search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
    • முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.

    பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளால் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் கருத்துக்களுக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப 6 ஆண்டுகளில் 1927-ல் கட்டி முடிக்கப்பட்டது.

    இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இதில் கூடும், இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. 1956-ம் ஆண்டில், தற்போதைய கட்டிடத்தில் 2 மாடிகள் சேர்க்கப்பட்டன. காலப்போக்கில் தேவைகள் அதிகரித்துள்ளன. இடமும் குறுகலாகிவிட்டது.

    இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு, மைய மண்டபத்தில் 436 பேர் மட்டுமே அமர முடியும். கூட்டுக்கூட்டம் நடக்கும் போதெல்லாம் சுமார் 200 நாற்காலிகள் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

    இது தவிர, 100 ஆண்டுகளை நெருங்கும் இக்கட்டடத்தில், அவ்வப்போது புதிய மின் கேபிள்கள், சிசிடிவி, குளிரூட்டும் அமைப்புகள், ஆடியோ வீடியோ போன்ற வசதிகள் உள்ளன. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் பலம் இழந்து காணப்படுகிறது.

    இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பின்னர் இருக்கைகள் அதிகரிக்கும். அதற்கு தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் போதாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. பழைய பாராளுமன்ற கட்டிடம் 6 ஏக்கரில் சுமார் 24 ஆயிரத்து 821 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.

    ஆனால் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 18 ஏக்கரில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை போல், புதிய கட்டிடத்தில் மத்திய மண்டபம் எதுவும் கட்டப்படவில்லை. இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு மக்களவை பயன்படுத்தப்படுகிறது.

    888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கையில் பொருத்தப்பட்டு உள்ளன.

    உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் சாமானியர்கள் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு விசேஷ மற்றும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 3 வாயில்களுக்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய வரலாற்றை விளக்கும் வெண்கலப் படங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிவு வாயில் அருகே நாளந்தாவின் உருவங்கள். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், கர்மா வாயிலின் ஒருபுறம் கோனார்க், சக்ரா மற்றும் மறுபுறம் சர்தார், வல்லபாய் படேல், பாபாசாஹேப் அம்பேத்கார் வெண்கல சிலைகள் உள்ளன.

    அனைத்து மாநிலங்களின் ஓவியங்களும் சிற்பங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன. லோக்சபா பொதுச்செயலாளர் உத்சல் குமார் சிங், கட்டிட திறப்பு விழாவுக்காக, எம்.பி.,க்களுக்கு ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளார். இந்தக் கட்டிடத்தை வரும் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு பிரதமர் திறந்து வைப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்க உள்ளார். ஆனால், அழைப்புக் கடிதத்தில் ராஜ்யசபா தலைவரின் பெயர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா மறுத்துள்ளார். இந்த அட்டையில் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவரான ஜக்தீப் தன் காட் பெயர் ஏன் இல்லை என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு.
    • 20 எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கும் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி சூசகமாக சாடியுள்ளார்.

    ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியை வரவேற்க கூடியிருந்த பொது மக்களிடையே பிரதமர் மோடி பேசினார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சமூக நிகழ்வு குறித்து கூறும் போது, "முன்னாள் பிரதமர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் வந்திருந்தனர். சமூக நிகழ்வில் அனைவரும் கூட்டாக கலந்து கொண்டிருந்தனர்," என்று தெரிவித்தார்.

    பெருந்தொற்று காலக்கட்டத்தில் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் மத்திய அரசை கண்டித்த விவகாரம் குறித்து பேசும் போது, "பெருந்தொற்று காலக்கட்டத்திலும், மோடி எதற்காக உலகிற்கு தடுப்பூசிகளை கொடுக்கிறார் என்று கேள்வி எழுப்பினர். நினைவில் கொள்ளுங்கள், இது புத்தர் மற்றும் காந்தியின் மண். நாம் நமது எதிரிகளுக்கும் நன்மை பயக்க வேண்டும். நாம் இந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட சமூகம்," என்று தெரிவித்தார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 20 எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.

    எதிர்கட்சிகளின் அறிவிப்புக்கு ஆளும் பாஜக மற்றும் தேசிய ஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்கட்சிகளின் முடிவு, "தலைசிறந்த தேசத்தின் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை அவமதிக்கும் செயல்," என்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பது பெருத்த சர்ச்சையாகி இருக்கிறது.
    • பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதியைக் கொண்டு திறக்கவும் இல்லை.

    புதுடெல்லி :

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பது பெருத்த சர்ச்சையாகி இருக்கிறது.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதியைக் கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவமதிப்பு ஆகும். பாராளுமன்றம் அகந்தையால் ('ஈகோ') கட்டப்பட்டது அல்ல. அது, அரசியல் சாசனத்தின் மதிப்பினால் கட்டப்பட்டது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
    • ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கப்படலாம் என்றும் அக்கட்சி கூறி உள்ளது.

    இதன்மூலம் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் கட்சி பிஜு ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    • எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
    • இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை என பட்னாவிஸ் கூறி உள்ளார்.

    மும்பை:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை. புதிய பாராளுமன்ற கட்டிடம் நாட்டின் பெருமை. திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கூறுபவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை. மோடி மீதான வெறுப்பு காய்ச்சலால் எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டமைக்கப்பட்டு நாட்டின் பலத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
    • கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். 'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்தன. திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    • டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
    • 8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார்.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இணைக்க பாராளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்பட வேண்டியது அவசியம்.

    8ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.

    பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது. அந்த செங்கோலை புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின்போது பிரதமரிடம் ஆதீனங்கள் ஒப்படைக்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு கண்டனம்.
    • திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்து எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கின்றனர்.

    சென்னை:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இதையடுத்து, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில் தி.மு.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றனர்.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது என சுதிப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.
    • ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும் என அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் இதுபற்றி கூறுகையில், "மே 28ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்திலோ அல்லது குடியரசு தினத்திலோ அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ இந்த விழா நடந்திருக்க வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது" என்றார்.

    பாராளுமன்றம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, பழைய மரபுகள், முன்னுதாரணங்கள் மற்றும் ஜனநாயக அடித்தளம் ஆகியவற்றை கொண்டு நிறுவப்பட்டது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறினார்.

    • பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதி காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
    • உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற வளாகம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அத்துடன், பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதியும் காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது. அந்த தினம் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த நாளை தேர்வு செய்தது தேசத்தை கட்டமைத்த தலைவர்களுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.

    "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இதே கருத்தை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டை பகிர்ந்துள்ள அவர், 'ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, அரசியலமைப்புச் சட்டம், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற அவைகளின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என கூறியுள்ளார்.

    மேலும், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரான்ஸ்பர், பதவி நியமனம் செய்ய டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது- உச்சநீதிமன்றம்.
    • உச்சநீதிமன்றம் உத்தரவை குறைக்கு வகையில் மத்திய அரசு புதிய உத்தரவு.

    இந்தியாவின் தலைநகர் மாநிலமான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்துவருகிறது. கெஜ்ரிவால் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்- அமைச்சரை விட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகமாக இருந்து வந்தது.

    இதனால் கெஜ்ரிவாலால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் இருந்தது. அப்படி எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் கெஜ்ரிவால் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

    முதல்-அமைச்சர் டிரான்ஸ்பர் மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது மத்திய அரசுக்கு பெரிய சறுக்கலாக அமைந்தது.

    இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குறைக்கும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

    இதனால், கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அளவில் எம்.பி.க்கள் கிடையாது. இதனால் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்தாவின் உதவியை நாட இருக்கிறார்.

    இதன் முதற்கட்டமாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களோடு துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விக்குப்பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவரை சந்தித்துள்ளார். இந்த நிலையில் மம்தா பானர்ஜியை கெஜ்ரிவால் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    ×