search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளம்"

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1 எண்ணம் இலக்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்புநி லையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு ள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல் தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தலுக்கு உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேற்படி திட்டத்தில் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்க்கும் திட்டத்தில் 0.1 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த மூலதன செலவினம் ரூ. 10 லட்சத்தில் மகளிர் பிரிவிற்கு மட்டும் 60 சதவீதம் மானியமாக ரூ.6 இலட்சமும், உள்ளீட்டு மானியச் செலவினம் ரூ.8 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக ரூ.4.80 லட்சமும் ஆக கூடுதல் ரூ.10.80 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1 எண்ணம் இலக்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.எனவே மேற்படி திட்டத்தில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்புநி லையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்மழையினால் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
    தாயில்பட்டி:

    தொடர்மழையினால் தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. மேலும் சாத்தூரில் இருந்து தாயில்பட்டி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள துணை மின் நிலைய தரைப்பாலம், குகன்பாறையிலிருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் வழியில் உள்ள 2 தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
    சீர்காழி அருகே குளத்தில் வாலிபர் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஒரு வாலிபர் பிணம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுபற்றி புதுப்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குளத்தில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர் , சீர்காழி அடுத்த திருநீலகண்டம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் ராஜசேகர் (வயது 20). என தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து ராஜசேகர் உடலை பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வாலிபர் ராஜசேகர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஓதவந்தான்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாராயம் குடித்து விட்டு குளத்தில் குளிக்கும் போது அவர் இறந்து இருக்கலாமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் உடல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜசேகரின் சாவுக்கான உண்மை காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சிதம்பரம் அருகே இன்று காலை பள்ளி முன்பு இறந்து கிடந்த முதலையால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொடிப்பள்ளத்தில் கான்சாகிப் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் கரையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை ஒன்று சுற்றி திரிந்தது. அந்த முதுலை பொதுமக்களை பயமுறுத்தியது. பின்னர் மீண்டும் தண்ணீருக்குள் சென்று விட்டது. இதேப்போல் வல்லம்படுகை, வக்காரமாரி, பெராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளிலும் உள்ள முதலைகள் அடிக்கடி கரையோரம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சிதம்பரம் அடுத்த மடப்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு ஒரு முதலை இறந்து கிடந்தது. பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டனர்.

    இது குறித்து சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதலையை பார்வையிட்டனர்.

    பள்ளிக்கு அருகே இருக்கும் வக்காரமாரி குளத்தில் இருந்து வெளியே வந்த முதலை இரை தேடி ரோட்டில் வந்த போது விபத்தில் சிக்கி இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி முன்பு முதலை இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாவூர்சத்திரம் அருகே குளத்தில் நண்பருடன் குளிக்க சென்ற தொழிலாளி மாயமானதால் இன்று 2-வது நாளாக தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வணிகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 40). கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். நண்பர்களான இவர்கள் இருவரும் மாலையில் கீழப்பாவூருக்கு வடக்கு பகுதியில் உள்ள மேலப்பாவூர் குளத்துக்கு குளிக்கச் சென்றனர். சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று வருகிறது.

    இந்தநிலையில் குளிக்க சென்ற சுடலையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சுடலை குளத்தில் மூழ்கியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆகவே அதுபற்றி ஆலங்குளம், சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வீரர்கள் குளத்துக்கு விரைந்து வந்து சுடலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் பாளையங்கோட்டையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளத்தில் ரப்பர் படகு மூலம் தீவிரமாக தேடினர். பின்பு இரவாகி விட்டதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

    சுடலையை தேடும் பணி இன்று 2-வது நாளாக மேற்கொள்ளப்பட்டது.
    கேரளாவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் திருநாவாய் பகுதியை சேர்ந்தவர் காரீப். இவரது மகன் ஆசிக் அலி (16). அதே பகுதியை சேர்ந்த ஷாபி மகன் முகம்மது அர்ஷாத் (16).

    இவர்கள் இருவரும் காரத்துரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    வரும் வழியில் அங்குள்ள குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திரூர் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்த மாணவர்கள் இருவரையும் மீட்டு திரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிறிது நேரத்தில் மாணவர்கள் இருவரும் இறந்தனர். இது குறித்து திரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் குளத்தில் முதியவர் பிணமாக மிதந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது. கோவில் காவலாளி காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    கோவில் குளத்தை காவலாளி சுற்றி வந்து பார்த்த போது குளத்தில் முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டார். உடனே இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த முதியவர் வில்லியனூர் புதுநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் (வயது 80), தச்சுத்தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர், குளத்தில் கால் கழுவ சென்றபோது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ்காரர் சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டதிற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜி.வி.மாதையன் தலைமை தாங்கினார். பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, சட்டதிருத்தக்குழு இணை செயலாளர் தாமரைசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 3-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 1,450 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்களை நியமித்து அற்கான பட்டியலை தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கொண்டு செல்லப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், சித்தார்த்தன், கோபால், குமரவேல், செல்வராஜ், தேசிங்குராஜன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் முத்துலட்சுமி, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். 
    ×