search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திர ஜடேஜா"

    • பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் பெயர் இடம்பெற்றுள்ளது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோதியும் இதில் இடம் பெற்றுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

    அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக், காயம் காரணமாக ஓய்வில் இருந்து பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும். அதே போல் ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), நாட் ஸ்கிவர்-பிரண்ட் (இங்கிலாந்து), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • டோனிக்கு மிகப்பெரிய தூணாக இருக்க முடியும் என ஜடேஜா நிரூபித்து காட்டியுள்ளார்.
    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மும்பை:

    சென்னையில் எம்.எஸ்.தோனிக்கு கிடைத்த அதே வரவேற்பும், புகழும் மற்றொரு வீரருக்கும் கிடைக்கப்போகிறது. அதனை இந்த சீசனிலேயே அவர் நிரூபித்துக்காட்டுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி போட்டி அட்டவணைகள் சமீபத்தில் வெளியாகின.

    இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் உற்சாகம் காத்துள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என கூறப்பட்டுள்ளது.

    சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.டோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் எனத்தெரிகிறது. அந்தவகையில் சென்னை மைதானத்தில் தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டு விடை பெறுவார் எனத்தெரிகிறது. மற்றொருபுறம் கடந்தாண்டு பாதி போட்டிகளில் ஜடேஜாவின் கேப்டன்சியும், பாதி போட்டிகளில் டோனியின் கேப்டன்சியும் இருந்ததால் சொதப்பலானது. ஆனால் இந்த முறை தவறுகளை சரிசெய்ய முணைப்புடன் உள்ளனர்.

    இந்நிலையில் இந்தாண்டு டோனிக்கு கிடைக்கும் அதே பெருமை ஜடேஜாவுக்கும் கிடைக்கும் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது ஃபார்ம் என்னவென்பதை நிரூபித்து காட்டியுள்ளார். டோனிக்கு மிகப்பெரிய தூணாக இருக்க முடியும் என ஜடேஜா நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் நன்கு ஃபிட்டாக இருக்கிறார். சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றால் நிச்சயம் டோனிக்கு கிடைத்த மரியாதை ஜடேஜாவுக்கும் கிடைக்கும்.

    தொடர்ந்து பேசிய அவர், ருதுராஜ் கெயிக்வாட் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் விளையாடுவார். அவர் இந்த முறை நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சீசனின் சென்னையில் வெற்றியுடன் தொடங்கும். ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்ற டோனியும் தயாராக உள்ளார்.

    என ரெய்னா கூறியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

    • முகமது சிராஜிடம் இருந்து கிரீம் போன்ற பொருளை ஜடேஜா வாங்கி தனது விரலில் தேய்ப்பது வீடியோவில் தெரிந்தது.
    • ஜடேஜா பந்தை சேதப்படுத்தவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது

    நாக்பூர்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், போட்டியின் முதல் நாளில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தபோது, பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்த்தார். முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனது விரலில் தேய்ப்பது வீடியோவின் மூலம் தெரிந்தது.

    ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக இதனை ஆஸ்திரேலிய மீடியாக்கள் தெரிவித்தன. ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தது.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

    • காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார்.
    • போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டிடம் இந்திய அணி விளக்கம் அளித்தது.

    நாக்பூர்:

    நாக்பூரில் நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். இதற்கிடையே போட்டியின் போது ஜடேஜா தனது கைவிரலில் மர்ம பொருளை தடவினார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    முகமது சிராஜ் தனது உள்ளங்கைக்கு மேலே வைத்து ஒரு க்ரீம் போன்ற திரவத்தை ஜடேஜாவிடம் கொடுக்கிறார். அதை ஜடேஜா தனது விரலால் லேசாக தொட்டு, பந்தை பிடித்து வீசும் இடது கையின் அனைத்து விரல்களிலும் தடவினார்.

    ஜடேஜா தனது கைவிரலில் தடவிய மர்ம பொருள் என்ன என்று சர்ச்சை கிளம்பின. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம்பெய்ன் டுவிட்டரில் கூறும் போது, இது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்றார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, ஜடேஜா தனது விரல்களில் என்ன பூசுகிறார்? இது போன்றதை நான் பார்த்ததில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டிடம் இந்திய அணி விளக்கம் அளித்தது.

    நடுவரை இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, ஜடேஜா தனது விரல்களில் வலி நிவாரணி கிரீமை தடவியதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    • இந்திய அணியில் குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் அய்யர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

    வங்காளதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.

    • உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அஜய் ஜடேஜா கூறியதாவது:-

    ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் ஆடவில்லை. அவரது இடத்தில் அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் வரிசைக்கு மாற்றாக அக்‌ஷர் படேல் இருக்கிறார். அவரை போன்று அக்‌ஷர் படேல் பேட்டிங் செய்கிறார். பந்து வீசுகிறார். பீல்டிங் மட்டும் இன்னும் பொருத்தமாக அமையவில்லை. உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும். அணிக்கு மீண்டும் திரும்பும் போது ரவீந்திர ஜடேஜா நல்ல நிலையில் இருப்பார்.

    அஜய் ஜடேஜா

    அஜய் ஜடேஜா

    இவ்வாறு அஜய் ஜடேஜா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை.
    • ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால்ர, டி20 உலக கோப்பை அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், டி 20 உலக கோப்பை அணியில் ஜடேஜா இல்லாதது குறித்து ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறியதாவது:

    ஜடேஜா 5-வது இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல் ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இருந்தபோது அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருந்தது.

    ஜடேஜா காயத்தால் விலகியபின் அணியில் இடது கை ஆட்டக்காரர் வேண்டும் என்பதாலே தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்டை அணி 4வது அல்லது 5வது வரிசையில் ஆட தேர்வு செய்தது. உலக கோப்பையில் இந்திய அணி 4 அல்லது 5-வது வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என தேர்வு செய்ய வேண்டும்.

    ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு, அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருந்தார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    • முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார்.
    • டி20 உலக கோப்பையிலும் ஜடேஜா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பையில் விளையாடி வந்தார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் படேலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரவீந்திர ஜடேஜாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் காயத்தின் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது.

    மேலும், சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு முன்பு போதிய காலம் தேவைப்படும் என்பதால், அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரிய வந்துள்ளது.

    ஜடேஜா டி20 உலக கோப்பையில் விளையாட முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    • ஆசிய கோப்பையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக அக்சர் படேல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    இந்திய அணி தான் ஆடிய 2 போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

    ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவிபிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக உள்ளனர்.

    தொடரை பொறுத்தும், திறமையை பார்த்தும் அவர்களது தேர்வு இருக்கிறது. இவர்களில் யாரெல்லாம் 20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜா, யுசுவேந்திர சாஹல், ரவிபிஷ்னோய் ஆகிய 4 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த போட்டியின் அடிப்படையில் தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இருக்கும்.

    இந்த நிலையில் உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட்டுகளை எடுக்க முடியாது என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை அணியில் ஜடேஜா இடம் பெற்றாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியாது. 2021 உலக கோப்பைக்கு பிறகு விளையாடிய 7 போட்டிகளில் அவர் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 43க்கு மேல் உள்ளது. ஒரு ஓவருக்கான ரன்னும் அதிகமாக இருக்கிறது.

    அவர் மட்டுமின்றி அக்‌ஷர் படேல், அஸ்வினும் 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கைப்பற்றும் பவுலர்களாக இல்லை. அக்‌ஷர் படேல் கடந்த உலக கோப்பைக்கு பிறகு 13 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல் ஆகிய 3 பேரால் 2 போட்டிகளுக்கு ஒரு விக்கெட்டை தான் எடுக்க முடிகிறது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாஹல் தான் பொருத்தமானவர். 

    அவருக்கு அடுத்தபடியாக அணியின் பொருத்த மான சுழற்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    • இந்தியா 2 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
    • ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    பர்மிங்காம்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா, ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார். ஜடேஜா அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 320 ஆக இருந்தபோது ரிஷப் பண்ட் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி 73 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஜடேஜா 83 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×