search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2022"

    • அர்ஷ்தீப் சிங், சாஹல் மற்றும் புவனேஷ்வர்குமார் சிறப்பாக செயல்பட்டனர்.
    • தோல்விகள், அணி குழுவாக இணைந்து பணியாற்றுவதை புரிய வைக்கும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இனி பாகிஸ்தான் உள்பட பிற அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:

    நேற்றைய போட்டியில் இந்திய அணி 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்தது. இரண்டாவது பாதியில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. பெரிய ஸ்கோரை எடுத்து பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைத்திருந்தோம். ஆனால் எங்களது திட்டம் பலிக்கவில்லை. இலங்கை வீரர்கள் நீண்டநேரம் நின்று சிறப்பாக பேட்டிங் செய்தனர். அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்து வீசினார்.சாஹல் மற்றும் புவி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசி விக்கெட்டுகளைப் பெற்றனர். நாங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன, கடந்த தொடர்களில் விளையாடும் போது சிலவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடித்துள்ளோம். உண்மையாகச் சொல்வதென்றால், இந்த நாட்களில் எங்களது சக வீரர்கள் சமூக ஊடகங்களை அதிகம் பார்ப்பதில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்சை விட்டதால் அர்ஷ்தீப் ஏமாற்றமடைந்தார். இது போன்ற தோல்விகள் அணி எப்படி ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பதைப் புரிய வைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 72 ரன்கள் குவித்தார்.
    • இலங்கை அணி வீரர் மெண்டிஸ் 57 ரன் அடித்தார்.

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார்.

    அதிரடியில் இறங்கிய ரோகித் சர்மா, 72 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 34 ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் 17 ரன்னிலும் ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது.

    பின்னர் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நிசாங்கா 52 ரன்னும், மெண்டிஸ் 57 ரன்னும் குவித்தனர். பானுகா ராஜபக்சே 25 ரன்னும், கேப்டன் தசன் சனாகா 33 ரன்னும் அடித்து களத்தில் இருந்தனர். இலங்கை அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா ரோகித் சர்மா அரை சதத்தால் 173 ரன்களை எடுத்தது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இறங்கினர். ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்தியா 13 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

    அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா, அதிரடியில் இறங்கினார்.

    சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சூர்யகுமார் ஜோடி 97 ரன்களை சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் 34 ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் 17 ரன்னிலும் ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது. அஷ்வின் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் மதுஷன்கா 3 விக்கெட்டும், டாசன் ஷனகா, கருணரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன.
    • இதில் இந்தியா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடையே தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பிஷ்னோய்க்கு பதில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    • சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்.
    • முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி 183 ரன்கள் குவித்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    அந்த அணி வீரர் ஆசிப் உசைன் அதிகபட்சமாக 39 ரன்கள் விளாசினார். மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். நிசாங்கா20 ரன்கள் அடித்தார். கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் குவித்தார். கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார்.

    இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    • வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆசிப் உசைன் 39 ரன்கள் விளாசினார்.
    • இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய ஆசிப் உசைன் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசினார்.. மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது. இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    • முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ்

    68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பாபர் ஹயாத் 41 ரன்னும், கிஞ்சித் ஷா 30 ரன்னும், செஷான் அலி 26 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    • விராட் கோலி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
    • சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று, துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தது. ராகுல் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    அவரைத் தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டு, ஹாங்காங் பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.

    விராட் கோலி

    விராட் கோலி

    விராட் கோலி இந்த தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 40 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். சர்வதேச டி20 போட்டிகளில் அவருக்கு இது 31வது அரை சதமாகும். மறுமுனையில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார்.

    மிக குறைந்த பந்துகளில் அதாவது 22 பந்துகளில் அரைசதம் அடித்து ஆச்சரியப்படுத்திய சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்திலும் சிக்சர் அடித்து, ஹாட்ரிக் சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். 5வது பந்திலும் ஒரு இமாலய சிக்சரை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 6 சிக்சர் உள்பட 26 ரன்கள் விளாசினார்.

    20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது. 

    • துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி முதலில் பந்து வீச முடிவு
    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி பந்து வீசுவதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), பாபர் ஹயாத், யாசிம் முர்தாசா, கிஞ்சித் ஷா, ஸ்காட் மெக்கெக்னி (கீப்பர்), ஹாரூண் அர்ஷாத், அய்சாஸ் கான், ஜீஷன் அலி, எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்பர்.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

    • 2 வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறியது.
    • வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார்.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இதன் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. 2-வது போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

    நேற்று நடந்த 3-வது 'லீக்' ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    2 வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறியது. வங்காளதேசம்-இலங்கை அணிகள் நாளை மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 'பி' பிரிவில் இருந்து 'சூப்பர்4' சுற்றுக்கு தகுதி பெறும் 2-வது அணியாக இருக்கும்.

    துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது 'லீக்' ஆட்டத்தில் இந்தியா-ஆங்காங் அணி கள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் செயல்பாடு அந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது.

    பலவீனமான ஆங்காங்குக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று 'சூப்பர் 4' சுற்றுக்கு செல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ள இந்திய கோப்டன்களில் வீராட் கோலி சாதனையை முறியடிப்பார்.

    வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார். 16 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவு இல்லை. 2 போட்டி 'டை' ஆனது. ரோகித் சர்மா 36 போட்டியில் 30 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளார். 6 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி ஏற்பட்டது.

    ஆங்காங்கை வீழ்த்தினால் ரோகித் சர்மா 31 வெற்றியுடன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். கோலி 3-வது இடத்துக்கு பின் தங்குவார்.

    டோனி 72 போட்டியில் 41 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரது தலைமையில் 28 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவில்லை. ஒரு போட்டி 'டை' ஆனது.

    ஆனால் வெற்றி சதவீதத்தை பொறுத்த வரை ரோகித் சர்மா தான் முன்னிலையில் இருக்கிறார். அவர் 83.33 சதவீதத்துடன் உள்ளார். டோனியின் வெற்றி சதவீதம் 59.28 ஆகவும், வீராட் கோலிக்கு 64.58 ஆகவும் இருக்கிறது

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதன் 4வது லீக் போட்டியில் இந்தியாவும், ஹாங்காங்கும் இன்று மோதுகிறது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது. இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்குக்கே அனுகூலமாக இருப்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீசுவதற்கே முன்னுரிமை அளிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய் அல்லது அஸ்வின், ஆவேஷ்கான், அர்ஷ்தீப் சிங்.

    ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்தசா, பாபர் ஹயாத், கின்சித் ஷா, ஸ்காட் மெக்கன்சி, அய்ஜாஸ் கான், இசான்கான், ஆயுஷ் சுக்லா, ஜீஷன் அலி, முகமது ஹசான்பர், ஹரூன் அர்ஷாத்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 127 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தார். மொசாடெக் உசைன் 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஷஷாய் 23 ரன்னிலும், கேப்டன் முகமது நபி 8 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இப்ராகிம் சட்ரான் நிதானமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சட்ரான் அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 43 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருது முஜிபுர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.

    ×