search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • லாலு பிரசாத்தின் மூத்த மகள் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
    • இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

    லாலு பிரசாத் யாதவின் மூத்த மகள் மிசா பாரதி. இவர் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்லிபுத்ரா தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ளார்.

    பா.ஜனதா அதிகாரத்தை இழந்தால் பிரதமர் மோடி ஜெயிலில் அடைக்கப்படுவார் என மிசா பாரதி கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை. ராஷ்டிரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வந்தால், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வெளியிடப்பட்டடு தேர்தல் பத்திரம் தொடர்பாக விசாரணை தேவை என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தேன். ஆனால் மீடியாக்கள் நான் கூறியதை திரித்து வெளியிட்டுள்ளன.

    இது தொடர்பாக மிசா பாரதி கூறுகையில் "நான் பிரதமர் பற்றி ஏதும் கூறவில்லை. என்னுடைய முழுக் கருத்தையும் வெளியிடுவதற்குப் பதிலாக, சிதைக்கப்பட்ட பகுதியை மீடியா வெளியிட்டுள்ளது. இது பா.ஜனதாவின் எஜெண்டா.

    வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் முன்னதாக அளித்த வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி ஏதாவது பேசியிருக்கிறாரா?. எந்த பிரச்சனை குறித்தும் பா.ஜனதா பேசுவதில்லை." என்றார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இதுபோன்ற கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் பதவி மிகவும் மரியாதைக்குரியது. நாட்டில் இருந்து ஏதும் மறைக்கப்படவில்லை. மாட்டுத்தீவனம் ஊழலில் அவரது தந்தை தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் ஊழலில் மூழ்கியுள்ளது. அவள் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு.
    • அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த பரப்புரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார்.

    அப்போது கூட்டத்தில் பேசிய அவர், " குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு. அதனால.. அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.

    குக்கர் சின்னம் எல்லாம் இடத்திற்கும் தெரிய வேண்டும். டிடிவி தினகரனின் சின்னம் குக்கர் சின்னம். குக்கர் சின்னத்தில் குழப்பம் இல்லாமல் ஓட்டு போடுவதற்கு வயதானவர்களுக்கு எடுத்து கூறவேண்டும்.

    அவர் இதை செய்வார் அதை செய்வார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    அவர் உங்கள் வீட்டு பிள்ளை. உங்கள் வீட்டில் ஒருவராய் இருந்திருக்கிறார்.

    குக்கர் சின்னம் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது வெற்றிபெற்ற சின்னம். அதேமாதிரி தேனி தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வைக்க வேண்டும்.

    குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு, தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு.

    குக்கர் என்றால் டிடிவி.. டிடிவி என்றால் குக்கர்..

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வரும் 19ம் தேதி பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    18-வது மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசதியத்தை வலியுறுத்தி திருவான்மியூர் கடற்கரையில் இன்று காலை பாரா செய்லிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    • முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.
    • 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    18-வது மக்களவை தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது.

    வரும் 19ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவுக்கு நடைபெறுகிறது.

    இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று பிரசாரம் நடந்து வரும் நிலையில், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், 94 தொகுதிகளுக்காக நடைபெறும் 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 19ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. அவை 20ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. 22ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் மேற்படி கால அட்டவணையில் 3-ம் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    • அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.
    • யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்- செய்தி தொடர்பாளர்.

    ஆந்திராவில் இருந்து தனியாக பிரிந்த மாநிலம் தெலுங்கானா. ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு மிக்க மாநில கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருந்தபோதிலும் 2018 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    17 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகரி தெரிவித்துள்ளார். ஆனால் யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி, தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

    கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் முடிவு செய்தது. இதனால் அம்மாநிலத்தின் தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஞானேஸ்வர் சந்திரசேகர ராவ் கட்சியில் தேர்தலுக்கு முன்னதாக இணைந்தார். அதில் இருந்து தலைவர் இல்லாத அந்த கட்சியின் பல தலைவர்கள், தொண்டர்கள் கட்சியில இருந்து வெளியேறிய வண்ணமாக உள்ளனர்.

    2018 சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று 3.51 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ உடன் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு திரை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை.
    • தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் விடுமுறை.

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்?
    • அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது.

    மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார் ? மக்களின் ஒற்றுமை, சுதரந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

    நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

    ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு |ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்ட பிளவுவாத | சக்திகள் யார் என நமக்கு தெரியும்.

    அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக தேவை.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளா்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் களம் காணுகின்றனர். அதற்காக வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக தேவைப்படுகிறது. மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு இந்திரமும் தேவைப்படுகிறது.

    சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் 944 அமைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளும் (வி.வி.பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு தேவைக்கேற்ப ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்டபின், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

    எனவே, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி இன்று(புதன்கிழமை) வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

    • பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.
    • பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?

    மதுரை, சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை ரிங் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    * இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களான சு. வெங்கடேசன் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    * புதிய பிரதமர் தமிழகத்திற்க நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் பிரதமராக இருப்பார். இப்போது இருக்கும் பிரதமர் போன்று இருக்கமாட்டார்.

    * பிரதமர் மோடி தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்.

    * எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் ஆளுநர்களால் தொல்லை கொடுப்பார்கள். இதுதான் மோடி இந்தியா.

    * பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து பேசாதது ஏன்?

    * ஒருதாய் மக்களாக வாழும் நாட்டில் மதவெறியை விதைத்து மக்களை பிளவுப்படுத்தினார் மோடி.

    * ஐக்கிய முற்போக்கு கூட்டணி நாடு முழுவதும் 70 ஆயிரம் கோடிக்கு மேல் கல்விக்கடன் வழங்கியது. 65 ஆயிரம் கோடி அளவிற்கு சிறு விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டது. டி.ஆர். மத்திய மந்திரியாக இருக்கும்போது சுமார் 56 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. நெசவுத் தொழிலில் இருந்து சென்மார்க் வரி நீக்கப்பட்டது. இன்னும் ஏராளமாக உள்ளது. பிரதமர் மோடியால் பட்டியல் போட முடியுமா?.

    * தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் மோடி வர, தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மீது மட்டும் பிரதமர் மோடிக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம்தர குடிமக்களா?

    * திராவிட மாடலின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏராளமான சாதனைகள் செய்த பெருமிதத்துடன் வாக்குகள் கேட்க நின்றிருக்கிறேன்.

    * உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.

    * கல்வியையும் மருத்துவத்தையும் இரு கண்களாக பார்க்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், திராவிடம் மீது பயம் இருப்பவர்கள் மதத்தின் விரோதியாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களை பிரித்து குளிர் காய நினைக்கும் மதவாத்திற்குதான் நாங்கள் எதிரி. மதத்திற்கு அல்ல. நான் முதலமைச்சராக பதவி ஏற்றபின் அதிகமாக கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இந்து அறிநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாக்களில்தான். அன்பிற்கு மட்டுமல்ல. ஆன்மீகத்திற்கும் அடையாம் மதுரைதான்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • தனது மகன் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறானது.
    • காங்கிரஸ் என்னுடைய மதம் என்றார் ஏ.கே. அந்தோணி.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.கே. அந்தோணி. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு பா.ஜனதா மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    அனில் கே. அந்தோணியை பா.ஜனதா பத்தனாம்திட்டா தொகுதியில் நிறுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆன்டோ அந்தோணியை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஏ.கே. அந்தோணி கூறும்போது "தனது மகன் அனில் கே. அந்தோணி தோல்விடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். எனது மகனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆன்டோ அந்தோணி வெற்றி பெற வேண்டும்.

    என்னுடைய மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறு. காங்கிரஸ் என்னுடைய மதம்.

    இவ்வாறு ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

    மகனின் அரசியல் பிரவேசம் மற்றும் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் ஏ.கே. அந்தோணி இவ்வாறு அதில் அளித்துள்ளார்.

    • சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள்.
    • ஏப்ரல் 20, 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்கவும், வாக்களித்த பின்னர் மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு 3,060 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

    ஏப்ரல் 20 மற்றும் 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21-ல் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார்.
    • இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது.

    தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

    இன்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யை ஆதரித்து திருவான்மியூரில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு மாநில கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த தொகுதியில் (தென்சென்னை) போட்டியிடுகிறார். அந்த கட்சியில் (பா.ஜனதா) வேட்பாளர்கள் இல்லை. ஆகேவே இரண்டு மாநில கவர்னர்களை ராஜினாமா செய்ய வைத்து, தேர்தல் களத்தில் பா.ஜனதா களம் இறக்கிவிட்டுள்ளது.

    கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார். இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது. கச்சத்தீவு பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒருபோதும் பேசியது கிடையாது. தேர்தல் நெருங்கிய நிலையில், அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள்" என்றார்.

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:-

    தயது செய்து உங்களுடைய எம்.பி. பதவியின்போது செய்த சாதனைகள் சொல்லுங்கள் என கனிமொழியிடம் கேட்க விரும்புகிறேன். நான் ஆளுநராக நீடிப்பதா? அல்லது வேட்பாளராக போட்டியிடுவதா? என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள்.

    அவர்களுக்கு (திமுக) தேர்தலில் போட்டியிடக்கூடிய கட்சிக்காரர்கள் இல்லையா?. அவர்களுடைய சொந்த உறவினர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியுள்ளனர். எங்களுடைய கட்சியில் சாதாரண தொண்டனும் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய முடியும்.

    எங்களுடைய கட்சியில் வேட்பாளர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 15 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். அந்த 15 பேரில் நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். திமுகவில் கனிமொழி மட்டுமே விருப்பமனு செய்திருந்தார்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    ×