search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • லாரி மோதி வாலிபர் பலியானார்.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த பரதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பரதன் (வயது 18). இவர் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே துறையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பரதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரதன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேலகுலத்தெருவை சேர்ந்த மணிவேலை (51) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • லெட்சுமியை கடந்த சில நாட்களுக்கு முன் நாய்கள் துரத்தியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி லெட்சுமி (வயது70). இவருக்கு குழந்தைகள் இல்லை. கணவர் சுப்பிரமணியனும் பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் பத்மநேரியில் பொதுமக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை நாய்கள் துரத்தியது. இதனால் பயத்தில் ஓடியவர் தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெட்சுமி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • மனைவி இறந்ததை கேட்டதும். ரங்கநாயக்கலு அதிர்ச்சியடைந்தார்.
    • தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் எதுவும் அறியாத 10 மாத குழந்தை தவித்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குடிமிரால்லாவை சேர்ந்தவர் ரங்கநாயக்கலு (வயது 28). இவரது மனைவி லதா (22).

    கடந்த 1½ வருடத்திற்கு முன்பு திருமணமானது. தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

    லதா கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் வயிற்று வலி சரியாகவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு லதாவுக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்ட அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் லதாவை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக இறந்தார்.

    லதா இறந்தது குறித்து டாக்டர்கள் அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    மனைவி இறந்ததை கேட்டதும். ரங்கநாயக்கலு அதிர்ச்சியடைந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே ஓடி சென்றார்.

    கர்னூல் அருகே உள்ள துப்பட்டு ரெயில் தண்டவாளம் அருகே சென்றார்.

    அந்த வழியாக வந்த ரெயில் முன்பாக பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கநாயக்கலு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டதால் எதுவும் அறியாத 10 மாத குழந்தை தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • லால்குடி அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
    • தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்பர்மோகன்ராஜ் இவருக்கு ஆண்டோ, புதின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆண்டோ (வயது 17). மற்றும் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்றுள்ளனர். ஆன்டோ மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் ஆற்றில் குளிக்க இறங்கிய நிலையில் மற்ற இருவரும் ஆற்றின் கரையில் மேலே வந்து விட்டனர். இதில் ஆழ மிகுதியான இடத்தில் மாட்டிக் கொண்ட ஆண்டோ தண்ணீரில் தத்தளித்த நிலையில் நிலை தடுமாறி நீரில் மூழ்கி மேலே கையை உயர்த்தி உள்ளார். தண்ணீர் இழுத்து சென்றதை அறிந்த நண்பர்கள் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கவே இதுகுறித்து லால்குடி தீயணைப்பு துறைக்கும், லால்குடி காவல் நிலையத்திற்கும், ஆண்டோவின் தந்தை மற்றும் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து லால்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் நீரில் மூழ்கிய ஆண்டோவின் உடலை லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் தேடி வந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டது.உடற்கூறு ஆய்விற்காக லாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

    • பரவாய் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்
    • தீயணைப்பு வீரர்கள் மீட்ட உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் திருமூர்த்தி(வயது 74). இவர் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் திருமூர்த்தி நேற்று முன்தினம் மாலை தனது வயலுக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த உறவினர்கள் திருமூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை காணாமல்போன திருமூர்த்தி வயல் அருகே குமரசாமி என்பவரது வயலில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் திருமூர்த்தியின் செருப்பு மற்றும் துண்டு, சட்டை கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கூறியுள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்த போது திருமூர்த்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் பிச்சுமணி விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் விசாரணையில் திருமூர்த்தி வயலுக்கு வரும்போது தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி பாட்டிலில் தண்ணீர் எடுப்பாராம். அதேபோல் தான் பாட்டிலில் தண்ணீர் எடுக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது.

    • இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வேகத்தடையில் தவறி விழுந்து பலியானார்
    • காயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

    கரூர்,

    விஸ்வநாதபுரி 'அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசுந்தரம் (64) இவர் தனது டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், மனைவி தங்கமணி (51) என்பவருடன், சின்னதாராபுரம்-கரூர் சாலை குளத்துார் பகுதியில் சென்று கொண் டிருந்தார். அப்போது, வேகத்தடைமீது மொபட் ஏறி இறங்கிய போது, நிலை தடுமாறி தனசுந்தரமும், தங்கமணியும் கீழே விழுந்தனர். அதில், தலையில் காயம் அடைந்த தங்கமணி, கரூர் அரசு மருத்துவ கல் லுாரி மருத்துவமனைக்கு கொண்டு. செல்லும் வழியில் உயிரிழந்தார். கணவன் தனசுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலி
    • வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ராஜா (39). இவரின் மகன் லாபியரசு (13). இவர் அரவக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு படித்து வந்தார். ராஜா தனது மகன் லாபியரசுடன், திண்டுக்கல்-கரூர் சாலை வாங்கலைபுதுார் பகுதியில், வேனில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக, கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆனந்து (30) ஓட்டி வந்த, ஆம்னி பஸ், வேன் மீது மோதியது. அதில், வேனில் பயணம் செய்த லாபியரசு, தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிந்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

    • அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கி வினைபிரசாத் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தாளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வினைபிரசாத். இவர் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கி வினைபிரசாத் உயிரிழந்தார்.

    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவில் சாலை விபத்து நடந்தது.
    • பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று நள்ளிரவு இந்த சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் இறந்த 7 பேருமே மாணவர்கள் ஆவர்.

    விபத்தில் பலியான மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் சொந்த ஊர் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    கரூர் மாவட்டம் சீத்தம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது59), சேகர் (35). இவர்கள் 2 பேரும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (24). மில் தொழிலாளி. அவரது நண்பர் துரையன் (21). பெயிண்டர். 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கொல்லப்பட்டி பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • ஊரணியில் மூழ்கி முதியவர் பலியானார்.
    • மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள சாத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இன்று காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுபற்றி பொதுமக்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.

    விசாரணையில் ஊரணியில் மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற மான் பலி
    • வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இரவு நேரத்தில் மேய்ச்சலுக்காக வந்த புள்ளி ஆண் மான் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த புள்ளி மான் உடல் நசுங்கி உயிரிழந்தது. இதுபற்றி அங்கு வந்த இரவு நேர ரோந்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஆர்.பாளையம் வன பாதுகாவலர் ஜான் ஜோசப் சாலையில் கிடந்த மானை மீட்டு உடற்கூற் ஆய்வுக்காக ஆட்டோ மூலம் எம்.ஆர்.பாளையம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றார்.

    ×