search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹத்ராஸ்"

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • இந்த ஆன்மீக கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர். சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் 121 உயிர்கள் உயிரிழந்ததை அடுத்து ஆக்ரா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 சத்சங்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜூலை 4 முதல் 11 வரை சயான் நகரிலும் ஜூலை 13 முதல் 23 வரை சாஸ்த்திரிபுரத்திலும் போலே பாபாவின் சத்சங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசினார். அப்போது, "ஹத்ராஸ் போன்ற கூட்டநெரிசல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், இத்தகைய போலி சாமியார்களை சமாளிப்பதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    போலி சாமியார்களால் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் குருட்டு நம்பிக்கையில் கலந்து கொள்கின்றனர். இத்தகைய மத நிகழ்ச்சிகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும். இத்தகைய கூட்டங்கள் எங்கு நடத்த வேண்டும். எவ்வளவு பரப்பளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடத்தும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்.

    இப்போது பல போலி சாமியார்கள் சிறையில் இருக்கின்றனர். மத கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த சட்டமும் இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஹதராஸ் சம்பவம் தெடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

    • போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் கூட்ட நெரிசல்.
    • 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேர் பங்கேற்பு.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஹத்ராஸ் பகுதிக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்தார்.

    பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது:-

    முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "மீட்பு மற்றும் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதே எங்கள் முன்னுரிமை.

    மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உ.பி., ஹரியானா, ம.பி., ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கிட்டத்தட்ட அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    நான் நேரில் பார்த்த பலருடன் உரையாடினேன். நிகழ்ச்சி முடிந்ததும், சத்சங்கப் சாமியார் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று பல பெண்கள் அவரைத் தொட, 'சேவதர்கள்' அவரை நோக்கிச் செல்லத் தொடங்கினர். அவர்களை தடுத்து நிறுத்தியதால், இந்த விபத்து நடந்தது.

    கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
    • சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் சென்றபோது போலே பாபா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதில் பலர் போலே பாபாவின் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து வருபவர்கள் ஆவர்.

    80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர். சிறிய இடத்தில் இவ்வளவு அதிகமாக மக்களை நெருக்கி அடைத்துள்ளனர். மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

     

    மேலும் விபத்து ஏற்பட்டதற்கு பிறகு உயிருக்கு போராடி வரும் மக்க்ளுக்கு உதவாமல் தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று தடயங்களை மறைக்கும் முயற்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. போலே பாபா காரில் ஏறி செல்ல முயன்ற நிலையில் அவரின் காருக்கு பின்னால் ஓடியவர்களை தடிகளால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் சென்றபோது போலே பாபா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக போலே பாபாவின் நெருங்கிய கூட்டாளிகளான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது உ.பி போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது பதியப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நஷ்டஈடாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.
    • போலே பாபா சாமியார் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.


    போலே பாபா சாமியார் நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென அவர் தலைமறைவானார். இவரை உத்தரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஹத்ராஸ் அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்களை சந்தித்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுகொண்டார்.

    • மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
    • கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள்  ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு  மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில்  கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.

    குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • 2005 ஜனவரி 25-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
    • 2008 செப்டம்பர் 30-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் 162 பேர் உயிரிழந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபோன்று கோவில் மற்றும் மத நிகழ்ச்சிகளின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்த ஒரு அலசல் பின்வருமாறு:-

    1. 2023 மார்ச் 31: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கோவிலில் உள்ள கிணற்றில் ராம நவமியை முன்னிட்டு புனித நீராடி சென்றபோது கிணற்றின் ஒரு பகுதி இடிந்து சுமார் 36 பேர் உயிரிழந்தனர்.

    2. 2022 ஜனவரி 2: ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் ஏற்பட்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    3. 2015 ஜூலை 14: ஆந்திர பிரதேச மாநிலத்தில் புஷ்கரம் விழாவை முன்னிட்டு கோதாவரி ஆற்றங்கரையோரம் கூடியபோது 25 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

    4. 2014 அக்டோபர் 3: பீகார் மாநிலத்தில் தசரா விழா முடிவடைந்து சில துளிகளில் பாட்னா காந்தி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.

    5. 2013 அக்டோபர் 13: மத்திய பிரதேச மாநிலம் ரத்தன்கார்க் கோவில் அருகே நவராத்திரி விழாவின்போது, பக்தர்கள் கடந்து செல்லும் பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி கிளம்பியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 115 பேர் உயிரிழந்தனர்.

    6. 2012 நவம்பர் 19: பாட்னா கங்கா ஆற்றின் கரையோரம் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 20 பேர் உயிரிழந்தனர்.

    7. 2011 நவம்பர் 8: ஹரித்வாரில் கங்கை ஆற்றின் கரையோரம் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 20 பேர் உயிரிழந்தனர்.

    8. 2011 ஜனவரி 14: ஜீப் விபத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 104 ஐயப்பன் கோவில் பக்தர்கள் உயிரிழந்தனர்.

    9. 2010 மார்ச் 4: உத்தர பிரதேச மாநிலம் ராம் ஜாங்கி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 63 பேர் உயிரிழந்தனர்.

    10. 2008 செப்டம்பர் 30: இமாச்சல பிரதேசத்தில் நைனை தேவி கோவிலில் பாறை சரிந்து விழுவதாக வதந்தி கிளம்பியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 162 பேர் உயிரிழந்தனர்.

    11. 2005 ஜனவரி 25: மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்தர்தேவி கோவில் யாத்திரையின்போது 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    12. மகாராஷ்டிரா மாநிலம் கும்பமேளா புனித நீராடல் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்தனர்.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்துவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்களவையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்;

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்களவையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ×