என் மலர்
நீங்கள் தேடியது "#சஸ்பெண்டு"
- கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
- கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சமீப காலமாக உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்கள் நடந்து வருகிறது.
எனவே மாணவிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவரை 6 மாதம் சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வேலூர் ஜெயிலில் கைதிகள் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர்.
- ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
வேலூர்:
வேலூர் ஜெயிலில் கைதிகள் கஞ்சா செல்போன் உள்ளிட்டவற்றை தடையை மீறி பயன்படுத்தி வருகின்றனர்.
சிறைக்காவலர்கள் சோதனையில் கைதிகளின் கழிவறைகள் மற்றும் பூங்கா பகுதியில் மறைத்து வைக்கப்படும் கஞ்சா செல்போன் பறிமுதல் செய்யபடுகிறது.
இந்த நிலையில் ஜெயிலில் தொடர்ந்து கஞ்சா பயன்படுத்தி வருவது தெரியவந்தது. நேற்று கைதிகள் அறையில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பேட்டரி ஆகியவற்றை ஜெயில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் ஜெயிலுக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனையும் மீறி கஞ்சா செல்போன் ஆகியவை எப்படி வந்தது என்ற சந்தேகம் ஏற்பட்டது.
சிறையில் காவலர்கள் உதவி இல்லாமல் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளே வர முடியாது என்பதால் இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது வேலூர் ஜெயிலில் பணியாற்றிவரும் முதன்மை ஏட்டு விஜயகுமார் என்பவர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஏட்டு விஜயகுமாரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு உத்தரவிட்டார். ஏட்டு விஜயகுமார் இதுவரை எவ்வளவு கஞ்சா சப்ளை செய்துள்ளார்.செல்போன் சப்ளை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.