search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை போலீசார் பார்வையிட்டனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள நாகதாசம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ராக்கெட், வானவெடி உள்பட பல பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டாசுகளை தயார் செய்து விற்பனைக்காக குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை அந்த ஆலையில் அதே பகுதியை சேர்ந்த பூபதி மனைவி பழனியம்மாள் (வயது50), காவேரி மனைவி முனியம்மாள் (65), சிவாலிங்கம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பட்டாசு குடோனில் இருந்து புகை வந்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் குடோன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் உள்ள வீடுகள் குலுங்கின.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதில் பணியாற்றி பெண்கள் முனியம்மாள், பழனியம்மாள் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சிவாலிங்கம் என்ற பெண் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பட்டாசு குடோன் வெடித்து சிதறிய இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் விபத்தில் இறந்த 2 பெண்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சாவு
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை

    ராம்ஜிநகர்.

    ராம்ஜி நகர் அருகே உள்ள கள்ளிக்குடியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் இசைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார் இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார் மேலும் இது குறித்து ராம்ஜி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • அடையாளம் தெரியாத முதியவர் சாவு
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர்,

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, சொக்க தேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35). அரசு பஸ் டிரைவர். இவர், அரவக்குறிச்சி அருகே மேட்டுப்பட்டி பிரிவு பகுதி வழியாக, கரூரில் இருந்து, திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது, சாலையின் குறுக்கே சென்ற, 50 வயது மதிக்கத்தக்க அடை யாளம் தெரியாத ஆண் ஒருவர், திடீரென குறுக்கே வந்தார். அவர் மீது பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வேலம்பட்டி வி.ஏ.ஓ., நீலமேகம் கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவரான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை குடிப்பதாக கருதிய ராஜசேகரின் மகன் ராஜேஷ்(வயது23) என்பவர் கடந்த 3-ந்தேதி இரவு 10 மணியளவில் பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசினார். இந்த குண்டுகள் கடையில் வெடித்து அங்கிருந்த மதுபானங்கள், பொருட்கள் எரிந்து சேதமாகின.

    பெட்ரோல் குண்டு வீச்சின்போது கடையில் இருந்த சூப்பர்வைசர் பூமிநாதன், விற்பனையாளர் இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (45) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்நிலையில் இன்று காலை அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தாய் பலி, மகன் படுகாயம்
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    கரூர், 

    அரவக்குறிச்சி அருகே, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி தமிழ் செல்வி (வயது 50) இவர், நேற்று மதியம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இனுங்கூர் பகுதியில், மகன் தருண்குமார், (21)என்பவருடன், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக சென்ற கார், டூவீலர் மீது மோதியது. அதில், கீழே விழுந்த தமிழ்செல்வி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தருண்குமார் படுகாயமடைந்து, அரவக்குறிச்சி அரசு மருத்துவம னையில், சிகிச்சை பெற்று வருகிறார். 

    • கடலோர மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • படகு கவிழ்ந்த பகுதியில் கடும் பனி நிலவியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    சான்டீகோ:

    அமெரிக்காவில் உள்ள சான்டீகோ கறுப்பு கடற்கரை பகுதிகளில் படகுகளில் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    இந்நிலையில் 2 கடத்தல் படகுகளில் சுமார் 15 பேர் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடும் பனிமூட்டம் இருந்ததால் அந்த படகுகள் கடலின் ஆழம் குறைந்த பகுதிக்கு சென்றுவிட்டது. திடீரென அந்த 2 படகுகளும் கவிழ்ந்துவிட்டது. இதனால் அதில் பயணம் செய்த 15 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள்.

    இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது பற்றி அறிந்ததும் கடலோர மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்த பகுதியில் கடும்பனி நிலவியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    நீண்ட நேரத்திற்கு பிறகு இறந்த 8 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அந்த பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் அவர்கள் நீந்தி உயிர் தப்பி இருக்கலாம் என தெரிகிறது. இதில் சில பெண்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபரீதம்

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வேலஞ்செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). தனியார் நிறுவன காவலரான இவர், சம்பவத்தன்று மாலை, அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில், அரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில், தலையில் காயம டைந்த நாகராஜன், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம கும்பல் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.
    • குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மெக்சிகோ:

    மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது.

    இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் பாருக்குள் புகுந்தனர். அவர்கள் பாரில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.

    இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் மதுபான பாரைவிட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனாலும் மர்ம கும்பல் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து 10 பேர் இறந்தனர். இதில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு காயத்துடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்கள் 10 பேரையும் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பார்சல் சர்வீஸ் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்
    • உடலை கைப்பற்றிய போலீசார், வேனை பறிமுதல் செய்த விசாரணை

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் நடுத்தெருவை சேர்ந்த கரு ப்பையா மகன் பிச்சை (வயது 48 ). இவரது மனைவி வேணி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் வம்பனில் ஷிவானி ஏஜென்ஸ் சொட்டு நீர் பாசன கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் ஆலங்குடி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பூச்சிக்கடை யிலிருந்து ஆலங்குடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.அப்போது பின்னால் வந்த பார்சல் சர்வீஸ் சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிச்சைஇரத்த காயங்களுடன் சாலையோரம் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்கு டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிந்து தனியார் பார்சல் சர்வீஸ் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.
    • அப்அபோது வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி தவறி விழுந்து பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    காடையாம்பட்டி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு மதுமிதா (6) என்ற பெண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் கருவுற்ற கோகிலாவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உம்பிளக்கம்பட்டியில் உள்ள தாய் அம்பிகா வீட்டிற்கு வந்த கோகிலா, மதுமிதா மற்றும் 3 மாத குழந்தையுடன் இங்கு தங்கி இருந்தார்.

    இந்த நிலையில், இன்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மதுமிதா திடீரென மாயமானார். இதையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர்.

    அப்போது, அம்பிகாவின் வீட்டிற்கு எதிரில் உள்ள கோவிலில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதை பார்த்து சிறுமியின் தாய் மற்றும் உறவினர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமியின் உடலை மீட்ட போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பரமத்திவேலூர் தாலுகா வெங்கரைப் பகுதியில் ராஜாவாய்க்கால் ஓரத்தில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்ததாக தெரிகிறது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரைப் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள ராஜாவாய்க்கால் ஓரத்தில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி வாய்க்காலில் விழுந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் லோகநாதன் வெகு நேரமா கியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தனர், ராஜாவாய்க்கால் பகுதிக்கு வந்து தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து வேலாயு தம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவாய்க்காலில் தேடினர்.

    அப்போது தலையில் அடிபட்டு பலத்த காயத்து டன் இறந்த நிலையில் லோகநாதன் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர், இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • 40 வயது மதிக்கதக்க வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    வடகோவை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்வாளத்தில் 40 வயது மதிக்கதக்க வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரெயிலில் அடிப்பட்டு இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×