search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 92 ரன்கள் எடுத்தார். பதும் நிசங்கா 41 ரன்னும், அசலங்கா 36 ரன்னும், துனித் வெல்லேலகே 33 ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நயீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. 37.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டினால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறலாம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அந்த அணியின் முகமது நபி 32 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 65 ரன்கள் விளாசினார். ஹஷ்மதுல்லா ஷகிடி 59 ரன்கள் எடுத்தார். ரஹ்மத் ஷா 45 ரன்கள் சேர்த்தார்.

    கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    இலங்கை சார்பில் காசுன் ரஜிதா 4 விக்கெட்டும், துனித் வெல்லலகே, தனஞ்செய டி சில்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
    • ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கையும், ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

    இந்த பிரிவில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வங்காளதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்வாகும்.

    தற்போதைய சூழலில் இலங்கையின் ரன்ரேட் (+.0.951) வலுவாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் மோசமாக (-1.780) உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்4 சுற்று அதிர்ஷ்டம் கிட்ட வேண்டும் என்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் சேர்க்கிறது என்றால், எதிரணியை குறைந்தது 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும். இதே போல் இலக்கை விரட்டிப் பிடிக்கும் (சேசிங்) நிலை ஏற்பட்டால் 35 ஓவருக்குள் எட்ட வேண்டும். அப்போது தான் ரன்ரேட்டில் முன்னிலை பெற முடியும். லாகூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் இலங்கையும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 334 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் சதமடித்தனர்.

    லாகூர்:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றன.

    இந்நிலையில், லாகூரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்னும், நஜ்முல் ஹொசைன் 104 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இப்ராகிம் சட்ரன், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். இப்ராகிம் சட்ரன் 75 ரன்னும், ஹஷ்மத்துல்லா ஷகிடி 51 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 44.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேச அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    • பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன.

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.

    உயர்நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்தனர். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது, 'பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை. பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் பூங்காவுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றார்.

    • ஆப்கானானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.
    • ஆப்கனில் இதுவரை 218 பேர் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

    பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001-ல் ஆப்கானிஸ்தானில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது.

    ஆனால், கடந்த 2021ம் வருடம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. இதனையடுத்து, சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.

    தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சி, அங்கு அதுவரை ஆட்சி செய்து வந்த அஷ்ரப் கானி, அந்நாட்டை விட்டே வெளியேறினார்.

    அதற்கு பிறகு தற்போது வரை நடைபெறும் தலிபான்கள் ஆட்சியில் மனித உரிமைகளை கண்டு கொள்ளாமல் பல கடுமையான சட்டங்களை அந்த அரசாங்கம் போட்டிருக்கிறது. இவற்றை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில் உனாமா (UNAMA) எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தானுக்கான உதவும் அமைப்பு, அங்கு நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்தும், தலிபான்களின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்தும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவம், சட்டம் மற்றும் அரசாங்க அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேரை தலிபான் கொன்றிருக்கிறது. தலிபானின் பழைய எதிரிகள் என கருதப்படும் ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசாங்கத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தலிபான் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இதை மீறும் விதமாக இவை அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெற்றுள்ளன."

    "சுமார் 218 பேர் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் பாதிக்கும் மேல் தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களுக்காகவே நடைபெற்றிருக்கிறது. அனேக குற்ற செயல்களுக்கு குற்றவாளிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளைவுகளை பற்றி கவலைப்படாமல் முன்னாள் அரசாங்க அதிகாரிகள் அழிக்கப்படுவது தொடர்ந்து வருவது கவலைக்குரிய ஒன்று."

    "முன் அறிவிப்பின்றி கைது செய்தல், சித்தரவதை செய்தல் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் சம்பந்தமான 800-க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்திருக்கிறோம். காபுல், காந்தகர் மற்றும் பால்க் பிராந்தியங்களில் இவை அதிகமாக நடைபெற்று இருந்தாலும், 34 பிராந்தியங்களிலும் இவை பதிவாகியுள்ளன," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தலிபான் அமைப்பு, "முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த அரசாங்க மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது என மூத்த தலிபான் தலைவர்கள் முடிவு செய்தனர். இது மீறப்பட்டதாக எங்கும் புகார்கள் வரவில்லை. முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த யாரும் முறையற்ற வழியிலோ, நீதிக்கு புறம்பாகவோ கைது செய்யப்படவோ, காவலில் வைக்கப்படவோ, சித்தரவதை செய்யப்படவோ இல்லை," என்று தெரிவித்துள்ளது.

    • ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று குண்டு வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது சமீபத்திய மாதங்களில் நகர்ப்புற மையங்களில் நடந்த பல பெரிய தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது
    • பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஏன் பாகிஸ்தான் வெற்றி பெற முடியவில்லை

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    சென்ற மாதம் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 12 பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுக்கெதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    "ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால் போதுமான நடவடிக்கைகளை அது எடுக்கவில்லை. இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என பாகிஸ்தான் எச்சரித்தது.

    இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் விமர்சித்துள்ளது.

    தலிபான் அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து கூறியதாவது:

    "எங்கள் மண்ணை ஒரு போதும் நாங்கள் பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தவில்லை; பயன்படுத்த அனுமதிப்பதுமில்லை. பாகிஸ்தானில் மட்டும் ஏன் பயங்கரவாதம் வளர்கிறது? பட்ஜெட்டில் பெரும் பகுதியை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த செலவு செய்தும் ஏன் பாகிஸ்தானால் அதில் வெற்றி பெற முடியவில்லை? எங்கள் மீது குற்றம் சாட்டாமல் விடையை பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்குள்ளேயேதான் தேட வேண்டும்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியில் காரில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும் கட்டாயம் புர்கா உடை அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளது.
    • கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஒரே இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி கூறுகையில், " கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளது.

    மைதான் வார்டக் மாகாணத்தின் ஜல்ரேஸ் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேரிடர் மண்டலத்திற்கு அவசர உதவிகளுக்காக மீட்புக் குழு விரைந்துள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜல்ரெஸில் 604 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஹிமி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    நாடு முழுவதும், "கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என்று ரஹிமி குறிப்பிட்டார்.

    • பெண்கள் கல்லூரி செல்ல தடைவிதித்துள்ளது
    • சினிமா, பார்க் போன்ற இடங்களிலும் வேலை செய்யவும் தடை

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடைவிதித்தது. அதன்பின் என்.ஜி.ஓ.-வில் பணிபுரிய தடைவித்தது. பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்ய தடைவித்தது.

    அந்த வரிசையில் தற்போது காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெண்கள் உரிமை பறிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுவும் ஒன்றாகிறது.

    ஏற்கனவே ஆண்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். ஆண்கள் வீட்டு சுமையை ஏற்கமுடியாத நிலையில், பெண்கள் அதனை ஏற்க அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தற்போது அழகு நிலையத்திற்கு தடைவிதித்தால், நாம் என்ன செய்ய முடியும்'' என மேக்கப் கலைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

    மேலும், ''ஆண்களுக்கு வேலை இருந்தால், நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வரமாட்டோம். நாங்கள் தற்போது என்ன செய்யும்?. பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?. நாங்கள் சாக வேண்டும் என விரும்புகிறீர்களா?'' என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

    காபூலில் வசித்து வரும் நபர் ஒருவர் ''தலிபான் அரசாங்கம் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது இஸ்லாம் மற்றும் நாடு ஆகியற்றை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்'' என்றார்.

    ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

    • உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.
    • ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

    அதன்பின் தலிபான்கள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது. அந்நாட்டுக்கு 50 ஆயிரம் மெட்ரிக்டன் கோதுமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.

    இந்த நிலையில் உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் 10 ஆயிரம் மெட் ரிக் டன் உணவு தானியங்களுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் என 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் அனுப்பப்படுகின்றன.

    இந்த தானியங்கள் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படுகிறது. இதில் 2,500 மெட்ரிக் டன் கோதுமையின் முதல் தவணை இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஹெ ராத் நகருக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா உதவி வருகிறது.

    • ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
    • தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    காபூல்:

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

    இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.

    ×