search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • இன்று சர்வ ஏகாதசி.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-1 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி இரவு 7.16 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 2.14 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் பூப்பல்லக்கில் பவனி. மதுரை ஸ்ரீ கடலழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஸ்ரீ ரங்கம் நம் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சனம். திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம், பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-ஆக்கம்

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-வாழ்வு

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-ஈகை

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-கவனம்

    கும்பம்-இன்பம்

    மீனம்-ஆசை

    • ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி.
    • நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம்.

    விரதங்களில் மிக மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வரும். இந்த ஏகாதசி விரதங்களில் சில ஏகாதசி விரதங்கள் மிகுந்த பலன்களை தரும் ஆற்றலை கொண்டது.

    குறிப்பாக ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி. அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தனை ஏகாதசி மற்றும் மகாவிஷ்ணு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகளும் மிகவும் சிறப்பானவை.

    ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரத நோன்பு இருக்கலாம்.

    இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு படத்தை பூஜை அறையில் அலங்கரித்து வைத்து நைவேத்தியம் படைத்து தீபதூபங்கள் காட்டி வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவை அலங்கரிக்கும்போது தாமரை அல்லது மல்லிகைப்பூவை பயன்படுத்துவது நல்லது.

    நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம். பூஜைகள் முடிந்ததும் மகாவிஷ்ணு போற்றி சொல்ல வேண்டும். இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்தால் ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்ததற்கு சமமான பலன்கள் கிடைக்கும்.

    பிரம்மகத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகிச் செல்லும். மேலும் நல்ல வீடும், அமைதியான வாழ்க்கையையும் இந்த வழிபாடு பெற்று தரும். 

    சயன ஏகாதசியான இன்று மேற்கொள்ளப்படும் விரதத்திற்கு கோபத்ம விரதம் என்று பெயர். காலை மற்ற கடமைகளை முடித்து விட்டு பூஜை அறையில் 3 கோலங்கள் போட்டு தாமரை மலர்களால் அலங்கரித்து அதன் நடுவில் மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு இருக்கும் படத்தை வைத்து வழிபட வேண்டும்.

    33 முறை வலம் வந்து 33 முறை வழிபட வேண்டும். படம் இல்லாமல் கலசம் வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிறகு 33 நபர்களுக்கு பிரசாதம் அளிப்பது சாப்பிட செய்ய வேண்டும். இந்த பூஜை செய்பவர்களுக்கு பாவங்கள் விலகும். பேரன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.
    • ஆடி மாதம் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    நாளை (புதன்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டு அருள் பெற வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது.

    ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டால் நீங்களும் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயத்துக்கு தவறாமல் செல்வீர்கள். அதைப் பார்க்கலாம்...

    தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை நாடியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்க்கு சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்.

    மாரியம்மன் கோவில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது. ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் மாரியம்மன் தான் மக்களை காக்க மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்.

    ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோவில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும்.

    ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.

    தமிழ் மாதங்களை உத்ராயணம், தட்சணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தட்சணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது.

    தட்சணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், வழிபாடுகள் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது.

    சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, அம்மன் வழிபாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. அம்மனுக்கு வேப்பிலை சாற்றி வழிபடுவது, கூழ் படைத்து சாப்பிடுவதும் ஆடி மாதத்தின் சிறப்பாகும்.

    ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசிக்குள் புனர்பூசம் 4-ம் பாதத்தில் நுழைவார். கடகம் சந்திரன் வீடு பெண் ராசி. பெண் வீட்டில் ஆண் கிரகமான சூரியன் நிற்பதால் ஆடி மாதம் தட்ப வெப்ப நிலை சீராக இருக்காது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் புதிதாக துளிர் விடும் கொழுந்து வேப்பிலைக்கு அதீத மருத்துவ, தெய்வீக குணம் உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியும் உண்டு. மேலும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவான கூழ் சாப்பிட்டால் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

    சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.

    உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

    "ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

    வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.

    வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

    லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.

    அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

    இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?

    அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.

    அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.

    அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும். அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.

    ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்ப தால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும்.

    குறிப்பிட்ட எண்ணை மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள்.

    தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

    வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.

    • இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது.
    • மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.

    நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இதேபோல் அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    கனமழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சாண்டிநல்லா பகுதியில் மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் வாகனங்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்தன. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை நீடித்தது. இந்த மழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.

    தரைப்பாலம் நீரில் மூழ்கியதை அடுத்து, ஊட்டியில் இருந்து தெப்பக்காடு வழியாக கூடலூர் மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    மேலும் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை ஆற்றுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், பழங்குடியின மக்கள், சுற்றுலா பயணிகள் மாயாற்றின் அருகே செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் அந்த பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. கற்கள், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மலைப்பாதையில் கிடந்த மண், கற்கள் அகற்றப்பட்டன. அதனை தொடர்ந்து போக்குவரத்தும் சீரானது.

    கூடலூர்-ஓவேலி சாலையில் ராக்லேன்ட் பகுதியில் மூங்கில்கள் சரிந்து அருகே இருந்த மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கூடலூர்-ஊட்டி சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியில் ராட்ச பாறை மற்றும் மரம் ஒன்று முறிந்து, சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து, மரத்தை வெட்டி அகற்றினர்.

    அவலாஞ்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்கிறது.

    இதன் காரணமாக அவலாஞ்சியில் வனத்துறை சார்பில் நடைபெறும் சூழல் சுற்றுலாவுக்கு இன்றும், நாளையும் என 2 நாட்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37, அப்பர் பவானியில் 24 செ.மீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-372, அப்பர் பவானி-248, எமரால்டு-135, கூடலூர்-108, அப்பர் கூடலூர்-106, சேரங்கோடு-113, பந்தலூர்-92, ஓவேலி-88, பாடந்தொரை-85, தேவாலா, குந்தா-83, செருமுள்ளி-82, நடுவட்டம்-79, கிளைன்மார்கன்-59, ஊட்டி-53.

    • 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்தவை.
    • கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அகத்தியர் ஏரியின் கிழக்கே அமைந்திருக்கிறது, பூதநாதர் குழு கோவில்கள். இவை கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமய ஆலயங்களாகும். இவை இரண்டு துணைக் குழுக்களாக அமைந்துள்ளன.

    அதில் ஒன்று கிழக்கு பூதநாதர் குழு அல்லது பூதநாதர் முதன்மை குழு என்று அழைக்கப்படுகிறது. இது 7 முதல் 8-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தை சேர்ந்தவை. இவை பெரும்பாலும் திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளன.

    மற்றொன்று வட பூமிநாதர் குழு அல்லது மல்லிகார்ஜூன குழு என்று அழைக்கப்படுகிறது. இவை 11 முதல் 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் கட்டப்பட்டவை. இதன் பெரும்பாலான கட்டிடக்கலை வட இந்திய பாணியில் அமைந்துள்ளது.

    இந்த பூதநாதர் கோவிலானது, பழமையான இந்து கோவில்களில் ஒன்று. இந்த ஆலயம் ஒரு மைய மண்டபத்துடன், எண்கோணம், கனசதுரம், வட்டம் ஆகிய அமைப்புகளில் நான்கு விதமாக கட்டிட அமைப்புகளைக் கொண்டு காட்சியளிக்கிறது.

    மைய மண்டபமானது, சிவலிங்கம் வீற்றிருக்கும் சிறிய சதுர வடிவ கருவறைக்கு முன்பு இருக்கிறது. மலையின் அடிவாரத்தில், நீர் நிலைக்குள் இருப்பது போல் இந்த ஆலயம் கட்டப்பட்டிருப்பது, பார்ப்பவர்களின் கண்களை கவர்வதாக இருக்கிறது.

    கருவறையின் உச்சியில் (விமானம்) திராவிட கட்டிடக் கலை பாணியிலான 'திரிதால' (மூன்று தளங்கள்) கட்டுமானம் கொண்டிருக்கிறது. கீழ் பகுதியில் பாதபந்த மற்றும் கும்ப அமைப்பு உள்ளது. விமானச் சுவர்களில் பிரம்மகாண்ட பாணியில் செவ்வக வடிவ தூண்களும், கின்னரர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.

    இரண்டாவது தளமானது, கீழ் தளத்தை விட சற்று சிறியதாக உள்ளது. மூன்றாவது தளம், இரண்டாவது தளத்தின் பாதி அளவில் காணப்படுகிறது. உச்சியில் குட்டையான சிகரத்துடன் காட்சி தருகிறது.

    கோவிலின் அடிவாரத்தின் வலதுபுறத்தில் கங்கை தேவி தன் வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இடது புறத்தில் யமுனாதேவி தன் வாகனமான ஆமையின் மீது வீற்றிருக்கிறார். தவிர விநாயகர், மகிஷாசுரமர்த்தினி உருவங்கள் காணப்படுகின்றன.

    பிரதான கோவிலின் வடக்கே ஒரு சிற்றாலயம் உள்ளது. இது முதலில் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தக் கோவிலை, லிங்காயத்து மரபினர் கைப்பற்றினர். அவர்கள்தான் இதற்கு ஒரு வெளிப்புற மண்டபத்தைக் கட்டி, கருவறைக்குள் நந்தியையும், சிவலிங்கத்தையும் நிறுவியுள்ளனர்.

    முதன்மை பூதநாதர் கோவிலுக்கு அருகாமையிலேயே மல்லிகார்ஜூனா குழு கோவில்கள் உள்ளன. இவை ஏரியின் வடக்கு பகுதியில் உள்ளன. தெற்கு வாசலைக் கொண்ட இந்த ஆலயம், பாம்சனா நாகர பாணியில் கட்டப்பட்டவை. இது ஒரு காலத்தில் மிகப்பெரிய விஷ்ணு வழிபாட்டிற்குரிய கோவிலாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

    பின் வழிபாடு இல்லாமல் போன இந்த ஆலயத்தில், பின்வந்தவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். கோவிலில் எட்டு தூண்களுடன் செவ்வக வடிவ மண்டபம் உள்ளது. இது உள் மண்டபம், அந்தரளம், கருவறை ஆகிய அமைப்புடன் காணப்படுகிறது. இந்த கோவில் சுவரில் விஷ்ணு, சிவன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.

    • கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை.
    • மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.

    கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை. இதன் பழங்காலப் பெயர் வதாபி என்பதாகும். இது ஆரம்ப கால சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    சாளுக்கியர்கள் 6-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை, கர்நாடகாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான மந்திர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பாதாமி சாளுக்கியர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு மந்திர்கள், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் முடிமாணிக்யம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

     1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோவில்கள், இந்து வம்ச வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. அவை அந்த காலத்தின் பொதுவான கட்டிடக்கலை பாணிகளின் கலவையை வெளிப்படுத்துகின்றன.

    கோவில்களில் ஒன்றில், கருவறைக்குள் ஒரு சிவலிங்கத்தின் அடித்தளமாக செயல்படும் ஒரு பாணவட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு கோவிலில் விஷ்ணு சிலையை மீட்டெடுத்துள்ளனர்.

    இங்கு நின்ற கோல நரசிம்மர், திரிவிக்ரமன், வாராகர் என்று விஷ்ணுவின் பல்வேறு உருவங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தாலும், சுருண்ட பாம்பின் மீது அமர்ந்த நிலையில் காலை தொங்கவிடாமல், குத்துக்காலிட்டது போல் தூக்கி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.

    • ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும்.
    • ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது பெருமை வாய்ந்தது.

    ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். அவை ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது, பெருமை வாய்ந்தது. இந்த ஏகாதசியை 'சயினி ஏகாதசி' என்பார்கள்.

    'பத்ம ஏகாதசி', 'தேவபோதி ஏகாதசி', 'விஷ்ணு சயன ஏகாதசி', 'தாயினி ஏகாதசி' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    விஷ்ணு பகவான் தன்னுடைய உலக கடமைகளை நிறைவேற்றிய பிறகு, பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து நான்கு மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்த தினம் இது வாகும். அந்த நான்கு மாதங்களும் 'சதுர்மாஸ்' என்று அழைக்கப்படுகின்றன.

    ஆடி மாதம் என்பது பொதுவாகவே சிறப்புக்குரிய மாதமாகும். அதோடு மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் சிறப்பைப் பெற்ற மாதமாகவும் இது திகழ்கிறது.

    இந்த நாளில் 'கோ பத்ம விரதம்' இருப்பது மிகவும் விசேஷமானது. கோ என்னும் பசு வழிபாடு புராணங்களில் மிகச் சிறப்புக்குரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    பாற்கடலைக் கடைந்த போது, அதில் இருந்து பல்வேறு பொருட்களும், உயிரினங்களும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவற்றில் கேட்டதை கொடுக்கும் 'காமதேனு' பசுவும் அடங்கும். இந்த பசுவிற்கு பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி என்ற ஐந்து குட்டிகள் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    சிவபெருமான், நான்கு பசுக்களை நான்கு திசை தெய்வங்களுக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது.

    அதன்படி இந்திரனுக்கு 'சுசிலை' என்ற பசுவும், எமனுக்கு 'கபிலை' என்ற பசுவும், வருணனுக்கு 'ரோகிணி' என்ற பசுவும், குபேரனுக்கு 'காமதேனு' என்ற பசுவும் வழங்கப்பட்டுள்ளது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்து அருள்புரிகின்றனர்.

    ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, 'கோ பத்ம விரத'த்தை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காலையில் எழுந்ததும் நீராடுவது அவசியம். பின்னர் பசு மாடு வைத்திருப்பவர்கள், அந்த பசுவை கட்டி வைத்திருக்கும் கொட்டிலில் (பசு கொட்டில் இல்லாதவர்கள், பூஜை அறையில் செய்யலாம்) பச்சரிசி மாவால், தாமரைப் பூ போன்று வரைந்து கோலம் போட்டு விட்டு, பின்னர் சிறிய சிறிய கோலங்களாக தாமரைப் பூ இதழ்களுடன் 33 கோலங்கள் போட வேண்டும்.

    இதனை பல வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கலாம். இந்த கோலங்களின் நடுவில் பெருமாளும், தாயாரும் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். லட்சுமி நாராயணர் படம் அல்லது விக்கிரகம் இருந்தால் அவற்றை வைக்கலாம். இல்லையெனில் கலசம் வைத்து பூஜிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கியதும், ஓம் கேசவா நமஹா, ஓம் நாராயணா நமஹா, ஓம் மாதவா நமஹா, ஓம் கோவிந்தா நமஹா, ஓம் விஷ்ணு நமஹா, ஓம் மதுசூதனா நமஹா, ஓம் திரிவிக்கிரமா நமஹா, ஓம் வாமனா நமஹா, ஓம் ஸ்ரீதரா நமஹா, ஓம் ஹ்ருஷிகேஷா நமஹா, ஓம் பத்மநாபா நமஹா, ஓம் தாமோதரா நமஹா என்ற 12 நாமங்களை சொல்லி இறைவனை ஆவாகனம் செய்ய வேண்டும்.

    பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 33 முறை இறைவனை சுற்றி வர வேண்டும். பூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை வைத்து, 33 வெல்லத்தில் செய்த அப்பத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    பூஜையின் முடிவில் அந்த நைவேத்திய பிரசாதத்தை 33 பேருக்கு பகிர்ந்து கொடுக்கலாம். இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். அவர்களுக்கு விஷ்ணு பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

    இந்த நாளில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது மிகமிக சிறப்பானது. பசுவை முதலில் பூஜித்து விட்டு இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் குடும்பத்தில் துன்பமான நிகழ்வுகள் நடக்காது. அதோடு மகாலட்சுமியின் அருள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். மரண பயம் விலகும்.

    • 19-ந்தேதி பிரதோஷம்.
    • 21-ந்தேதி பவுர்ணமி.

    16-ந்தேதி (செவ்வாய்)

    * அங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியல் அலங்காரம்.

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (வியாழன்)

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (வெள்ளி)

    * பிரதோஷம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.

    * ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன், நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (சனி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் பவணி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய் தாழி சேவை.

    * வடமதுரை சவுந்திர ராஜர் குதிரை வாகனத் தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (ஞாயிறு)

    * பவுர்ணமி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (திங்கள்)

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தீர்த்தவாரி. இரவு சப்தாவர்ணம்.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
    • சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-32 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி இரவு 6.38 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: விசாகம் நள்ளிரவு 1 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக் கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-சாதனை

    கன்னி-பண்பு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- யோகம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-நற்சொல்

    மீனம்-கடமை

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
    • இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    நாளை(16-ந்தேதி) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படு கிறது.

    இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பூஜை முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    • வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம்.
    • ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி தீர்த்தம்.

    குரோதி ஆண்டு ஆனி-31 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி மாலை 5.32 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: சுவாதி இரவு 11.21 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி தீர்த்தம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராமாவதாரம் ஸ்ரீ அனுமார் வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிச் சப்பரத்தில் புறப்பாடு. மதுரை சொக்கலிங்க புதூர் நகர சிவாலயங்களில் வருஷாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-திறமை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சிந்தனை

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- ஜெயம்

    மகரம்-உயர்வு

    கும்பம்-கடமை

    மீனம்-பணிவு

    ×