என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஆய்வு"

    • குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.254.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட தென்னம்பாளையம் மீன் சந்தை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் ரூ.17.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் ரூ.27.05 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பணி ,திருப்பூர் மாநகராட்சி 3-ம் மண்டலம் மற்றும் 4-ம் மண்டலப்பகுதிகளில் ரூ.207.15 கோடி மதிப்பீட்டில் 17எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் மற்றும் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செல்லாண்டியம்மன் துறை ராஜீவ் நகர்பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அமர்ஜோதி கார்டன் காளியப்பா நகர் பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 20,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

    மேலும் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டு வரும் கால்நடை பன்முக மருத்துவமனை பணியும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகராட்சியை பொறுத்த வரையில் குடிநீர்த்திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் முடிந்த பிறகு மாநகர பகுதிகளில் குடிநீர்த்தட்டுப்பாடின்றி பொது மக்களுக்கு வழங்குகின்ற சூழ்நிலை ஏற்படும். இனி வரும் காலங்களில் குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அடிப்படை தேவைகள் குறித்து தனி கவனம் செலுத்தவும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் பாலசுப்பிர மணியன், தலைமைப்பொறியாளர் (பொறுப்பு) செல்வவிநாயகம், உதவி ஆணையர் வினோத், செயற்பொறியாளர்கள் வாசுகுமார், கண்ணன், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவர்கள் நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர், கழிவறை வசதி, சமையற்கூடம், மாணவிகளின் வருகை பதிவேடு போன்றவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மாணவ-மாணவி களிடம் குறைகளை கேட்ட றிந்து கலந்துரையாடினார்.

    அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-

    முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பெற்றோர்களை மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.

    வண்டலூர்:

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணம் மெற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்தார்.

    அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை குறித்து கேட்டறிந்து, உணவின் தரத்தை பரிசோதித்தார். அப்போது கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி உடன் இருந்தார்.

    • திதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.
    • மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமிழி ஊராட்சியி்ல் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார். அப்போது மாணவர் வருகை, வழங்கும் உணவு குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரூ.5.25 கோடி மதிப்பிலான கட்டிடத்தையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைஞர் மோகன், வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா உடன் இருந்தனர்.

    • பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை.

    நெல்லிக்குப்பம்:

    கடலுர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

    இந்த நிலையில் தொழிலாளர் நல த்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முள்ளி கிராம்பட்டில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அந்த வகையில் கையில் குழந்தையுடன் நின்ற இளம்பெண் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் குறைகளை கேட்டார்.

    அப்போது அவா்கள் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கதறி அழுதனர்.

    இதை பார்த்த அமைச்சர் சி.வெ.கணேசன், உடனே அந்த பெண்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, அண்ணன் வந்துட்டேன், கவலை படாதே, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.

    மேலும் இளம்பெண் வைத்திருந்த பெண் குழந்தையை வாங்கிய அமைச்சர், அந்த குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினார்.

    பின்னர், தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் வருகிறேன் என்று தெரிந்தும் நீங்கள் வரவில்லை, உடனே இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம்.
    • கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பெஞ்ஜல் புயல் காரணமாக கன மழை பெய்தது. இதனால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்தது.

    இந்த நிலையில் புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் குப்பை கிடங்கில் இருந்து குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி கோபாலன்கடை பகுதியில் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய் ஜெ சரவணன்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் கோபாலன் கடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் அந்த வழியாக சென்ற குப்பை வண்டியில் ஏறி குரும்பாபேட் குப்பை கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து கழிவுகள் வெளியேறி வாய்க்கால் வழியாக ஊருக்குள் புகுந்தது தெரியவந்தது.

    இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் நிறுவனத்திடம் அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மீண்டும் குப்பை வண்டியில் ஏறி புறப்பட்டு சென்றார். அமைச்சர் குப்பை வண்டியில் ஏறி ஆய்வு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் சிவஞானம், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சி.எம்.டி.ஏ. சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கொளத்தூர் ஏரியில் ரூ. 6.26 கோடி செலவில் முக்கிய அம்சங்களாக நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், ஒளிரும் மீன் சிற்பங்கள், இசை பூங்கா, தனித்துவமிக்க இருக்கைகள், படகு சவாரி, சூரிய விளக்கு கம்பங்கள், கரையில் செயற்கை நீர்வீழ்ச்சி, கடைகள், குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 45 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெருநகர சென்னைக்கான சிந்தனையில் உதிர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

    ரூ.250 கோடி செலவில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 9 ஏரிகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்த அளவிற்கு டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
    • அதிகாரிகளிடம் திட்டங்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார்

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும், அதன் வளர்ச்சிகள் தொடர்பாகவும் அரசு துறை அதிகாரிகளிடம் மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா கேட்டறிந்தார்.

    பின்னர் அதிகாரிகளிடம் திட்டங்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்தார். மேலும் இலங்கை அகதிகள் முகாம் தொடர்பாக அதில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து இணை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா உக்கடம் வாலங்குளம், ஆர்.எஸ்.புரம் டி.பி ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    • சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணைத் தலைவர் கோபால், செயல் அலுவலர் சாத்தூர் கண்ணன்,

    தி.மு.க . மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், மாவட்ட துணை செயலாளர் செந்தில், கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன்,

    ஒன்றிய பிரதிநிதி கோபிநாத், செயற்பொ றியாளர் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் தனபால், ரேவதி நடராஜ், நதியா கவுரிசங்கர், சந்தராதேவி பாபுராஜா, பெருமாள் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது.
    • கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகள் மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    இதேபோன்று கூடலூர் 27-வது மைல் சனீஸ்வரன் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து நடுகூடலூர் வரை நிலத்தில் விரிசல்கள் உண்டாகி பொதுமக்களின் வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று கூடலூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.

    அப்போது, வரும் காலங்களில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்பு கற்களுடன் கூடிய கம்பிவலை பொருத்த உத்தரவிட்டார். தொடர்ந்து 27-வது மைல் பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கை அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.

    அத்றகு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் அம்ரித், தலைமை பொறியாளர்கள் பாலமுருகன், சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குழந்தை ராஜ் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம்

    தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கு நேற்று இரவு வருகை தந்தார்.

    ராமேசுவரம் வந்த அமைச்சரை தி.மு.க. சார்பில் நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் வரவேற்றார். இன்று அதிகாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனுஷ்கோடி கடல் பகுதியில் சிறப்பு பூஜை செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் அமைத்துள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடி, பின்னர் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

    கோவிலுக்கு வந்த அமைச்சரை ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாசர்கான் வரவேற்றார். அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கல்வித்திறன் மற்றும் பள்ளி கட்டிடம் குறித்து ஆய்வு செய்தார்.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம், மண்டம் ஊராட்சி ஒன்றியம், தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மெய்யம்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி மையத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் குறித்து ஆய்வு செய்தார்.

    • பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார்.
    • உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,

    அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருள்கள் பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஆதிதிராவிடர் நல ஆணையர் சோ. மதுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, வருவாய்க் கோட்டாட்சியர் நிறைமதி, தாட்கோ மேலாளர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


    ×