search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே முக்கிய காரணம் ஆகும்.
    • பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு 24 மணி நேரமாக மாறி இருக்கிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிலவை பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    பூமியில் இருந்து நிலவு ஆண்டுக்கு சுமார் 3.8 சென்டிமீட்டர் வீதம் விலகி செல்கிறது என்றும், இது பூமியில் நாட்களின் நீளத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    தற்போது பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலவு விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் வெறும் 18 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு 24 மணி நேரமாக மாறி இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே முக்கிய காரணம் ஆகும்.

    இது தொடர்பாக விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறும்போது, நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும்.

    நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம் என்றார்.

    • சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.
    • வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும்

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார். தொடர்ந்து கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக பைடன் முன்மொழிந்தார்.

     

    இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நடந்த தேர்தலில் பைடன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் விலகியதை அடுத்து தற்போது மீண்டும் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

    சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார். வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

     

    ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாகக் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர்
    • ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த செவ்வாய்க்கிழமை [ஜூலை 30] அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பளித்து வந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை(IRGC) வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச்சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர் என்று தெரிக்கப்பட்டிருந்தது.




     


    இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல் இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில் அமெரிக்கா இந்த தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த கூற்றுப்படி, இஸ்மாயில் தெக்ரானில் வழக்கமாக தங்கும் புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.




     


    இந்த நிலையில்தான் கத்தார் நாட்டில் நடந்த அரசியல் சந்திப்பை முடித்துக்கொண்டு, ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த இஸ்மாயில் அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்தபிறகு, மர்ம நபர்கள் அங்கு புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை, ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்துள்ளனர் என்று  நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது. இதற்கிடையில் ஈரானில் நடந்த இஸ்மாயில் ஹனியே இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.




     




     


    • ஆடு மேய்க்கும் நபர் காட்டுக்குள் பெண்ணின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததில் பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • வரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரியுடைய கொண்ட ஆதார் கார்டு கண்டெடுக்கப்பட்டது

    மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் [Sindhudurg] மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை சோனுருளி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் நபர் காட்டுக்குள் பெண்ணின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததில் பெண் மரத்துடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

    தகவல் அறிந்து வந்த போலீஸ் நடத்திய சோதனையில் பெண்ணின் உடைமைகளை சோதித்ததில் அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் தமிழக முகவரியுடைய கொண்ட ஆதார் கார்டு, மருந்து மாத்திரை பரிந்துரைச் சீட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு அருகில் இருந்த கொங்கன் பகுதியில் உள்ள சவாந்வேதி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




     


    ஆனால் அவரது மனம் மற்றும் உடல் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்ததால் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    அவர் இப்போது நலமாக உள்ளதாகவும், மன ரீதியான பிரச்சனைக்கு அவர் ஆளாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டில் அவரது பெயர் லலிதா காயி [Lalita Kayi] என்று உள்ளது. அவரது விசாவும் முடிவடையுள்ளது.

    காட்டில் பலநாள் பசியுடன் கடும் மழையில் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்ததால் அவரிடம் உடல் நிலை கருதி மேலதிக தகவல்களைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அவரது ஆதார் கார்டில் உள்ள முகவரியைத் தேடி போலீஸ் குழு ஒன்று தமிழ்நாடு விரைந்துள்ளது.  

    • சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    • நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்

    வன்முறைகளின் உற்பத்திக் களமாக அமெரிக்கா மாறி வருவதை நாளுக்கு நாள் அதிகமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வாரத்திற்கு ஒன்று நடப்பதால் அந்நாட்டின் மக்களுக்கு வன்முறை என்பது நார்மலைஸ் ஆனதாக மாறி வருகிறது.

    அந்த வகையில், நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பூங்காவில் இருந்தவர்களில் 6 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் ஏறத்தாழ அனைவரும் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்துள்ளனர். அதற்கான தோட்டாக்களை அவர்கள் மளிகைக் கடைகளில் உள்ள மெஷினில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் எடுத்துக்கொள்ளும் வசதியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, வீட்டில் படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார்.
    • இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், தீபாளியும் ஒருவர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி தீபாளி கனோஜ்யா அமெரிக்க வெளியுறவுத் துறை நிதியுதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பை படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆகஸ்ட் 19 அன்று தீபாளி அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.

    சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, அவரது கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். தனது தந்தை படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் வீட்டில் ட்யூஷன் நடத்தி தீபாளி தாய்க்கு உதவி வந்துள்ளார்.

    ஒதுக்கப்பட்ட சமூகம் மற்றும் நலிந்த பொருளாதார பின்னணியை சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார்.

    இது தொடர்பாக பேசிய தீபாளி, "இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், நானும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவை பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் எனது படிப்புக்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய தீபாளியின் தாயார், "என் மக்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு சற்று பதட்டமாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.
    • கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார்.

    பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தினார். பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டுஅவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கிவருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

    எனவே தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இன்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார். இந்நிலையில் வெகு காலம் கழித்து நடந்த இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாடியுள்ளார்.

     

     

    அப்போது இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நேதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நேதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர்பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நேதன்யாகுவுக்கு காட்டி விளக்கம் கொடுத்தார் டிரம்ப். 

     

     

    • 'நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள்'
    • வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.

    இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜோ பைடன் மற்றும் அமெரிக்க தலைவர்களிடம் பேசுவார்த்தை நடந்த நேற்று முன் தினம் அமெரிக்கா வந்துள்ளார். நேதன்யாகுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    நேற்று முன் தினம் தலைநகர் வாஷிங்க்டன் யூனியன் கட்டிடத்தின்முன் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து நேதன்யாகுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள். நேதனயாகு நீ உள்ளே ஒளிந்துகொள்ள முடியாது, நீ செய்வது இனப்படுகொலை என்று கோஷம் எழுப்பினர். சில போராட்டக்காரர்கள் நேதன்யாகு நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் செய்தனர்.

     

     

     

    இதனால் போராட்டக்கார்கள் மீது போலீஸ் கடுமையான அடக்குமுறையை உபயோகப்படுத்தியது. நகரின் சுவர்க்ளிலும், கொலம்பஸ் உள்ளிட்டவர்களின் சிலைகளிலும் கிராஃபிட்டி வரைந்து தங்களின் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். கைகளில் ரத்தத்துடன் ஜோ பைடன் நிற்கும் படங்களை போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வரைந்தனர்.

     

    மேலும் அமெரிக்க கொடியையும், நேதன்யாகுவின் உருவ பொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து நேற்று ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை நேதன்யாகு சந்தித்து பேசிய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர். இந்நிலையில் அமெரிக்க கோடியை எரித்தது நாட்டுப் பற்றின்மையை காட்டுவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த போராட்டங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • பிரதமர் மோடி கடந்த 7, 8-ந்தேதிகளில் ரஷியா சென்றிருந்தார்.
    • அதே நேரத்தில் நேட்டோ மாநாடு நடைபெற்றது.

    இந்திய பிரதமர் மோடி கடந்த 8 மற்றும் 9-ந்தேதி என இரண்டு நாட்கள் பயணமாக ரஷியா சென்றிருந்தார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திய பிறகு மோடியின் முதல் பயணம் இதுவாகும். மோடி பயணம் மேற்கொண்ட நேரத்தில்தான், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நேட்டோ மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேட்டோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷிய பயணம் மேற்கொண்டது. அதிகரிக்கும் இந்தியா- ரஷியா இடையிலான உறவு அளிக்கிறது என அமெரிக்க பராளுமன்ற எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் டொனால்டு லு பதில் அளித்தார்.

    "இந்திய பிரதமர் மோடியின் பயணம் நேரம் பற்றிய கவலைப்பற்றி உங்கள் கருத்துடன் நான் உடன்பட முடியாது. எங்களுடைய இந்திய நண்பர்களுடன் (அதிகாரிகளடன்) இது தொடர்பாக கடினமான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிக்கிறோம்" என டொனால்டு அமெரிக்கா பாராளுமன்ற எம்.பி.க்களிடம் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் "இந்தியா பிரதமர் மோடி ரஷியா செல்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின்பேது போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சியை சந்தித்து பேசினார். உக்ரைன் மீதான போர் சண்டையால் போரை வெல்ல முடியாது. உக்ரைன் சண்டையில் குழந்தைகள் உயிரிழந்ததை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். புதின் இருக்கையில் அவர் முன் லைவ் டெலிவிசனில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார் " என்றார்.

    ரஷியா பயணத்தின்போது இந்திய பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது குறித்து மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரஷியா- இந்தியா உடன் புதிய முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை. தொழில்நுட்ப ஒத்துழைப்பை பார்க்க முடியவில்லை" என்றார்.

    "உக்ரைனில் உள்ள கிய்வ் நகரில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் புடின் வேண்டுமென்றே ஏவுகணைகளை வீசிய அன்றே மாஸ்கோவில் போர்க்குற்றவாளி புட்டினை நான் மிகவும் மதிக்கும் மற்றும் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி கட்டித் தழுவியதைக் கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்" என எம்.பி. ஒருவர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

    • நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது, இந்திய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

    இந்த நிலையில் 2 இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.

    பயிற்சி பெறும் வீரர்களில் ஒருவர் ஏற்கனவே ரஷியா மாஸ்கோவின் யூரி ககாரின் விண்வெளிப் பயிற்சி மையத்தில் அடிப் படைப் பயிற்சி பெற்றவர் ஆவார். டெக்சாசில் பயிற்சியை முடித்த பிறகு, இந்த இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய-அமெரிக்க விண்வெளி பயணத்தில் சேருவார்.

    இந்த விண்வெளிப் பய ணம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அக்சியோம் ஆகியவை இந்திய விண்வெளி வீரர்களுக்கு தேவையான நிபுணத்துவத்தை பெற உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நாசா பயிற்சி மற்றும் இந்திய-அமெரிக்க மிஷன் ஆகியவை இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான ஆயத்தப் படிகளாகும்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "விண்வெளிப் பயணத்திற்கான பொதுவான பயிற்சியை இந்திய வீரர்கள் பெற்றிருந்தாலும், இந்தியாவில் அவர்களது பயிற்சியின் பெரும்பகுதி ககன்யான் மாட்யூல்களில் கவனம் செலுத்தியது.

    எனினும் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலைய மாட்யூல்கள் மற்றும் நெறிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்" என்றார்.

    மேலும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் கூறும்போது, "இந்த திட்டம் இந்திய விண்வெளி வீரர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும். இது ககன்யான் திட்டத்தை நோக்கிய ஒரு மிக முக்கியமான படியாகும்" என்றார்.

    • ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து.
    • 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் டெர்மினல் 8-ல் உள்ள எஸ்கலேட்டரில் தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

    உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். 900-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
    • மணிப்பூரில் வன்முறை அதிகரித்து காணப்படுகிறது.

    அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களிடம் இந்தியா பயணம் செய்பவர்கள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    "குற்றம் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுவதால் இந்தியா செல்வோர் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். சில பகுதிகளில் அதிகளவு அபாயம் கொண்டுள்ளது."

    "இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர்கள். அங்கு தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது."

    "இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது."

    "சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தை, அரசு சேவை வழங்கும் பகுதிகளை குறிவைத்து சுற்றுலாவாசிகள் மீது கயவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்," என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    ×