஆகிய இருவரும் வழிமறித்து லிப்ட் கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

    அவர்களை இறக்கி விடும்போது சதீஷ்குமாரிடம் பணம் இருக்குமா என கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் ஆத்திரத்தில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதனால் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) விசாரணை நடத்தி சதீஷ்குமாரை அடித்து கொன்ற ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உறவினர் ஒருவருக்கும் குருதேவ் பக்குக்கும் வீடு கட்டுவது சம்பந்தமான நிலப்பிரச்சினை இருந்து வந்ததும் இதன் காரணமாக அவர் 4 பேரையும் கடப்பாரையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பெருங்கடை தெரு பகுதியை சேர்ந்தவர் பவுல். இவரது மனைவி அமலோற்பவம் (வயது 68). இவர்களுக்கு மோகன்தாஸ் (50) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. மோகன்தாஸ் மனைவி குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.

    பவுல், அமலோற்பவம் இருவரும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்தனர். தந்தை-மகனுக்கு இடையே சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மோகன்தாஸ் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கீழ் பகுதியில் தாய்-தந்தை வசித்து வந்த வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த பவுல், அமலோற்பவத்திடம் தனக்கு சொத்து தருமாறு கேட்டு தகராறு செய்தார்.

    அப்போது அவர்கள் மோகன்தாஸிற்கு சொத்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ், தந்தை பவுல், தாய் அமலோற்பவம் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவத்திற்கு கழுத்து, முதுகு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பவுலுக்கு முதுகு, கழுத்து, தோள்பட்டை பகுதியில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த அமலோற்பவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாயாரை வெட்டி கொலை செய்த மோகன்தாஸ் பூதப்பாண்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இது எனது தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரது சொத்துக்களை எனக்கு தர மறுத்தார். எனது சகோதரிகளுக்கு சொத்துக்களை கொடுத்தார். மேலும் சொத்துக்களை விற்று வந்த பணத்தையும் எனக்கு தரவில்லை.

    கடந்த 10-ந்தேதி சிறமடம் பகுதியில் 5 ஏக்கர் சொத்தை ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதில் கிடைத்த ரூ.15 லட்சம் பணத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத்தார். எனக்கு பணம் தராதது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எனது தாய், தந்தையிடம் எனக்கும் சொத்தில் பங்கு தரவேண்டும். சொத்து விற்பனை செய்து வந்த பணத்தை எனக்கு தர வேண்டும் என்று கேட்டேன்.

    ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்களை அரிவாளால் வெட்டினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் தொடர்ந்து மோகன்தாசிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சினையில் தாய், தந்தையரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×