search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

    வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    முண்டக்கை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் மரங்களும், பாறைகளும் அடித்து வரப்பட்டன.

    கட்டுக்கடங்காத வெள்ளம், அங்கிருந்த வீடுகளையும், சாலைகளையும், பாலங்களையும் மூழ்கடித்தவாறு சென்றன.

    ஒரே நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பற்றி அறியாமல், பலர் தங்களது வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு தூங்கிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்களில் சிலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். சிலர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பியவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு பணிகளில் களமிறங்கியது.

    முண்டகை பகுதியில் மீட்பு பணிக்கு ஏற்பாடு நடந்து வந்த நேரத்தில், அதிகாலை 4 மணியளவில் அருகில் உள்ள சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அதிலும் ஏராளமான மக்கள் சிக்கினர்.

    அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருந்ததாலும் அந்த பகுதி முழுவதும் மணலும், சகதியும், வெள்ளமுமாக காட்சியளித்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இருந்த இடங்கள் தரைமட்டமாகின. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

    அவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்பு படையினர், குன்னூர் வெலிங்டனில் இருந்து ராணுவத்தினர், திருவனந்தபுரத்தில் இருந்து மாநில மீட்பு படையினரும், 130 ராணுவ வீரர்களும், பெங்களூருவில் இருந்து 150 ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் ஆங்காங்கே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    எனினும் கடும் சிரமங்களுக்கிடையே மீட்பு பணி தொடர்ந்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் 143 பேர் பலியானார்கள். அவர்களில் 39 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது. இன்றும் 2-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு வந்தடைந்தனர்.

    முன்னதாக, வயநாடு வந்த தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    • வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
    • நிலச்சரிவில் சிக்கியவர்களைக் மீட்பதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வேதனை அளிக்கிறது என அத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்காமல் உயிர் பிழைத்தவர்கள் தங்களின் துயர அனுபவங்களை விவரிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:

    வயநாடு நிலச்சரிவில் வீடு இடிந்த தம்பதியினர், இரவு 11 மணியளவில் தங்கள் பகுதியில் சேறும் சகதியுமாக ஓடுவதைக் கண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் அருகில் உள்ள ஒரு மலையில் தஞ்சம் புகுந்தனர். அவர்களது அண்டை வீட்டாரைக் காப்பாற்ற முயற்சித்து அவர்களையும் அழைத்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வர மறுத்துவிட்டனர்.

    நாங்கள் அவரை எங்களுடன் வரும்படி கெஞ்சினோம். ஆனால் அவர் அதிகாலை 1 மணிக்கு எங்களுடன் சேருவார் என கூறினார். அவர் வரவே இல்லை. காலை வரை மலை உச்சியில் காத்திருந்த அவர்கள் திரும்பி வந்தபோது அந்த பகுதி முழுவதும் அடித்து செல்லப்பட்டது என சோகத்துடன் தெரிவித்தனர்.

    இதேபோல், உயிர் பிழைத்த மற்றொரு பெண் கூறுகையில், உறவினர் ஒருவர் அவர்களது குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து ஓடினார். இரவில் எனக்கு போன் செய்து அவர்கள் இப்பகுதியில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக கூறினார். அதற்கு பிறகு அவர்களை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்தக் குடும்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பதைபதைக்க தெரிவித்தார்.

    • வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.

    புதுடெல்லி:

    கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

    வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனை அளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசுகையில், இழப்பீட்டு தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் நாளை வயநாட்டுக்கு செல்கின்றனர் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    • கேரளாவின் வயநாட்டில் அரங்கேறும் இயற்கை பேரழிவு வேதனை அளிக்கிறது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும்.

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக அத்தொகுதியின் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று பேசியுள்ளார்.

    "கேரளாவின் வயநாட்டில் அரங்கேறும் இயற்கை பேரழிவு வேதனை அளிக்கிறது. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, உயிரிழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை வழங்குமாறு பாராளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    நிலச்சரிவு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பேரிடர் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கென விரிவான ஒருங்கிணைந்த செயல் திட்டம் வகுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை (ஜூலை-31) செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று கேரள மாநில முதல்-அமைச்சர் பினராயி விஜயனை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்.
    • கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசினார்.

    புதுடெல்லி:

    கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு மேல் சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேல் சபை தலைவரும், துணை ஜனாதிபதிபதியுமான ஜெகதீப் தன்கர் பேசும் போது "வயநாட்டில் நடந்திருப்பது மிகவும் துன்பமான நிகழ்வு. காயம் அடைந்து மீட்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்குரியது.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது, இந்த நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது. நிலச்சரிவில் சிக்கி இன்னும் எத்தனை பேர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்கு ராணுவம் சென்றதா, மீட்பு பணிகள் குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவை தலைவரான நீங்கள் தகவல் கொடுக்கிறீர்கள். அரசிடம் இருந்து நாங்கள் தகவலை எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பல்வேறு கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

    வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். 500 குடும்பங்கள் தவித்து வருகின்றனர். நிலைமையை மத்திய அரசு உணர வேண்டும். கேரள அரசிடம் போதிய நிதி இல்லை. மத்திய அரசு உதவ வேண்டும்.

    நாங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். துயரமான நேரத்தில் எங்களுக்கு உதவுங்கள். உடனடியாக நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    வயநாடு நிலச்சரிவு விஷயத்தை தயவு செய்து அரசியலாக்க வேண்டாம் என்று மேல்சபை தலைவர் கேட்டுக்கொண்டார்.

    மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசும் போது, "கேரள முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டு அறிந்து இருக்கிறார். கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கேரள அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது. தற்போது அங்கு சிக்கியவர்களை மீட்டு தேவையான சிகிச்சை அளிப்பதே முக்கியம்" என்றார்.

    • தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள்.
    • 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர்.

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாவும், தொடரந்து பெய்துவரும்ம கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கிகயிருக்கும் பலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் அங்கு ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    மொத்தம் 225 ராணுவ வீரர்கள் வீரர்கள் வயநாட்டில் மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணி மட்டுமின்றி, நிலச்சரிவால் அடித்துச்செல்லப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

    நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்

    வயநாடு நிலச்சரிவில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணுள் புதைத்து இறந்துவிட்டனர். பலியானவர்களில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவர். சம்பவம் நடந்தது அதிகாலை 2 மணி என்பதால் பலர் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்து சமாதியானார்கள்.

    கனமழை பெய்தபடி இருந்ததால், ஒருவித பதட்டத்துடனே வீட்டுக்குள் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர். அவர்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    • வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்

    வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லபட்டது.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவால் பதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு சார்ந்த மீட்பு பணிகளில் உதவ தமிழக பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.

    நிவாரண பணி தடையில்லாமல் நடைப்பெற மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு தரப்படும். தமிழ்நாடு பாஜக சார்பில் நிவாரண பொருட்களை வயநாடு மக்களுக்கு தர 5 நபர் கொண்ட குழு திரு ஏ.பி முருகானந்தம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் ஈரோடு தென் மாவட்ட அமைச்சர் திரு. வேதானந்தன் , திருப்பூர் மேற்கு மாவட்ட அமைச்சர் திரு செந்தில்வேல், நீலகிரி மாவட்ட அமைச்சர் திரு மோகன்ராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் திரு நந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன்.
    • முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.

    சென்னை :

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்.

    இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் உதவிகளை கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.

    • அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
    • மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.


    மேலும், இந்நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் வரும் நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென கேரள அரசை கேட்டு கொள்கிறேன்.

    மீட்புப் பணிகளில் கேரள மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்துக்கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.


    நம் அண்டை மாநில சகோதரர்களுக்கு இத்தகு துயர்மிகு நேரத்தில் உறுதுணையாக இருக்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    • வயநாட்டில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன்.
    • மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கேரள மாநிலம் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

    முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளன. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவார்கள் என்று நம்புகிறேன். கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

    நானும் மத்திய அமச்சர்களிடம் பேசி, தேவையான உதவிகளை வழங்க கோரிக்கை விடுக்கிறேன். மீட்பு பணிகளில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த பணியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    ×