search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை.
    • வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்டு சதம் அடிக்க வேண்டும் என கங்குலி கூறினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

    முன்னதாக கடந்த 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு செடேஸ்வர் புஜாரா முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்றே சொல்லலாம். இருப்பினும் 2020/21 தொடரில் பார்மை இழந்து தடுமாறிய அவர் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் அவரை கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு அதிரடியாக நீக்கியது.

    இந்நிலையில் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 வருடங்கள் கழித்து ஒரு வழியாக சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

    வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்தை விட தரமான பந்து வீச்சை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    அவர் தன்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். அதன் வாயிலாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 போட்டியில் விளையாடிய 13வது இந்தியர் என்ற சாதனையும் படைப்பார். அதற்கு அவர் தகுதியானவர்.

    ஆனால் இந்த தொடரில் அவர் தன்னுடைய தரத்திற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.

    ஏனெனில் கடந்த 3 வருடங்களில் தரமான பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவர் இன்னும் சதமடிக்கவில்லை. எனவே அவருக்கு அப்படி ஒரு சதம் தற்போது தேவைப்படுகிறது. அதனால் இது அவருக்கு மிகப்பெரிய தொடராக அமையும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது.
    • அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாக்பூர்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை ( 9-ந் தேதி ) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நிர்ணயம் செய்வதால் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது. இதே போல ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை 2-0 (3 டெஸ்ட் தொடர் ) என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

    வங்காளதேச தொடரில் ஆடாத கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும்.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. இதனால் நம்பிக்கையுடன் அந்த அணியை இந்தியா எதிர்கொள்ளும்.

    இந்திய அணியின் பலமாக சுழற்பந்து வீச்சு உள்ளது. அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நல்ல நிலையில் உள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் சமீபத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பந்து வீச்சில் அசத்தி இருந்தார். இதனால் ஜடேஜா நம்பிக்கையுடன் களம் இறங்குவார்.

    3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் இடையே போட்டி நிலவுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெறுவார்கள். மேலும் உமேஷ் யாதவ், ஜெய்தேவ், உனத்கட் ஆகியோர் உள்ளனர்.

    பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, சுப்மன்கில், லோகேஷ் ராகுல், சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர். ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்குவார் என தெரிகிறது.

    இந்தியா டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இப்போட்டி தொடர் முக்கியமானது என்பதால் வெற்றிக்காக இந்தியா போராடும். சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி சம பலம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் டேவிட் வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், கவாஜா, டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹன்ஸ்கோம்ப், மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி ஆகியோர் உள்ளனர்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். நாதன் லயன், ஆஸ்டன் அகர், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மர்பி ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மோரீஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் உள்ளனர்.

    19 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன்கில், புஜாரா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், ஸ்ரீகர் பரத்

    ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் (கேப்டன்) டேவிட் வார்னர், கவாஜா, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேன்ஸ்கோம்ப், மேட்ரென்ஷா, ஆஸ்டன் ஆகர், நாதன் லயன், அலெக்ஸ் கேரி, டாட் மர்பி, ஸ்வெப்சன், மோரிஸ், ஸ்காட் போலண்ட்.

    • இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 39 போட்டியில் 3630 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் உள்ளார்.
    • இந்தியாவின் அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் கண்ணோட்டம் வருமாறு:-

    இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 30 முறையும், ஆஸ்திரேலியா 43 முறையும் வெற்றி பெற்றன. 28 போட்டி டிராவில் முடிந்தது. ஒரு ஆட்டம் டை ஆனது.

    இரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 705 ரன் குவித்ததே (2004-ம் ஆண்டு சிட்னி) அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    ஆஸ்திரேலியா 674 ரன் எடுத்ததே (1998--ம் ஆண்டு அடிலெய்ட்) அந்த அணியின் அதிகபட்சமாகும். 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். ஆஸ்திரேலியா 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்டில் 83 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 39 போட்டியில் 3630 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 2555 ரன் (29 போட்டி) எடுத்துள்ளார்.

    ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்தவர் மைக்கேல் கிளார்க், அவர் 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த டெஸ்டில் 329 ரன் குவித்தார். இந்தியா தரப்பில் வி.வி.எஸ். லட்சுமண், கொல்கத்தா டெஸ்டில் (2001-ம் ஆண்டு) 281 ரன் எடுத்தார்.

    டெண்டுல்கர் 11 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் சுமித் ஆகியோர் தலா 8 சதங்கள் அடித்துள்ளனர்.

    இந்தியாவின் அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 95 விக்கெட்டும், நாதன் லயன் 94 விக்கெட்டும், அஸ்வின் 89 விக்கெட்டும் எடுத்து உள்ளனர்.

    • சொந்த மண்ணில் விளையாடுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான ஆசை இருக்கிறது.
    • இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

    நாக்பூர்:

    இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்றைய பயிற்சிக்கு பின்னர் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:-

    முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ஒரு கடினமான முடிவாக இருக்கும். மிகச்சிறப்பாக விளையாடி உள்ள வீரர்கள் அணியில் உள்ளனர். சில இடங்களுக்கான வீரர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    வீரர்களிடம் பேசப்பட்டு வருகிறது. நாக்பூர் ஆடுகளத்தை நாங்கள் பார்வையிட்டோம். ஆனால் ஆடுகளம் என்ன மாதிரி செயல்படும் என்பதை இப்போதே கணித்து கூறுவது கடினம். ஆடுகளம் எந்த வகையில் செயல்படும் என்பதை போட்டி நாளில் தான் அறிய முடியும். ஆடுகளம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படும் என்று யூகிக்க முடியும். ஆனால் ஆடுகளங்களைப் அறிந்துகொள்ள முடியாது.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான ஆசை இருக்கிறது. ஆட்டத்தின் நாள் அல்லது ஆட்டத்திற்கு முந்தைய நாள் இதுதொடர்பான முடிவை எடுப்போம். பேட்டிங்கில் நான் நடுவரிசையில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அதை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    அணிக்காக நான் ஏற்கெனவே அதை செய்துள்ளேன். யார் வேண்டுமானாலும் போட்டியின் நாளில் வெற்றி தேடிக்கொடுக்கக் கூடியவராக மாறலாம். அணிக்கும், குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிக்கும் எது சிறந்தது என்பதை கருத்தில் கொண்டே விளையாடும் 11 பேர் கொண்ட அணி முடிவு செய்யப்படும்.

    கடந்த இரு ஆண்டுகளாக நாங்கள் இதை செய்துள்ளோம். அணியில் உள்ள வீரர்கள் ஏன் விளையாடும் 11 பேர் அணியில் இருக்கிறோம். ஏன் இல்லை, தங்களுக்கான பணி அணியில் என்ன என்பதில் அனைவரும் தெளிவாக உள்ளனர். இந்திய ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

    இவ்வாறு கே.எல்.ராகுல் கூறினார்.

    • ஸ்ரேய்ஸ் அய்யர் இடத்தில் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார்.
    • மேலும் 3 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளார்.

    மும்பை:

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது. 2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களை தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஸ்ரேய்ஸ் அய்யர் ஆட மாட்டார் என தெரிகிறது. அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவா அல்லது சுப்மன் கில்லா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான தனது ஆடும் லெவனை இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார்.

     

    அவர் அறிவித்த அணியில் ஸ்ரேய்ஸ் அய்யர் இடத்தில் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார். மேலும் 3 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவுக்கு அவர் அணியில் இடம் கொடுக்கவில்லை.

    முதலாவது டெஸ்ட் போட்டிக்காக வாசிம் ஜாபர் தேர்வு செய்த அணியின் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

    • ஆஸ்திரேலிய அணி 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது.
    • இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

    கடைசியாக 2004-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்திய ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம்.

    இந்நிலையில் இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறியதாவது:-

    இந்தியாவில் சுழல் பந்தை ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆடவே மாட்டார்கள். ஸ்டிரைட் பேட்டில் மட்டுமே ஆடுவார்கள். எனக்கும் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடலாமா அல்லது பேக் ஃபூட்டில் ஆடலாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்டிரைட் பேட்டில் ஆடுவது தான் சரியான உத்தி.

    என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பார்டர் கவாஸ்கர் தொடரில் 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.
    • இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம்.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.

    2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.

    அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது

    என்று அவர் கூறினார்.

    • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
    • காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் முதல் டெஸ்டில் ஆடவில்லை.

    நாக்பூர்:

    சிட்னியில் கடந்த மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை.

    ஆஸ்திரேலிய அணிக்கான பயிற்சி முகாமிலும் அவர் பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனை அவரே நேற்று தெரிவித்தார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிராக வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்கும் முதலாவது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

    ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும் விரல் காயத்தால் பந்து வீச முடியாத நிலைமையில் தவிக்கிறார். இப்போது ஹேசில்வுட்டும் விலகுவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    • ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது.
    • இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரலேிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு முழுவதும் ஆடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை.

    முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஜடேஜா குணமடைந்துள்ளார். இதனால் அவர் ரஞ்சி டிராபியில் ஆடினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2004-ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் தலைமை யிலான அணி 4 போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அந்த அணி கடைசியாக 2017-ம் ஆண்டு இந்தியா வந்த போது 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

    இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    ஆஸ்திரேலிய அணி இந்த முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும். சொந்த மண்ணில் சிறப்பாக ஆடக்கூடிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் காயத்தில் உள்ளனர். இது இந்தியாவுக்கு பின்னடைவாகும். முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் வலுகுறைந்து உள்ளது. விராட் கோலியை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறது.

    இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் தந்திரங்களை பயன்படுத்துவார்கள். அதற்கு ஏற்ற வகையில் ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மாற்றி அமைக்க வேண்டும்.

    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் ஆஸ்டன் அகருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். முன்னணி சுழற்பந்து வீரரான நாதன் லயன் தனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். இருவரும் இணைந்து பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மேன்களை சமாளிக்கலாம்.

    வார்னர் இந்தியாவில் தனது பேட்டிங் சாதனையை மேம்படுத்த வேண்டும். உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, டிரெவிஸ் ஹெட், கேமரூன் ஓயிட் ஆகியோர் பாகிஸ்தான், இலங்கையில் எதிர்கொண்டதை விட இந்தியாவில் சுழற்பந்து தரமாக இருக்கும். அவர்களுக்கு சோதனை காத்திருக்கிறது.

    லபுசேன் இந்திய துணை கண்டத்தில் தனது முதல் பெரிய சோதனையை எதிர்கொள்வார். ஆஸ்திரேலியா வெற்றி பெற புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதே ஆஸ்திரேலியாவின் முக்கிய அம்சமாக இருக்கும்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் ஒட்டுமொத்த திறமையும் வெளிப்படுத்த வேண்டும். இந்திய மண்ணில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடல், பொறுமை, விடாமுயற்சி தேவை என தெரிவித்தார்.

    • முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

    முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
    • விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இந்தியா வரவுள்ளது. இந்த மாதம் 9-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில், எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.
    • இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    பெங்களூர்:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இன்றுடன் நியூசிலாந்து தொடர் முடிவடைகிறது.

    3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி 'ஒயிட் வாஷ்' செய்தது. மூன்று 20 ஓவர் போட்டியில் இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.

    3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.

    அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியா வருகிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாட வில்லை.

    டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

    கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் சுமித் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், லபுஷேன், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஹாசல்வுட், ஆஸ்டன் ஆகர், ஸ்காட் போலண்ட், டிரெவிஸ் ஹெட், நாதன் லயன், லான்ஸ் மோரிஸ், மர்பி, ரென்ஷா, ஸ்டார்க், சுவெப்சன்.

    ×