search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ்"

    • சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.
    • அரியலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஏலக்குறிச்சி, வரதராசன்பேட்டை,தென்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. இயேசு பிறப்பை கொண்டாடும் விதமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களையும், குடில்களையும் அமைத்திருந்தனர். கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ தேவாலயம், அலங்கார அன்னை தேவாலயம், தென்னூர் புனித லூர்து அன்னை தேவாலயம், கூவத்தூர் புனித அந்தோனியார் ஆலயம், பட்டிணங்குறிச்சி புனித லூர்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூர் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குதந்தைகள் வழங்கினர். கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


    • குளச்சல் கடற்கரை பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வட்டகோட்டை, சங்குத்துறை பீச்,கணபதிபுரம்பீச் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது
    • சொத்தவிளை கடற்கரையில் பொதுமக்களை படகுகளில் நடுக்கடலில் சுற்றுலா அழைத்துச் சென்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரிக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் ஏராளமானோர் வந்து கடற்கரையில் குவிந்தி ருந்தனர். மாலையிலும் கட்டுக் கடங்காத கூட்டம் இருந்தது.

    சூரியன் மறைவதை பார்க்க சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குளச்சல் கடற்கரை பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வட்டகோட்டை, சங்குத்துறை பீச்,கணபதிபுரம்பீச் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திற்பரப்பு அருவியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    சொத்தவிளை கடற்கரை யிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்தோடு அங்கு வந்து இருந்தனர். கடற்கரையில் உள்ள மணலில் குழந்தை கள் விளையாடி மகிழ்ந்த னர். கடலில் ராட்சத அலை எழும்பியதையும் பொருட் படுத்தாமல் எந்த அச்சமும் இன்றி பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இது ஒரு புறம் இருக்க சொத்தவிளை கடற்கரையில் பொதுமக்களை படகுகளில் நடுக்கடலில் சுற்றுலா அழைத்துச் சென்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.குமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இதனால் மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் சொத்த விளை கடற்கரையில் இருந்து 3 படகுகளில் பொது மக்களை சுற்றுலா வாக நடுக்கடலுக்கு அழைத்துச் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இந்தப் படகில் பொது மக்கள் குடும்பத்தோடு பயணம் செய்தனர். ஆபத்தான முறையில் படகில் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி அதிகமான பொது மக்களை ஏற்றி சென்றனர்.அந்தி சாயும் பொழுது வரை பொதுமக்களை கடலுக்குள் அழைத்து சென்றது வியப்பை ஏற்படுத்தியது.

    சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலை யில் சொத்தவிளை கடற்கரையில் எந்த ஒரு போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    • தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் மரம், உட்பட பல்வேறு புதுவகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கிறிஸ்துமஸ் மரம், உட்பட பல்வேறு புதுவகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    விதவிதமான வடிவங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் பாடல்களை ஒலித்தனர். 12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸால் உலகமே சிரமப்பட்டதால் பிறக்க இருக்கும் 2023 புத்தாண்டு முதல் இது போன்ற வைரஸ் தொற்றுகளால் உருவாக்கும் நோய்கள் வராமல் மக்கள் நலமுடன் வாழ இவ்வாலயத்தில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தம் புது ஆடை அணிந்து மிகவும் மகிழ்ச்சியுடன் முழு மனதுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கிறிஸ்தவ மக்களும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    • சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
    • கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    சென்னை:

    சென்னை சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் கொட்டும் மழையில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் கண்ணை கவர்ந்தது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சென்னை சாந்தோம், பெசன்ட்நகர், பெரம்பூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபங்கள் அமைக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

    அதே போல் இன்று காலை 8 மணிக்கு கொட்டும் மழையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்கவிடப்படுகிறது.

    நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    சென்னை சாந்தோம் கிறிஸ்தவ பேராலயம், பெசன்ட்நகர் ஆலயம், சின்னமலை ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருப்பலி நடந்தது.
    • ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் உள்ள புகழ் மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    முன்னதாக நள்ளிரவு12 மணிஅளவில் குழந்தை ஏசு பிறக்கும் காட்சி தத்ரூபமாக குடில் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதைதொடர்ந்து ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் கிறிஸ்துமஸ் திருப்பலியை நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    வருங்காலங்களில் பெரும் நோய் தொற்றுகள் ஏற்படக்கூடாது, இயற்கை சீற்றங்களின்றி மக்கள் அமைதியுடன்-மகிழ்ச்சி யுடன் வாழ ஜெபம் செய்யப்பட்டது. நள்ளிரவு திருப்பலிபூஜை நிறைவு பெற்றவுடன் புனித குழந்தை தெரசாள் ஆலயபங்கு தந்தை எஸ்.எஸ்.பாஸ்டின் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது.



    மதுரை

    கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் ஞானஒளிபுரம், மாடக்குளம், நரிமேடு, கே.புதூர், கீழவாசல், தெற்குவாசல், மேலவாசல், காளவாசல், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. அங்கு கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. தேவாலயத்தின் உட்புற பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்துக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு பங்குத் தந்தையின் மறையுறை, கூட்டு திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில் முத்தாய்ப்பாக, திருப்பலி யின் நிறைவில், தேவதை கள் வேடமிட்டு இருந்த குழந்தைகள், பங்கு தந்தையிடம் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கொடுத்தனர். இதனை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து பங்குத்தந்தைகள் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகை யில், அந்த சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார்கள். இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டு உள்ளன.நண்பர்கள், உறவினர் களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வந்து கண்காணித்தனர். மேலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    • ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்ன கத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.

    இறை வார்த்தை சபை மாநில தலைவர் சாந்து ராஜா தலைமை தாங்கினார். திருத்தல பங்குத்தந்தை வளன், திருத்தல நிர்வாகி அந்தோனி ஜோசப், அருட் தந்தையர்கள் வில்சன், ஆரோக்கியசாமி, சூசை, அமைதியக நிர்வாகி ஆரோக்கிய சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசுவை எழுந்தருள செய்து தூபம் காண்பிக்கப்பட்டது. முன்னதாக கிறிஸ்மஸ் பாடல்கள், பங்கு இளை யோர் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவ கங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்பட்டது
    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நாடகமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வரிசைப் பட்டி கிராமத்தில் உள்ள வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழா–விற்கு பள்ளியின் தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசு–கையில், ஏசு கிறிஸ்து–வின் பெருமையை–யும், கல்வி மற்றும் சுகாதாரத்தின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். சிறப்பு விருந்தி–னராக அரியலூர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை டோமினிக் சாவியோ கலந்துகொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் புனித தன்மையும், அவர் பிறந்த நோக்கத்தினையும் ஏசு பெருமான் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நாடகமும், கலை நிகழ்ச்சிகளும் நடை–பெற்றன. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவி ஆராதனா வரவேற்றார். முடிவில் பள்ளியில் முதல்வர் அருள் பிரபாகர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு–களை பள்ளி, கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜி.லில்லி செய்து இருந்தார்.


    • கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்கள் கட்டியும், குடில்கள் அமைத்தும், மின் விளக்கு அலங்காரங்கள் செய்தும் கிறிஸ்துமசை கொண்டாடினர்
    • கோஸ்தே சபைகளிலும் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

    நாகர்கோவில் :

    உலகம் முழுவதும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்கள் கட்டியும், குடில்கள் அமைத்தும், மின் விளக்கு அலங்காரங்கள் செய்தும் கிறிஸ்துமசை கொண்டாடினர். கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நடந்த திருப்பலியில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண் டார். ஆலய பங்கு தந்தை ஸ்டேன்லி சகாய சீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரார்த்த னையில் பங்கேற்றவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    இன்று காலையிலும் திருப்பலி நடந்தது. குழித் துறை, திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு திருப்பதியில் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர்.

    திருப்பலி முடிந்ததும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. மத்திய கோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் செல்லையா கலந்து கொண்டார். தேங்காய் பட்டினம் அருகே பறக்கல் விளை சி.எஸ்.ஐ. ஆலயம் நெய்யூர் அருகே நெல்லி யறை கோணம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையிலும் பிஷப் செல்லையா பங்கேற்றார்.

    இதே போல் பெந்தே கோஸ்தே சபைகளிலும் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திர ஏரி, ஓட்டல்கள், கடைகள் என அனைத்தும் கொடைக்கானல் எங்கும் வண்ணமயமாக இருந்தது.
    • குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களின் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட வழிசெய்தது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை எழில்கொஞ்சம் சுற்றுச்சூழல் நிலவுவதால் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் குளுகுளுவென காலநிலையும், குளிர்ச்சியான காற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தங்களின் விடுமுறையை உற்சாகமாக களிக்கின்றனர். உயரமான மலையிடங்கள், அருவிகள், படகுசவாரி, பூங்காக்கள், வண்ணமலர்கள் என கொடைக்கானலில் உள்ள அனைத்துமே பொழுது போக்கு அம்சமாக விளங்குவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கிறது.

    மேலும் நேற்றுமுதல் பள்ளிகளில் அரையாண்டு த்தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்காகவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காகவும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணாகுகை, அப்பர்லேக்வியூ, பைன்மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள எழில்கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திர ஏரி, ஓட்டல்கள், கடைகள் என அனைத்தும் கொடைக்கானல் எங்கும் வண்ணமயமாக இருந்தது. இது குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களின் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட வழிசெய்தது. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ணமலர்களை கண்டு ரசித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பூத்துகுலுங்கிய சிலுவை பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியமாக பார்த்து ரசித்தனர்.

    மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுசவாரி, ஏரிச்சாலையில் குதிரைசவாரி, சைக்கிள் சவாரி என விடுமுறையை கழித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்வாறு அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்டுள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கொல்கத்தாவில் உள்ள செயின்ட்பால் கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.
    • பிரார்த்தனையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

    கொல்கத்தா:

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் உள்ள செயின்ட்பால் கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது.

    இந்த பிரார்த்தனையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அங்கு பேராயரிடம் அவர் ஆசி பெற்றார். அவருடன் அவரது மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியும் சென்றிருந்தார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 23-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,200 பஸ்களுடன், 550 பஸ்கள் கூடுதலாக என மொத்தம் 2,750 பஸ்கள் இயக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 23-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,200 பஸ்களுடன், 550 பஸ்கள் கூடுதலாக என மொத்தம் 2,750 பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

    அதேபோல 24-ந்தேதியும் (நேற்று) வழக்கமாக இயக்கப்படும் 2,200 பஸ்களுடன், 250 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×