search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவைத் தீ விபத்து"

    • தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் சந்தித்தார்.

    மேலும், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரவித்தார்.

    அதன்படி, இந்திய விமானப்படை விமானம் மூலம், உடல்களை இந்தியா கொண்டுவரப்படுகிறது.

    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    இந்த கூட்டத்தில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்தியா கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக கேரளா அமைச்சர்கள் குவைத் செல்ல வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

    • முகமது ஷெரிப் செல்போன் அழைப்பை எடுக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி.
    • தற்போதைய நிலையைதெரியப்படுத்த வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (வயது35). இவர் கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் மங்காப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் போர்மேன் ஆக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவர் தங்கி வேலை செய்து வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 49 பேர் பலியானார்கள். இதனால் பதற்றம் அடைந்த இவரது குடும்பத்தினர் முகமது ஷெரிப் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது கடந்த பல மணி நேரமாக முகமது ஷெரிப் செல்போன் அழைப்பை எடுக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் குவைத் நாட்டில் உள்ள சக தொழிலாளர்களை தொடர்பு கொண்ட போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். ஆனால் அது முகமது ஷெரிப் புகைப்படம் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    எனவே மத்திய-மாநில அரசுகள் முகமது ஷெரிப் குறித்து தற்போதைய நிலை என்ன என்பதை கண்டறிந்து தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.
    • தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் குவைத்திலேயே வசித்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குடியிருப்புகளில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    குவைத்தில் செயல்பட்டு வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்கள் தங்குவதற்காக குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்திற்குட்பட்ட மங்காப்பில் அடுக்குமாடி குடியிருப்பை ஏற்பாடு செய்துள்ளது.

    6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். நேற்றிரவு குடியிருப்பில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினர். இருப்பினும் பலர் தீயின் கோரபிடியில் சிக்கினர்.

    இதற்கிடையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் இருந்து கீழே குதித்தனர். இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயில் கருகியும், புகையின் காரணமாக மூச்சுத்திணறி கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. தீ விபத்தில் பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள் என தெரிய வந்த நிலையில் இதில், 30-க்கும் மேற்பட்டோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    ஆகாஷ் எஸ்.நாயர் (வயது 23), பந்தளம், உமருதீன் சமீர் (33) லூகோஸ் (48), கொல்லம், ரஞ்சித் (34), கெலு பொன்மலேரி (55), காசர்கோடு, முரளிதரன், பத்தினம்திட்டா, சாஜு வர்கீஸ் (56), கோனி, தாமஸ் உம்மன், (திருவல்லா).

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    இவர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் ஜோசப், பிரவீன் மாதவ், பூனத் ரிச்சர்ட் ராய் ஆனந்த், அனில் கிரி, முஹம்மது ஷரீப், துவரிகேஷ் பட்நாயக், விஸ்வாஸ் கிருஷ்ணன், அருண்பாபு, ரேமண்ட், ஜீசஸ் லோபஸ், டென்னி பேபி கருணாகரன் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    விபத்தில் பலியான கொல்லத்தைச் சேர்ந்த சமீர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக குவைத் சென்றுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பிய அவர் திருமணம் செய்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் அவர், மீண்டும் குவைத் சென்றுள்ளார். கனரக வாகன ஓட்டுனராக பணியாற்றிய அவர் பரிதாபமாக தீயில் கருகி இறந்துள்ளார்.

    அவரது நண்பர் நஜீப் தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் தனது தந்தைக்கு போன் மூலம் சமீர் இறந்த தகவலையும், தான் காயமுற்றிருப்பதையும் தெரிவித்தார்.

    சமீரின் மற்றொரு நண்பர் ஷானவாஸ் கூறுகையில், நாங்கள் 3 பேரும் ஒரே கிராமத்தில் ஒன்றாக வளர்ந்தோம். ஒன்றாகவே வேலை பார்த்தோம். நான் வேறு இடத்தில் தங்கியிருந்தேன். தீ விபத்து பற்றி அறிந்ததும், நண்பர்களை பற்றி விசாரித்தேன். அப்போது சமீர் இறந்து விட்டார் என்பது பேரிடியாக அமைந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நஜீப்பிடம் போனில் பேசினேன். நான் இன்னும் அதிர்ச்சியாகவே உள்ளேன் என்றார்.

    இந்த சம்பவம் குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவரான சதீசன் கூறுகையில், குவைத் தீ விபத்து சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவை கதறி அழ வைக்கும் சம்பவமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கேரளாவைச் சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என்றார்.

    தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வாசனை குவைத் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரும் குவைத் விரைந்துள்ளார். 

    • உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    புதுடெல்லி:

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    மத்திய கிழக்கில் உள்ள நமது தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியது.

    இந்திய அரசு, அதன் சகாக்களுடன் இணைந்து, நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    • உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர்.
    • ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் என்று தகவல்.

    தெற்கு குவைத்தை அடுத்த மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி இந்தியாவை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

    கிட்டத்தட்ட 195 பேர் வசித்து வந்த குடியிருப்பில் தீ விபத்தின் போது உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர். இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையின் போது அங்குள்ள கள நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

    • அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவு.

    குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது.

    அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனைகளில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

    இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தொடர்பு எண்கள்: +91 1800 309 3793,

    +91 80 6900 9900, +91 80 6900 9901

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
    • தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன.

    தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியானது. தமிழகர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக உதவிகளைப் பெற இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

    குவைத் தீ விபத்து தொடர்பாக +965 65505246 என்ற உதவி எண்ணை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

    மேலும், தீ விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.

    குவைத் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கோரியுள்ளோம்.

    உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் எனவும் அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    • தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
    • தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்த்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், " குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்.

    இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்" என்றார்.

    ×