search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன.
    • தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளம் வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. அங்கு காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அடித்து செல்லப்பட்டன. அவை அருகில் உள்ள சாலியாற்றில் தத்தளித்து சென்றதை உள்ளூர்வாசிகள் பார்த்து உள்ளனர். குறிப்பாக போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் மான்கள் கூட்டம் அடித்து செல்லப்பட்டது.

    மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன. அத்துடன் நிலம்பூர் பகுதியில் 3 காட்டுயானைகள் சாலியாற்றில் தத்தளித்து சென்றன.அதில் ஒரு யானை பாறை மீது ஏறி நின்றது. மீதமுள்ள 2 யானைகள் நீந்தி சென்று கரையேறின. இதனால் அவை உயிர் தப்பின.

    இது தவிர திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே காலடி தோட்ட பகுதியில் உள்ள சாலக்குடி ஆற்றில் காட்டுயானை ஒன்று செத்து ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனச்சரகர் மேத்யூ தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாழைச்சால் பகுதியில் இரும்பு பாலத்தின் அடியில் காட்டுயானையின் உடல் ஒதுங்கி கிடப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. ஆற்றை கடக்க முயன்ற போதோ அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டோ காட்டுயானை இறந்து இருக்கலாம். இறந்த யானைக்கு 15 வயது இருக்கும் என்றனர்.

    • மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
    • மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    வயநாடு:

    வயநாடு நிலச்சரிவு ஏராளமானோரின் உயிரை பலிவாங்கியதோடு மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் மணப்பெண்ணின் சோகம் சொல்லி மாளாது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    மேப்பாடியை சேர்ந்தவர் சிவண்ணன். இவருடைய மனைவி சபிதா. இவர்களுக்கு சுருதி, ஸ்ரேயா என 2 மகள்கள். சுருதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரேயா கட்டப்பனாவில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிவண்ணன், சபிதா, ஸ்ரேயா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். சுருதி தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் உயிர் தப்பினார். இதனால் அவர் குடும்பத்தை இழந்து தவித்து வருகிறார்.

    இதுகுறித்து சுருதி கண்ணீர் மல்க கூறும்போது, எனக்கு டிசம்பரில் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ரூ.4½ லட்சம், 15 பவுன் நகைகளை பெற்றோர் சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 6 வாரங்களுக்கு முன்பு நாங்கள் புதிய வீட்டில் குடியேறினோம். நிலச்சரிவால் அந்த வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளது. பெற்றோர், தங்கை இறந்து விட்டதால் எனது வாழ்க்கையே இருண்டு விட்டது என்றார்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல் சூரல்மலையை சேர்ந்தவர் சுஜாதா. இவருடைய மகன் ஜிகிஷ். மருமகள் சுஜிதா. பேரன் சூரஜ், பேத்தி மிருதுளா. இவர்கள் 5 பேரும் வீட்டுக்குள் இருந்தபோது, 30-ம் தேதி அதிகாலை வீட்டு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நிலைமையை உணர்ந்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை ஒவ்வொருவராக வீட்டில் இருந்து கயிறு கட்டி வெள்ளத்தை கடந்து சென்றார்.

    அப்போது மரம் விழுந்ததில் ஜிகிஷ், சுஜிதா, சூரஜ் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இருப்பினும், ஜிகிஷ் மன உறுதியுடன் தனது குடும்பத்தினரை டார்ச் லைட் வெளிச்சத்தில் மேடான பகுதிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அவர்கள் சென்ற வழியில், எதிரே சற்று தூரத்தில் காட்டு யானைகள் நின்று கொண்டு இருந்தன. இதை பார்த்த ஜிகிஷ் தனது குடும்பத்தினரை அமைதியாக இருக்கும்படி கூறினார். ஒரு புறம் யானைக்கூட்டம், மறுபுறம் காட்டாற்று வெள்ளம். எங்கு சென்றாலும் ஆபத்து காத்திருந்த சூழ்நிலையில், அவர்கள் 5 பேரும் மெதுவாக நகர்ந்து சென்று அங்குள்ள காபி தோட்டத்தில் தஞ்சம் அடைந்தனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

    இதனால் வெள்ளம் மற்றும் காட்டு யானைகளிடம் இருந்து அந்த குடும்பம் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    • அரபிக் கடல் சூடேற்றம் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுவுக்கான காரணமாக சூழலியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
    • ஐதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து சாட்டிலைட்டைகள் அனுப்பப்ட்டன

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்ததால் வயநாடு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    தேசிய பேரிடர் மீட்புப்படை,தீயணைப்புப் படை வனத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். தோண்டத் தோண்ட சடலங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அரபிக் கடல் சூடேற்றம் என பல்வேறு காரணிகள் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுக்கான காரணமாக சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

    நிலச்சரிவில் மக்கள் சிக்கித் தவிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி மனதை ரணமாக்கி வரும் நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, வயநாடு பகுதிகளில் முந்தைய காலங்களில் ஏற்பட்ட  நிலச்சரிவுகளையும் தற்போதய நில்சசரிவையும் ஒப்பிடும்  சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

     

    இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாதிப்புகளை இஸ்ரோவின் ஐதராபாத் தளமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து நவீன கார்டோசாட்-3 ஆப்டிகல் சாட்டிலைட் மற்றும் மேகங்களின் ஊடாக தெளிவாக பார்க்கக்கூடிய RISAT சாட்டிலைட்களை வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு கடந்த ஜூலை 31 ஆம் தேதி அனுப்பி, அங்கு எடுத்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் NRSC அறிக்கைபடி, சூரல்மலை பகுதிகளில் பெய்த அதீத மழையே அதிகப்படியான நிலச்சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.   

     

     

    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
    • ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    அதன்பின், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:

    என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன்.

    இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும்.

    வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.

    ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். இது தேசிய பேரிடர்தான்.

    மக்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன்.

    வயநாட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது.

    இதற்கு விரைவில் ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • வயநாட்டில் இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர்.

    இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வயநாட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திற்கு நடுவே, தண்ணீரில் மூழ்கிய பாலத்தில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கணவர் துணிச்சலாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • ஏராளமானோர் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
    • தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.

    பலர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து வர முடியாமல் மரண ஓலம் எழுப்பினர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

    யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று தவித்தபடி இருந்துள்ளனர். உயிர் பிழைப்பதற் காக அவர்கள் நடத்திய போராட்டம் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.

    வயநாடு மேப்பாடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய நீத்து என்ற பெண், தான் வேலை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட தகவலை தெரிவித்திருக்கிறார்.

    அப்போது அவர், "நான் எனது குடும்பத்துடன் நிலச்சரிவில் சிக்கி உள்ளேன். எனது வீட்டை சுற்றி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கள் வீட்டை சகதி சூழ்ந்திருக்கிறது. தயவுசெய்து எங்களை காப்பாற்ற யாரைவது அனுப்புங்கள்" என்று கதறி உள்ளார்.

    இதையடுத்து நீத்து பணிபுரிந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் வீடு இருந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

    ஆனால் அவரது வீடு இருந்த பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தது. இதனால் நீத்து வீடு இருந்த பகுதிக்கு ஆஸ்பத்திரி ஊழியர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில் நீத்து ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது தங்களது வீட்டின் பின்புறம் தண்ணீர் கொட்டுவதாகவும், ஆற்றை தங்களது வீட்டை நோக்க திருப்பி விட்டது போல் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாகவும் கூறி எப்படி யாவது காப்பாற்றுங்கள் என கூறி கதறி இருக்கிறார்.

    ஆனால் சிறிது நேரத்தில் நீத்து இருந்த அவரது வீட்டின் சமையல் அறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். போன் பேசுவதற்காக வீட்டின் சமையல் அறைக்கு வந்தபோது அந்த பரிதாப சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    நீத்துவின் கணவர் ஜோ ஜோ, 5 வயது மகன் மற்றும் பெற்றோர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.

    நீத்து வீடு இருந்த பகுதியில் ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தும் பலியாகி விட்டனர். மேலும் ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர்.

    • 83 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8ஆயிரத்து 300 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்து செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    வயநாடு நலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நடந்துவருகிறது. நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அவற்றை தோண்டும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.

    பெரிய பெரிய பாறைகள் விழுந்ததாலும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டதாலும் உடல்கள் சிதைந்தநிலையிலேயே மீட்கப்படுகின்றன. இதனால் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது.

    • நிலச்சரிவு-மண்சரிவு ஏற்பட வாய்ப்பு .
    • 460 பகுதிகள் அபாய பகுதிகளாக அறிவிப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு-மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.

    மாநிலத்தில் 460 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கேரள மீன்வளம்-கடல் அறிவியல் பல்கலைக்கழக ஆய்வின்படி 32 இடங்களில் 30 சதவீதத்திற்கு அதிகமாகவும், 76 இடங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    வயநாட்டில் வைத்திரி, தொண்டர்நாடு பொழுதானா, திருநெல்லி, வெள்ளமுண்டா, தரியோடு, முப்பைநாடு, பதிஞ்சசரதாரா உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

    இதேபோல் இடுக்கியில் கொக்கையார், மறையூர் உள்பட 20 இடங்களிலும், மலப்புரத்தில் அமரம்பலம், கருளை, சோக்காடு, கருவரக்குண்டு உள்ளிட்ட இடங்களிலும், பாலக்காட்டில் 3 இடங்களிலும், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அருவாப்புலம், சீத்தாத்தோடு, சித்தார் ஆகிய இடங்களிலும் நிலச்சரிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள்.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கும் தலைவணங்குகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
    • கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

    நிலச்சரிவில் சிக்கி 5,592 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 191 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வயநாட்டில் 115-204 மி.மீ மழை பெய்யும் என மத்திய அரசின் வானிலை எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அடுத்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    நிலச்சரிவு ஏற்பட்ட அன்று ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. சோகம் நிகழும் முன் ஒருமுறை கூட அப்பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே அன்று காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் விடுத்தனர்.

    ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறிய நிலச்சரிவு அல்லது பாறை வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பருவநிலை மாற்றம் தொடர்பான கடும் சிக்கல்கள் உள்ளன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

    இப்போது நாம் பார்ப்பதுபோல் கடந்த காலங்களில் அதிக மழை பெய்ததை பார்த்திருக்கிறோமா?

    காலநிலை மாற்றத்தினை தணிக்கும் முயற்சிகள் தேவை. இதுபோன்ற ஏதாவது இயற்கை பேரிடர் நடந்தால் நீங்கள் மற்றவர்களின் மீது பழியை சுமத்த முயற்சிக்க கூடாது. நான் சொன்னதுபோல் இது பழி போடும் நேரம் இல்லை என தெரிவித்தார்.

    • வயநாடு சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு மனவேதனையில் தவிக்கிறேன்.
    • கேரளம் மீண்டு வர துணை நிற்போம்.

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.

    அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணை நிற்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ×