search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94792"

    சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகையின் படத்தை பல நடிகைகள் அபகரிக்க முயற்சி செய்கிறார்களாம்.
    சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்த நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். முன்னணி நடிகர்களின் படங்களை பிடிக்காமல், இரண்டாம் நிலையில் இருக்கும் நடிகர்களோடு நடிகை தற்போது நடித்து வருகிறாராம்.

    இதைப்பார்க்கும் மற்ற நடிகைகள், எப்படி பட வாய்ப்பை பிடிக்கிறார் என்று தெரியாமல் இருக்கிறார்களாம். நடிகைகள் வாய்ப்பு தேடும் இடங்களில் எல்லாம், சின்னத்திரை நடிகைக்கே முன்னுரிமை கொடுக்கிறார்களாம். இதனால் சில நடிகைகள் பொறாமை பட்டு அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நடிகையின் படங்களை அபகரிக்க முயற்சி செய்கிறார்களாம்.
    முன்னணி கதாநாயகிகள் இருவர், ஒரே படத்தில் நடித்து வரும் நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வருகிறார்களாம்.
    வீரமான நடிகையும், வாரிசு நடிகையும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக இருந்து வருகிறார்களாம். இருவரும் புதிய படங்களை பிடிக்க போட்டாபோட்டி போட்டு வருகிறார்களாம். இந்த நிலையில், இருவரும் ஒரே படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்களாம்.

    காரணம் பெரிய நடிகர் என்பதால், இருவரும் மறுக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டார்களாம். படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்து இருவரும் பேசிக்கொள்வதில்லையாம். தனித்தனியாக இருவரும் கேரவேன் சென்று விடுகிறார்களாம். இது எங்கே போய் முடிய போகிறது என்று படக்குழுவினர் பயந்து இருக்கிறார்களாம்.
    சினிமாவை விட்டு பல வருடங்கள் விலகி இருந்த நடிகை மீண்டும் கதாநாயகி வேடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் போ என்று சொல்லி பிரபலமான நடிகை, குறுகிய காலத்திலேயே பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானாராம். அதன்பின் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானதால், தான் பெரிய நடிகையாகிவிட்டோம் என்று தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாராம்.

    இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். நடிகையும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகினாராம். தற்போது மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்து வருகிறாராம். ஆனால், பட வாய்ப்பு கேட்பவர்களிடம் கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று கேட்கிறாராம். நடிகையின் பேச்சை கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும் நடிகைக்கு வாய்ப்புகள் எங்கு கிடைக்கபோகுது என்று பேசிக்கொள்கிறார்களாம்.
    முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தற்போது நடித்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்திருக்கிறாராம். இதில் சிறிய வேடத்தில் தன்னுடைய முன்னாள் காதலரை நடிக்க வைத்தாராம். 

    நடிகரும் நடித்துவிட்டு சென்றுவிட்டாராம். ஆனால் அந்த படம் நடிகையை விட நடிகருக்கே அதிக பெயர் கிடைத்து வருகிறதாம். படக்குழுவினரும் நடிகரை வைத்து புரமோஷன் செய்கிறார்களாம். தன்னுடைய படத்தில் நடிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து படக்குழுவினர் புரமோஷன் செய்வதால் அவர்கள் மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை.
    பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை சமாதானம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறாராம்.
    மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்களாம். இதில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம். இவருக்கு கணவர் வேடத்தில் நடிக்க சின்ன நடிகர் ஒருவரை தேர்வு செய்தார்களாம். 

    இதனால் கோபமடைந்த நடிகை, தனக்கு ஜோடியாக சின்ன நடிகரை நடிக்க வைக்கக் கூடாது என படத்தின் இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறாராம். நடிகையிடம் கெஞ்சி சமாதானம் செய்து வருகிறாராம் இயக்குனர். ஆனால் நடிகையோ இயக்குனர் பேச்சை கேட்காமல் மிஞ்சுகிறாராம்.
    அதிக சம்பளம் வாங்கி வரும் பெரிய நடிகை ஒருவர், தனக்கு ஜோடியாக சின்ன நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
    மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்களாம். இதில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை கதாநாயகியாக நடிக்கிறாராம். இவருக்கு கணவர் வேடத்தில் நடிக்க சின்ன நடிகர் ஒருவரை தேர்வு செய்தார்களாம். 

    இதனால் கோபமடைந்த நடிகை, தனக்கு ஜோடியாக சின்ன நடிகரை நடிக்க வைக்கக் கூடாது என படத்தின் இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறாராம். முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை, சிறிய நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுப்பதே அதற்குக் காரணமாம்.
    ஹோம்லி வேடத்தில் நடித்து வந்த நடிகை பட வாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறாராம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த மூன்றெழுத்து நடிகை ஒருவர் கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தாராம். அவர் ஹோம்லி வேடத்தில் நடித்த அந்த படத்துக்கு தேசிய அளவில் அங்கீகாரமும் கிடைத்ததாம். இப்படி வெற்றி வாகைசூடிய அந்த நடிகைக்கு அடுத்தடுத்து எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையவில்லையாம்.

    பொறுத்து பார்த்த அந்த நடிகை ‘ரூட்’டை மாற்றி, வில்லியாக ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகும் பட வாய்ப்புகள் வராததால், தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். தொடர்ந்து படு கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். நடிகையின் இந்த முயற்சி கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டாராம். இதனால் தான் பெரிய நடிகை என்று எனக்கு ஆரம்பித்துவிட்டாராம்.

    தற்போதைய தன்னை அணுகும் புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாராம். தான் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டதால் தனக்கு ரசிகர் கிடைத்துவிட்டதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வாரிசு நடிகை, அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி பிசியாக இருக்கிறாராம். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு மொழிகளில் பல படங்கள் கைவசம் வைத்துள்ளாராம். பட வாய்ப்பு அதிகரித்து வருவதால் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம்.

    சம்பாதிக்கும் பணத்தை வைத்து புதிய படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம் நடிகை. இதையறிந்த சக நடிகைகள், தயாரிப்பில் இறங்க வேண்டாம் என்றும், சம்பாதித்த பணத்தை வீணாக்கிடாத என்றும் அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
    முன்னணி நடிகராக இருப்பவர் தனது படம் ஒன்று சூப்பர் ஹிட்டானதால், சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறாராம்.
    சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர், கடன் பிரச்சனையில் இருக்கிறாராம். இதனால், பல பிரச்சனையில் சிக்கி இருந்த நடிகர் ஒரே நிறுவனத்திற்கு இரண்டு, மூன்று படங்களில் ஒப்பந்தமானாராம். அப்போது நடிகர் 15 கோடி சம்பளம் வாங்குவதாக கூறினார்களாம்.

    தற்போது நடிகர் நடித்த படம் ஒன்று சூப்பர் ஹிட்டாகி 100 கோடி வசூல் செய்துள்ளதாம். இதனால், தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதை கேட்ட பல தயாரிப்பாளர்கள் ஷாக்காகி இருக்கிறார்களாம். ஒரு படம் ஹிட்டானதற்கே இப்படியா என்று புலம்பி வருகிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், உச்ச நடிகை அளவிற்கு சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பெரிய நம்பர் நடிகைதான் அதிக சம்பளம் வாங்குகிறாராம். இவர் அளவிற்கு யாரும் இன்னும் சம்பளம் வாங்கவில்லையாம். இந்நிலையில், இவர் வாங்கும் சம்பளம் அளவிற்கு தற்போது ஒரு கேட்டு இருக்கிறாராம். 

    சமீபத்தில் கணவருடன் சண்டை போட்ட நடிகைதான் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம். நானும் முன்று, நான்கு மொழிகளில் நடிக்கிறேன். கவர்ச்சியாகவும் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறாராம். மேலும் பாலிவுட்டிலும் எனக்கு மவுசு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறாராம்.
    முன்னணி நடிகையாக இருப்பவரின் செயலால் மற்ற நடிகைகள் கடுப்பாகி இருக்கிறார்களாம்.
    தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள நடிகை ஒருவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளர்கிறாராம். சம்பள விஷயத்தில் நான் தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே பாரமாக இருந்ததில்லை என்று கூறி இருக்கிறாராம்.

    இதைக்கேட்ட மற்ற சக நடிகைகள், நடிகை மீது கடுப்பாக இருக்கிறார்களாம். காரணம் விசாரித்தால் மற்ற நடிகைகள் பலரும் அதிக சம்பளம் கேட்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், பட வாய்ப்பை பிடிக்க அந்த நடிகை இப்படி சொன்னதாக அனைவருக்கும் தெரிந்து இருக்கிறதாம். இதனால் நடிகை மீது அனைவரும் கோபமாக இருக்கிறார்களாம்.
    ×