search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் அரைசதம் விளாசினார்.
    • அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.

    12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி 0 ரன்னிலும் ரோகித் 3 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் 18 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனால் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. இதனையடுத்து துபே - சூர்யகுமார் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 18.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்னிலும் துபே 31 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 110 ரன்களை எடுத்தது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.

    12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.

    இந்நிலையில், இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று நியூயார்க்கில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    • குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
    • போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.

    போதை பழக்கத்துக்கு அடிமையான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் மூலம் பதவியில் உள்ள அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த போது, மகனுக்கு எதிரான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரை மன்னிக்க மாட்டேன் என்று அதிபர் பைடன் தெரிவித்து இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களை அதிபர் பைடனின் மனைவி கண்டெடுத்தார்.

    இது தொடர்பாக அவர் காவல் துறையில் வாக்குமூலம் அளித்ததை அடுத்து ஹண்டர் பைடன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில், தற்போது ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் ஜோ பைடன், "நான் அதிபர், மற்றும் ஒரு தந்தை. தங்களது செல்ல பிள்ளைகள் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி அதில் இருந்து அவர்கள் விடுப்பட்டு, மீண்டு வருவதை பார்த்து பெருமை கொள்ளும் உணர்வை பல்வேறு குடும்பத்தினர் புரிந்து கொள்வர்."

    "இந்த வழக்கின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொண்டு, நீதிமன்ற வழிமுறைகளுக்கு தொடர்ந்து மரியாதை அளிப்பேன். இந்த தீர்ப்பை எதிர்த்து ஹண்டர் பைடன் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்," என்றார்.

    • ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

    நியூயார்க்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை நாளை (12-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் போட்டியில் பேட்டிங் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட் ஒருவரே தாக்கு பிடித்து ஆடினார். அபாரமான பந்துவீச்சால் வெற்றி கிடைத்தது. கிட்டத்தட்ட தோற்க வேண்டிய ஆட்டத்தில் வெற்றி அமைந்தது. அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்ததால் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராட் கோலி 2 ஆட்டத்திலும் தொடக்க வரிசையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக ஆடலாம். கோலி மிடில் வரிசையில் களம் இறங்கலாம். ஷிவம் துபே கழற்றி விடப்படலாம்.

    சூர்ய குமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 2 ஆட்டத்திலும் வெற்றியை பெற்றதால் மாற்றம் செய்ய அணி நிர்வாகம் விரும்பாது.

    பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா , அக் ஷர் படேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.இதனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

    இந்தியாவை போலவே மோனக் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை சூப்பர் ஓவரிலும் வீழ்த்தி இருந்தது.

    இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து அமெரிக்கா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி உள்ளது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    நியூயார்க்:

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை நாளை (9-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்து நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.

    அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக நம்பிக்கையுடன் ஆடுவார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மா, ரிஷப் பண்டும், பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

    அயர்லாந்துக்கு எதிராக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். அவரது இடத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    விராட் கோலி தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடாவிட்டாலும் அதே தொடக்க வரிசையில் விளையாடுவார்.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது எதிர்பாராத ஒன்றாகும்.

    இந்தியாவிடமும் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மோசமாக அமைந்தது. மேலும் சூப்பர் ஓவரில் முகமது அமீர் பந்து வீச்சும் மிகவும் மோசமாக இருந்தது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும்.

    வெற்றிக்காக இரு அணிகளும் கடைசி வரை முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின.
    • இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அமெரிக்கா வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

    வாஷிங்டன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    இந்நிலையில், அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் பெற்ற மாபெரும் வெற்றி. இந்த நிலைக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இந்த வாய்ப்பை நாங்கள் இரு கைகளாலும் பிடிக்க முயற்சிக்கிறோம்.

    சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதே எங்கள் வேலை என்பதால் இன்னும் வேலை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. எனவே அணி உண்மையிலேயே நம்பிக்கையுடன் உள்ளது.

    நாங்கள் இந்த வேகத்தை தக்கவைத்துக் கொள்வோம். இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதே எங்களின் அடுத்த இலக்கு என தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
    • இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழந்து 18 ரன்களை குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.

    அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்துவீசிய இவர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, சௌரப் நெட்ராவல்கர் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

     


    2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யு19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சௌரப் 2010-இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை பந்துவீசி 16 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    அந்த வகையில், 14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சௌரப் அமெரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார்.

    முன்னதாக, யு19 போட்டியில் இந்தியா தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.
    • அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 44 ரன்களையும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.

    இதையடுத்து 160 என்ற இலக்கை துரத்திய அமெரிக்கா அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்கா அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அவுட் ஆனார்.

     


    இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்களை சேர்த்தது. இதன் காரணமாக போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.

    19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு டி20 உலககக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தது.

    • உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    டல்லாஸ்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    • பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.
    • அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு டல்லாஸ் நகரில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் தொடரில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.

    கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானின் பிரதான பலமே பந்து வீச்சு தான். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அமிர், அப்பாஸ் அப்ரிடி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் விலா பகுதியில் காயத்தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று கேப்டன் அசாம் தெரிவித்தார்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 4,023 ரன்கள் எடுத்துள்ள பாபர் அசாமுக்கு அதிக ரன் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை (4,038 ரன்) முந்துவதற்கு 16 ரன் மட்டுமே தேவை.

    இது குறித்து பாபர் அசாமிடம் கேட்ட போது, 'உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கவே இங்கு வந்துள்ளோமே தவிர, எனது தனிப்பட்ட சாதனை மைல்கல் குறித்து சிந்திப்பதற்காக அல்ல. சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அது தான் முக்கியம். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம்' என்றார்.

    அமெரிக்கா

    மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக 195 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியது. நியூசிலாந்து அணிக்காக விளையாடி விட்டு இடம்பெயர்ந்துள்ள ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன், முன்பு தென்ஆப்பிரிக்க ஜூனியர் அணிக்காக ஆடிய ஆன்ட்ரியாஸ் கவுஸ், இந்திய வம்சாவளியினர் கேப்டன் மோனக் பட்டேல், ஹர்மீத் சிங், சவுரப் நெட்ராவல்கர், பாகிஸ்தானில் பிறந்தவரான அலிகான் இப்படி பல நாட்டு வீரர்களின் கலவையாக உருவாகியுள்ள அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    கடந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்கள் விளாசி, வெற்றிக்கு வித்திட்டார். உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு பிரிட்ஜ்டவுனில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நமிபியா- ஸ்காட்லாந்து அணிகள் ('பி' பிரிவு) சந்திக்கின்றன. நமிபியா தனது முதல் லீக்கில் சூப்பர் ஓவரில் ஓமனை பதம் பார்த்தது. அதே சமயம் ஸ்காட்லாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது.

    அந்த ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து வெற்றிக் கணக்கை தொடங்கும் ஆவலில் உள்ளது.

    • ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு 46. 54 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.

    ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த உலகக்கோப்பைக்கான மொத்த பரிசுத்தொகையாக 93.5 கோடியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

    உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 20.36 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்னர் அப் அணிக்கு 10.36 கோடி பரிசுத்தொகையாகும்.

    செமி பைனலில் தோற்கும் அணிகளுக்கு 6.54 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    இதுவரை நடைபெற்ற டி20 உலககோப்பைகளில் அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகைகளில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.

    2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு மொத்தமாக 46.54 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×