search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாவுபலி"

    • பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி.திருமண மண்டபத்தில் 98-வது பொருட்காட்சி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று உள்ளூர் விடுமுறை தினமாக மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாளை (15-ந்தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறையானதால் 15 மற்றும் 16-ந்தேதி 2 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த விடுமுறை நாட்களில் வாவுபலி பொரு ட்காட்சி மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டும் இல்லாமல் கேரளா பகுதியில் உள்ள மக்களும் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த பொருட்காட்சியில் குழந்தை களை குதூகலப்படுத்தும் மிகப்பெரிய ராட்டினங்கள், பெரியவர்களை குதூகலப்ப டுத்தும் மரணக்கிணறு உட்பட பல்வேறு வகையான விளையாட்டுகள், கண்காட்சி பொருட்கள் உள்ளன. இது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் விளை பொருட்கள் ஏராள மானவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளது. மேலும் ஏராளமான கைவினை பொருட்களும் பொருட்காட்சியில் பார்வை க்காக வைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் உற்சாகமாக வந்து வாவுபலி பொருட்காட்சியை கண்டு களித்து செல்கின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் பெண்கள் புதிய ரக செடிகளை வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பொருட் காட்சி நடைபெறவில்லை
    • 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்

    கன்னியாகுமரி :

    குழித்துறையில் ஆண்டு தோறும் ஆடி அமாவா சையை ஒட்டி குழித்துறை நகராட்சி சார்பில் பொருட் காட்சி நடைபெற்று வரு கிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பொருட்காட்சி நடைபெறவில்லை.இவ்வாண்டு நடைபெறும் 97-வது வாவுபலி பொருட்காட்சி நேற்று மாலை தொடங்கியது. பொருட்காட்சி மைதானத் தில் உள்ள வி.எல்.சி திருமண மண்டபத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

    தலைவர் பொன். ஆசைதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழாவிற்கு தலைமை வகித்தார். ஆணையாளர் ராமத் திலகம், என்ஜினீயர் பேரின்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பிரவீன் ராஜா, சுகாதார அலுவ லர் ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர் குரு சாமி, பொருட்காட்சி காண்ட்ராக்டர் பால்ராஜ், வேளாண்மை இணை இயக் குனர் அவ்வை மீனாட்சி, உதவி இயக்குனர் சந்திர போஸ் கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லீன்கெனில், விஜு, விஜயலட்சுமி, மினி குமாரி, ரவி, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், ஜூலியட் மெர்லின் ரூத், பெர்லின தீபா, லில்லி புஷ்பம், ரீகன், ரெத்தினமணி, அருள் ராஜ், ஜலீலா ராணி, சர்தார் ஷா, செல்வகுமாரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொருட்காட்சியில் விவசாய கண்காட்சி, ராட்சத ராட்டினங்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மரணக் கிணறு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்கு கள், மாயக்கண்ணாடி, நாகக்கன்னி, மருத்துவத்துறை, விவசாயத்துறை உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் சம்பந்த மான அரங்குகள் ஆகியவை இடம் பெறுகிறது.

    வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு விவசாய பொருள்களான மா, பலா, தென்னங்கன்றுகள், கனி வகைகள் மற்றும் காய்கறி செடிகள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகள் உட்பட ஏராளமான செடி, கொடி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்களின் படைப்பு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பல மரச்சீனி, வாழைக்குலை, கிழங்கு வகைகள் உட்பட ஏராளமான பொருட்களை வளாகத்தினுள் பார்வைக்கு வைத்துள்ளனர். களியக் காவிளை மற்றும் மார்த் தாண்டம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • நாளை தொடங்கி 20 நாட்கள் நடக்கிறது
    • 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயார்

    கன்னியாகுமரி: 

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வாவுபலி பொருட்காட்சி இந்த ஆண்டு நாளை (13-ம் தேதி) தொடங்குகிறது. 97-வது வாவுபலி பொருட்காட்சியின் துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு வி.எல்.சி மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்கிறார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி திட்ட உரையாற்றுகிறார். கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார்.

    தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பொருட்காட்சியை திறந்து வைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் முன்னிலை வகிக்கிறார்.

    நிகழ்ச்சியில் பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பி னர்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி, பிரின்ஸ், எம். ஆர் காந்தி, தளவாய் சுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் விவசாய கண்காட்சி, ராட்சத ராட்டினங்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பல தரப்பட்ட ராகன் ராட்டினங்கள், மரணக்கிணறு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், மாய க்கண்ணாடி, நாகக்கன்னி, மருத்துவத்துறை, விவசாயத்துறை உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் சம்பந்தமான அரங்குகள் ஆகியவை இடம் பெறுகிறது.

    வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு விவசாய பொருள்களான மா, பலா, தென்னங்கன்றுகள், கனி வகை கன்றுகள் மற்றும் காய்கறி செடிகள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகள் உட்பட ஏராளமான செடி, கொடி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. வாவுபலி பொருட்காட்சி நடத்துவதற்கு ஏதுவாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ×