search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    • மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை.
    • சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரெயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நடக்க இருந்தது.

    மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்த கோரி மாவட்ட சமூக அலுவலகத்துக்கு புகார் சென்றது.

    இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.

    மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.

    தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

    அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை.
    • இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும்.

    உண்மையில் கணவன்- மனைவி இருவருக்கும் குறைந்த பட்சம் 7 வயது, அதிகபட்சமாக 9 வயது இருக்கனும். அப்பத்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும். அதே போல பெண்ணுக்கு 23 வயதுக்குள் திருமணம், பிள்ளைக்கு 26வயதுக்குள் திருமணம் நடத்த வேண்டும். இதுதான் மிகச்சரியான நிலை என்பதை பல ஜாதகங்களை அலசியதில் தெரிந்தது.

    பால்யவிவாகங்கள், 15-20வயது வித்யாசங்கள் கொடூரமானது தேவையற்றது. அதை ஒழித்ததில் நன்மை அதிகம். அதேநேரம் சரியான பருவத்தில் திருமணம் செய்யவில்லை எனில் வாழ்க்கை நரகமாகும்.

    பெண் விரைவில் பக்குவம் அடைந்துவிடுகிறாள். ஆண் அவளிடமிருந்து 7 வயது தள்ளி பக்குவம் அடைகிறான்.

    கணவன்- மனைவி சேர்க்கை தான் வம்ச விருத்தி மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை. இருவருக்கும் ஒரே வயது அல்லது 2-4 வயது வித்தியாசம் எனில் மேற்படி வாழ்க்கை பிரச்சனையாகவும் குழந்தை பாக்கியம் மிக குறைவாகவும் இருக்கும்.

    மேலும் இன்றைய சூழல், சாப்பாட்டு முறைகளும் தாமத திருமணங்களும் குழந்தை பாக்கியத்தை குறைத்துவிடுகிறது.

    -ஜோதிடர் ரவி சாரங்கன்

    சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    பீஜிங் :

    உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.இந்த நிலையில் அங்கு இப்போது திருமணங்கள் செய்வதும் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீன புள்ளியியல் ஆண்டு புத்தகம் காட்டுகிறது. நடப்பு 2021-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் அங்கு 58 லட்சத்து 70 ஆயிரம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவுதான்.

    இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்ப்பதாக சீன அரசு நாளிதழ் கூறி உள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    திருக்கனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்சிக்கு விலை உயர்ந்த ஜவுளி எடுத்து தராததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தன். ரைஸ்மில் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (வயது19). இவர் வில்லியனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து 2-ம் ஆண்டுக்கு செல்ல தயாராக இருந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தனின் உறவினர் திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் திருமணத்துக்கு ஜவுளி வாங்கி சரண்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுவையில் உள்ள ஜவுளி கடைக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது சரண்யாவுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி கொடுத்தனர். ஆனால் தனக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் ஜவுளி வாங்கி தரவேண்டும் என்று சரண்யா அடம்பிடித்தார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் சமாதானம் அடையாமல் சரண்யா வழியிலேயே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வீட்டுக்கு வந்த சரண்யா விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். வீட்டின் மாடி அறைக்கு சென்ற அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக மாடியில் இருந்து சரண்யா வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சரண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சரண்யாவை தூக்கில் இருந்து மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சரண்யாவின் தாய் மனோன்மணியம் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தசரதனின் மகள் ஜீவிதா. இவர் தனது உறவுக்காரரான சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    டில்லிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்தார். இதில் ஜீவிதா கர்ப்பமானார். இந்நிலையில் டில்லி பாபு திருமணம் செய்ய மறுத்ததோடு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வேலை வி‌ஷயமாக ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்த டில்லிபாபுவை அழைத்து வந்தனர்.

    போலீசார் இரு வீட்டார் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இரு குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் டில்லிபாபு தரப்பில் அதற்கு நீண்ட நேரம் மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரவு நடந்த பேச்சு வார்த்தையில் பெற்றோர்கள் சம்மதித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 10 மணி அளவில் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது.

    டி,எஸ்.பி., கங்காதரன் தாலி எடுத்து கொடுக்க டில்லிபாபு ஜீவிதாவின் கழுத்தில் தாலியை கட்டினார். இதனால் காலை முதல் நீடித்த திருமணப் போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமுகமாக திருமணம் நடந்ததால் இருவீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராஜபாளையத்தில் திருமணமான 10 மாதத்தில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் நட்டுக்கால் ராஜா தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25). இருவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த குருலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சம்பவத்தன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வதாக குருலட்சுமி கணவர் வீட்டாரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் குருலட்சுமி அங்கு செல்லாமல் மாயமானார்.

    இதனால் பதறிப்போன தினேஷ் மற்றும் உறவினர்கள் குருலட்சுமியை பல்வேறு இடங்களில் தேடினர் பலன் இல்லை.

    இதுகுறித்து குருலட்சுமியின் தாய் மகேசுவரி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லிங்குசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவில் திருமணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய முகூர்த்த நாள் விழா நேற்று நடந்தது.

    இதையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.


    குருவாயூர் கோவிலில் 177 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் திரண்ட உறவினர்கள் கூட்டம்.

    இதுபோல 697 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமணம் மற்றும் சோறு ஊட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தவர்களால் கோவிலின் திருமண மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடந்த இந்நிகழ்ச்சிகளால் கோவிலுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.44 லட்சம் வருவாய் கிடைத்தது.

    கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடத்திய நெய் அபிஷேகம், பால் பாயாசம், துலாபாரம் நிகழ்ச்சிகள் மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோவில் அமைந்துள்ள பகுதியில் நேற்று போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. கோவிலுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் திரும்பி வரும் சாலைகள் ஒரு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருந்தன.

    இதன் காரணமாக பக்தர்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் கோவிலுக்குச் சென்று திரும்பினர்.


    மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது42). முன்னாள் ராணுவ வீரர். தற்போது கேரளாவில் ஜீப் ஓட்டி வருகிறார். இவருக்கு வேல்மணி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர்.

    தமிழ்ச்செல்வனின் தங்கையின் மகன் சுதர்சனை கீர்த்தனா காதலித்து வந்துள்ளார். இதற்கு தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் கீர்த்தனா அவரையே திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் மன வேதனையடைந்த தமிழ்ச் செல்வன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். (வயது 20). இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பதிவு திருமண விபரம் தெரிய வரவே பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணியில் திருமணம் செய்து கொண்டனர்.

    தங்களுக்கு பெற்றோர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்த அவர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித தடையும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

    வீட்டுக்குள் புகுந்து டிவி நடிகையை திருமணம் செய்வதாக கூறி மிரட்டல் விடுத்த என்ஜினீயரிங் மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Rithika
    போரூர்:

    பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

    இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார்.

    இன்று காலை குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த வாலிபர் நடிகை ரித்திகாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே வாலிபர் நடிகையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அப்போது நடிகை ரித்திகாவும் இருந்தார்.

    இதற்குள் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்களும், குடியிருப்பு காவலாளியும் அங்கு வந்தனர். அவர்கள் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பரத் என்பது தெரிந்தது. என்ஜினீயரிங் மாணவரான அவர் வேலை சம்பந்தமாக சென்னை வந்துள்ளார். இன்று சொந்த ஊருக்கு செல்ல இருந்த நிலையில் நடிகையின் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.

    போலீசாரின் விசாரணையின் போதும் நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பரத் தொடர்ந்து கூறி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட பரத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Rithika
    முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.
    முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை. சட்டங்களும், திட்டங்களும் கண் துடைப்பாகத்தான் இருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

    பண்டைய காலத்தில் ‘கொடை‘ என்ற பெயரால் பண பலத்தை காட்டி பெருமையை நிலைநாட்டினர். இவை நாளடைவில் சமுதாயத்தில் தானமாகவும், சீதனமாகவும், வரதட்சணையாகவும் உருவெடுத்தன. மேலும் பெண் வீட்டாரின் பெருமையை காட்ட சீதனங்கள் வழங்கப்பட்டன. மணமகனின் கல்வி நிலை உயர்ந்திருந்தால், செல்வ வீட்டு மணமகளின் பெற்றோர் அதற்கேற்ற வகையில் சீர் தந்து தன் பெருமையை காட்டிக் கொள்வது இன்றும் நடந்து வருகின்ற உண்மையாகும்.

    ‘ஏன் என்ற கேள்வி‘ எழாதவரை எதற்கும் விடிவில்லை. பெண் சமுதாயமும் அவ்வாறே ஏனென்ற கேள்வி எழுப்பாமல் எதற்கும் தலையாட்டி வீட்டுக்குள்ளே சிறைப்பட்டு அச்சம், நாணம், மடம் என்ற கடிவாளமிட்ட வாழ்க்கையால் வரன்முறையில் வாழ்ந்து வந்ததினால் தான் பெண் சமுதாயம் முன்னேறாமைக்கும், வரதட்சணை கொடுமைக்கும் காரணமாக இருந்தது.

    இன்று முதல்வர், கலெக்டர், விமானி, விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் இருந்தாலும் கூட பெண்ணிற்கு இழைக்கப்படும் தீமைகள் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் தட்டிக் கேட்கப்படுகின்றன. பெண்ணே, பெண்ணிற்கு எதிரியாகவும் உள்ளார். மாமியார் கொடுமை இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றது. மணமான பெண் பிறந்த வீடே கதியாக திருப்பி அனுப்பப்படுவதற்கும் புகுந்த வீட்டில் பெண்களுக்கு இன்னல்கள் இழைக்கப்படுவதற்கும் அரசு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் ஆங்காங்கே கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.

    பெண்களின் நலன்களுக்கும், பாதுகாப்பிற்கும் பெண்கள் நல உரிமை கழகம், மகளிர் முன்னேற்றக் கழகம் முதலியன அமைந்துள்ளன. இத்தகைய அமைப்புகள் இந்த சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண்கிறது. வரதட்சணைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் பெண்களுக்கு கல்விக்கென பெற்றோர் பணம் செலவழித்திட தயங்குகின்றனர். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், வரதட்சணை குறித்து எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.

    ஒவ்வொரு ஆண்மகனும் தன்னளவில் சமுதாய பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, வரதட்சணை கொடுமையை எதிர்க்கலாம். வறுமையின் நிலையில் வாழும் குடும்பங்களில் ‘வரதட்சணை கொடுமை‘ கோரமாக தாண்டவமாடுகிறது. பெண்ணை பெற்றவர் கடன் வாங்கியாவது திருமணம் நடத்தி வைத்து, திருமணம் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே மணமகன் கேட்டது கிடைக்காததால் மணமகளை வீட்டிற்கு விரட்டியடிப்பதும், அதனால் அங்கு தந்தை மாரடைப்பால் இறப்பதும் சில குடும்பங்களில் நிகழாமல் இல்லை. அதைபோல் வல்லமை பெற்ற மாமியார்களால் எரிவாயு அடுப்பில் எரிந்து பெண் சாம்பல் ஆவாள். வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம் இதுவே ஆகும்.

    சமுதாயத்தில் வரதட்சணை என்னும் வளர்ந்து வரும் தீயை அணைக்க முன்வர வேண்டும். வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இளைஞர்கள் நினைத்தால் சாதித்துக் காட்ட முடியும். எனவே இளைஞர்களே, இதோ நீங்கள் விழித்திட வேண்டிய காலம். வருங்கால இந்தியாவை காப்போம், முயற்சி எடுத்து முன்னேற்றம் அடைவோம், வரதட்சணை கொடுமையில் இருந்து விடுபட்டு புதிய உலகை படைப்போம். 
    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச படத்தை மணமகனுக்கு அனுப்பிய டி.வி. நடிகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். #PocsoAct
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷான், (வயது 25).

    மலையாள டெலிவி‌ஷன் தொடர்களில் ஷான் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண்ணுக்கு டி.வி.யில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஷான் கூறினார். இதனால் அந்த பெண்ணும் ஷானுடன் நெருங்கி பழகினார். இதில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர்.

    இந்த நிலையில் ஷானுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பெண் ஷானை பிரிந்து சென்றார். அவரை சந்திக்கவும் மறுத்தார். காதலையும் உதறினார்.

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

    காதலிக்கு வேறு வாலிபருடன் திருமணம் நிச்சயமான தகவல் நடிகர் ஷானுக்கு தெரிய வந்தது. அவர், பெண்ணின் ஆபாச படங்களை அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனுக்கு அனுப்பி வைத்தார்.

    அந்த படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டார்.

    திருமணம் நின்று போனதற்கு நடிகர் ஷான்தான் காரணம் என்பது பெண்ணுக்கு தெரிய வந்தது. அவர் இதுபற்றி பாலோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஷானை கைது செய்தனர்.

    ஷான் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #PocsoAct
    ×