search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிட்டல்ஸ்"

    • ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.

    17-வது ஐ.பி.எல். டி20 போட்டி போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடக்கும் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஐபிஎல் சீசனில் உறுதியாக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? அணியை வழிநடந்துவரா என்பது சந்தேகம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் குமார் குஷக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
    • தமிழக வீரர் ஷாருக் கானை 7.40 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், இந்தியாவின் குமார் குஷக்ராவை ரூ.7.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

    ஏற்கனவே சமீர் ரிஸ்வி 8.40 கோடி ரூபாய்க்கும், ஷாருக் கான் 7.40 கோடி ரூபாய்க்கும், ஷர்துல் தாக்குர் 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

    • முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார்.

    தரம்சாலா:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

    • முதல் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக இழந்துவிட்டோம்.
    • எங்கள் அணிக்கு துவக்க வீரர்கள் தான் முக்கிய பலம். ஆனால் அதுவே எங்களுக்கு இந்த போட்டியில் சரியாக அமையவில்லை.

    16-வது ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தநிலையில் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்ததே தோல்விக்கான முக்கிய காரணம் டெல்லி அணியின் கேப்டனான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதல் மூன்று விக்கெட்டுகளை நாங்கள் விரைவாக இழந்துவிட்டோம். குறிப்பாக முதல் ஓவரிலேயே நான் விக்கெட்டை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம். எங்கள் அணிக்கு துவக்க வீரர்கள் தான் முக்கிய பலம். ஆனால் அதுவே எங்களுக்கு இந்த போட்டியில் சரியாக அமையவில்லை.

    168 ரன்கள் என்பது இலகுவாக எட்டக்கூடிய இலக்கு தான். முதல் 6 ஓவர்களை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே எப்படிப்பட்ட இலக்கையும் எட்ட முடியும். எங்களுக்கு ஒரு பார்ட்னர்சிப் கூட சரியாக அமையவில்லை. நான் சில விசயங்களை முயற்சித்து பார்தோம். ஆனால் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.

    இவ்வாறு டேவிட் வார்னர் கூறினார்.

    • சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது.
    • கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்தில் 20 ரன்கள் விளாசினார்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியில் அம்பதி ராயுடு நீக்கப்பட்டு, ஷிவம் துவே ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மணீஷ் பாண்டேவுக்கு பதில் லலித் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார்.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் 24 ரன், ரகானே 21 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். 8வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அணி 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 ஆட்டங்களில் 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

    16-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இதேபோல, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டுவிட்டர் பக்கத்தில் இன்றைய போட்டி குறித்து டோனி -வார்னர் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில், வணக்கம் வாழவைக்கும் சென்னை..இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா என குறிப்பிட்டுள்ளனர். அந்த பதிவில் டோனி மற்றும் டேவிட் வார்னர் பாரம்பரிய உடையுடன் கையில் இளநீர் வைத்தபடி இருந்தனர்.

    இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன.
    • அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.

    குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவீண் அம்ரே குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன. அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.

    அதனால், நாம் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். நமது பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் சவாலானதாக இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது.

    அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள். நடந்து முடிந்ததை நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியதை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறோம். டெத் ஓவர்களிலும் நாங்கள் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியது இருக்கிறது.

    அதையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

    டெல்லி அணியின் துணை கேப்டன் அக்சர் படேலுக்கு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உள்ளது. ஆட்டத்தை ஜெயித்து கொடுக்க அவரது பங்களிப்பு நிச்சயம் தேவை.

    அவர் சிக்சர்களை இந்த சீசனில் அதிகம் அடித்திருக்கிறார். அவரை முதலில் களமிறக்காமல், கடைசியாக இறக்க சில நேரங்களில் முடிவு செய்வோம். ஏனென்றால் அவரை சிறந்த ஃபினிஷர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
    • அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

    டெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.

    அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலை அந்த அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என்றும், சிறந்த பார்மில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • டெல்லி அணி கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • அந்த அணியின் துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்த வருட ஐ.பி.எல். தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து நடப்பாண்டு ஐ.பி.எல். தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், நடப்பாண்டுக்கான புதிய சீருடையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி கேப்டனாக டேவிட் வார்னரும், துணை கேப்டனாக அக்சர் பட்டேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்

    • துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    2023 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும் துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் டேவிட் வார்னர், அக்சர் படேல் இந்த இருவரின் தலைமையில் இந்த #IPL2023 சத்தமாக கர்ஜிக்க தயாராக உள்ளது என்று தலைப்பிட்டிருந்தது.

    வார்னர் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2009-ல் டெல்லி உரிமையுடன் (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) தொடங்கினார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். அவர் 2016 -ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.

    போட்டியின் கடந்த பதிப்பில், வார்னர் 12 போட்டிகளில் கேபிடல்ஸ் அணிக்காக 150.62 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 432 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஐந்து அரை சதங்களை அடித்தார்.

    • முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய உத்தர பிரதேச அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது. கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் மட்டும் போராடினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

    ×