search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி.
    • கோவிலின் தல விருட்சம் வில்வம் மரம்.

    காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் பக்தி பெருக்கோடு பல சிவாலயங்களை பண்டைய மன்னர்கள் கட்டி அதன் வழிபாட்டு முறைகளையும் அதற்கான மானியங்களையும் அளித்துள்ளதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. அவ்வாறான பல கோவில்களில் பழமை வாய்ந்த திருக்கோவில் ஒன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மாறனேரி கிராமத்தில் அமைந்துள்ளது.

    சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த கோவிலில் பல்வேறு தடைகளையும் கடந்து புதுப்பொலிவுடன் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழாவை நோக்கி காத்திருக்கிறது.

    பல்லவ மன்னர்கள்

    சங்க காலத்துக்கு பிறகு சோழ நாட்டை களப்பிரர்களும் அவர்களுக்கு பிறகு பல்லவர்களும் தங்களுக்குரிய நாடாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளதாக கூறுகின்றனர். நிருபதுங்க பல்லவ மன்னன் ஆட்சி செய்த போது மாறனேரி கோவில் கட்டப்பட்டது.

    சுவரன் மாறன் காலத்தில் ஏற்பட்ட ஊரே தற்போதைய மாறனேரி என்னும் ஊராகும். மாமன்னன் கரிகால் சோழன் போன்ற சங்க கால சோழப்பேரரசு வாழ்ந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோழ நாடு பல நாடுகளாக பிரிக்கப்பட்டு ஆட்சி நடந்து வந்தது.

    வடகவீர நாடு

    ராஜராஜ சோழன் சோழநாட்டை விரிவுபடுத்தி சோழமண்டலமாக மாற்றி அமைத்து நாடுகளுக்குள் பிரிவு அல்லது உட்பிரிவுகள் அமையுமாறு செய்தார். அவ்வாறு செய்த போது 21 உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவுகளில் ஒன்றான வடகவீர நாடு என்பது வெண்ணாறு மற்றும் காவிரி படுகையில் அமைந்த மாறனேரி பகுதிகளை கொண்ட ஒரு நாட்டுப் பகுதியாகும்.

    இந்த நாடு ஏரிமங்கலநாடு என்று வழங்கப்படுகிறது. மாறனேரி என்னும் ஊரினை குறிப்பிடும் சோழ மன்னர்கள் கல்வெட்டு சான்றுகள் சோழமண்டலத்து பாண்டிய குலசினி வளநாட்டு வடகவீர நாட்டு மாறனே என்று குறிப்பிடுகின்றன.

    சிவகாமசுந்தரி

    மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மாறனேரிக்கு தீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்ற மற்றொரு பெயரும் வழக்கில் இருந்தது. நேரி வாயில் என்றும் மாறனேரி என்றும் நந்திபுரம் என்றும் தீன சிந்தாமணி சதுர்வேதிமங்கலம் என்றும் பல்வேறு பெயர்கள் இந்த ஊருக்கு பல்வேறு காலகட்டத்தில் இருந்தன. இருப்பினும் மாறனேரி என்ற பெயர் இன்றும் நிலைத்த பெயராக விளங்குகிறது.

    நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர்.

    அம்மனை நோக்கி நந்தி

    இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் உள்ள அம்மன் சிவகாம சுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் என்று வழி, வழியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

    இக்கோவிலில் உள்ள நந்தி நேர்முகமாக சிவனை பார்க்காமல், தன்னுடைய தலையை லேசாக திருப்பி அம்மனை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

    பிரதோஷ நாட்களில் நந்தியெம்பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    குடமுழுக்கு

    மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவுக்காக கடந்த 2009-ம் ஆண்டு பாலாலயம் நடந்து திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் கோவிலின் மூலவர் உள்ளிட்ட அனைத்து விக்கிரகங்களும் கோவிலின் அருகில் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.

    2 துர்க்கை சிலைகள்

    கோவிலின் தல விருட்சம் வில்வம் மரம். கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக நான்கு கால பூஜைகளுடன் நடைபெறும். பிரதோஷ நாளில் நந்தியெம்பெருமானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது..

    மாறனேரி பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் 2 துர்க்கை சிலைகள் உள்ளன. இதில் ஒன்று பல்லவர் காலத்து சிலை. மற்றொரு சிலை சோழர் காலத்துக்குரியது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    நவக்கிரக தோஷம்

    துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் உள்ள தீமையான கால கட்டம் விரைவில் அகன்று புதிய நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் இன்றும் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.

    துன்பங்களை போக்கும் துா்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் நீங்காத துயரால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியை முறையாக வழிபடுவோருக்கு விரைவில் நவக்கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

    கோவிலின் மூலவர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பிரதோஷ நாளில் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் குடும்பத்தில் உள்ள தீமைகள் அகன்று கண்டிப்பாக நம் வாழ்வில் நன்மை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • இத்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை.
    • இத்திருக்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை.

    திருப்பதி சென்று திருமலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீவெங்கடாசலபதியை தரிசிக்கும் எவரும் திருச்சானூர் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்காமல் திரும்பக்கூடாது என்று கூறுவார்கள்.ஏனெனில் திருப்பதியை பாலாஜியை வணங்குவதால் கிடைக்கும் அருள், பத்மாவதி தாயாரை வணங்குவதன் மூலம் நிறைவேறும் என்பது தொன்றுதொட்டு இத்திருத்தலங்களுக்குச் சென்று வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    திருப்பதி திருமலையில் திருமால் வீற்றிருக்க, திருப்பதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

    தன்னிடம் பிரார்த்திக்கும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தருபவர் பத்மாவதி தாயார் என்பதால் திருப்பதி திருமலையைப் போலவே இங்கும் பக்தர்களின் வருகை அன்றாடம் பல ஆயிரக்கணக்கில் இருந்து கொண்டே உள்ளது.

    தல புராணம் :திருச்சானூரில் வெங்கடாச்சலபதிக்கு ஒரு கோவில் இருந்தது. ஆனால் அந்த கோவில் மிகச் சிறியதாக இருந்ததால் எல்லா பூஜைகளையும் செய்ய முடியவில்லை என்பதற்காக சற்று தூரத்தில் மற்றொரு கோவில் கட்டப்பட்டது. அங்கு மிக முக்கியமான இரண்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அந்தக் கோவிலிலும் போதுமான இட வசதி இல்லை என்று கூறி மீண்டும் விக்ரகங்கள் வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

    12-வது நூற்றாண்டில் அப்பொழுது இப்பகுதியை ஆண்டு யாதவ அரசர்கள் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோவிலைக் கட்டினர். அந்தக் கோவிலில் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 16வது, 17வது நூற்றாண்டுகளில் சுந்தரவரதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் பத்மாவதி தாயாருக்கு தற்பொழுதுள்ள இந்தக் கோவில் கட்டப்பட்டது.புராணத்தின்படி அலமேல் மங்காபுரத்தில் உள்ள இக்கோவிலின் திருக்குளத்தில் உள்ள தாமரையில்தான் பத்மாவதி தாயார் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

    இத்திருக்கோவிலில் பல கடவுள்களின் சன்னதிகள் உள்ளன. பத்மாவதி தாயார், திருமலை வெங்கடாச்சலபதியின் துணைவியார் என்றே வழங்கப்படுகிறார்.

    பத்மாசனத்தில் தனது கைகளில் தாமரை ஏந்தி இருக்கும் பத்மாவதி தாயாரின் திருவுருவம் வணங்குவோரிடையே பக்திப் பெருக்கை ஏற்படுத்துவதாகவும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், சுந்தரராஜ சுவாமி, சூரிய நாராயண சுவாமி ஆகியோரின் விக்ரகங்களும் மிக ஆழகானவை.

    இத்திருக்கோவிலுக்கு இணையான சிறப்பைப் பெற்றுள்ளது இங்கு வளர்க்கப்படும் யானை. இந்த யானைதான் பத்மாவதித் தாயாரின் வாகனம். இத்திருக்கோவில் விழாக்களின் போது யானை உருவம் பொறிக்கப்பட்ட கொடியே ஏற்றப்படுகிறது.

    • பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன
    • திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில்களை சீரமைக்கவும், வேலி அமைக்குமாறும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், கீரனூர் உத்தமநாதர் சுவாமி கோவிலில் சிதிலம் அடைந்திருந்த அனைத்துப் பகுதிகளும் ரூ.8.98 லட்சத்தில் புனரமைக்ககும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இரும்பநாடு சவுந்தராஜ பெருமாள் கோவில் ரூ.23.98 லட்சத்திலும், வாராப்பூர் சிவன் கோவில் ரூ.24.95 லட்சத்திலும், குடுமியான்மலை சிக்கந்தர் சுவாமி கோவில் ரூ.24.89 லட்சத்திலும், அங்குள்ள குளம் ரூ.24.3 லட்சத்திலும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் லட்சுமணப்பட்டியில் உள்ள சமணர் கோவில் ரூ.12.33 லட்சத்திலும், ஆலங்குடிப்பட்டி தீர்த்தங்கரர் சிலையை சுற்றிலும் ரூ.5.16 லட்சத்தில் வேலி அமைக்கு பணியும் நடைபெற்று வ ருகின்றன. கடந்த நிதி ஆண்டில் மாவட்டத்தில் ரூ.1.22 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயார் கோவிலை போன்று இந்தியாவில் 2-வதாக சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கும் கோவிலுக்கு மன்னர் கால முறையில் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

    இக்கோவில் மொத்தம் உள்ள 6 கிரவுண்ட் நிலத்தில் 3 கிரவுண்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலத்தில் மண்டபம், மடப்பள்ளி புஷ்கரணி வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளது.

    வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சின்ன புஷ்கரணி குளம் உள்ளது. அந்த குளத்தை பார்த்து மகிழ்ந்து பின்னர் அருகில் உள்ள துவார பாலகேஷி அம்மனை வழிபடலாம்.

    இங்கு 2 அம்மன் சிலைகள் உள்ளன. அங்கு வழிபட்ட பின்னர் கோபுர தரிசனத்தை காணலாம். மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம், பாஞ்சராத்தர ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளது. இதில் கலை நலயமிக்க சிற்பங்களும் உள்ளன.

    கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்றதும் கருவறையில் வடக்கு திசை நோக்கி பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் அழகை காணலாம்.

    இந்த பத்மாவதி தாயார் சிலை, திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தாயாரின் காவல் தெய்வங்களான வனமாலி, பலாக்கினி உள்ளனர்.

    ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது

    கருவறை எதிரே பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கி அருளும் அம்மனை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் இடது புறம் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் தங்கள் காணிக்கையை செலுத்தலாம்.

    கோவில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோவில் கருவறையின் கோபுரம் தங்க நிறத்தில் பிரகாசிக்கிறது. கோவிலின் பின் பகுதியில் மடப்பள்ளி வழியாக வந்து கொடி மரத்தையும் சுற்றி வந்து வழிபடலாம்.

    கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மூன்று வேளையும் மூன்று விதமான அன்ன பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தனது மன நிம்மதிக்காக கோவில் வளாகத்தில் அமர்ந்து இறைவனை நினைத்து அமர்ந்து செல்வது வழக்கம். இதற்காகவே அம்மனை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் வாளகத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கும் இட வசதி உள்ளது.

    முன்புறம் கோவிலை பற்றி தகவல்கள் மற்றும் வசதிகள் பற்றி அறிய தகவல் ைமயம் நிர்வாக அலுவலகம் ஆகியவை உள்ளன.

    பக்தர்களுக்கு கண்காணிப்பு காமிராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

    • சென்னையில் பத்மாவதி தாயாருக்குத் தனியாக ஒரு கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
    • தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதியைப் பற்றிக் குறிப்பிடும் போது, `இறை அருள் தானாகவே பூமிக்கு வந்து நிலைபெற்ற இடம்' என்று சொல்வார்கள். அத்தகைய பழைமையும் பெருமையும் உடையது திருமலை திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோவில். இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் தினமும் ஏழுமலையானைத் தரிசிக்கக் குவிந்து வருகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சேவைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது.

    திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முறையான தகவல்களை அளிக்கவும் தரிசன மற்றும் சேவை சீட்டுகளைப் பெறவும் பல நகரங்களில் தரிசன தகவல் தொடர்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சேவை மையங்கள் உள்ளன.

    அதன் ஒரு பகுதியாக 2019-யில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை அருகில் கட்டப்பட்டுள்ள வேங்கடேசப் பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதற்கு விவேகானந்தா கேந்த்ராலயம் 5 ஏக்கர் நிலம் வழங்கிது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காகக் கோவில் திறந்து வைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டு 22.5 கோடி ரூபாய் செலவில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பு, இதன் வடிவம் திருமலை திருப்பதி கோவிலைப் போன்ற அமைப்பில் இருப்பதுதான். எனவே இங்குத் தரிசனம் செய்யும் பக்தர்கள் திருமலையில் தரிசனம் செய்த உணர்வினைப் பெறுவர்.

    தென் இந்தியாவில் வேங்கடாசலபதி என்று அழைக்கப்படும் பெருமாள், வட இந்தியாவில் `பாலாஜி' என்று பக்தியுடன் அழைக்கப்படுகிறார். குருசேத்திரத்தில் 34.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் தற்போது தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்கின்றனர் விரைவில் அண்டை மாநிலமான தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரிலும் திருப்பதி கோவில் கட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு திட்டமிட்டுள்ள மற்றும் செயல்படுத்தி வரும் திருப்பணிகள் குறித்துப் பேசினார்.

    சென்னையில் பத்மாவதி தாயாருக்குத் தனியாக ஒரு கோவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. பத்மாவதி தாயாருக்கு ஆலயம் கட்ட நடிகை காஞ்சனா மற்றும் அவரது சகோதரி கிரிஷா பாண்டே 6 கிரவுண்டு நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.

    இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 2021 பிப்ரவரியில் காஞ்சி காமக்கோடி சங்கராச்சாரியார், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் ஹரி ஜவஹர் ஐ.ஏ.எஸ்., ஏ.ஜே. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆந்திரா அரசின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் தலா ஒரு பசு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 கோவில்களுக்கு பசுவும் கன்றும் வழங்கப்பட்டது.

    2010-ல் நடிகை காஞ்சனா அவரது சகோதரி கிரிஷா பாண்டே 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பத்மாவதி தாயார் கோவில் ரூ.10 கோடி செலவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் ரூ.9 கோடியும், ராஜகோபுரம் ரூ.1.10 கோடியில் ஏ.ஜே.சேகர் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ளது.

    பத்மாவதி தாயார் சிலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான சிற்ப கலைஞர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். ஒரே கல்லில் தாயார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

    தாயார் சிலை 4½ அடி உயரம் 3 அைடி அகலம் கொண்டதாகும். சிலை வடிவமைக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜலவாசம், தானிய வாசம், நம்மூலிகை மற்றும் பாலிபிஷேகம் செய்து கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை, மதியம், மாலை மூன்று காலை பூஜைகள் நடத்தப்படும். தாயார் கருவறைக்கு பின்புறம், மடப்பள்ளியும், தாயார் அணியக்கூடிய அணிகலன்கள் வைப்பதற்கு தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தாயார் கோவில் பஞ்சரத்தின ஆகம விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளது

    என தெரிவித்தார் ஏ.ஜே.சேகர் தலைவர் உள்ளூர் ஆலோசனை குழு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

    • மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
    • இது குழந்தை வரம் அருளும் பிரார்த்தனை தலமாகும்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தொன்மையான வழக்கு. ஆனால், நதிக்கரையிலும் முருகன் கோயில் அமைந்திருக்கிறது. வேலூர் அருகே வேகவதி என்றழைக்கப்படும் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்தான் அது. இக்கோயில் 500 ஆண்டு பழமையானது. திருத்தணியில் வள்ளி-தெய்வானையுடன் காட்சி தரும் முருகனின் அதே தோற்றத்தை ரத்தினகிரியிலும், காங்கேயநல்லூரிலும் காணலாம். மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது. விஜயநகர பேரரசு காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை அடுத்து அழகிய கொடி மரம். அதையடுத்து அர்த்த மண்டபம். கருவறையில் மூலவர் வள்ளிதெய்வானையுடன் அருளாட்சி செய்ய, சுற்றுப் பிரகாரங்களில் விநாயகர், சிவன், அருணகிரிநாதர், தண்டபாணி மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் கொலு வீற்றிருக்கின்றனர்.

    1929ம் ஆண்டு கற்காரத்தின் மீது ராஜகோபுரத்தை நிர்மாணிக்கும் திருப்பணியை மேற்கொள்ள, திருமுருக கிருபானந்தவாரியாரின் தந்தை மல்லையதாஸ் பாகவதர் முன்வந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 23ம்நாள் மாலை 4 மணியளவில் ராஜகோபுரத்தின் 5வது நிலையில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மல்லையதாஸ் பாகவதரின் மற்றொரு மகனான சிறுவன் ஸ்ரீசைலவாசன் உணவு எடுத்து சென்றான்.

    பின்னர் அங்கிருந்து இறங்க முயற்சித்தபோது தவறி 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். மூர்ச்சையின்றி கிடந்த மகனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லையதாஸ், கோயிலின் கருவறை நோக்கி 'முருகா' என்று மனமுருகி வேண்டியபடி ஓடினார். பின்னர் மகன் அருகில் சென்று தனது குருநாதர் உபதேசித்த சடக்கர மந்திரத்தை ஓதினார். அங்கு கூடிய பொதுமக்களும் மூர்ச்சையின்றி கிடந்த ஸ்ரீசைலவாசனின் நெற்றியில் விபூதியை பூசி சிறுவனை காக்கும்படி முருகனை நெஞ்சுருக வேண்டினர். சிறிது நேரத்தில் குழந்தை எந்தச் சிறு கீறலுமின்றி பெற்றோரை பார்த்து சிரித்தபடி எழுந்தான். முருகப்பெருமானின் இந்த மகிமையை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த சிறுவன் திருமுருக கிருபானந்தவாரியாரின் சகோதரர் ஆவார்.

    இக்கோயிலின் எதிரிலேயே முருகனின் புகழை திக்கெட்டும் பரப்பிய திருமுருக கிருபானந்தவாரியாரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு 'ஞானத்திருவளாகமாக காட்சியளிக்கிறது. பிரார்த்தனை தலமான இந்தக் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டி ஆண்டுதோறும் ஆடி மாத பரணி, கிருத்திகை மற்றும் தை கிருத்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு குழந்தை செல்வம் கிடைத்தபிறகு மீண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் வேலூர்காட்பாடி செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.

    • கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்தி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தூக்கத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்ப டுகிறது. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருள்வார்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது, பின்னர் தூக்கத்திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச் சிக்கு கோவில் தலைவர் ராம சந்திரன் நாயர் தலைமை தாங்குகிறார். கேரள கவ ர்னர் ஆரிப் முகம்மது கான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம். பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம். எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நமஸ்காரம் 19-ந்தேதி காலையில் தூக்க நேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக் கிறது. அன்று இரவு 9மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கிவைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி சிவகுமார், நடி கர் கரமனை சுதீர், நாகர்கோவில் இந்து கல்லூரி செயலாள ரும், தாளாளருமான நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    23-ந்தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது.

    தூக்க நேர்ச்சை 25-ந் தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர் களின் முட்டுகுத்தி நமஸ்கா ரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைக ளுக்கு தூக்க நேர்ச்சை நிறை வேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்தி ரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செய லாளர் பிஜூ குமார். துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனி வாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது
    • இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது.

    இறைவன் - அருள்மிகு நின்ற நம்பி (எ) குறுங்குடிநம்பி(எ) வடுக நம்பி (எ) வைஷ்ணவ நம்பி

    இறைவி - அருள்தரும் குறுங்குடிவல்லி

    தீர்த்தம் -திருப்பாற்கடல்

    விமானம் - பஞ்சகேதக விமானம்

    புராணச் சிறப்பு

    வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.

    'நம்பாடுவான்' என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோவிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,.

    நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.

    இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு " தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்" என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

    தனிச்சிறப்பு

    இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..

    திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).

    ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்

    ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது "கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்" என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோவிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு 'மகேந்திரகிரி நாதர்' என்றும் ' பக்கம் நின்ற பிரான்' என்றும் பெயர்..

    "வெள்ளிறா" என்னும் சாதிமீனை தாய்கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது. எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற சீலகுணமுடையவரான பெருமாளுடைய திவ்விய தேசமமாம்).

    மேலும், இக்கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.

    அமைவிடம் :

    திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

    கன்னியாகுமாரி, மார்ச்.14-

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

    நேற்று 9-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து யானை மீது சந்தன பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலிலிருந்து சந்தன குடம் மற்றும் காவடி பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சந்தனகுடம் சார்பில் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 7.30 மணி முதல் மாலை 9 மணிவரை பக்தி பஜனை, 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சமய மாநாடு, 2 மணிமுதல் 3.30 மணிவரை பக்தி பஜனை, 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வில்லிசை, 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், இரவு 10 மணிமுதல் ஆன்மீக அருளிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    இனறு நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகே உள்ள சாஸ்தான் கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பவனி வருகிறது.

    பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து கும்ப ளங்காய் மஞ்சள், நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொ டுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறைமேளம் அடிக்கப்படுகிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும்போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும்.

    பின்னர் கொடி இறக்கு தலும் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பூஜையைக்காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனிவரும் வளா கத்திலும் அலை கடலென பக்தர்கள் திரண்டு நிற்பார் கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

    • விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது.

    பல்லடம்

    பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில் விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில்,சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • மயிலாடுதுறையின் மிகப்பெரிய கோவிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது.
    • ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சில சிவன் கோவில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோவில்களைப் பற்றி இங்கே காண்போம்.

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். பெரிய கோவில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோவிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.

    திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இது.

    திருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

    மயிலாடுதுறையின் மிகபெரிய கோவிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோவில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோவில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது.

    திருவானைக்காவல் கோவிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

    தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோவில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோவில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோவிலை உருவாக்கியிருக்கி உள்ளார்.

    தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

    திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோவில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

    தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.

    எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோவில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார்.

    சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோவில் வீற்றுள்ளது. இந்த கோவில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோவிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோவில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோவில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.

    சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்தில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது.

    ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோவில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர்.

    • மாவட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • 200 கோவில்களுக்கு மட்டும், விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    இந்து அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக, மாவட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட அளவில் உள்ள கோவில்களுக்கு, தலா, ஐந்து பேர், மூன்று பேர் மற்றும் ஒருவர் வீதம், அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது.இதுதொடர்பாக, மாவட்ட குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட குழு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

    மாவட்ட அளவில், 700 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் நடக்க உள்ளது.இதுவரை, 200 கோவில்களுக்கு மட்டும், விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விரைவில், அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக ஆலோசித்து,வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    ×