search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகர்மன்ற கூட்டம்"

    • குளச்சல் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
    • அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்

    குளச்சல் :

    குளச்சல் நகர்மன்ற கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் செந்தில்கு மார், மேலாளர் ஜெயன், துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, சுகா தார அலுவலர் ஸ்டான்லி குமார், நகரமைப்பு அலு வலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சில் ஜாண்சன் (தி.மு.க.) பேசுகை யில், நகராட்சி பகுதியில் புல் பூண்டுகள் வெட்டப்ப டாமல் உள்ளது என்றார்.

    பனிக்குருசு (தி.மு.க.), எனது வார்டில் சாலை சேதமடைந்து பல மாதங்கள் ஆகிறது. சாலை நடுவே உள்ள மின் கம்பத்தையும் மாற்ற வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர், மின் கம்பத்தை மாற்ற மின் வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும். முதலில் நகராட்சி வைத்துள்ள பாக்கி பணத்தை செலுத்த சொல்கி றார்கள்.

    ரகீம் (தி.மு.க.), நம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை விடவும் மேஸ்திரிகள் அதிகம் பேர் உள்ளனர். நகர சுகாதாரம் பேண வேண்டும். அதனால் தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார். அன்வர் சதாத், பணியா ளர்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என கூறி னார்.

    ரமேஷ் (காங்கிரஸ்), வீடு கட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது என்றார். இதற்கு நகரமைப்பு ஆய்வாளர், அனுமதி வாங்கும் முன்பு வீடுகளை கட்டி உள்ளனர். அதற்கு எப்படி? அனுமதி அளிக்க முடியும்? என்றார்.

    ஷீலா ஜெயந்தி (தி.மு.க.), சாஸ்தான்கரை டிப்போ மேற்கு சாலைக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜேசையா பெயரை சூட்ட வேண்டும் என்றார்.

    ஜாண்சன், புதிய சிறுவர் பூங்காவிற்கு காயிதே மில்லத் பெயரை சூட்ட வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பேசிய

    தலைவர், கடிதம் அனுப்பி உள்ளோம். பதில் வந்ததும் பெயரை சூட்டலாம் என்றார்.

    ரகீம், நகராட்சி வீடு களிலிருந்து கழிவுநீர் வெளியேறும் குழாய்களை அடைக்கக்கூடாது என கவுன்சிலர்கள் கொடுத்த பொருள் அஜெண்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இது செயல் வடிவம் காண வேண்டும். கழிவுநீர் குழாய் களை அடைத்து பொது மக்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது.

    ஜாண் பிரிட்டோ (தி.மு.க.), களிமார் மருத்துவ மனையிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் வாய்க்கா லில் கலக்கிறது. மேலும் வணிக வளாக கட்டிடங்கள், அரசு அலுவலக கட்டிடங்க ளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீரும் மழை நீர் வடிகாலில் கலக்கிறது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    தொடர்ந்து புல் புதர்கள் வளர்ந்து, பாசிகள் படர்ந்து துர்நாற்றமடிக்கும் வெள்ளியாகுளத்தை அம்ரூத் திட்டத்தில் சுத்தம் செய்து பராமரிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புகளை சீரமைப்பு செய்ய ரூ.95 ஆயிரத்துக்கு அனுமதி கோருவது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி என்ஜினீயர் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கோமதி உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
    • குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார்.

    ஆணையர்(பொ) ஹேமலதா, பொறியாளர் சித்ரா, நகரமைப்புஆய்வாளர் மரகதம், மேலாளர் காதர்கான், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தல் உறுப்பினர்கள் பேசியதாவது:-

    சாமிநாதன் (திமுக):

    கொசுமருந்து அடிக்கும் இயந்திரம் கடந்த 6மாதம் முன்பு வாங்கிய நிலையில் வேறொரு இயந்திரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்றார்.

    ரமாமணி (அதிமுக):

    சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்திட வேண்டும்.

    வள்ளி (திமுக)பேசுகையில்:

    எனது வார்டில் இருவரை நாய்கள் கடித்துவிட்டது.

    நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ரம்யா(திமுக):

    17-வது வார்டில் தற்போது 1மின்விளக்கு மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும். 4மின் பம்புகள் பழுதாகியுள்ளது என்றார்.

    தேவதாஸ் (திமுக):

    9-வது வார்டில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது.

    குளத்தின் சறுக்கல் பக்கவாட்டில் கல் பதிக்காததால் மண் சரிந்து பாதிக்கப்படும்.குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.

    மேல்பூச்சு சிதிலமடைந்துள்ளதால் பணியாளர்கள் உள்ளே இறங்க அஞ்சுகின்றனர்.

    மினிபம்பு அமைத்துதரவேண்டும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கிய அரசுக்கு நன்றி என்றார்.

    வேல்முருகன்(பாமக):

    மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை நிருபயா வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கியதுபோன்ற கடுமையான தண்டைனை வழங்கவேண்டும்.

    மணிப்பூர் சம்பவத்தை கண்டனம் தெரிவிக்கிறோம். தென்பாதி பயணியர் விடுதி அருகே புதிதாக கல்வெர்ட் அமைத்துதரவேண்டும் என்றார்.

    தலைவர் துர்காராஜசேகரன்:

    மாமிச கழிவுகள் கொட்டும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.

    17-வது வார்டில் பள்ளி கட்டடம் கட்ட அரசுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பபட்டு அனுமதி பெற காத்திருப்பில் உள்ளது மணிப்பூர் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்றார்.

    • தேவகோட்டையில் நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சி கூட்டரங்கில் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

    துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில் அரசு ஒதுக்கீடு செய்த எல்.இ.டி லைட்கள் பல நாட்கள் ஆகியும் இன்னும் அதன் பணி நடைபெறாமல் இருப்பது ஏன் என்றார்.

    ஓவர்சீஸ் எல்.இ.டி லைட் பொருத்தும் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தலைவர் சுந்தரலிங்கம் எல்.இ.டி லைட்கள் பொருத் தம் பணியை விரைவு படுத்த வேண்டும் என அதி காரியிடம் கேட்டுக் கொண்டார். கவுன்சிலர் முத்தழகு பேசுகையில் கருதாவூரணி கடந்த காலங்களில் நகராட்சி மூலம் மீன்கள் வளர்க்கப் பட்டு அவை குத்தகைக்கு விடப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கழிவுநீரால் ஊரணி மாசு அடைந்துள்ளது.

    தலைவர் சுந்தரலிங்கம் கடந்த நகர மன்ற கூட்டத்தில் கருதாவூரணி சுத்தம் செய்யப்பட்டு பழைய பயன் பாட்டுக்கு கொண்டு வரப் படும். கவுன்சிலர் அய்யப் பன் ஆணையாளர் பொறி யாளர் பணியிடம் காலியாக உள்ளது. நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படு கிறது. தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதை தீர்மானங்கள் ஏற்றி அனைவரும் உயர் அதிகாரிகளை சந்திப்போம்

    துணைத்தலைவர் ரமேஷ் மாநகராட்சிகளை விட இங்கு வரி விதிப்பு அதிகமாக உள்ளது. வரி விதிப்பு மண்டலங்களை மறு ஆய்வு செய்து வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் இடைத்தரகர்கள் நகராட்சியில் அதிகரித்து வருகிறது என்றார். தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
    • உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கொடைக்கானல்,

    கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றக்கூட்டம் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் நாராயணன் வரவேற்றார் இக்கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

    சுப்பிரமணிபால்ராஜ் (அ.தி.மு.க):- நகரில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவ தில்லை. பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கவுன்சிலர்களை யார் என்று தெரியவில்லை. எனவே இதனை முறைப்படுத்த வேண்டும்.

    பரிமளா (தி.மு.க.):- நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை.

    ஆணையாளர்:- உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிரபா ஷர்மிலி (தி.மு.க.):- நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய கூட்டுக் குழு கூட்டம் நடத்த வேண்டும். நகராட்சி கவுன்சிலர்களை நகராட்சி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக அவர்களுடனான அறிமுக ஒன்றிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

    ஜெயசுந்தரம் (அ.தி.மு.க.):- அரசு மூலம் சிறு வியாபாரிகளுக்கு தள்ளு வண்டி கடைகள் வழங்க ப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்க ளில் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஆணையாளர்:- இது அரசின் கொள்கை முடிவு. நாடு முழுவதும் ஏழை களுக்கு இலவச கடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் பகுதியில் சுமார் 1050 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அட்டை இல்லாதவர்கள் வருங்காலங்களில் கடை வைக்க முடியாது.

    தலைவர்:- நகரில் ஏற்பட்டு வரும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் ரூ.41 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சுமார் 3.5 ஏக்கர் இடம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற னர். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அருள்சாமி (தி.மு.க.):- சீசன் தொடங்கியுள்ள நிலையில் துப்புரவு பணி யாளர்கள் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.

    ஆணையாளர்:- கூடுதலாக 50 துப்புரவு பணியாளர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர். இவர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

    மோகன் (தி.மு.க.):- நகரில் உள்ள சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது அல்ல. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    போஸ் (சுயேட்சை):- பாக்கியபுரம் பகுதியில் 1959 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கழிப்பறையை காண வில்லை. இதில் உள்ள 6.15 சென்ட் இடத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    ஆணையாளர்:- நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் உடனடி ஆய்வு செய்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    பரிமளா (தி.மு.க.):- தங்கள் பகுதியில் உள்ள சமுதாயக் கூடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொறியாளர்:- நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை தலைவரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

    முடிவில் நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    • பொது மக்கள் குறைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அய்யப்பன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

    நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்து கொண்டார். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், பேனர்கள் வைக்கவும் ஏற்கனவே உள்ள தடையை அமல் படுத்தவும், மீறுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    மேலும் திருமணம் மண்டபத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இரவில் தூங்க முடியாத நிலை உள்ளது. கொசு மருந்து அடித்தாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    உசிலம்பட்டி நகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பொது இடத்தில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதித்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும். மேலும் வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை என்னிடம் தெரிவித்தால் அதற்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதலின் படி நவீன தகன மேடை அமைக்கும் பணி ரத்தானது.
    • நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.

    பணிகள் ரத்து

    கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்களால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பணி உத்தரவு மற்றும் பணி ஒப்பந்தம் ஆகியவற்றினை ரத்து செய்ய மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்க ப்பட்டது.

    கீழக்கரை நகரில் அமைந்து உள்ள நூலகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத இட நெருக்கடி யான வாடகைக் கட்டி டத்தில் இயங்கி கொண்டி ருக்கிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான கீழக்கரை செம்பி ஆயில் கம்பெனி அருகில் உள்ள இடத்தில் நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

    கூட்டத்தில் நகர் மன்ற துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் பேசுகையில், கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளுக்கு சரிவர பணிகள் நிறைவேற்ற வில்லை. அனைத்து கவுன்சி லர்களிடமும் நகராட்சி தலைவர் ஆலோசனை செய்து பாரபட்சமில்லா மல் நிதியை அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து ஒதுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கவுன்சிலர்கள் ஷேக் ஹுசைன், முகமது பாதுஷா ஆகியோர் பேசினர். அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கை நிறைவேற்ற விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் செகா னாஸ் ஆபிதா கூறி னார்.

    பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மேலாளர் தமிழ்ச் செல்வன், உதவியாளர் உதயா, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எம்.எம்.கே. முகமது காசிம், சுஐபு, மீரான் அலி, நசீருதீன், பயாஸ்தீன், நவாஸ் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • கூடலூர் நகராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சி சார்பில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலா 50 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சி கூட்டம் தலைவர் பத்மாவதி லோகன்துரை தலைமையில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் உட்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேவர் சிலை மற்றும் இந்து நடுநிலைப் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டுதல், சுல்லக்கரை ஓடையிலிருந்து வடக்கு போலீஸ் நிலையம் வரை மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் வசதி செய்தல், கருணாநிதி காலனி மற்றும் காந்தி கிராமம் பகுதியில் உள்ள கழிப்பறை கட்டிடங்களை சீரமைப்பு பணி செய்தல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நகராட்சி சார்பில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தலா 50 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டது. கூட்டம் முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
    • கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சித்ரா (பொறுப்பு) வரவேற்றார். துணைத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏரி, குளங்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் வசதிகள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர். இந்த கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக இளநிலை உதவியாளர் சாவித்திரி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் ரங்கநாதன் பேசுகையில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ராஜேந்திர சோழன் நினைவு வளைவு வைக்க வேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குத்தகைக்காரர்கள் நகராட்சி அனுமதி இன்றி போலி ரசீது தயாரித்து வாரச்சந்தை மற்றும் தினசரி வசூல் செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சந்தையை மறு குத்தகைக்கு ஏலம் விட வேண்டும், குத்தகைக்காரர்கள் செலுத்த வேண்டிய பணத்தை வசூல் செய்ய வேண்டும்.

    கீழக்குடியிருப்பு மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுகளில் மயானத்திற்கும், கொம்மேடு பகுதியில் வேட்டைக்கார தெருவில் தார் சாலை, மின்விளக்கு வசதி செய்த தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

    6-வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், பஸ் நிலையத்தில் ஆவின் பால்கடை ஏலம் விட வேண்டும், 5-வது வார்டு குஞ்சிதபாதபுரம் பகுதியில் மின்விளக்கு வசதியும், கழிவுநீர் வாய்க்காலும் அமைத்து தர வேண்டும், 18-வது வார்டு கவுன்சிலர் கிருபாநிதி, தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி முறையாக மேற்கொள்ள வேண்டும் கீழத்தெருவிற்கு நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கைகள் கால தாமதம் ஆவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கொடியேற்றுவதற்கு கவுன்சிலர்கள் தாங்களுக்கு நகராட்சி வழங்கிய படிப்பணத்தை கொடுத்து உதவினர்.

    • துறையூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர், சாலைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோர முடிவு

    திருச்சி:

    துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோருவது,

    நகர்மன்ற தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, நகராட்சிக்கு சொந்தமான பள்ளி கட்டடங்களை சீரமைத்து ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது உள்ளிட்ட 69 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.

    பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், சுமதி மதியழகன், பாலமுருகவேல், சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒட்டன்சத்திரத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
    • இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. நகரச் செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, ஆணையாளர் தேவிகா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணி க்கு ஒப்பந்த பணியாளர் நியமிப்பது, பழனி கவுண்டன் புதூர், கொசவபட்டி காலனி பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டுவது,

    புதிய மின் விளக்குகள் அமைத்தல், காப்பிலியபட்டி உரக் கிடங்குகளில் மியாவாக்கி அடர்வன காடுகள் அமைத்துப் பராமரித்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×