search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2-ம் கட்ட கலந்தாய்வு"

    • மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
    • மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகமலையில் உள்ள மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    பி.எஸ்.சி. கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், வணிகவியல், பி.காம். சி.ஏ., வணிகவியல் பயன்பாடு, பி.பி.ஏ. சி.ஏ., வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 8 பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

    இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரிடையாக விண்ணப்பங்கள் பெற்று காலியான இடங்க ளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேரலாம்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவிகள் 19-ந் தேதி காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் நகல், சாதி சான்றிதழ், 2 பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை ஆகியவற்றின அசல், நகல் மற்றும் படிவம், கல்லூரி கட்டணத்துடன் பெற்றோருடன் வர வேண்டும்.

    மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் 2-ம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வரும் 19-ந் தேதி கல்லூரி திறக்கும் நாள் என கல்லூரி முதல்வர் ஜெ.எபெனேசர் தெவித்துள்ளார்.

    • கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது.
    • அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேருவதற்கான விண்ணப்பபதிவு நிறைவு பெற்ற நிலையில், சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் அதற்கு விண்ணப்ப பதிவு மேற்கொண்டு இருந்தனர்.

    இவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் 3 ஆயிரத்து 363 மாணவ-மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்த கலந்தாய்வில், 25 ஆயிரத்து 253 மாணவிகள் உள்பட 40 ஆயிரத்து 287 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    இந்த 40 ஆயிரத்து 287 பேரில், 10 ஆயிரத்து 918 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன் பெற இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள்.

    2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது

    முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று தொடங்கிய 2-ம் கட்ட கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்க ளால், அவர்களது கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவு களை மாணவ- மாணவி கள் தேர்வு செய்தனர்.

    வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை இந்த கலந்தாய்வு நடக்க இருக்கிறது. இந்த 2 கட்டங்களாக நடத்தப்படும் கலந்தாய்வில் சேர்க்கை பெறும் மாணவ-மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பொதுகலந்தாய்வு மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • இந்த வருடமும் கலைக்கல்லூரிகளில் மாணவியர் சேர்க்கை அதிகளவில் இருந்தது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை பொதுகலந்தாய்வு மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5-ந்தேதி அரசு கல்லூரிகளில் கலந்தாய்வு தொடங்கியது.

    திண்டுக்கல் மாவட்டத்திலும் 5-ந்தேதி முதல் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முதற்கட்டமாக விளையாட்டு, என்.சி.சி, முன்னாள் ராணுவத்தினர், விதவை வாரிசு, ஆகியவற்றின் மாணவிகளுக்கு முன்னுரிைம அளிக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து பொதுகலந்தாய்வு நடைபெற்றது. திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வை தொடர்ந்து அறிவியல், காமர்ஸ், பி.பி.ஏ, பாடப்பிரிவுகளுக்கும், அதனைதொடர்ந்து தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவியர் சேர்க்கை நடைபெற்றது.

    கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவம், பொறியியல் கல்லூரிகளை விட கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இந்த வருடமும் கலைக்கல்லூரிகளில் மாணவியர் சேர்க்கை அதிகளவில் இருந்தது. கல்வியின் மீது கொண்ட நாட்டம் காரணமாகவும், அரசு கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் காரணமாகவும், மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என கல்லூரி முதல்வர் லட்சுமி தெரிவித்தார்.

    ×