search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • இந்தியா- நியூசிலாந்து இடையிலான போட்டி ஐந்து நாட்களும் விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து போட்டி இதேபோன்று நான்கு முறை விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்திய மைதானங்களை அவர்களுடைய சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடத்த இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முடிவு செய்தன.

    அதன்படி இந்தியாவின் டெல்லி அருகில் உள்ள கிரேட் நொய்டாவில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கிரேட் நொய்டா மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    மழை நீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் முதல் நாள், இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்ற முனைவில் மின் விசிறி கொண்டெல்லாம் ஆடுகளத்தை சூடுபடுத்தினர்.

    இருந்தபோதிலும் ஆடுகளம் மற்றும் அவுட் பீல்டு மோசமாக இருந்ததாலும், தொடரந்து மழை பெய்ததாலும் 3-வது மற்றும் நாளாவது ஆட்டங்கள் ரத்து செய்ப்பட்ட நிலையில், இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐந்து நாட்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

    போர் போன்ற அசாதாரண சூழ்நிலை அல்லது பெருந்தொற்று போன்ற இக்கட்டான நிலையில்தான் ஐந்து நாட்கள் ஆட்டமும் கைவிடப்படும் நிலை ஏற்படும். ஆனால் மழையால் ஒரு டெஸ்ட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.

    மேலும். இதுபோன்று ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படும் 8-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் விவரம்:-

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1890-ல் கைவிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1938-ல் கைவிடப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டி மெல்போர்னில் 1970-ல் கைவிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையிலான போட்டி டுனெடினில் 1989-ல் கைவிடப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து இடையிலான போட்டி கயானாவில் 1990-ல் கைவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான போட்டி பைசாலாபாத்தில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து- இந்தியா இடையிலான போட்டி டுனெடினில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.

    • கோரிக்கையை பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களாக டாஸ் கூட போடப்படாமல் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கனமழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலைமை மாறி, தற்போது மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை.

    கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் மூன்று நாட்களாக மைதானத்தில் மழைநீர் தேங்கி இருப்பது, ஈரப்பதம் காயாமல் இருப்பது போன்ற காரணங்களால் போட்டி துவங்கப்படவே இல்லை.

     


    மைதானத்தில் போதுமான வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இங்கு வரவே கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை லக்னோ அல்லது டேராடூனில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக பிசிசிஐ சார்பில் பெங்களூரு மற்றும் கான்பூர் போன்ற மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    "எங்களது முதல் தேர்வு லக்னோ மைதானம் தான். அது கிடைக்காத பட்சத்தில் டேராடூனில் விளையாட நினைத்திருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்து விட்டது. இரு இடங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் நொய்டா மைதானம் மட்டும் தான்," என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

    • டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
    • இரண்டு வாரத்திற்குள் டெல்லியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

    பாகிஸ்தானில் இன்று மதியம் 12.58 மணியளவில் 5.8 ரிக்கர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வானது அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஒரு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.நில அதிர்வைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறிய மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.

    பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதனங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் தற்போது இரண்டு வாரத்திற்குள் டெல்லியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
    • நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.

    நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.

    2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணி துணை பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார்.
    • இவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர்.

    காபூல்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவருடன் நீண்ட காலம் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    • பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.
    • எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் உள்ள எல்லையில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறும்போது, "பயங்கரவாதத்திற்கு எதிராக புதிதாக தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின் கீழ், ஆப்கானிஸ்தானில் உள்ள தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத குழு புகலிடங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்தும்" என்றார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை கூறும்போது, `ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையை மீறும் சாத்தியம் குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரியின் சமீபத்திய அறிக்கை விவேகமற்றது.

    தண்ணீரில் சேறு பூசும் முயற்சியாகும், இது யாருக்கும் பயனளிக்காது. முக்கியமான விஷயங்களில் இதுபோன்ற உணர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிடுவதை பாகிஸ்தான் தலைமை தவிர்க்க வேண்டும்.

    எங்கள் எல்லைக்குள் ஊடுருவும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    • எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது.
    • எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி போட்டிக்கு முதல் முறையாக சென்றுள்ளது.

    இந்நிலையில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது.

    ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஓமர்சாய் 10 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி தலா 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே திணறிய டிகாக் 8 பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    • ஆப்கானிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இதில் ஒருவர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனபடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் (10) மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் 56 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் குறைந்த (56) ரன்னில் ஆல் அவுட் ஆன 2-வது அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

    இதை தவிர டி20-யில் ஆப்கானிஸ்தான் அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.

    டி2 உலகக் கோப்பைகளில் குறைந்த ஸ்கோர்கள்

    55 - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், துபாய், 2021

    56 - ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, தாரூபா, 2024*

    60 - நியூசிலாந்து vs இலங்கை, சட்டோகிராம், 2014

    70 - வங்காளதேசம் vs நியூசிலாந்து, கொல்கத்தா, 2016

    • குர்பாஸ், முகமது நபி, நூர் அகமது ஆகியோர் டக் அவுட் முறையில் வெளியேறினர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதனபடி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    அந்த வகையில் முதல் ஓவரிலே குர்பாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நைப் 9 ரன்னிலும் இப்ராஹிம் சத்ரான் 2, முகமது நபி 0, நங்கெயாலியா கரோட் 2, ஓமர்சாய் 10 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 28 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

    இந்த நிலையில் கேப்டன் ரஷித் கான் மற்றும் கரீம் ஜனத் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய கரீம் 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நூர் அகமது 2 பந்தில் 0 ரன்னில் வெளியேறினார். 2 பவுண்டரிகளை விளாசிய ரஷித் கான் 8 ரன்னில் நோர்க்யா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நவீன் 2 ரன்களில் வெளியேறினார்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், ஷம்ஸி 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    • டி20 அரையிறுதி போட்டிக்கு ஆப்கன் அணி முதல் முறையாக தகுதி பெற்றது.
    • இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்கிறது. 

    ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை ஆப்கன் அணி வெளிப்படுத்தி வந்தது.

    உலகக் கோப்பை தொடர் துவங்கும் முன்பே, ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரைன் லாரா தெரிவித்து இருந்தார்.

    அந்த வகையில் தனது முதல் அரையிறுதியில் விளையாடும் ஆப்கன் அணி வெற்றி பெறும் முனைப்பிலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பிலும் விளையாடுகின்றன. 

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
    • முதல் அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன.

    குரூப் 1 பிரிவில் முதல் இரு இடங்கள் பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் குரூப் 2 பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், தான் ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

    பேட்டிங்கில் டி காக் 199 ரன்கள், டேவிட் மில்லர் 148 ரன்கள், கிளாசென் 138 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 134 ரன்கள் அடித்துள்ளனர்.

    பந்துவீச்சில் அன்ரிச் நார்ஜே 11 மற்றும் ரபாடா 10 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். கேசவ் மகராஜ் 9, ஷம்சி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு சென்று சாதித்துக் காட்டவேண்டும் என்ற எழுச்சியுடன் உள்ளது.

    இதேபோல், ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை வலுவான அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தையும் வீழ்த்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.

    பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 281 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சட்ரான் 229 ரன் அடித்து 3-வது இடத்தில் உள்ளர்.

    பவுலிங்கில் ஃபசல்ஹக் பரூக்கி 7 போட்டியில் 16 விக்கெட் வீ்ழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார். கேப்டன் ரஷித் கான் 14 விக்கெட் எடுத்ததுடன், கடைசி கட்டங்களில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்கிறார். நவீன் உல் ஹக் 13 விக்கெட் எடுத்துள்ளார்.

    எனவே இம்முறை ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    ×