search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 283648"

    • திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சி–யார் கோவில் 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திரு–மங்கை–யாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ் வார் அவதரித்த திருத்தல–மாகவும் விளங்கு–கிறது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி–யது. அன்று முதல் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ் தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி வந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசலை கடந்து உற்சவ நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்ட–ருளி, ஆழ்வார்-ஆச்சாரி–யார் மரியாதையாகி திரு–வாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அப்போது சொர்க்க–வாசல் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தி–யத்துடன் மூலஸ்தா–னம் சென்ற–டைந்தார். இதனை தொடர்ந்து 19-ந்தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந்தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும். 21-ந் தேதி–யன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினி–யோகம் நடக்கிறது.


    • 19-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும்.
    • வருகிற 20-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறும்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி வந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    சொர்க்கவாசலை கடந்து சென்ற உற்சவ நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அப்போது சொர்க்கவாசல் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதனை தொடர்ந்து 19-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

    21-ந் தேதியன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தலும் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • இன்று மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • 20-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைகிறார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து சொர்க்கவாசலை கடந்து தாயார் வழிநடை உபயங்கள் கண்டருளி, ஆழ்வார்-ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்கிறார். இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. பின்னர் இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். தொடர்ந்து 21-ந் தேதி வரை திருவாய் மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து உற்சவம் நடைபெறும்.

    அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந் தேதி மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும்.

    வருகிற 21-ந் தேதியன்று இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணிவரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    • இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார்.

    ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழா நேற்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.

    வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 20 நாட்களில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 289 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட கடந்த 2-ந் தேதி மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியில் சேவை சாதித்தார். இதை காண தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் சிறப்பு கட்டண சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

    மூலவரை தரிசிக்க நடப்பு ஆண்டு ரூ.1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600-க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டுள்ளது.

    • வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8-ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. மேலும் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் காலை 5 மணி வரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

    • சொர்க்க வாசல் திறப்பு அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தில் 7.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 23-ந்தேதியிலிருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று திருக்கைத்தல சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 7 நாட்களில் ராப்பத்து உற்சவத்தை 7 லட்சத்து 34 ஆயிரத்து 955 பேர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்துள்ளனர்.

    ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுத்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஏராளமான அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 17 நாட்களில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 42 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    • அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார்

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா தொட்டியம் அருகே உள்ள அரசலூர் ஊராட்சி திருநாராயணபுரத்தில் அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள், அரையர்களால் பாடப்பட்ட இத்தளத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து, இரா பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று முக்கிய நாளான சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 5.04 மணியளவில் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. பக்தர்கள் ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, என பக்திப் பெருக்கோடு கோஷம் எழுப்பினர். அப்போது அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார். அப்போது பாசுரங்கள் பாடபட்டது. பின்னர் பெருமாள் தம்பதிர் சமேதமாக ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன், கோவில் செயல் அலுவலர் பிரபாகர், அறநிலையதுறை ஆய்வாளர் பிருந்தா, தொட்டியம் ஆய்வாளர் ஆனந்தி, தா.பேட்டை ஆய்வாளர் விஜய் பூபதி, முசிறி செயல் அலுவலர் வித்யா, அரசலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவி, திருநாராயணபுரம் கோயில் கணக்கர் மனோகர் மற்றும் கோவில் அலுவலக உதவியாளர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறக்கும் போது ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொட்டியம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    • திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நிகழ்ச்சியாகும்.

    இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. காலை 10மணிக்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

    பின்னர் மதியம் 1மணிக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார். இரவு 7.15மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்சவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீர்பாத தூக்கிகளால் பட்டாபிஷேக ராமர் சன்னதி வழியாக உள்பிரகார வீதி உலா நடந்தது. இதையொட்டி ஆழ்வார்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து இரவு 7.35மணிக்கு பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, ..கோவிந்தா... என பக்தி கோஷமிட்டு தரிசித்தனர். நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு சாற்று முறை, கோஷ்டி பூஜை முறைகள் நடந்தது. பெருமாள் எதிர்சேவை மூலம் மூலவரின் இருப்பிடம் கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (3ந் தேதி) முதல் வருகிற 11ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோவிலில் வை குண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு சொர்க்கவாசல் வழியாக ராமர், சீதா தேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    மேலூர்

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். இது பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இந்த ேகாவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

    ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான ஆழ்வார்களில் முதன்மையானவராக கருதப்படும் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்வாக திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. சொர்க்கவாசல் வழியே காளமேகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதனைக்காண ஒத்தக்கடை, மதுரை, மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் இளங்கோவன் வழிகாட்டுதலின்படி அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும்.

    சேலம்:

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பெருமாள் கோவில்க ளில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய மான நிகழ்ச்சியாக மார்கழி

    மாத வளர்பிறை ஏகாதசி திதி அன்று "சொர்க்க வாசல்" என்று அழைக்கப்ப டும் பரமபத வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்கவாசல் வழியே அன்றைய தினம் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதன்படி சேலம் மாநகரில் கோட்டை பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று

    அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு உற்சவம்வி மரிசையாக நடைபெற்றது.

    சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக, அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சரியாக அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிரி நாத பெருமாள் "பரமபத வாசல்" என்றழைக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள். சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    விழாவை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் மூலவர் அழகிரிநாதபெருமாள், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை சன்னதி களில் மூலவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சொர்க்கவாசல் திறப்பை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு கோவிலுக்கு வந்து காத்திருந்தனர். சேலம் மாநகரில் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளி களுக்கும், முதியவர்க ளுக்கும் சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்சன பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், துணை கமிஷனர் லாவண்யா இந்து அறநிலையத்துறை அதி காரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவிலில் "இராப்பத்து" உற்சவமும் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின்போது தினமும் இரவு 8 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், இரவு 8.30 மணிக்கு திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் உற்சவமும் நடைபெறுகிறது.

    பட்டை கோவில்

    இதேபோல் சேலம் டவுன் பட்டைக்கோவிலில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு

    சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்த னர். மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பட்டைக்கோவில் அருகே

    உள்ள ஆஞ்சநேயர் சன்னதி யில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவையொட்டி மூலவர், பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அங்கும் காலை முதல் மாலை வரை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மாப்பேட்டை சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், சேலம் 2-வது அக்ரஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோவில், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், பிருந்தாவன் ரோட்டில் உள்ள வெங்கடா

    சலபதி கோவில், மகேந்திர புரியில் உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து பெருமாள்

    கோவில்களிலும் இன்று அதிகாலை வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    • பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்புக்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப் பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

    முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    சொர்க்க வாசல் உருவான கதை

    படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அப்படி ஊழிக்காலம் தொடங்கியதும். மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினான். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன.

    விழித்த பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்டினார். அப்போது அவரின் இரு காதுகளில் இருந்து காது அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் என அரக்கர்களாக உருவெடுத்தன. அப்போது பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேத ங்களை அந்த இரட்டையர்கள் திருடி சென்றனர். அப்போது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களை திரும்ப கொண்டு வந்தார். பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க இறைவன் புறப்பட்டார்.

    மது, கைடபருடன் போரிட்ட பெருமாள் அவர்களை அழிக்க முற்பட்டார். அப்போது அந்த சகோதரர்கள் சரணடைந்தனர்.உங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள் என கேட்டுக் கொண்டனர்.அவ்வாறே அவர்களுக்கு பெருமாள் அருளினார். மேலும் எங்களைப் போல பலரும் இந்த பாக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காக திருமாலிடம் கேட்டுக் கொண்டனர்.

    அதோடு வைகுண்ட ஏகாதசி திருநாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் தாங்கள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்களுக்கும் முக்தி அளிக்க வேண்டும் என அசுர சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.இதன் காரணமாக தான் வைகுண்ட வாசல் உருவானது. அதோடு மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.

    ×