search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • கர்நாடக மாநில தேர்தலில் பா.ஜ.க.விற்கு மிக பெரிய தோல்வி ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.
    • இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அவர் கூறியதாவது:-   கர்நாடக மாநில தேர்த லில் பா.ஜ.க.விற்கு மிக பெரிய தோல்வி ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.  மோடி, அமித்ஷா கூட்ட ணிக்கும், பா.ஜ.க.விற்கும் மரண அடி கிடைத்துள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலிலும் பா.ஜ.க. படுதோல்வியை சந்திக்கும் என்பதற்கு கர்நாடகா மாநில தேர்தல் முன்னோட்டமாக அமைந்துள்ளது. குழந்தை திருமணம் நடந்து புகார் வந்து, அதன் பேரில் தான் போலீசார் நட வடிக்கை எடுத்துள்ளனர். நான் கூட குழந்தை திரு மணம் செய்தவன் தான் எனக் கூறி குழந்தை திருமணம் நல்லது என்பது போல கவர்னர் பேசி இருக்கிறார். இந்தியாவில் இதுநாள் வரை இவரை போல ஒரு கவர்னரை யாரும் சந்தித்தது இல்லை. இந்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். வருகின்ற 15-ந்தேதி விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாடு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் மாலை 3 மணி அளவில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அமைச்சர் பொன்முடி, மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், ரவிக்குமார் எம்.பி., வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹரிகிருஷ்ணன், முத்துக் குமரன், ராஜேந்திரன், முருகன், அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.
    • 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே முன் விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வி. பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெய்சூரியாவும், பழனிவேலுவும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஞானசவுந்தரி, வள்ளி ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், பாலாஜி, சங்கீதா, வள்ளி ஆகியோர் மீதும் , வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், ஜெயசூர்யா, ஞானசவுந்தரி என தனி தனியாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • சம்பவத்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரை க்காட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரு க்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது. இதில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கர்நாடக நிறுவனத்தின் பெயரில் அரிசி விற்பனை
    • தெலுக்கானாவை சேர்ந்தவர் புகார் அளித்ததால் வழக்கு பதியப்பட் விசாரணை

    திருச்சி,

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ரெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மஞ்சு கொண்டா. இவர் கர்நாடகத்தில் ஸ்ரீ நவாப் அக்ஷயா பொன்னி என்ற அரிசி ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் அரிசி நவாப் பொன்னி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த 5 அரிசி ஆலைகள் மேற்கண்ட நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளூரில் அரிசி விற்பனை செய்வதாக சக்கரவர்த்தி மஞ்சு கொண்டாவுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர் மணப்பாறை போலீசில் புகார் செய்தார். அதில் காப்புரிமை சட்டத்தின் கீழ் தமது கம்பெனி பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பெயரை முறைகேடாக மணப்பாறை பகுதியில் உள்ள 5 அரிசி ஆலைகள் தவறாக பயன்படுத்தி தமது வியாபாரத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் 5 ஆலைகள் மீதும் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.
    • திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார்,தோடு வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் தோட்டைடேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.

    இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் தோடை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் பண் ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இதேபோல நெய்வேலி இந்திரா நகரில் உள்ள நகைக்கடை மற்றும் விருத்தாச்சலத்தில் உள்ள நகைகளை ஒன்றில் நகை திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து கடை மேலாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேலுஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார். டி.எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தங்கேவல் தனிப்படை போலீ சார் ஆனந்த், ராஜி, கணேச மூர்த்தி, ஹலீமாபீவி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கைது

    தனி படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடை யில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாக வில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் உள்ள நகைகடைகளில் பர்தா அணிந்து கொண்டு 10 கிராம் தோடை திருடிச் சென்றது மயிலாடுதுறை மாவட்டம் கொரநாடு மேல ஒத்த சரகு தெரு கவிதா (வயது 50), மயிலாடுதுறை கொர்க்கை மாரியம்மன் கோவில் தெருஷீலா தேவி (37 ) என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் வேறு ஒரு நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்த 2 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து திரு டிய நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர் நகை திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பண்ருட்டி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.

    • சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கல்லூரி மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்துள்ளனர்.
    • பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (36), சஞ்சய் குமார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்திய பாண்டி மற்றும் சஞ்சய் ராஜா ஆகியோர் ரவுடி கும்பல் தலைவர்களாக செயல்பட்டு வந்தனர். இந்த 2 ரவுடி கும்பல் தலைவர்களும் பல்வேறு விவகாரங்களில் எதிரெதிராக செயல்பட்டு மோதி வந்தனர்.

    பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலரை இவர்கள் தங்களது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு மாணவர்களை இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருந்த பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவரை சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

    அவரை கொடிசியா பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்தனர். இனிமேல் சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என அவரை மிரட்டி எச்சரித்தனர்.

    இதேபோல பீளமேட்டில் விடுதியில் தங்கி படித்து வந்த திண்டுக்கலைச் சேர்ந்த ஒரு மாணவரையும் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் கடத்தி சென்றதாக தெரிகிறது. இவரையும் காட்டுக்குள் வைத்து ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.43 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளியில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சத்திய பாண்டி கொலை செய்யப்பட்ட பின்பு அவர் மீது போலீசார் முக்கிய குற்றவாளி என வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ராதா (35), என்பவர் தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தபோது,சுமார் 25 வயது மதிக்கதக்க ஒரு நபர் வந்தார்.
    • அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கொஞ்சி குப்பத்தை சேர்ந்தவர் ராதா (35), இவர் கடந்த 2022-ம்ஆண்டு ஜூலை மாதம்28-ந தேதி காடாம்புலியூர் மாயா கார்டனில் ரவிபலா தோப்பில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தார்.அப்போது சுமார் 25 வயது மதிக்கதக்க கருப்பு நிற பனியன் மற்றும் மஞ்சள் நிற அரைக்கால் சட்டையுடன் வந்த வாலிபர் ஒருவர் இவரிடம் இந்ததென்னை மரம் யாருடையது அவர் போன் நம்பர் தெரியுமா? என்று கேட்டுள்ளார். எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்த மோட்டார் கொட்டகையில் தூங்காமல் படுத்திருந்தார். அப்போது அந்த நபர் ராதாவை பின் பக்கமாக சென்று அவரது வாயை பொத்தி தாலி செயினை கழற்றி கொடு. இல்லைஎன்றால் உன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளான். அதற்கு பயந்துகொண்டு சத்தம் போட முடியாமல் இருந்தபோது உடனே அவரது கழுத்தில் கிடந்த தாலி செயினை அவன் எடுக்கும் போது அதை கையால் பிடித்துக் கொண்டார். அதில் பாதி தாலி செயின் இவர் கையில் இருந்தது. மீதியை அவன் எடுத்து சென்று விட்டான். ராதாவின் செல் போனை யும் எடுத்துக்கொண்டு முந்திரி தோப்புக்குள் புகுந்து ஓடிவிட்டான், இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பறித்து சென்றது காடாம்புலியூர் மெயின் ரோட்டில் வசித்து வந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து நகைகளை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நகையை பறித்த பிரகாசுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • ஈனமுத்துக்கும், சுடலைக்கும் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • ஈனமுத்துவை அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈனமுத்து(வயது 40). அதே ஊரில் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுடலை(28). இவர்களுக்குள் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    அப்போது ஈனமுத்துவை அழகப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்த கருப்பன், அவரது மனைவி பார்வதி, சுடலை, அவரது மனைவி சுப்புலெட்சுமி, பானு ஆகியோர் சேர்ந்து அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஈனமுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதேபோல் சுடலை தன்னை ஈனமுத்து, கருப்பன், மகேஷ் ஆகியோர் தாக்கி காயப்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • பிளஸ்-2 மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது39). இவரது 17வயது மகள் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதினார். நேற்று தேர்வு முடிவு வெளியானது. அதில் அந்த மாணவி 419 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து உறவினரின் வீட்டிற்கு தங்கையுடன் சென்று வருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால் உறவினர் வீட்டில் தங்கையை மட்டும் இறக்கி விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தருமாறு அய்யனார் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • கடனை திருப்பி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டை தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (62). இவர் அந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்காக இவரிடம் கோவில் நிர்வாக குழுவினர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கடனை திருப்பி தராமல் இருந்துள்ளனர். சந்திரசேகரன் அவரிடம் கடனை திருப்பி கேட்க சென்ற போது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் கோர்ட் உத்தரவின்படி பெருமாள் (72), லட்சுமணன் (62), கோவிந்தராஜ், முத்துகுமார், சீனிவாசன், ராமசந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது.
    • போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    கவுசாம்பி:

    உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் (வயது 33) என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால் அவரது மாமியார், மருமகளிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார், தனது மருமகளின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிவிட்டதாக தெரிகிறது. உடனே இதுகுறித்து சாலி பேகம் தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது சாலி பேகம், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் நேற்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • முழுமையாக தயாரிக்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப்பொருட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி பாபநாசம் (வயது 40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 100-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று பட்டாசு ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 2 அறைகளும் சேதமானது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    முழுமையாக தயாரிக்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப்பொருட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நாரணபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் பாலாஜி பாபநாசம், போர்மேன் கணேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×