search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.
    • இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அந்த கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:-

    1974ம் ஆண்டில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த பிரச்சினை தொடங்கியது.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்திய மீனவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன.
    • கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.

    புதுடெல்லி:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபடவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு இரு நாடுகளும் உடன்படவில்லை. ஆனாலும், ரஷியாவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடர்ந்து வலுவாக உள்ளது.

    ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.

    பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிழக்கு நகரான விளாடிவோஸ்டாக்கிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது ஜெய்சங்கரிடம் பேசிய அதிபர் புதின், எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் காண்பதற்கும், அனைத்து நடப்பு சூழல்களைப் பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி ஜூலை மாதத்தில் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடும் எனவும், இந்தப் பயணத்தின்போது அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசுவார் எனவும் ரஷிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    • மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள். IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.

    எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அபுதாபி இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் திறந்து வைத்தார்.
    • அங்கு நிறுவப்பட்ட சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.

    அபுதாபி:

    இந்திய பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.

    இதையடுத்து துபாய்–அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55,000 சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.

    இதற்கிடையே, அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் திறந்துவைத்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள கடவுள் சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.

    இந்நிலையில், அபுதாபி இந்து கோவிலுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலுக்குச் சென்றதில் ஆசிர்வதிக்கப்பட்டேன். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்புறவின் புலப்படும் சின்னமாக இது உலகிற்கு ஒரு நேர்மறையான செய்தியை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோவில் இரு நாடுகளுக்கு இடையே ஓர் உண்மையான கலாசார பாலமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார்.
    • இலங்கையில் பால் உற்பத்திதுறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கொழும்பு:

    பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக புதிய அரசு அமைந்த பிறகு முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் அவரை இலங்கை மந்திரி தாரக பால சூரியா, கிழக்கு மாகாண கவர்னர் தொண்டமான் மற்றும் பலர் வரவேற்றனர்.

    பின்னர் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும், தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கையில் இந்திய நிறுவனம் முதலீடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும், இடையே எரிசக்தி துறை தொடர்பான கூட்டுத்திட்டத்தை விரைவு படுத்துவது தொடர்பாகவும், இலங்கையில் பால் உற்பத்திதுறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


    மேலும் இலங்கையில் இந்திய நிதி உதவியுடன் இந்தியா-இலங்கை இடையே ரூ. 50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

    இந்திய அரசின் உதவியுடன் இலங்கை கண்டி, மாத்தறை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள 154 வீடுகளை ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் ஜெய்சங்கர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, வெளியுறவு துறை மந்திரி அலி சப்ரி உள்ளிட்டவர்களையும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

    இலங்கையில் உள்ள தமிழ் அமைப்பு தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
    • புதிய அரசு அமைந்தபின் வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.

    கொழும்பு:

    மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா, கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

    இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முன்னதாக, இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என தெரிவித்துள்ளது.

    • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
    • ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார். மேலும் இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக பல்வேறு உயர்மட்ட பேச்சு வார்த்தையில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

    பிரதமர் மோடி, ஆகஸ்ட் மாதம் இலங்கையில் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
    • தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்த்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், " குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.

    இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்" என்றார்.

    • நமது எல்லைகளில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு அவசியம்.
    • அதற்கு நமது ராணுவத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றார் வெளியுறவு மந்திரி.

    ஐதராபாத்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது.

    கொரோனா காலகட்டத்திலும், உக்ரைன் போர், இஸ்ரேல் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களிலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தது.

    உலகில் தற்போது எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் தவறாகப் போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அனைத்து சூழல்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

    நமது எல்லைகளில் நமக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. அதை எதிர்கொள்ள வலுவான உள்கட்டமைப்பு அவசியம். ராணுவத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமானது.

    கடந்த 1992-ம் ஆண்டு இஸ்ரேலில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது. அதற்குமுன் அங்கு இந்திய தூதரகம் இல்லை. தொடர்ந்து 1992 முதல் 2017 வரை பிரதமர் மோடியை தவிர எந்தவொரு இந்திய பிரதமரும் இஸ்ரேலுக்குச் சென்றதில்லை.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய தவறை நாங்கள் திருத்தியிருக்கிறோம் என தெரிவித்தார்.

    • வளைகுடா பகுதியில் 17 இந்தியர்களுடன் சென்ற இஸ்ரேல் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
    • இஸ்ரேல் கப்பலில் இருந்த இந்தியர்களில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் நாடு திரும்பினார்.

    புதுடெல்லி:

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா பகுதியில் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. விசாரணையில், கப்பலில் இருப்பவர்களில் 17 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது.

    இதற்கிடையே, சரக்கு கப்பலில் உள்ள 17 ஊழியர்களை மீட்கும் பணி நடந்துவந்தது.

    இந்நிலையில், கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இன்று பத்திரமாக நாடு திரும்பியதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பலில் மீதமுள்ள 16 இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். பாதுகாப்பாக இருக்கும் அவர்களை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளது.

    • பாஜக தலைமையிலான அரசு நாட்டின் எல்லையை பாதுகாத்துள்ளது
    • வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்

    அசாம் மாநிலத்தில் லக்கிம்பூரில் பாஜகவின் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு "பை-பை கூறினார். அதை இம்மாநில மக்கள் அதை எப்போதும் மறக்க முடியாது

    ஆனால் இப்போது, நமது நிலத்தில் ஒரு இன்ச் கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியவில்லை. டோக்லாமில் கூட, நாங்கள் அவர்களை பின்னுக்குத் தள்ளினோம்

    பாஜக தலைமையிலான அரசு நாட்டின் எல்லையை பாதுகாத்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.

    மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசும் இருப்பதால், ஊடுருவல் நின்றுவிட்டது என்று சொல்லலாம். அசாமில் உள்ள முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் மாநிலத்திற்கு அநீதி இழைத்தது" என்று அமித் ஷா தெரிவித்தார்.

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.

    • இந்திய தொழிலாளர்கள் 17 பேர் பத்திரமாக இந்தியா திரும்பினர்.
    • இதற்கு ஆதரவளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி என வெளியுறவுத்துறை மந்திரி கூறினார்.

    புதுடெல்லி:

    தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து, அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. லாவோசில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக இதற்கான முயற்சிகள் நடந்தன.

    இந்நிலையில், லாவோசில் சிக்கித் தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வௌியிட்டுள்ள செய்தியில், மோடியின் உத்தரவாதம், உள்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் வேலை செய்கிறது. லாவோசில் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத வேலைகளில் சிக்கிய 17 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். பிரச்சனைக்கு தீர்வு காண வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்ட லாவோசில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பாராட்டுகள். இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவளித்த அந்நாட்டு அதிகாரிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    ×