search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் குர்பாஸ் முதலிடத்தில் உள்ளார்.
    • அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பசுல்லா பரூக்கி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் 7 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த அணியின் பரூக்கு 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    மேலும் முன்னணி அணியான நியூசிலாந்தை லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் வீடியோ காலில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் இந்த வெற்றி வங்காளதேச மக்களின் இதயத்தை மட்டுமின்றி, ஆஸ்திரேலியா ரசிகர்களின் இதயத்தையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக முன்னேறியதை அந்த நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

    அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் நிகழ்த்தி உள்ளார்.

    ரஷித் கான் இதுவரை 9 முறை 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 8 முறையும், உகாண்டா வீரர் ஹென்றி சென்யாண்டோ 7 முறையும் வீழ்த்தியுள்ளனர்.

    • டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
    • பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    அபூட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

    வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், "அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ காலில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் வாழ்த்து சொல்லியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்.

    மழையை நம்பாமல் 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பவுலிங்கில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால் சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்.

    இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும். தற்போது அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம் என தெரிவித்தார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    செயின்ட் லூசியா:

    செயின்ட் லூசியாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து 92 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் 31 ரன், ஷிவம் துபே 28 ரன், பாண்ட்யா 27 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 50 போட்டிகளில் 34-ல் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.

    • நைப் குறித்து தமிழக வீரர் அஸ்வின் கிண்டலடித்துள்ளார்.
    • நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் இவரை கலாய்த்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பையின் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக ஐசிசி தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற்று புதிய சாதனை படைத்தது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும் போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

    அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகை காட்டினார்.

    அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

    குல்பதின் நைப் உண்மையாக காயடைந்துள்ளேன் என்பதை நடுவர்களுக்கு காட்டுவதற்காக பெவிலியன் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் ஒரு முடிந்ததும் பின்னர் களத்திற்கு திரும்பினார். அதன் பிறகு 2 ஓவர்கள் பந்து கூட வீசினார்.

    அதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கார் விருதை கொடுக்கலாம் போல என்று கிண்டலடிப்பதுடன் நாட்டுக்காக இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களும் அவரை கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்.


    அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது, கால்பந்து போல இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று எக்ஸ் தளத்தில் கலாய்த்தார்.

    மேலும் இந்த போட்டிக்கு வர்ணனை செய்தவர்களில் ஒருவரான நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கூறியதாவது,


    எனக்கு 8 மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. நான் உடனடியாக ஆப்கன் வீரர் குல்புதினின் மருத்துவரை சென்று பார்க்கப் போகிறேன். அந்த மருத்துவர்தான் உலகின் 8-வது அதிசயம் என நக்கலாக கூறினார்.

    • வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவை பொறுத்து 3 அணிகளில் (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் ஆட்டம் நடைபெற்றது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

    இதனை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியதை கண்ட அந்த நாட்டு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

    ஆப்கானிஸ்தானில் உள்ள நங்க்ரஹர் என்ற இடத்தில் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வந்த இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • காயமடைந்த பின் மைதானத்துக்குள் வந்த நைப் 2 ஓவர்களை வீசினார்.
    • லிட்டன் தாஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கு மூலம் இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு இருந்தது.

    வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. ஆப்கானிஸ்தான் தரப்பில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் வங்காளதேசம் அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 80 ரன்களில் 7 விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. ஆனால் நடுவர் போட்டி நடக்கட்டும் என தெரிவித்தார்.

    அப்போது வங்காளதேசம் அணி 11.4 ஓவரில் 83 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அந்த அணி 81 ரன்களே எடுத்திருந்தது. இதனால் DLS முறைப்படி ஆப்கானிஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்ற நிலையில் இருந்தது.

    இதனை அறிந்து கொண்ட ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் மழை வருகிறது. சிறிது நேரம் தாமதப்படுத்துங்கள் என்பது போல சைகை காட்டினார். இதனை புரிந்து கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர் நைப், உடனே காலில் காயம் ஏற்பட்டது போல நடித்து கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். அந்த நேரம் மழை துளி அதிகமாக விழுந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனே வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் நைப்பை கிண்டலடிக்கும் வகையில் அவர கிழே விழுந்தது போல நடித்து காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    காயம் காரணமாக வெளியே சென்ற நைப் ஒரு ஓவர் முடிந்த நிலையில் மீண்டும் களத்திற்குள் வந்தார். வந்தது மட்டுமன்றி 2 ஓவர்களையும் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் அரை சதம் விளாசினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

    வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

    இந்த நிலையில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.

    ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசி வரை போராடிய லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் வங்காளதேச அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அரையிறுதி ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு நடைபெறும்.

    • வங்காளதேசம் அணியால் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆனால் கைவசம் வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுகள் உள்ளது.

    இந்த மழை காரணமாக அடிக்கடி நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு விளையாடி வருகிறது. மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர் வரை 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் திணறியது.
    • இதனால் 20 ஓவர் முடிவில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    புதுடில்லி:

    ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அவர் குளிர்ச்சியை இழந்து பேட்டிங் பார்ட்னர் மீது தனது மட்டையை வீசினார் கரீம் ஜனத் இரண்டாவது ஓட்டத்தில் தவறான தொடர்புக்குப் பிறகு. பதட்டமான ஐசிசி ஆண்கள் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது

    டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தில் 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி 18 ஓவர் வரை 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் திணறியது.

    இதனால் இறுதிகட்டத்தில் பேட்டிங் செய்த ரஷித் கான் அதிரடி ஆட்டத்தை ஆட முயற்சித்தார். அந்த வகையில் ஒரு பந்தை சிக்சர் அடிக்க முயல்வார். அது பேட்டின் விளிம்பிள் பட்டு வானத்தை நோக்கி பறந்தது. உடனே ரஷித்கான் 2 ரன்களை எடுக்க ஓடினார். ஆனால் எதிர் முனையில் இருந்த கரீம் ஜனத் ஓட மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரஷித் கான் பேட்டை தூக்கி எறிந்தார்.

    இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
    • ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கனவே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அடுத்த அணி எது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

    இந்த நிலையில், இன்று காலை நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் நான்காவது அணி எது என்ற முடிவு தெரிந்துவிடும். எனினும், இந்த போட்டியின் முடிவில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

    ஆப்கானிஸ்தான் வெற்றியால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதோடு, ஆஸ்திரேலியா அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். இதேபோன்று வங்காளதேசம் அணி 13 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை துரத்தி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஒருவேளை வங்காளதேசம் அணி 13 ஓவர்களை கடந்து வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும். 

    ×