search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95783"

    • அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சுப்பிரமணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதி கோவில்களில் வைகாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகருக்கும், வெளிபிர காரத்தில் உள்ள மேலக்குமர ருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது.

    பின்னர், சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல், கோடியக்காடு அமிர்தக டேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், விபூதி அலங்கா ரத்துடன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    இக்கோவிலில், சுப்பிரம ணியர் ஒரு முகம், 6 கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    இதேபோல், தோப்பு த்துறை கைலாசநாதர் கோவிலில் உள்ள முருகருக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகருக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டனர்.

    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.
    • பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும்.

    தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் உள்ள தேரில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தகாலுக்கு மஞ்சள், பால், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • நாளை 5-ம்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா ஜனவரி 26 கொடியேற்றத்துடன் துவங்கியது.

    வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்–வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது,

    இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது தைப்பூச அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இன்று 4-ம் தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ம் தேதி சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபய தாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    திருவாடானை சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    திருவாடானை சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 108 சங்கு மற்றும் குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சுவாமி சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் விசேஷ தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. யாக பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சாமி கோவில் உள்ளது. பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    தொடர்ந்து கடங்கள் ஊர்வலமாக மகாலிங்க சாமி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வார சிறப்பு வழிபாட்டில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தம்பிரான் சாமிகள், கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.
    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் உள்ள புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சிறப்பு யாகம், 108 சங்காபிசேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை சோம வாரம் (திங்கட்கிழமை) சிவனுக்கு உகந்த நாளாகும். சோம வாரத்தில் சிவனுக்கு சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து, அதனை அபிஷேகம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

    காசிக்கு இணையான தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 1,008 சங்குகள் கொண்டு அபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தலவரலாறு கூறுகிறது. நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி இக்கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சிவலிங்க வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அதில் புனித நீர் நிரப்பப்பட்டு, யாக பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ரவி, நாடி நிபுணர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிவறை, குளியலறை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
    சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் உஷாதேவி சாயாதேவி உடனாகிய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரக தலமான இங்கு கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று யாகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.

    இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.
    கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் புனித தலங்களின் மண் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் நிறைந்த கலயம் மற்றும் சங்குகளுக்கு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
    முருகனின் ஆறுபடைவீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் சிறப்புடையது. கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் குறிப்பிட்டு உள்ளனர். பிரசித்தி பெற்ற சுவாமிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    விழா நாட்களில் காலை, மாலை நேரத்தில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சூரசம்ஹார தினமான நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலை முதல் இரவு வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோவில் உள் பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
    சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

    சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால்  இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.
    ×