search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹத்ராஸ்"

    • இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்
    • எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

     

     

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

     

    இடையில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த  பேட்டியில் , 'இந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் நடப்பதை யாரால் தடுக்க முடியும். பூமியில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்துதான் ஆகா வேண்டும்.எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.

     

    மேலும்' இந்த சம்பத்தை வைத்து எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். கூட்டத்தில் விஷத் தன்மையுள்ள திரவம் தெளிக்கப்பட்டது. அதை நேரில் கண்ட சிலர் எங்களது வக்கீலிடம் அதை உறுதி செய்து வாக்குமூலம் அளித்துள்ளனர்' என்றும் தெரிவித்துள்ளார். 

    • இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
    • ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

     

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

    அந்த அறிக்கையில், அனுமதிக்கபட்டத்தை விட அதிகம் பேர் கலந்துகொண்டதே இந்த கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் போலே பாபா ஏறிச் சென்ற காரில் இருந்து கிளம்பிய புழுதியை எடுப்பதற்காக மக்கள் நெறுக்கிப்பிடித்துள்ளனர்.

    அவ்வாறு முன்னேறியவர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிடித்துத் தள்ளியுள்ளனர். இதனால் பலர் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் ஹத்ராஸ் விபத்து குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு, வரும் ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

     

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

    80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலே பாபா மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

    ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு போலே பாபா தலைமறைவாக இருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    அந்த இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று பேசியுள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    "ஹத்ராஸ் ஆன்மிக கூட்டத்தில், தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, "ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல. சமூக விரோதிகளின் சதி செயல்" என போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

    • விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
    • போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.

    இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.  

    • ஹத்ராஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தேசிய மகளிர் ஆணையத் தளிர் ரேகா சர்மா சென்றார்
    • ரேகா சர்மாவுக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி சென்றது சர்ச்சையானது

    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை அவமத்து பேசியதாக புதிய கிரிமினல் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் போலே பாபா சாமியாரின் இந்து மத ஆன்மீக சொற்பொழிவின்போது நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    இந்த விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில்,பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை அரசியல் தலைவர்கள் சென்று சந்தித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அவர்களை சென்று சந்திக்கும்போது அவருக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி செல்லும் வீடியோ இணையத்தில் பேசுபொருளானது.

    அவருக்கு [ரேகா சர்மாவுக்கு] ஏன் மற்றொருவர் குடைபிடிக்கிறார் என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது எக்ஸ் தளத்தில் மஹுவா மொய்த்ரா, அவர் [ரேகா சர்மா] தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கிப் பிடிப்பதில் பிசியாக உள்ளார் என்று பதிலளித்திருந்தார். பின் அந்த பதிவை நீக்கினார்.  இந்த பதிவுக்கு ரேகா சர்மா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மஹுவா மீது மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது, எனவே தற்போது மஹுவா மொய்த்ரா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
    • ஹத்ராசில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது மிகவும் சோகமானது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில்சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பலியானவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஹத்ராசில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது மிகவும் சோகமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கும் போது எனக்கு ஆறுதல் வார்த்தைகள் வரவில்லை. உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியமும், கவனக் குறைவும்தான் இந்த முழு விபத்துக்கும் காரணம் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கில் முறையான மற்றும் வெளிப்படையான விசாரணை எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான சரியான நடவடிக்கையாக மட்டு மல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மனதில் நீதி அமைப்பு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ள இழப்பீடு மிகவும் போதுமானதாக இல்லை. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் வழங்க கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது.
    • இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலெ பாபா ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர் போன்றோர் தங்கள் வறுமையையும் மற்ற அனைத்துத் துன்பங்களையும் போக்குவதற்கு, ஹத்ராஸின் போலே பாபா போன்ற பல பாபாக்களின் மூடநம்பிக்கையால் தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துயரத்தையும் துன்பத்தையும் அதிகரிக்கக் கூடாது.

    மாறாக, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் காட்டிய பாதையில் ஆட்சியைப் பிடித்து தங்கள் தலைவிதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இந்த சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. ஹத்ராஸ் சம்பவத்தில், குற்றவாளியான போலே பாபா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரை போன்ற மற்ற பாபாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் போலே பாபா
    • போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய போலே பாபா சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக தற்போது வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின்  குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக 88,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட நிகழ்ச்சியில் 2.5 லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேற மற்றோரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க எதிர்புறமாக முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ச்த்துள்ளது என்று தெரியவந்தது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா தனது காரில் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

    இந்த சம்பவம் தொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மதுக்கர் என்ற நபர் இன்று போலீசிடம் சரணடைந்துள்ளார். போலே பாபாவின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

    • காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மதபோதகர் போலே பாபா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.

    இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க இன்று அதிகாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.சுமார் 7.30மணி அளவில் ஹத்ராஸை வந்தடைந்த ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.



    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
    • காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் பலியாகினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தக் கொடூர சம்பவத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவுக்கும் ஹத்ராஸ் கூட்ட நெரிசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    சமூக வலைதளங்களில் பரவும் இந்த வைரல் வீடியோ, உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள கோவிலில் இருந்து மார்ச் 17-ம் தேதி அன்று ஹோலிக்கு முந்தைய நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலைக் காட்டுகிறது. இதில் 6 பேர் சுயநினைவை இழந்து காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    எனவே, சமூக வலைதளங்களில் வைரலாகும் ஹத்ராஸ் சம்பவத்தை காட்டும் வீடியோ போலி என தெரிய வந்துள்ளது.

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் இன்று கைதுசெய்தனர்.
    • முக்கிய குற்றவாளியைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மதபோதகர் போலே பாபா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.

    இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மூத்த சேவகரான தேவ்பிரகாஷ் மதுகருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும். அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அலிகார் போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹத்ராசில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடுவார் என தெரிவித்தார்.

    • கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
    • கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த ஹத்ராஸ் சம்பவம் தெடர்பாக குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    ஹத்ராஸ் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். கடவுளால் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். கடவுள் சக்தியை நம்புபவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாற மாட்டார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். உங்களின் ஒவ்வொரு சுவாச காற்றிலும் அதை உணர்கிறீர்கள்.

    ஹத்ராஸ் பேரழிவு கடவுளால் அனுப்பப்பட்டது அல்ல. கொல்லப்பட்ட 121 பேரும் தங்கள் கர்மாவால் உயிரிழக்கவில்லை. குருட்டு நம்பிக்கையால் உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவிகள். இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பார்க்கும் போதுதான் உண்மையாகவே 'கடவுளால் அனுப்பப்பட்டவர்' என்ற வாசகம் நியாயப்படுத்தப்படும்" என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவின் கீழே ஹத்ராஸின் பேரழிவிலிருந்து மக்கள் விழித்துக் கொண்டு 'நான் பயாலஜிக்கல்' ( Non-Biological ) என்று யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்வார்கள் என்று பத்திரிகையாளர் முகமது சுபைர் மோடியை கிண்டலடித்துள்ளார். மேலும், பலரும் குஷ்புவின் பதிவின் கீழ் மோடியை கிண்டல் செய்து வருகின்றனர்.

    மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

    கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று மோடி பேசிய நிலையில் கடவுளால் யாரும் அனுப்பட மாட்டார்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×