search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • தி.மு.க. பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு நார்காலியில் AI மூலம் கலைஞர் அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷ ஏற்பாட்டால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள்.
    • இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!

    சென்னை:

    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!

    இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!

    ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி! என்று தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

    விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இவ்விழாவில் பெரியார் விருதை பாப்பம்மாளுக்கும் அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் கலைஞர் விருது-ஜெகத் ரட்சகனுக்கும் பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது-வி.பி.ராஜனுக்கும் ஸ்டாலின் வழங்குகிறார்.


    இதேபோல் பவள விழா ஆண்டில் புதிதாக மு.க. ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை முதல்வரிடம் இருந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார்.

    இதுதவிர, கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு பண முடிப்பு வழங்கப்படுகிறது. மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு இந்த பண முடிப்பு வழங்கப்படுகிறது. விருது மற்றும் பணமுடிப்பை வழங்கியபின் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

    விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரிய சாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிமணியன் வரவேற்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவில், தமிழகம் முழுவதில் இருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். இதையடுத்து, நேற்று மாலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர்.

    இதையடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் விழாவை முழுமையாக காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஸ்டாலின் ஏற்றுகிறார். விழா நடைபெறும் வளாகத்தில் 75 ஆண்டு தி.மு.க. வரலாற்றை விளக்கும் 100 அடிகட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை அண்ணா அறிவாலயம், அன்பகம் ஆகிய தி.மு.க. அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொன்விழா இலச்சினை லேசர் ஒளி விளக்குகளால் ஒளிர்கின்றன.

    • முதலமைச்சரின் தூண்டுதலில் மது ஒழிப்பு குறித்து திருமாவளவன் பேசி மக்களை திசை திருப்புகிறார்.
    • விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதலமைச்சரும் திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    * முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் தோல்வியை மறைக்கவும், அமெரிக்க பயணத்தை பற்றி மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவும் திருமாவளவன், முதலமைச்சர் இணைந்து நாடகம் நடத்தி உள்ளனர்.

    * முதலமைச்சரின் தூண்டுதலில் மது ஒழிப்பு குறித்து திருமாவளவன் பேசி மக்களை திசை திருப்புகிறார்.

    * தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்.

    * விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்.

    • சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • முதலமைச்சர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, டி. ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு.

    மேயர் பிரியா, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தி.நகர் ஜெ.கருணாநிதி, மயிலை த.வேலு, எழிலன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, சேப்பாக்கம் மதன்மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

    • பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

    பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

    • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது.
    • ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்!

    சென்னை:

    சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தி.மு.க. பவள விழா நடைபெறுகிறது. இதற்காக மாநாடு போன்ற பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

    இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    "நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

    தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!"

    - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

    தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!

    ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்!

    இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்… என்று தெரிவித்துள்ளார்.

    • “உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என எளியவர்களுக்காகப் பேசினார்.
    • நமது திராவிட மாடல் அரசும் இசுலாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள மிலாதுநபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இசுலாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார். அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும்.

    "உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்" என எளியவர்களுக்காகப் பேசினார். "உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்" எனப் பணிவுடைமையை வலியுறுத்தினார். "கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்" என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம் அவர்கள்.

    அவர் காட்டிய வழியில் வறியவர்க்கு உதவுவது, இயற்கைச் சீற்றம், பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் தன்னலமற்று மக்களுக்காகச் சேவையாற்றுவது, பசித்தோருக்கு உணவளிப்பது என இசுலாமிய மக்கள் வாழ்ந்து சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகின்றனர்.

    அன்பையும், ஈகையையும் சிறந்த குணங்களாக முன்னிறுத்திய அன்னாரது பிறந்தநாளை இசுலாமிய மக்கள் ஏற்றத்துடன் கொண்டாடி மகிழ்ந்திட 1969-ஆம் ஆண்டே அரசு விடுமுறை அளித்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கழக அரசு. 2001-இல் அன்றைய அ.தி.மு.க ஆட்சி இதனை ரத்து செய்த நிலையில், 2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு மீலாதுன் நபியை மீண்டும் அரசு விடுமுறையாக அறிவித்தது.

    அவரது வழிநடக்கும், நமது திராவிட மாடல் அரசும் இசுலாமிய மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அன்புடன் செவிமடுத்து நிறைவேற்றி வருகிறது. வக்ப் சட்டத்திருத்த மசோதா போன்றவற்றால் அவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் உரக்கக் குரல் கொடுத்து உறுதியாக உடன் நிற்கிறது.

    இசுலாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக என்றும் நிற்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் மீண்டும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் எந்த விரிசலும் இல்லை.
    • மத்திய அரசு ஏன் ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றக்கூடாது இதுதான் எங்கள் கேள்வி.

    மது ஒழிப்பு சம்பந்தமான கோரிக்கை கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்தனர்.

    சந்திப்பு முடிந்ததும் திருமாவளவன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழ்நாடு திரும்பிய நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவரை சந்தித்து எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்தோம்.

    அமெரிக்காவில் இருந்த 2 வார காலமும், ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தமிழர்கள் தமிழக முதலமைச்சருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை நல்கினர்.

    பல ஆயிரம் கோடி முதலீட்டுக்கான 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. முதலமைச்சரின் இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டுக்கு ஏராளமான அன்னிய முதலீட்டுக்கான வாய்ப்பும் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நாங்கள் வரவேற்று அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தோம்.

    கேள்வி:- ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பேசினீர்களே? என்ன காரணம் என்று முதலமைச்சர் கேட்டாரா?

    பதில்:- அதுபற்றி எதுவும் பேசவில்லை. அது எங்களுடைய கருத்து. அவ்வளவுதான். நாங்கள் 1999-ல் இருந்து பேசி வருகிற ஒரு கருத்து. அது இப்போதைக்கு சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்படுகிறது.

    அந்த கோரிக்கையை நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம். எந்த நேரத்திலே, எப்போது, எந்த கருத்தை எந்தக் கொள்கையை, எந்த நிலைப்பாட்டை வலுவாக பேச வேண்டுமோ அந்த நேரத்தில் பேசுவோம்.

    கேள்வி:- 2026 தேர்தலில் இந்த கோரிக்கையை வைப்பீர்களா?

    பதில்:- தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் நடத்துவது தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் கண்ணீர் சிந்த வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையைத் தான் நாங்கள் முன் நிறுத்தி இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

    எனவே இதை திசை திருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்து பார்க்க வேண்டாம். இணைத்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு நேரடியாக நேரில் சென்று அழைப்பு விடுப்பீர்களா?

    பதில்:- நாங்கள் தி.மு.க.வுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. பேசப்பட்ட விவரங்களில் இருந்து உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். உங்கள் மாநாட்டில் எங்கள் தரப்பில் இருந்து 2 பேர் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் இந்த கருத்தில் உடன்படுகிறவர்கள், எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் எந்த விரிசலும் இல்லை. எந்த நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம். அவ்வளவுதான்.

    தேர்தலுக்கு இன்னும் 15 மாதம் இருக்கிறது. இந்த நிலையில் எங்கள் மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பதாக கூறி இருக்கிறார்கள். இதற்கு பிறகு அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியாது.

    இது எல்லோருக்குமான பிரச்சனை. ஒரு கட்சிக்கான பிரச்சனை இல்லை. ஒரு கூட்டணிக்கான பிரச்சனை இல்லை. இது மக்கள் பிரச்சனை.

    யாரெல்லாம் மது விலக்கில் உறுதியாக இருக்கிறார்களோ அவ்வளவு பேரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது பொதுவான அறை கூவல்.

    நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன். இதை தேர்தலோடு முடிச்சி போட வேண்டாம். எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம். எல்லோரும் சேர்ந்து பேசுவோம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    இந்திய ஒன்றிய அரசு எனக்கு இதிலே எந்த பொறுப்பும் இல்லை என்பது போல் வேண்டும் காணாமலும் இருக்கிறது. இந்தியா முழுவதும் போதை பொருள் பழக்கம் தீவிரமாக இருக்கிறது.

    இந்தியா முழுவதும் 4 மாநிலங்களை தவிர எல்லா மாநிலங்களிலும் மதுபான வியாபாரத்தை அரசே முன் நின்று நடத்துகிறது. இதற்கு மத்திய அரசுக்கு பொறுப்பு இருக்கிறதா? இல்லையா? இதுதான் விடுதலை சிறுத்தைகள் எழுப்புகிற கேள்வி.

    இதற்காக மத்திய அரசு ஏன் ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றக்கூடாது இதுதான் எங்கள் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில் முதலமைச்சரை சந்தித்தார்.
    • கூட்டணியில் ஏற்பட்டுள்ள சில முரண்களை களையவும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

    பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விசிக நடத்தும் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக திருமாவளவன் கூறி இருந்தார்.

     

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில் முதலமைச்சரை சந்தித்தார்.

    தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்றுவதற்கு திமுக-வை வலியுறுத்த முதலமைச்சரை சந்திப்பதாகவும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சில முரண்களை களையவும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.

    • ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது.
    • பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    சென்னை:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. பனப்பாக்கத்தில் அமைய உள்ள கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    • ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ராமசாமி படையாட்சியர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியார் திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ×