search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை.
    • எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை.

    பிரதமர் மோடி இன்று கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுராவில் நடைபெற்ற மிகப் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாய்மார்கள், சகோதரரிகள் இங்கே மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளீர்கள். உங்களுடைய குடும்பத்தை வளர்ப்பதற்கு உங்களுடைய போராட்டம் மற்றும் சவால்களை, மோடியாகிய நான் எனது வீட்டில் பார்த்துள்ளேன்.

    இந்த நாட்களில், மோடியை அகற்றுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரிய மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

    ஆனால் நரிசக்தி, மாற்ரு சக்தி ஆகியவற்றின் ஆசீர்வாதத்தால், பாதுகாப்பு கவசத்தால் (Suraksha kavach), மோடி அவற்றை எதிர்கொள்ளும் திரணை பெற்றுள்ளார்.

    தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை. அவர்களுடைய வரலாறு மோசடி.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. தருமபுரி- 81.48

    2. நாமக்கல்- 78.16

    3. கள்ளக்குறிச்சி- 79.25

    4. ஆரணி- 75.65

    5. கரூர் - 78.61

    6. பெரம்பலூர்- 77.37

    7. சேலம்- 78.13

    8. சிதம்பரம்- 75.32

    9. விழுப்புரம்- 76.47

    10. ஈரோடு- 70.54

    11. அரக்கோணம்- 74.08

    12. திருவண்ணாமலை- 73.88

    13. விருதுநகர்- 70.17

    14. திண்டுக்கல்- 70.99

    15. கிருஷ்ணகிரி- 71.31

    16. வேலூர்- 73.42

    17. பொள்ளாச்சி- 70.70

    18. நாகப்பட்டினம்- 71.55

    19. தேனி- 69.87

    20. நீலகிரி- 70.93

    21. கடலூர்- 72.28

    22. தஞ்சாவூர்- 68.18

    23. மயிலாடுதுறை- 70.06

    24. சிவகங்கை- 63.94

    25. தென்காசி- 67.55

    26. ராமநாதபுரம்- 68.18

    27. கன்னியாகுமரி- 65.46

    28. திருப்பூர்- 70.58

    29. திருச்சி- 67.45

    30. தூத்துக்குடி- 59.96

    31. கோவை- 64.81

    32. காஞ்சிபுரம்- 71.55

    33. திருவள்ளூர்- 68.31

    34. திருநெல்வேலி- 64.10

    35. மதுரை- 61.92

    36. ஸ்ரீபெரும்புதூர்- 60.21

    37. சென்னை வடக்கு- 60.13

    38. சென்னை தெற்கு- 54.27

    39. சென்னை மத்தி- 53.91

    • சில நேரங்களில் சொந்த நலனை புறந்தள்ளிவிட்டு மிகப்பெரிய இலக்கை அடைவதற்கான மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகிறது.
    • நாங்கள் தேசப்பற்று, காஷ்மீர் முன்னேற்றத்திற்கு, அமைதியை வலுப்படுத்துதல், சகோதரதத்துவம், சமூகத்திற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் ஐந்து மக்களவை தொகுதிகள் உள்ளன. உதம்பூர், ஜம்மு ஆகியவை ஜம்முவில் உள்ளன. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி, ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுவதில்லை.

    இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என்பதை பா.ஜனதா நியாயப்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக காஷ்மீர் மாநில பா.ஜனதா தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில் "காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் எங்களுடைய சொந்த பலத்தில் போட்டியிட விரும்புகிறோம். ஆனால் சில நேரங்களில் சொந்த நலனை புறந்தள்ளிவிட்டு மிகப்பெரிய இலக்கை அடைவதற்கான மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    நாங்கள் தேசப்பற்று, காஷ்மீர் முன்னேற்றத்திற்கு, அமைதியை வலுப்படுத்துதல், சகோதரதத்துவம், சமூகத்திற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்" என்றார்.

    மேலும், இந்த மூன்று தொகுதிகளில் மக்கள் காங்கிரஸ், தேசிய மாநாடு, பிடிபி ஆகிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். இங்கு யாரை ஆதரிப்பது என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.
    • அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-

    இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.

    கர்நாடகாவிற்கு மோடியின் பரிசு வெற்றுச் சொம்பு. ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்கள். செய்தார்களா? வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினார்களா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கினார்களா? நல்ல நாட்கள் வந்ததா?. ஒரு சிங்கிள் உறுதியை கூட நிறைவேற்றவில்லை.

    ஆகவே, மோடி மாநில மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு வெற்று சொம்பை கொடுத்துள்ளார். அவர்கள் ஏதும் செய்யவில்லை. இருந்தபோதிலும் நம்முடைய மாநில கஜானா காலியாகவில்லை. நம்முடைய காங்கிரஸ் கட்சி ஐந்து உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முன்னேற்றத்திற்கான பணிகளை தொடர்கிறோம். மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத கட்சி. அவர்களில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது மூலம் கட்சியை கலைத்து விடுவது நல்லது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது.
    • ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

    2024 மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் என் வாக்கு என் குரல் (My Vote My Voice) திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்கள், இது நம் நாடு. அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது. ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது. குடிமக்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வாக்களிப்பதாகும்

    நம்முடைய சிறந்த தாய்நாட்டு மண்ணில் உள்ள மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நம் தேசத்திற்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வெறும் ஐந்து நிமிடங்கள். இது செய்யக்கூடியது, இல்லையா? பெருமையுடன் வாக்களிப்போம். "என் வாக்கு, என் குரல்"

    இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
    • விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • மத்தியப் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
    • தேர்தல் பணியை முடித்துவிட்டு சொந்த மாவட்டத்திற்கு திரும்பியபோது விபத்து.

    மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பேருந்தை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 21 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் காயமடைந்துள்ளனர்.

    போலீசார் தங்கள் தேர்தல் பணியை முடித்துவிட்டு மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த மாவட்டமான ராஜ்கருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, போபால்- பேதுல் நெடுஞ்சாலையில் பரேதா காட் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஷாலினி பராஸ்தே தெரிவித்தார்.

    விபத்து குறித்து அவர் மேலும் கூறுகையில், " ஐந்து காவலர்கள் மற்றும் மீதமுள்ள வீட்டுக் காவலர்கள் உட்பட மொத்தம் 40 ஜவான்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சிந்த்வாராவில் தேர்தல் பணி முடிந்து ராஜ்கருக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

    இதில், பலத்த காயம் அடைந்த 8 பேர் பெதுலில் உள்ள மாவட்ட மருத்துவமனையிலும், சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் ஷாபூர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏதிரே வந்த லாரியை இடிக்காமல் செல்ல முயன்றபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது" என்றார்.

    • 48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • 2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    மக்களவை முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய சென்னை வாக்குப்பெட்டிகள் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    அண்ணா பல்கலைக்கு வாக்குபெட்டிகள் கொண்டு வர கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

    48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கட்டுப்பாடு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடம் இருக்கும்.

    பூத் சிலிப் வாங்கியவர்களுக்கு பெயர் விடுபட்டதற்கு பழைய பட்டியலை வழங்கி இருக்கலாம்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.

    2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்.
    • ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது.

    மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

    நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் அம்ரோஹா தொகுதியின் பாஜக வேட்பாளர் கன்வர் சிங் தன்வாரை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ளவர்கள் பசியுடன் போராடும் போது, இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்" என்று கூறினார்.

    மேலும், " 23- 24 கோடி மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான், 1947-ல் பிரிவினைக்குப் பிறகு உருவானது. இன்று பட்டினியால் வாடுகிறது. இதுவும் ஒரு உதாரணம்.

    பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

    ஒரு பக்கம் பாகிஸ்தான் இவ்வாறு உள்ளது. மறுபுறம், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்கிற வாக்குறுதி.

    ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது- 'மீண்டும் மோடி அரசு' என்று.." என்றார்.

    லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் மேற்கு உத்தரபிரதேசத்தில் எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், பேரணியில் ஆதித்யநாத் உரையாற்றினார். அம்ரோஹாவில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவை தேர்தல் 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
    • தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவு.

    18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல்நடந்து முடிந்தது.

    நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்ற தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.

    தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று நண்பகலில் இறுதி வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    • நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் வாக்குப்பதிவு.

    18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட்ட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    அதாவது, தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது.

    நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

    நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டுவதால், காலையிலேயே அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் நண்பகல் மற்றும் மதிய நேரத்தில் பல இடங்களில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலையில் மீண்டும் வேகமெடுத்தது.

    இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதேநேரம் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

    இந்த முதற்கட்ட தேர்தலில் கடைசியாக கிடைத்த தகவலின்படி 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    அதன்படி, நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    • கள்ளக்குறிச்சியில் 75.64 சதவீதம், தருமபுரியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
    • பொள்ளாச்சியில் 72.22 சதவீதம், நாகப்பட்டினத்தில் 72.21 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    சென்னை:

    தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

    காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஆரணி- 73.77

    கரூர் - 74.05

    பெரம்பலூர்- 74.46

    சேலம்- 74.55

    சிதம்பரம்- 74.87

    விழுப்புரம்- 73.49

    ஈரோடு- 71.42

    அரக்கோணம்- 73.92

    திருவண்ணாமலை- 73.35

    விருதுநகர்- 72.99

    திண்டுக்கல்- 71.37

    கிருஷ்ணகிரி- 72.96

    வேலூர்- 73.04

    பொள்ளாச்சி- 72.22

    நாகப்பட்டினம்- 72.21

    தேனி- 71.74

    நீலகிரி- 71.07

    கடலூர்- 72.40

    தஞ்சாவூர்- 69.82

    மயிலாடுதுறை- 71.45

    சிவகங்கை- 71.05

    தென்காசி- 71.06

    ராமநாதபுரம்- 71.05

    கன்னியாகுமரி- 70.15

    திருப்பூர்- 72.02

    திருச்சி- 71.20

    தூத்துக்குடி- 70.93

    கோவை- 71.17

    காஞ்சிபுரம்- 72.99

    திருவள்ளூர்- 71.87

    திருநெல்வேலி- 70.46

    மதுரை- 68.98

    ஸ்ரீபெரும்புதூர்- 69.79

    சென்னை வடக்கு- 69.26

    சென்னை தெற்கு- 67.82

    சென்னை மத்தி- 67.35

    ×