search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • வங்காளதேச வீரர்கள் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    • வீரர் நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியும் வெற்றி பெற முடியாமல் இலங்கை ஏமாற்றம்.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது. குசால் மெண்டிஸ் (10), கமிந்து மெண்டிஸ் (4), ஹசரங்கா (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    இலங்கை அணி ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போது வங்காளதேசத்திடம் தோல்வியடைந்தால் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.

    • தொடக்க வீரர் குர்பாஸ் 80 ரன்கள் விளாசினார்.
    • பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள் பிரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹமதுல்லா குர்பாஸ்- இப்ராஹிம் ஜத்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக குர்பாஸ் சிக்சர் மழை பொழிந்தார். அவர் 56 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். இப்ராஹிம் ஜத்ரன் 41 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுகு்கு 14.3 ஓவரில் 103  ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தது.

    அதன்பின் வந்த ஓமர்ஜாயை (13 பந்தில் 22 ரன்) தவிர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஃபின் ஆலன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். அதன்பின் நியூசிலாந்து விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தது.

    கான்வே 8 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 9 ரன்னிலும், டேரில் மிட்செல் 5 ரன்னிலும், பிளிப்ஸ் 18 ரனனிலும் ஆட்டமிழந்தனர்.

    பரூக்கி, ரஷித் கான் தொடர்ந்து விக்கெட்டுகளை சாய்க்க 15.2 ஓவரில் 75 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து. இதனால் ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

    • குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி உகாண்டா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 100 ரன்கள் குவித்தது.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் 100 ரன்கள் அடித்திருந்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் உகாண்டாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சேர்ந்து 100 ரன்கள் குவித்தது.

    இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. குர்பாஸ் 80 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 44 ரன்களும் விளாசினர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து இந்த ஜோடிகள் 100 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னதாக விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி இந்த சாதனையை படைத்துள்ளது. இதன்மூலம் குர்பாஸ்- இப்ராஹிம் ஜோடி விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளது.

    பாபர் அசாம்- முகமது ரிஸ்வான் ஜோடி 3 முறை 100 ரன்களை கடந்துள்ளது.

    கில்கிறிஸ்ட்- ஹெய்டன் ஜோடி 2 முறையும், அலேக்ஸ் ஹேல்ஸ்-மோர்கன் ஜோடி இரண்டு முறையும், ஜெயவர்தனே- சங்கக்காரா, டேவிட் வார்னர்-வாட்சன் ஜோடிகள் இரண்டு முறையும் 100 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அயர்லாந்து 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் பயனில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் கனடா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய கனடா 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிக்கோலஸ் கிர்ட்டன் 49 ரன்களும், ஷ்ரேயாஸ் மோவ்வா 37 ரன்களும் அடித்தனர்.

    இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அணி அயர்லாந்து. அதனால் கத்துக்குட்டி அணியான கனடாவை அயர்லாந்து எளிதா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கனடா பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச அயர்லாந்து தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமழிந்தனர்.

    பால்பிரைன் (17), பால் ஸ்டிர்லிங் (9), டக்கர் (10), ஹாரி டெக்கர் (7), கேம்பர் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்களும், மார்க் அடெர் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அயர்லாந்து அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் கனடா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இத்தொடரில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

    • இலங்கை குரூப் போட்டிகளில் விளையாட 4 இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
    • இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளில் ஒரே மைதானத்தில் விளையாடுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. டி20 தொடர் தொடங்கியதில் இருந்து மோசமான ஆடுகளம், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு வசதியான வகையில் போட்டி அட்டவணை, மோசமான வசதி என பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    இலங்கை அணிக்கு நியாயமான முறையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியதுதான் இதற்கு காரணம். குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாட இலங்கை அணி நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இது மட்டும் போதாத நிலையில், வங்காளதேச அணிக்கெதிராக விளையாட தல்லாஸ் செல்லும்போது ஏழு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    "இது தொடர்பாக ஐசிசி-க்கு புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியாக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஐசிசி-யிடம் கேட்டுள்ளோம்" என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒட்டல், தற்போது போட்டி நடத்தப்படும் இடத்திற்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடுகிறது என மற்ற அணிகள் குற்றம்சாட்டுகின்றன.

    • அமெரிக்கா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு உலகக் கோப்பையில் அதிர்ச்சி அளிப்பது ஒன்றும் பெரிதல்ல. அந்த வகையில்தான் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அமெரிக்கா வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த போட்டி "டை"யில் முடிய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனால் குரூப் "ஏ" பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுமா? என்பது அச்சம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றைய தோல்வி குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    பரிதாபத்திற்குரிய செயல்பாடு. அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியதால் நான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அமெரிக்கா வெற்றி பெற்றார்கள். அவர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது.

    சூப்பர் ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுப்பது ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுப்பதாக நான் அர்த்தம் கொள்கிறேன். பாகிஸ்தான் "சூப்பர் 8" சுற்றுக்கு முன்னேற போராடி வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்தியா மற்றும் இன்னும் இரண்டு சிறந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அக்ரம் தெரிவித்துள்ளார்.

    குரூப் "ஏ" பிரிவில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    தற்போது அமெரிக்கா கனடா, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தயா அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா இன்னும் இந்தியா, அயர்லாந்து அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.

    இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் போகும்.

    • அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் பாபர் அசாம் 44 ரன்கள் எடுத்தார்.
    • சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    டல்லாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 44 ரன்னும், ஷதாப் கான் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 159 ரன்கள் எடுக்க, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 44 ரன்களை எடுத்து, டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4,067 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 4,067 ரன்களுடன் பாபர் அசாமும், 2-வது இடத்தில் 4,038 ரன்களுடன் விராட் கோலியும், 3-வது இடத்தில் 4,026 ரன்களுடன் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

    • முதலில் ஆடிய நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் , பிராட்லி கியூரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது. ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட்டனர். மைக்கேல் லீஸ்க் 35 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், ஸ்காட்லாந்து 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிச்சி பெரிங்டன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    35 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மைக்கேல் லீஸ்க் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    • ஆட்டத்திற்கு இடையில் ஹர்டிக் பாண்டியா, சும்பன் கில்லிடம் இருந்து தண்ணீர் வாங்கி குடித்தார்
    • பாண்ட்யாவின் இந்த செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று முன் தினம் (ஜூன் 5) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது.

    இதனைத்தொடர்ந்து பேட்டிங் இறங்கிய இந்தியா சுலபமாக 97 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.

     

    இந்நிலையில் ஆட்டத்திற்கு இடையில் ஹர்டிக் பாண்டியா மற்றோரு நட்சத்திர வீரர் சும்பன் கில்லிடம் இருந்து தண்ணீர் வாங்கி குடித்தபின் பாட்டிலை கீழே போட்டுவிட்டு சுபமன் கில்லை அதை எடுத்துக்கொள்ளும்படி சைகை காட்டும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாண்ட்யாவின் இந்த செயலுக்கு நெட்டிசங்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 

    • பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
    • இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழந்து 18 ரன்களை குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.

    அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்துவீசிய இவர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, சௌரப் நெட்ராவல்கர் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

     


    2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யு19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சௌரப் 2010-இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை பந்துவீசி 16 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    அந்த வகையில், 14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சௌரப் அமெரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார்.

    முன்னதாக, யு19 போட்டியில் இந்தியா தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.
    • அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 44 ரன்களையும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.

    இதையடுத்து 160 என்ற இலக்கை துரத்திய அமெரிக்கா அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்கா அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அவுட் ஆனார்.

     


    இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்களை சேர்த்தது. இதன் காரணமாக போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.

    19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு டி20 உலககக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தது.

    • அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐயர்லாந்து அணி இந்தியாவின் அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் கடந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

     


    அந்த வகையில், சர்வதேச டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய வீரர் விராட் கோலி, இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா, மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் உள்ளனர்.

    மேலும், 4 ஆயிரம் ரன்களை கடக்க குறைந்த பந்துகளை எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியிலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் 2 ஆயிரத்து 860 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி மற்றும் பாபர் அசாம் முறையே 2 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 82 பந்துகளை எதிர்கொண்டு இந்த பட்டியிலில் இடம்பிடித்துள்ளனர்.

    இதுதவிர சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரைத் தொடர்ந்து கிரிஸ் கெயில் 553 சிக்சர்களை விளாசி 2-வது இடத்திலும், ஷாகித் அப்ரிடி 476 சிக்சர்களை அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். நேற்றைய வெற்றியின் மூலம் இவர் 300 போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்திய கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக 42 போட்டிகளில் ரோகித் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இரு இடங்களில் எம்.எஸ். டோனி மற்றும் விராட் கோலி உள்ளனர். இருவரும் முறையே 41 மற்றும் 30 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர்.

    ×