search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனது.
    • பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த சித்தேரி குமரவேல் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 18-ம் தேதி (சிவராத்திரி) இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பினார்.

    அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து, அரியூர் போலீஸ் நிலையத்தில் நரேஷ்குமார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கருப்பு உடையுடன் சிவப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான உடலமைப்பு கொண்டவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, சித்தேரி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார் (19) குறித்த தகவல் தெரியவந்தது. இவர், ஏற்கனவே அடிதடி வழக்கில் அரியூர் போலீஸ் நிலையத்தில் கைதாகி சிறை சென்றவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரியவந்தது.

    அதேநேரம், நரேஷ்குமார் வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அர்ஜூன் ராஜ்குமார் தனது நண்பருடன் அந்த தெருவின் வழியாக சந்தேகத்துக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்தார்.

    நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனது.

    இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததும் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், நரேஷ்குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா பறிமுதல் செய்ததுடன் திருட்டு சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த கருப்பு உடையையும், குல்லாவையும் பறிமுதல் செய்தார்.

    பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியுள்ளார்.

    அர்ஜூன் ராஜ்குமார் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய கோவை பெண் தோழிக்கு பரிசளிக்க அவர் திருடியது தெரியவந்தது என்றார்.

    • வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் யோகானந்தம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி சித்துர் சாலையில் உள்ள நாகாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 53). இவர் திருவள்ளூரில் பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவில் தலைமை போலீசாராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (50). இவர் முருக்கம்பட்டு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். யோகானந்தம் மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி இருவரும் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை இருவரும் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1¾ பவுன் நகை, ரூ.25 ஆயிரத்து 500 ரொக்கபணம் திருடு போனது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதையடுத்து போலீசார் யோகானந்தம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ருடுபோன படகில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 என்ஜீன்கள், மீன்பிடி உபகரணங்கள் இருந்தன.
    • மோட்டார் சைக்கிள், கார் வரிசையில் தற்போது படகையும் திருடிய பலே திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு நடுவூர் மாதா குப்பத்தைச் சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பி டித்தனர். பின்னர் கரை திரும்பிய அவர்கள் மீன்பிடி படகை பழவேற்காடு மீன் விற்பனை அங்காடி அருகே கடலோர காவல் படை நிலையம் எதிரில் நிறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த போது நிறுத்தி இருந்த படகு மாயமாகி இருந்தது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது 4 பேர் கும்பல் படகை இயக்கி திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் படகின் உரிமையாளர் சார்லஸ் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். திருடுபோன படகில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 என்ஜீன்கள், மீன்பிடி உபகரணங்கள் இருந்தன. மோட்டார் சைக்கிள், கார் வரிசையில் தற்போது படகையும் திருடிய பலே திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
    • உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது.

    கடலூர்:

    கோவில் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே ஆனைக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்து இரும்பு கேட்டை பூட்டி சென்றனர்.இதனை தொடர்ந்து இன்று காலை கோவில் குருக்கள் வேதமூர்த்தி கோவிலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவிலில் இரும்பு கேட்டின் பூட்டு உடைந்து திறந்திருந்தது பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் கோவில் வளாகத்தில் இருந்த கேமராக்களை சேதம் செய்து சென்றதும் தெரியவந்தது.பின்னர் கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ைகரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.

    உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் திருடப்பட்டதாக தெரிகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவில்கள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து வருகிறார்கள்மேலும் ஆணைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் பகுதிகளை சுற்றி போலீசார் வீடுகள் இருந்து வருவதால் எந்நேரமும் போலீசார் இவ்வழியாக சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடை பெற்று வருவதால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டு திருட்டு சம்ப வத்தை உடனடியாக தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் நகரை சேர்ந்தவர் சங்கர். ஹோமியோபதி மருத்துவர். விளாங்காரத் தெருவில் மருத்துவமனை வைத்துள்ளார். இவர் மருத்துவமனையை திறப்பதற்காக இன்று வந்த போது, மருத்துவமனையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது மேஜை உள்ளே வைத்திருந்த ரூ.3.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதே போல் அதே வணிக வளாகத்தில் உள்ள இரண்டு கடைகளிலும் திருட்டு முயற்சியும் நடத்துள்ளது. இச்சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி கிராமம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42). கூலி தொழிலாளியான இவர் தனது பைக்கை ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பு நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறி வாங்கி வந்து மீண்டும் பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் காணாமல் போன வாகனத்தையும், திருடிச் சென்ற மர்ம நபர்களையும் தேடி விசாரித்து வருகின்றனர்.இதேபோல் செங்குந்தபுரம் ஏழாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவர் தனது மோட்டார் சைக்கிளை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காதால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளையும், திருடிச் சென்ற மர்ம நபரையும் தேடி விசாரித்து வருகின்றனர்.

    • ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது38). இவர் 7 வயது பேரனுடன் தெப்பம் கிழக்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். இவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துத்தருமாறு கூறினார். அப்போது பேரன் வாந்தி எடுத்துள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு பேரனை வெளியே அழைத்துச்சென்றார். ஏ.டி.எம். கார்டை திரும்ப பெற மறந்து விட்டார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டதாக 2 முறை குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து செல்லம்மாள் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது பல தவணைகளில் ரூ.41 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் செல்லம்மாள் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் தனியார் கண்டெய்னர் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
    • அப்புன் ராஜ், வெங்கடாசலம் ஆகியோர் கம்பெனியில் இருந்த அலுமினிய பொருட்களை திருடி விற்றது தெரிய வந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் தனியார் கண்டெய்னர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு லோடுமேனாக பொன்னேரியை அடுத்த பள்ளம் பகுதியைச் சேர்ந்த அப்புன் ராஜ், வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் கம்பெனியில் இருந்த அலுமினிய பொருட்களை திருடி விற்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள அறைக்கதவை உடைத்து அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், மற்றும் பொருட்களை திருடி தப்பி சென்று விட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளி நேரம் முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் பள்ளியை மூடிச்சென்றனர். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பள்ளியில் உள்ள அறைக்கதவை உடைத்து அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், மற்றும் பொருட்களை திருடி தப்பி சென்று விட்டனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டார்குப்பம் மகளிர் குழு கட்டிட கதவை உடைத்து கம்ப்யூட்டர் திருடு போனது. மேலும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்த சிலிண்டர், கேஸ் அடுப்பு, மின் அடுப்பு ஆகியவற்றையும் கொள்ளை கும்பல் திருடி சென்று உள்ளனர். தொடர்ந்து கைவரிசை காட்டி வரும் கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சீதாராமன் ஓய்வூதிய தொகையை பெறுவதற்காக திருமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.
    • பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் தனது வீட்டில் குடியிருக்கும் சந்தோசிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து எடுத்து வரச்சொல்வது வழக்கம்.

    திருமங்கலம்:

    மதுரை திருநகர் சுந்தர்நகரை சேர்ந்தவர் சீதாராமன்(வயது89). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். சீதாராமனின் வீட்டில் மாடியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து வருகிறார்.

    சீதாராமன் ஓய்வூதிய தொகையை பெறுவதற்காக திருமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தார். முதுமை காரணமாக சீதாராமன் வெளியில் அவ்வளவாக செல்வதில்லை. வங்கிக்கும் செல்ல முடியவில்லை.

    இதனால் பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் தனது வீட்டில் குடியிருக்கும் சந்தோசிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து எடுத்து வரச்சொல்வது வழக்கம். இதன் காரணமாக சந்தோசிற்கு சீதாராமனின் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டு விவரங்கள் தெரிந்துள்ளது.

    சீதாராமன் முதுமை காரணமாக வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாலும், கணக்கில் உள்ள பணம் சம்பந்தமான விபரங்கள் தெரியாது என்பதாலும் அதனை பயன்படுத்தி அவர் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ள சந்தோஷ் திட்டமிட்டார்.

    அதன்படி கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் சீதாராமனின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ஆன்லைன் மூலமாக ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்தை எடுத்துள்ளார். கடந்த வாரம் திடீரென பணத்தேவை காரணமாக சீதாராமன் நேரடியாக திருமங்கலம் வங்கிக்கு வந்து ரூ.5 லட்சத்திற்கு காசோலை அளித்துள்ளார்.

    அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி காசோலையை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது அவரது கணக்கிலிருந்து பல தவணைகளில் லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருந்ததது தெரிய வந்தது.

    உடனடியாக அவர் இதுகுறித்து சந்தோசிடம் விவரம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதுகுறித்து தனக்கு தெரியாது என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் சீதாராமனுக்கு மேலும் சந்தேகம் அதிகமானது.

    இந்நிலையில் சந்தோஷ் மற்றும் அவரது மனைவி திடீரென தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5.79 லட்சம் திருடப்பட்டது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் நேரில் சென்று புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சந்தோசை தேடி வருகின்றனர்.

    மர்மநபரை தேடி வரும் போலீசார்

    கரூர்,

    கரூர் அருகே, வெங்கமேடு பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர் கரூர், ரத்தினம் சாலை பஸ் ஸ்டாப்பிலிருந்து, வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் வரை அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய போது பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ ஒரு மர்ம ஆசாமி அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை 'அபேஸ்' செய்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, பழனியம்மாள்அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்கடலூர் அருகே குள்ளஞ்சாவடி ராமநாதன் குப்பம் கூட்ரோடு பகுதியில் குள்ளஞ்சாவடி போலீஸ்காபெரியகுப்பம் தனியார் கம்பெனியிலிருந்து திருடப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் அதில் இருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இரும்பு பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×