search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 276412"

    • திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர்.

    மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணிய குருக்கள் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    • பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது.
    • காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாதயாத்திரையாக பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    குறிப்பாக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி, அணியாக நடந்து வந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளத்தில் புனித நீராடிய பின் திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனி அடிவாரம், சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பக்தர்கள் மேள, தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டம் ஆடியபடி சென்றனர். மேலும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர்.

    பழனி தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். இந்நிலையில் பக்தர்களுக்கான வசதிகள் கோவில் மற்றும் அனைத்து துறை சார்பில் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்ததால் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் பஸ்கள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே அனைத்து வாகனங்களும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

    அதேபோல் பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க ஆங்காங்கே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், ஐஸ்கிரீம், இளநீர் என வெயிலுக்கு ஏற்ற பானங்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் அதில் ஆனந்தமுடன் நனைந்தபடி பக்தர்கள் வந்தனர்.

    பழனிக்கு வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கூட்டம் காரணமாக நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பழனி சின்னாரக்கவுண்டன்வலசு பகுதியில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கோவை, திருச்சி, மதுரை, தேனி என புறநகர் செல்லும் பஸ்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழிப்பறை, குடிநீர் என அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் நேற்று திருச்சி, மதுரை, அறந்தாங்கி, திண்டுக்கல் என புறநகர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தற்காலிக பஸ்நிலையத்துக்குள் செல்லாமல், பழனி பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பஸ்நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு வந்து சீரமைத்தனர்.

    • பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.
    • 7-ந் தேதி வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருதூரில் வள்ளலார் அவதரித்தார்.

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், உணவே மருந்து, மருந்தே உணவு போன்ற போதனைகளை கூறியதோடு அதற்கேற்றார் போல வாழ்ந்து காட்டியவர்.

    தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை இயற்கை வைத்திய முறைகளில் தீர்த்து வைத்தவர். யாரும் பசியால் இறக்க கூடாது என்ற எண்ணத்தில் சன்மார்க்க சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கினார். இதனால் வள்ளலார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

    இறைவனுக்கு உருவம் கிடையாது. ஜோதி வடிவானவர் என்று உலகிற்கு பறைசாட்டியவர் வள்ளலார். அதற்கென ஞான சபை அமைத்து ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர தினத்தன்று ஆன்மீகவாதிகளுக்கு ஜோதி தரிசனம் தருவார்.

    அவரை பின்பற்றி மாதந்தோறும் வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.

    தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வடலூர் சுற்று வட்டார பகுதி மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச விழாவிற்கு தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் வள்ளலார் சபையினர் இங்கு வந்து ஜோதி தரிசனம் பார்த்து செல்வர்.

    இந்த ஆண்டுக்கான விழா நாளை (4-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்படும். காலை 7.30 மணிக்கு மருதூர் வள்ளலார் சன்னதியில் மருதூர் கிராமவாசிகளால் கொடியேற்றப்படும். நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியில் நற்கருங்குழி கிராமவாச களால் கொடி யேற்றப்படும்.

    பார்வதிபுரத்தில் உள்ள வள்ளலார் ஞானசபையில் காலை 10 மணிக்கு தைப்பூச விழாவிற்கான கொடியேற்று விழா நடைபெற வுள்ளது. இக்கொடியினை பார்வதிபுரம் கிராமவாசிகள் ஏற்றிவைத்து விழாவினை தொடங்கிவைக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து திரு அருட்பா கருத்தரங்கம், சன்மார்க்க கருத்தரங்கங்கள் நடக்கவுள்ளது.

    5-ந் தேதி தைப்பூச தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.

    இதையொட்டி சிறப்பு பஸ் வசதி மற்றும் ரெயில் வசதி செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1000 போலீ சார் வடலூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
    • அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும். இந்்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவையொட்டி சுப்பிரமணியசுவாமி கோவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தைப்பூச தேரோட்டத்தையொட்டி மருதமலை கோவிலில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை பார்வையிட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று மருதமலை கோவிலுக்கு வந்தார்.

    தொடர்ந்து வாகன நிறுத்தும் இடம், பக்தர்கள் பாதுகாப்பாக பாதயாத்திரை வருவதற்கான வழிப்பாதைகள், மலைப்பாதை, மலைக்கோவில் மீது சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகள், தேர் சுற்றி வரும் கோவில் வளாகம், ராஜகோபுர பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    தைப்பூச திருவிழாவையொட்டி மலைக்கோவிலுக்கு செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால், மருதமலை அடிவாரப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவில் சார்பில் மினி பஸ்கள் அங்கேயே நிறுத்தப்பட்டு பக்தர்களை மலைக் கோவிலுக்கு ஏற்றி செல்லும்படி கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பாக சென்று தரிசனம் செய்யும் வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது.
    • 12-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.

    பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும். நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்படும்.

    வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வார்கள்.வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை திருத்தேர் நிலையை அடைகிறது.

    வருகிற 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ந்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், 14-ந் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • இந்த ஆண்டு திருச்செந்தூருக்கு செல்லும் முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி முருகபக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.

    தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பே மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஏராளமான முருக பக்தர்கள், அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு திருச்செந்தூருக்கு செல்லும் முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தென்காசி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, சேரன்மாதேவி, முக்கூடல், மானூர், தேவர்குளம் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்கிறார்கள். ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை நிற ஆடை அணிந்தும், பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

    மேலும் நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதி மற்றும் தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு பாதைகளில் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு நெல்லை வழியாக செல்லும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் அணி அணியாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்தனர். அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருகபெருமானின் உருவப்படம் மற்றும் சிலையை வைத்தும், அவரது திருப்புகழை பாடியும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். முருகபெருமானின் சப்பரத்துடன் பெரும்பாலான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.

    அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையோர நடைமேடை பகுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றுக்குள் சென்று புனித நீராடினார்கள். அங்கு உணவு தயார் செய்து சாப்பிட்டு விட்டு, திருச்செந்தூர் நோக்கி நடைபயணத்தை தொடர்ந்தனர். இவ்வாறு தொடர்ந்து பக்தர்கள் வந்து, புனித நீராடி சென்று கொண்டே இருந்தார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி நேற்று முருகபக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ''தென்காசியில் இருந்து திருச்செந்தூர் வரை சாலை விரிவாக்க பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் சாலைகள் முழுவதுமே ஜல்லி கற்களாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் வெறும் கால்களால் பாத யாத்திரையாக செல்வதற்கு சிரமமாக உள்ளது.

    பொங்கல் பண்டிகை, தைப்பூசம், மாசி திருவிழா உள்பட பல்வேறு விழா காலங்களில் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கு தனியாக பாதை அமைத்து தர வேண்டும். மேலும் நெல்லை கொக்கிரகுளத்தில் பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் மண்டபத்தை கட்டி தர வேண்டும். முதற்கட்டமாக தற்காலிக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என்றனர்.

    • நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடிகொண்ட பழனி, அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது தனிச்சிறப்பு ஆகும்.

    ஏனெனில், தமிழகத்தில் மற்ற கோவில்களை காட்டிலும் பழனியில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

    இதில் பல பக்தர்கள் அலகு குத்தியும், மயில் காவடி, பால்காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடியை தூக்கி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன்படி விழா தொடங்கியது முதலே, பழனிக்கு வருதை தரும் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடு நடைபெறுகிறது.

    நாளை (சனிக்கிழமை) தைப்பூச நாளன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகனை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலைகளில் வழிநெடுகிலும் பக்தர்கள் சாரை சாரையாக வருகிறார்கள். இவ்வாறு வருகிற பக்தர்கள் முருகனை நினைத்து பாட்டு பாடியும், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர்.

    பழனிக்கு வந்ததும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி ஆகியவற்றில் புனித நீராடுகின்றனர். தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, மலைக்கோவில் சென்று வழிபடுகின்றனர்.

    • தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது.
    • அகத்தியர், தேரையர் தங்கிய தலம்.

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் தோரணமலையும் ஒன்று. தென் தமிழகத்தில் சிறப்பான கிரிவலம் நடக்கும் கோவில் இதுதான். அதோடு தனி ஒருவர் மேற்பார்வையில் நடக்கும் கோவில்களில் தினமும் அன்னதானம் நடக்கும் கோவிலும் இதுதான்.

    அகத்தியர், தேரையர் தங்கிய தலம். உலகம் சமநிலை அடைய இமயத்தில் இருந்து தென்திசை வந்த போது பொன்போல் மிளிறியது ஒரு குன்று. தெய்வ அம்சம் நிறைந்த அக்குன்றில் மூலி கைகள் நிறைந்து காணப்பட்டன. பெரிய யானை ஒன்று படுத்திருப்பது போன்று அது அமைந்திருந்ததால் அதனை வாரணமலை என்று அழைத்தார். பின்னர் அது தோரணமலையானது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே இந்த எழில்மிகு மலை உள்ளது. முருகப்பெருமானிடம் தமிழ் கற்ற அகத்தியர் அதற்கோர் இலக்கணம் வகுத்து பின்னர் தோரணமலையில் பல்கலைக் கழகம் போன்ற பாடசாலை அமைத்தார். மருத்துவம் உள்பட பல்வேறு பாடங்களை சித்தர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

    அகத்தியரிடம் பாடம் படித்த சீடர்களில் முக்கியமானவர் தேரையர். அவர்கள் இருவரும் இங்கு மருத்துவ சேவை செய்த போது ஸ்தாபித்த முருகன் சிலைதான் இப்போதும் குகைக்குள் அருள் குன்றாமல் இருக்கிறார். தோரணமலை முருகன் ஆரம்பத்தில் சுற்று வட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. இதன் புகழ் நாலாபுறமும் பரவ காரணமாய் இருந்தவர் அமரர் கே.ஆதிநாராயணன்.

    1960களின் இறுதி யில் கே.ஆதிநாராயணன் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரிய ரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். சுற்று வட்டாரம் மட்டுமே அறிந்திருந்த அந்த கோவிலை பிரபல படுத்த எண்ணினார்.

    அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரண மலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார். இதற்காக அவர் தான் வைத்திருந்த சைக்கிளிலேயே பயணம் செய்வார். அப்படித்தான் தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. மேலும் அப்போது வைகாசி விசாகத்தன்று விடிய விடிய த.பி.சொக்கலால் பீடி நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை காட்ட ஏற்பாடு செய்தார்.

    அங்கு நடக்கும் சினிமா படப்பிடிப்பின் போது அவர்களுக்கு உதவி செய்து அதில் தோரணமலை பெயர் வர ஏற்பாடு செய்தார்.

    கடையம்-தென்காசி சாலையில் இருந்து தோரணமலை வரையிலான கரடுமுரடான சாலையை தார்ச்சாலையாக மாற்றியதோடு, வழியில் 3 இடங்களில் நீரோடையின் மீது பாலங்கள் அமைக்க பெரும்முயற்சி மேற்கொண்டார்.

    ஆவுடையானூரை சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் தர்மராஜ் மூலம் மலையேற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    வயது முதுமை காரணமாக கே.ஆதி நாராயணனுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருந்தார். அவரது அமரத்துவத்திற்கு பிறகு கோவில் பரம்பரை அறங்காவலராக ஆ.செண்பக ராமன் உள்ளார்.

    அவர் ஆன்மிகப்பணியோடு கோவில் மூலம் சமூகப்பணியையும் செய்து வருகிறார். தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது.

    தமிழ் மாத கடைசி வெள்ளி, ஞாயிறு மற்றும் கிரிவல நாட்களில் காலையிலும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதற்காக பலர் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார்கள். கோவில் நிர்வாகமும் அதற்கான உதவிகளை வரவேற்கிறது.தோரணமலை கோவில் மூலம் சில மாணவர்களை தத்து எடுத்து படிக்க வைக்கிறார்கள். இந்த உதவியையும் வசதி படைத்தவர்கள் மேற்கொள்ளலாம்.

    கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவ-மாணவிகள் பயன்பெற கே. ஆதிநாராயணன் பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தைப்பூச திருகல்யாணம், தமிழ்வருட பிறப்பு போன்ற பண்டிகைகளை சிலர் பொறுப்பு ஏற்று நடத்துகிறார்கள். அதேபோல் மற்ற பண்டிகைகளையும் பக்தர்கள் விரும்பினால் பொறுப்பு ஏற்று நடத்தலாம்.

    இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளி அன்று பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். அன்று விவசாயம் செழிக்க ஸ்ரீ வருண கலச பூஜை நடக்கிறது. இதுதவிர பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடக்கிறது. கிருத்திகை நட்சத்திர நாளில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    மேலும் தமிழ்புத்தாண்டு அன்று மக்கள் திரண்டு வருகிறார்கள். அன்றைய தினம் விவசாயிகள் கையால் சாதனை புரிந்தவர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப் படுகிறது. கோவிலில் தற்போது நவீன குளியலறை, கழிவறை கட்டப்படுகிறது. மேலும் திருப்பணி பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    தோரணமலைக்கு என்று உழவார குழு உள்ளது. அவர்கள் அவ்வப்போது கோவில் வளாகத்தை சுத்தம் செய்கிறார்கள். சுனைகளையும் தூர்வாருகிறார்கள். இதுதவிர கடைசி வெள்ளி அன்று உற்சவருக்கு அபிஷேகம் செய்ய பக்தர்களே மலைமீது இருந்து தீர்த்தம் எடுத்து வருகி றார்கள். அவர்களே பல்வேறு அபிஷேகங்களை செய்து சிறப்பு பூஜையையும் நடத்துகி றார்கள்.

    எதிர்கால திட்டமாக கோவிலுக்கு குட முழுக்கு நடத்த ஆ. செண்பகராமன் திட்டமிட்டுள்ளார். அடிவாரத்திலும், மலையின் மீதிலும் மூலஸ்தானம் மட்டும் மாறாமல் நவீன முறையில் கோவிலை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளார். அதற்கான வரைபடங்களை தயாரித்துள்ளார்.

    50 ஆண்டுகளை கடந்து முருகன் அருளாலும், பக்தர்தம் உதவியாலும் இறைபணி தொடர்வதாக தெரிவிக்கிறார். இந்த இறைபணியை செய்ய விரும்புவோர் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமனை தொடர்பு கொள்ளலாம். கோவிலுக்கு என்று எந்த சேமிப்பையும் அவர் வைக்கவில்லை. பக்தர்கள் கொடுப்பதை உடனே கோவிலுக்கு செலவு செய்துவிடுகிறார். இவ்வளவு இறை பணியையும் தனிப்பட்ட ஒரு குடும்பம் மட்டுமே செய்து வருகிறது. அதற்கு பக்தர்களின் உதவியும் ஒத்தாசையும்தான் காரணம். குடமுழுக்கு உள்பட பல்வேறு பணிகளை பக்தர்களே முன்னின்று செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் .

    ஊர்கூடி தேர் இழுப்பதுபோல் பக்தர்கள் ஒன்று திரண்டு அந்த திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

    தோரண மலையில் அழகுடன் கோபுரம் கட்டவும், தியானக்கூடம் அமைக்கவும். உற்சவ மூர்த்திகளுக்கு தனி சன்னதி, சிறுவர்கள் பூங்கா மற்றும் ஆன்மிக பூங்கா அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    • நாளை சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட நாள் ஆகும்.
    • இதை முன்னிட்டு சனிக்கிழமை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30-க்கு விஸ்வருபம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது.பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை நடைபெற்று கோவில் திருக்காப் பிடப்படும்.

    மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறு கிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நாளை (வெள்ளிக் கிழமை) சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட நாள் ஆகும். இதை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

    • மலையைச்சுற்றி 64 சுனைகள் இருக்கின்றன.
    • இந்த சுனை நீரால் முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் நடக்கிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். புகழ் பெற்ற இந்த கோவில் அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தலமாகும். 1,500 படிகளுக்கு மேல் மலை மீது முருகப்பெருமான் குகையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மலையே தோரணம்போல் அமைந்து உள்ளதால் தோரணமலை என்ற பெயர் காரணத்துடன் விளங்குகிறது.

    மலையேறி முருப்பெருமானை தரிசனம் செய்வதற்கு பக்தர்களால் 1,300-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. மலையைச்சுற்றி 64 சுனைகள் இருக்கின்றன. இந்த சுனை நீரால் முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜைகளும், விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து கணபதி ஹோமம், பூஜைகள் நடக்கிறது. 8 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடக்கிறது.

    பகல் 11.45 மணிக்கு விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் சிலரின் குடும்பத்தினர் கவுரவிக்கப்படுகிறார்கள். மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. மாலை 6 மணிக்கு தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்சி அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் 501 சரவண ஜோதி திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது.

    இரவு 7 மணிக்கு திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தைப்பூச நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார்.

    • நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாளை மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கடந்த 29-ந் தேதி தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக நாளை இரவு 7 மணிக்கு வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (4-ந் தேதி) நடக்கிறது. அன்று காலை தோளுக்கினியாலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 4.30 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே பழனி கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை, சிவகங்கை, தேனி, கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தபடி வருவதால் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    அடுத்து வரும் 4 நாட்களும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு பணிக்காக டி.ஐ.ஜி. தலைமையில் 3 எஸ்.பி.க்கள், 15 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 30 மாவட்டங்களில் இருக்கும் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகள் பட்டியலுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல் போனால் அறிவிப்பது, பக்தர்களின் சந்தேகத்தை தீர்க்க 26 இடங்களில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் 2 போலீசார் பணியில் இருப்பார்கள். பாத யாத்திரை வழித்தடங்களில் 3 கி.மீக்கு ஒரு பைக் என்ற விகிதத்தில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டத்தில் 4 சக்கர வாகனங்கள் ரோந்து செல்ல முடியாது என்பதால் பைக் மூலம் ரோந்து பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    12க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரி வீதி மற்றும் மலைக்கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இடும்பன் குளம், சண்முக நதியில் தீயணைப்பு துறையினருடன் காவல் துறையில் உள்ள நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடமைகள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் அதனை கண்டுபிடித்து தருவதற்காகவும், பக்தர்களுக்கு உதவவும் 26 இடங்களில் காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். 50-க்கும் மேற்பட்ட வீடியோ கேமராக்கள் மூலம் நகரில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாத யாத்திரையாக வரும் பக்தர்களிடம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் 19 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை தகவல் பலகையில் வைக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • நாளை தேரோட்டம் நடக்கிறது.
    • 5-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலைக்குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக ஏழாம் திருநாளான நேற்று முருகன்- சண்முகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி ஐந்துபுளி மண்டபத்திலிருந்து சுவாமி அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து பண்பொழியில் உள்ள நகரீஸ்வரமுடையார் கோவில் வளாகத்தில் முருகன்- சண்முகர் எதிர்சேவை காட்சி இடம் பெற்றது. இதில் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தபோது பக்தர்கள், திருமலை குமரனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து முருகன் - சண்முகர் சிவன் கோவில் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    நேற்று நடந்த முருகன் - சண்முகர் எதிர்சேவை நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டமும், 5-ந் தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    ×