search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாட்டிலுக்கு பதில் டெட்ரா மதுபானம் வருகிறதாம்.
    • 90 எம்.எல். கொண்ட இந்த பாக்கெட்டுக்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடுகளுக்கு செல்வார்கள்.

    அமைச்சர் முத்துசாமியின் ஆலோசனை கொஞ்சம் கூட பொருந்தாதது என்றார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அவர் கூறியதாவது:-

    காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறக்க போவதாகவும், அது வேலைக்கு செல்வோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பது போலவும் அமைச்சர் முத்துசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

    காலையில் வேலைக்கு போகும்போதே சரக்கு போட்டுக்கொண்டு போனால் நிலைமை என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். வேலை நடக்குமா? இல்லை வேலை நடக்கும் இடத்துக்கு ஒழுங்காக போய் சேருவார்களா? அடுத்து இன்னொரு சீர் திருத்தத்தையும் கொண்டு வருகிறார்களாம். அதாவது பாட்டிலுக்கு பதில் டெட்ரா மதுபானம் வருகிறதாம். 90 எம்.எல். கொண்ட இந்த பாக்கெட்டுக்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீடுகளுக்கு செல்வார்கள். அங்கு பிரிட்ஜிலோ அல்லது எங்கேயாவது வைத்திருப்பார்கள். இதை பார்க்கும் குழந்தைகள் என்ன நினைக்கும்? ஜூஸ் பாக்கெட்டுதான் வைத்திருக்கிறார்கள் என்று அதை எடுத்து குடிக்க தொடங்கும். ஆக வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள் என்றார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.
    • திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.

    தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவரை அந்த தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதையடுத்து தொகுதியில் தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டதாக உடன்பிறப்புகள் உற்சாகமாக கூறுகிறார்கள்.

    அப்படியானால் திருச்சி தொகுதி காங்கிரசிடம் இருந்து கை நழுவுகிறதா என்று திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- "கடந்த முறை 4.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறேன். தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த முறை யார் யார், எங்கே போட்டியிட்டார்களோ... பெரும்பாலும் அதுவே இந்த முறையும் தொடர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரைத்துறை வாயிலாக முற்போக்கு அரசியலை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
    • ஒவ்வொருவருக்கும் வீடு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    புதுவேதம் பட பாடல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    திரைத்துறை வாயிலாக முற்போக்கு அரசியலை மக்களுக்கு சொல்ல வேண்டும். இந்தியாவில் வீடு இல்லாமல் பலகோடி பேர் இருக்கிறார்கள். இந்தியாவை வல்லரசாக்க போராடிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் வீடு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    லட்சக்கணக்கான மக்கள் பிளாட் பாரங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும். எல்லோரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது தான் இடதுசாரி சிந்தனை. அந்த அரசியல் வலுப்பெற வேண்டும் என்றார்.

    • இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.
    • அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டுவோம். என்பது கர்நாடகா அரசின் ஆசை, ஆனால் அவர்களுக்கு உரிமை கிடையாது. அணையை கட்டக்கூடாது என சொல்வதற்கான உரிமை நமக்கு உண்டு.

    காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கபினிக்கு கீழே 80 டிஎம்சி தண்ணீர் இயற்கையாக நமக்கு வருகிறது. இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.

    2-வது அவர்கள் அணையை கட்டிட முடியாது, காரணம் மத்திய நீர் மேலாண்மை வாரியம் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வேண்டும், பிறகு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்குப் பிறகும் கட்ட வேண்டியிருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்படி பல விஷயங்கள் உள்ளது.

    அரசியலுக்காக அவர்கள் கட்டியே தீருவோம் என்பார்கள் நாங்கள் கட்ட விட மாட்டோம் என்போம். அவ்வளவுதான். அணை கட்ட முடியாது. அதனை கட்ட நாங்கள் விட மாட்டோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள். நாங்கள் அதை நிரப்பி தற்போது 1600 கோடி ரூபாய் லாபத்தை காட்டியிருக்கிறோம்.

    ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என எழுதி கொடுக்க சொல்லுங்கள். அதை நான் கவனிக்கிறேன், எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் குகையநல்லூர், அரும்பருதி, பொய்கை கோவிந்தம்பாடி, பரமசாத்து உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பணை கட்டப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர்.
    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது.

    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவது பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் திரும்பி வரும் போது 'கோ பேக் ஸ்டாலின்' என்று போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அண்ணாமலை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

    இந்த பிரச்சினையை வைத்து முழுக்க முழுக்க அரசியல் செய்ய நினைக்கிறார். கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது அணை கட்டுவோம் என்று சொல்கிறார். அதை பிடித்துக் கொண்டு அண்ணாமலை பேசுகிறார்.

    நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அணை கட்ட முடியாது என்பதை தெளிவாக கூறி இருக்கிறார். அதைப்பற்றி அண்ணாமலை எதுவும் பேசாதது ஏன்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்டா பகுதியை சேர்ந்தவர். 'மண்ணின் மைந்தர்' இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருப்பாரா? விட்டுத்தான் கொடுப்பாரா? தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் சொல்லக் கூடாது.

    இந்த பிரச்சினைக்கு காரணமே பா.ஜனதாதானே. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் பொம்மை முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய நீர்வ ளத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று விட்டார்கள். சட்டப்படி அந்த அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசுகள் இருந்ததால் ஒப்புதல் பெற்று விட்டார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. வாய்மூடிமவுனமாக இருந்துவிட்டது.

    அப்போது தமிழகத்தில் பா.ஜனதா இருந்ததா என்பதே தெரியவில்லை. இந்த செயல்கள் அண்ணாமலைக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே திசை திருப்புகிறாரா?

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிகாட்டுதல்களை கூறி இருக்கிறது. அதை மீறி எந்த அரசும் செயல்பட முடியாது.

    அதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இதற்காக 'கோ பேக்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? இதை பொது மக்கள் ஏற்பார்களா?

    முறையாக பார்த்தால் தவறாக சொல்லும் அண்ணாமலைதான் வெளியேற வேண்டும். அவருக்கு 'கோ பேக்' சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.பெங்களூரில் நடக்கப் போவது எதிர்க்கட்சிகள் கூட்டம். அதற்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? அப்படிப் பார்த்தால் பா.ஜனதா காரர்கள் பெங்களூர் செல்லமாட்டார்களா?

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    • மூத்த நிர்வாகிகள் சிலரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஆசையை கூறி இருக்கிறார்கள்.
    • ‘ஒண்ணு உறுதியாக தருவார்கள்’ இன்னொண்ணு தருவார்களா, என்பது தெரியவில்லை.

    எந்த கட்சி எந்த பக்கம் போவது என்று ஒரு பக்கம் யோசித்து கொண்டிருந்தாலும் கூட்டணியில் மாற்றமில்லை என்பதில் உறுதியாக இருக்கும் உதிரி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இப்போதே இடம் பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வில் வைகோ மகன் துரை வைகோ வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. விருதுநகர் தொகுதியை இப்போதே அவர் 'அட்வான்ஸ் புக்கிங்' செய்து வேலையையும் தொடங்கி விட்டாராம்.

    அதே நேரம் மூத்த நிர்வாகிகள் சிலரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஆசையை கூறி இருக்கிறார்கள். 'ஒண்ணு உறுதியாக தருவார்கள்' இன்னொண்ணு தருவார்களா, என்பது தெரியவில்லை. கிடைத்தால் பார்ப்போம் என்று அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

    • தேர்தல் அரசியல் என்பது வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல.
    • பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டம் பற்றி பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்துள்ள விமர்சனம்தான் இது.

    தேர்தல் அரசியல் என்பது வெறும் கூட்டல், கழித்தல் கணக்கு அல்ல. அது ரசாயனம். அதாவது மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. தேர்தல் அரசியலில் ஒன்றும் ஒன்றும் இரண்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. பூஜ்யமாகவும் மாறும். எனவே 16 கட்சி கூட்டணி அல்ல 32 கட்சிகளாக இருந்தாலும் எந்த பலனும் கிடைக்காது.

    பாராளுமன்ற தேர்தல் வரும் போது இப்படி கூடி கலைவது வாடிக்கைதான். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா? கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாபில் காங்கிரசுக்கு சீட் ஒதுக்குவாரா? மராட்டியத்தில் பிளவுபட்ட உத்தவ் தாக்கரே கட்சிக்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் எத்தனை தொகுதிகள் கொடுக்கும்? கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? இப்படி பதில் கண்டுபிடிக்க முடியாத பல கேள்விகள் இருக்கும் போது 16 கட்சிகள் இல்லை 36 கட்சிகள் 106 நாட்கள் கூடி பேசினாலும் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நடிகர் விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்.
    • யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

    சென்னை:

    ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் இன்று மாணவர்கள் மத்தியில் பேசியிருப்பது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று நடிகர் விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார். அதில் என்ன பிரச்சினை? யார் அரசியலுக்கு வர வேண்டும், யார் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விஜய்யின் கல்வி உதவித்தொகை வழங்கல் நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "விஜய்யின் கல்வி உதவி செயல்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    • டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன்.

    குஜராத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியையும் அதன் கேப்டன் டோனியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அடுத்த சீசனிலும் விளையாடுவது குறித்து டோனி கூறியதாவது, மிகவும் உணர்வுப்பூவமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

    இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் டோனியின் முடிவு குறித்து டுவிட் செய்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் டோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்.

    டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • இன்று நினைவு தினம்
    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில்:

    அம்பேத்கார் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தினகரன் மாலை அணிவித்தார்.

    தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் பூதலிங்கம், ஆதி திராவிட அணி அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், செல்வன், பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மாலை அணிவித்தார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாதவன் மற்றும் சந்திரன், சந்துரு,சகாயராஜ், வெங்கடேஸ்,ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் மனோகரன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், அலெக்ஸ்,எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் மணிகண்டன், ராஜபாண்டியன், டைசன், செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • நீதித்துறை உள்கட்டமைப்பு சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
    • நீதித்துறை உட்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.

    ராஞ்சி :

    ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த நீதிபதி சத்ய பிரதா சின்கா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தீவிர அரசியலில் சேர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் விதி வேறாகி விட்டது. நான் கடினமாக உழைத்த ஒன்றை விட்டுவிடுவது என எடுத்த முடிவு எளிதான ஒன்று அல்ல.

    காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பாததும், நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்தாததும்தான் நமது நாட்டில் கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்கிக்கிடப்பதன் காரணம் ஆகும்.

    பல நேரங்களில் நான் இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இருக்கிறேன். நீதித்துறை உட்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று வலுவாக கூறி வந்திருக்கிறேன்.

    சமீப காலமாக நீதிபதிகள் தாக்குதலுக்கு ஆளாகிற சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற இந்த சமூகத்தில்தான் எந்த பாதுகாப்பும் அல்லது பாதுகாப்பு உறுதியும் இல்லாமல் நீதிபதிகள் வாழ வேண்டியதிருக்கிறது.

    அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், போலீஸ் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு, அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர்கூட வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகைய பாதுகாப்பு நீதிபதிகளுக்கு அளிக்கப்படுவதில்லை.

    இந்த நாட்டில் எதிர்கால நீதித்துறை எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த எனது கவலைகளை பதிவு செய்யவும் நான் தவற மாட்டேன்.

    நீதித்துறை உள்கட்டமைப்பு சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சில முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இருந்தாலும், வருங்கால சவால்களுக்கு ஏற்ற வகையில் நீதித்துறையை தயார் படுத்துவதற்கென்று எந்த உறுதியான திட்டம் குறித்தும் நான் கேள்விப்படவில்லை.

    நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகளால்தான் நீதித்துறை உள்கட்டமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்மிக வாதிகள் அரசியில் பேசக்கூடாது என சொல்கிறார்கள்.
    • இந்துமதத்தின் பெருமையை நமது வழிப்பாடுமுறையை நாம் உணராமல் இருப்பது வருத்தத்குரியது.

    சீர்காழி:

    சீர்காழியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கே.சரண்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர்சுவாமிநாதன், ஒன்றிய அமைப்பாளர் பூபதிவசந்தன் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர் நாகமுத்து வரவேற்றார்

    கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் பங்கேற்று சிறப்புறையாற்றினார்.தொடர்ந்து சீர்காழி சட்டைநாதர்சுவாமி தேவஸ்தான கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று பேசுகையில், நாம் காலம், காலமாக நமது வழிப்பாட்டு முறையை மீட்கவும், பாதுகாக்கவும் போராடும் நிலை உள்ளது.

    ஆன்மிக வாதிகள் அரசியில் பேசக்கூடாது என சொல்கிறார்கள்.ஆனால் இங்கு பலஅரசியல் வாதிகள் ஆன்மிகவாதிகளை பற்றி எதைவேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். இந்துக்களுக்கு இந்து முன்னணி இயக்கமும், இந்து மக்கள் கட்சி இயக்கம் போன்ற இயக்கங்கள் தான் உண்மையாக இருக்ககூடியது.

    இந்துமதத்தின் பெருமையை நமது வழிப்பாடுமுறையை நாம் உணராமல் இருப்பது வருத்தத்குரியது. அரசு என்பது கோயில்களைபாதுகாத்து நல்லவழிபடுத்த இருக்கவேண்டுமே தவிர, இடையூறு ஏற்படுத்தகூடாது. பல கோயில்கள் வழிபாடு இல்லாமல் இருக்கின்றன.

    கொரோனா காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டும், அடக்குமுறைக்கு உள்ளானது இந்துஆலயங்களும், ஆலய வழிபாட்டு முறைகள் தான். நமது சமயத்தின் பல்வேறு வகையான கொள்கைகளை உள்ளடக்கியது. பட்டினபிரவேசத்திற்கு இந்து முன்னணிதான் முழுமூச்சாக முதலில் குரல் கொடுத்தது. இந்து கோயில்களின் வழிபாட்டிற்கு மட்டும் தான் அறநிலையத்தறையிடம் அனுமதி கேட்கும் நிலை உள்ளது. தமிழகத்தின் வழிபாட்டு முறை உலகத்திற்கே வழிகாட்டு முறையாக இருக்கிறது.கோயில்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.

    ஆலய வழிபாட்டில் இன்னும் சுதந்திரம் அடையவேண்டிய தூரம் நிறைய உள்ளது. அதற்கு நாம்ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் பாஜக நகர தலைவர் முருகன், விஎச்பி பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் இந்துஅமைப்பினர் திரளாக பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை எஸ்பி. நிஷா மேற்பார்வையில் 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

    ×