search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்கள்"

    • இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
    • சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.

    ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு

    அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.

    கண் சுருக்கங்கள்

    ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது.

    தேவையான பொருட்கள்

    1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.

    • கண்களில் ஏற்படும் வறட்சி தலைவலியை உருவாக்கும்.
    • அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம்.

    நவீன தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில், கண்கள் பாதுகாப்பு என்பது அனைத்து வயதினருக்கும் முக்கியமானது. கண்களில் உருவாகும் வறட்சி காரணமாக நமது கவனம் சிதறுவதுடன், தலைவலியும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து விடுபட கீழ்கண்ட எளிமையான வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம். இவை பொதுவான வழிமுறைகள் மட்டுமே. முறையான ஆலோசனைக்கு மருத்துவரை தொடர்பு கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

    இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருத்தல், கணினி, செல்போன், டி.வி., பார்த்து விட்டு தூங்குவது போன்ற செயல்களால் கண்கள் மிகவும் பாதிப்படைகின்றன. அதனால், கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஏற்பட்டு வறட்சி ஏற்படுகிறது. தினமும் எட்டு மணி நேர தூக்கம், ஆரோக்கியமான உணவு, ஓய்வு ஆகிய மூன்றையும் சரியாக கடைப்பிடித்தால் கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.

    எதிர்பாராத சூழ்நிலையில் கண்களில் தூசி விழுந்தால், தூய்மையான குளிர்ந்த நீரால் மட்டுமே கண்களை கழுவ வேண்டும். அந்த சமயத்தில் கண்களில் எண்ணெய் அல்லது சுய மருத்துவ முறையில்ஏதாவது சொட்டு மருந்தை விடுவது போன்றவை ஆபத்தானது. தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றை போதிய புற வெளிச்சம் உள்ள சூழ்நிலையில் மட்டுமே பார்க்க வேண்டும்.

    இருட்டில் பார்க்கும்போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு விழிப்படலத்தை பாதிக்கும். கணினியின் திரையை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ்ப்புறமாக அமையும்படி வைக்க வேண்டும். தொடர்ந்து கணினியை இயக்குபவர்கள் 20/20 என்ற முறையை கடைப்பிடிக்கலாம். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டுவதாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.

    கோடை காலத்தில் உடலிலும், கண்களிலும் வறட்சி ஏற்படும். இதைத் தடுப்பதற்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். மருத்துவர் ஆலோசனைப்படி வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் சூடு விலகி, கண்கள் குளிர்ச்சி அடையும். கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவு வகைகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.

    சிக்கன், மட்டன் போன்றவற்றை தவிர்த்து கடல் உணவுகளான மீன், இறால், போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். மீன் உணவுகள் கண்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகின்றன. அதனால் கண் பார்வை குறைபாடுகள் குணமாகும். பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள் ஆகியவை கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் முக்கிய பொருட்கள்.

    வைட்டமின் டி அதிகம் இருக்கும் உணவுப் பொருட் களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாரம் இரண்டு முறை கீரையை சமைத்து சாப்பிடலாம். பல்வேறு நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    • குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது.
    • ‘பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு ‘ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம்.

    டிஜிட்டல் யுகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள். கண் சம்பந்தமான விஷயத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வை குறைபாட்டை எப்படி கண்டறிவது, பெரியவர்கள் எதிர்கொள்ளும் கண் சார்பான பிரச்சினைகள், ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் கண் பாதிப்புகளை எப்படி குறைப்பது?... போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார், யமுனா தேவி. கண் அறுவை சிகிச்சை நிபுணரான (போக்கோ ரெப்ராக்டிவ் சர்ஜன்) இவர் சென்னையில் மேற்படிப்பு முடித்து விட்டு, தற்போது கோவையில் பயிற்சி செய்து வருகிறார். இவர் கண்கள் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்.

    * ஸ்மார்ட்போன், குழந்தைகளின் கண்களில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?

    ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது. உணவு ஊட்ட, பொழுதுபோக்கு காரணங்களுக்காக பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் கூடுதலாக 'அட்வாண்டேஜ்' எடுத்து கொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கும். கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (ரெட்-ஐ) போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும்.

    * குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகளை எப்படி கண்டறிவது?

    இயல்பை விட எல்லாவற்றையும் மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி நின்று பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்கமுடியாமல், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் தவிப்பது, கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்துவதாக கூறி அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

    * குழந்தைகளுக்கு கண் பரிசோதனை எப்போது செய்யலாம்?

    மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம், வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை அவசியமாகிறது. ஏனெனில் உடல் வளர்ச்சியை போலவே, வயதிற்கு ஏற்ற கண் வளர்ச்சியும் அவசியம். அதை கண்காணிக்கவும், குறைபட்டிருக்கும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கண் பரிசோதனை அவசியம். குறிப்பாக, 10 மாதத்திற்கு முன்பாகவே பிறக்கும் 'பிரி மெச்சூர்' குழந்தைகளுக்கு 'ரெட்டினல்' பரிசோதனை மிகமிக அவசியம். வெளிச்சத்தை உணர்கிறார்களா, அம்மாவை அடையாளம் காண்கிறார்களா... போன்றவற்றை ஆரம்பத்திலேயே சோதித்துவிட வேண்டும்.

    * ஐ.டி. துறையில் வேலைபார்ப்பவர்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்?

    ஐ.டி.யில் வேலைபார்ப்பவர்கள், ஒருநாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது கணினியை பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் கண் வறட்சி ஏற்படும். தலைவலி மற்றும் கண் வலி பிரச்சினைகளும் உண்டாகும். இப்படி அதிக நேரம் கணினியில் வேலைபார்ப்பவர்கள், அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்க நன்றாக தூங்கவேண்டும். கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும். கூடவே 20-20-20 முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.

    20-20-20 என்பது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளையோ அல்லது வாசகங்களையோ 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். இதன்மூலம், கண்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளலாம். இவையின்றி, கணினி பார்ப்பதில், அசவுகரியங்கள் இருப்பின், மருத்துவர் ஆலோசனைப்படி லூப்ரிகேஷன் மருந்துகளை பயன்படுத்தலாம்.

    * பார்வை குறைபாடு பெற்றோர்கள் மூலமாக வருமா?

    ஆம்..! 'ரிஃபிரக்டிவ் எரர்' எனப்படும் 'ஒளி விலகல் பிழை' மரபணு மூலமாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வர 80 முதல் 90 சதவிகிதம், சாத்தியம் இருக்கிறது.

    * இந்தியாவில் நிறையபேர் எத்தகைய பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

    'ஐ-பால்' எனப்படும் கண் பந்தின் வளர்ச்சியை பொறுத்து, குறைபாடு மாறுபடும். கண் பந்து பெரிதாக இருந்தால் 'மைனஸ்' குறைபாடும், சிறியதாக இருந்தால் 'பிளஸ்' குறைபாடும் உருவாகும். அந்தவகையில், நம் இந்தியாவில் பெரும்பாலானோர், 'மைனஸ்' குறைபாட்டில் சிக்கி இருக்கிறார்கள்.

    * குழந்தைகளின் பார்வை குறைபாட்டிற்கு, நிரந்தர தீர்வு இல்லையா?

    மருத்துவ தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிவிட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண முடியும். 18 வயது வரை, பார்வை திறன் குறைபாட்டிற்கு கண்ணாடி அணிவது மட்டுமே தீர்வாகும். 18 வயதை எட்டியபிறகுதான், அவர்களது பார்வை திறன் ஒரு நிலையை அடையும். அந்த சமயத்தில், அவர்களது கருவிழி திரையின் தடிமனுக்கு ஏற்ப, அவர்களது பார்வை திறன் மதிப்பீட்டிற்கு ஏற்ப... லாசிக் சிகிச்சையோ அல்லது ஸ்மைல் சிகிச்சையோ செய்து, பார்வை குறைபாட்டை மீட்கலாம். 'மைனஸ் 9.5' இப்படி அதீத பாதிப்பு உள்ளவர்கள், ஐ.சி.எல். எனப்படும் நவீன சிகிச்சையின் மூலம் பார்வையை நிரந்தரமாக மேம்படுத்திக் கொள்ளலாம். கண்ணாடிக்கு குட்பை சொல்லலாம்.

    * முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை பாதிப்பை தவிர்க்க முடியாதா?

    இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாகும். நம் கண்களில் உள்ள லென்ஸ் பாகம், மறைக்கப்படும்போது பார்வையின் தரம் குறைய தொடங்குகிறது. வயது மூப்பு காரணங்களால், தலை முடி நரைப்பது போல, தோல் சுருங்குவது போல, 'காட்ராக்ட்' எனப்படும் பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை குணப்படுத்த, நவீன அறுவை சிகிச்சைகள் உண்டு. முன்பை போல கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே எளிமையாகிவிட்டது. அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தில் வலி இல்லாமல், மைக்ரோ மினிமம் (1.5 மி.மி.) நுட்பத்திலேயே அகற்றிவிடலாம்.

    * கண்களில் கட்டி வந்தால் என்ன செய்வது?

    கெலோசியன் (chalazion) மற்றும் ஹார்டியோலம் (hordeolum) என்ற இரு வகையான கட்டிகள், கண்களில் வரும். இதில் ஹார்டியோலம் வலி மிகுந்தது. இமைகளின் ஓரத்தில் வரும். கெலோசியன், வலி இல்லாதது. இரண்டையும் கரைக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம். மருந்துகள் மூலமாக கரையாத கட்டிகளை, மருத்துவர் துணையோடு இன்டிவிஷன் டிரைனேஜ் முறையில் அகற்றலாம். கண் கட்டி விஷயத்தில், நீங்களாகவே சிகிச்சை எடுப்பது ஆபத்தானது. கூர்மையான பொருட்களை கொண்டு நீங்களே சுத்தப்படுத்த நினைத்தால், பார்வை இழப்புகளை சந்திக்க நேரலாம்.

    * சர்க்கரை நோயாளிகள் கண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமா?

    சர்க்கரை அளவை சரிவர பராமரிக்காவிட்டால், 'டயாபெடிக் ரெட்டினோபதி' எனப்படும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். டயாபெடிக் ரெட்டினோபதி என்பது, கண் விழித்திரையில் நடக்கும் ஒழுங்கற்ற மாற்றம். மருத்துவர்களால் மட்டுமே கண்டறியமுடியும், மற்றபடி ஆரம்பத்தில் இதை அறிகுறிகளால் கண்டறியமுடியாது. இவை, முடியைவிட மெல்லியதாக இருக்கும் கண் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கி, ரத்த கசிவு (retinal haemorhage) மற்றும் நீர் கசிவு (vitreous haemorhage) ஏற்படுத்தும். பார்வை திறனையும் குறைக்கும். இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், லேசர் சிகிச்சை, இன்ட்ராவிட்ரியல் இன்ஜெக்‌ஷன், அறுவை சிகிச்சை ஆகியவை வழியாக பார்வையை காப்பாற்றலாம். பறிபோன பார்வையை திரும்ப பெறுவது சவாலானது. அன்றாட தேவைக்கேற்ற இன்டராக்குலர் லென்சுகளையும் பொருத்தலாம்.

    • நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும்.
    • ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம்.

    செல்போன் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான். ஆனால் இந்த ரேடியேஷன்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம். இதை தவிர்த்து, போன் திரைகளில் இருந்து வைலட் கதிர்கள், பேட்டரி வெடிக்கக்கூடும் என்ற ஆபத்து, ஆகிய அனைத்துமே குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.

    நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும். எனவே பெற்றோர்கள் பெரும்பாலான நேரம் போனில் செலவழிக்கும் போது குழந்தைகளும் அதையே தான் பின்பற்றும். ஆனால் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோமேக்னடிக் ஃபீல்ட் என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவர்களுடைய உடல் அமைப்பு மற்றும் உடல் உறுப்புகளில் கூட பாதிப்புகளை உண்டாக்கும். இதன் பெயர் மைக்ரோவேவ் ரேடியேஷன் என்று கூறப்படுகிறது.

    குழந்தைகள் பிறந்து சில மாதங்கள் வரை முன்னுச்சி என்று கூறப்படும் குழந்தைகளின் தலையின் மேற்பகுதி மூடாமல் திறந்த படிதான் இருக்கும். குழந்தை வளர வளர தான் அந்த பகுதி மூடும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதி மிகவும் மெலிதாக இருக்கும். இதனால் குழந்தைகளின் மூளை பெரியவர்களை விட எளிதாக ரேடியேஷனை உறிஞ்சும் ஆபத்து இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு முதல் தீவிரமான வளர்ச்சி குறைபாடுகள் வரை ஏற்படும்.

    நீல நிற ஒளி

    எலக்டிரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி எவ்வாறு ஒரு நபரை பாதிக்கிறது என்பதைப் பற்றி புதிதாகக் கூற எதுவுமே இல்லை. ஆனால் இது பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நல்ல தூக்கம், கண்கள் ஆரோக்கியம், நடத்தை, ஆற்றல் ஆகியவற்றுக்கு இரவுநேரத்தில் அனைத்து சாதனங்களையும் ஸ்விச் ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. பெரியவர்களை பாதிப்பதை விட இந்த செல்போன்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி குழந்தைகளை 45% அதிகமாக பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அவர்களின் உடலில் ஒரு விதமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.

    வெடிக்கும் ஆபத்து

    சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிக் கொண்டிருப்பது அல்லது நீண்ட நேரம் மொபைல் பயன்பாடு என்ற பல்வேறு காரணங்களால் செல்போன் பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு பேட்டரிகள் செயலிழந்து போவது, அல்லது தவறான சார்ஜர்களை பயன்படுத்துவது அல்லது சார்ஜ் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய மின்சார கோளாறு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பல முறை செல்போன் வெடித்து அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். எனவே செல்போன் பேட்டரிகள் ஆரோக்கியமாக இருப் பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். அதுமட்டு மில்லாமல் குழந்தைகளின் அருகில் எப்பொழுதும் செல்போன் சார்ஜ் செய்யக்கூடாது.

    • கண் பாதுகாப்பு குறித்துப் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
    • குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வைக் குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கணினியை பார்த்து கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள். இல்லையென்றால் கணினி, தொலைக்காட்சி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள். நம் முந்தைய தலைமுறையில் குழந்தைகள், இந்த அளவுக்குக் கண்ணாடி போடவில்லை.

    கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கியக் காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் 'டோபமைன்' என்ற வேதிப்பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது சூரிய ஒளி. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் 'டி' கண்களை சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும் கூட காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அந்த காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், வீட்டுக்கே வர மாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். கண் பாதுகாப்பு குறித்துப் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

    சமூக வலைத்தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணையம் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்ய வேண்டும். இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கெனவே, கிட்டப் பார்வைக்கு கண்ணாடி அணிந்திருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன்மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    • பிறந்த குழந்தையை அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம்.
    • பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும்.

    பிறந்த குழந்தையே ரோஜாப்பூ போன்று அழகாய் இருக்கும் போது அதை மேலும் அழகுப்படுத்தும் விதமாக கண் மையால் அழகுப்படுத்தும் அம்மாக்கள் அதிகம். பாரம்பரியமாக குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பது திருஷ்டியைக் கழிக்கும் என்று சொல்லிக் கொள்கிறோம். மூத்த முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு தேவையானவற்றைக் கூடுமான வரை அவர்களாகவே தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    பருத்தி துணியில் செய்யப்படும் லங்கோட்டாக்கள், உரை மருந்துகள், மசாஜ் செய்ய செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் இவற்றுக்கு மத்தியில் கண் ணுக்கு வைக்க கூடிய கண் மைகளையும் தயாரித்தார்கள். குட்டிக் கண்களுக்கு மையிட்டு கண்களை இன்னும் அழகாக காட்டுவதற்கு மை இட்டாலும் திருஷ்டி கழியவே கண் மை என்று சொல்வார்கள்.

    தற்போது எல்லாமே மாறிவிட்டது. கடைகளில் விற்கப்படும் கண்மையில் அதிக அளவு லெட் இருப்பதால் குழந்தையின் கண்களிலும், எலும்பு, மூளை பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. கண்மை தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் ரசாயனத் தன்மை கலந்திருப்பதால் சில குழந்தை களுக்கு கண் மை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்ணில் அலர்ஜி போன்றவை உண்டாகும் வாய்ப்புண்டு. மேலும் விரல் இடுக்குகளில் இருக்கும் தூசு, அழுக்கு போன்றவற்றாலும் தொற்றுப் பரவ நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் கண் மை எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. அதைத் தயாரிப்பதும் எளிதானதே.

    • கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
    • நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம்.

    ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    கண்தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும்வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப்பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம். புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சு கிருமித்தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியாது. இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களைக்கொண்டு, பார்வையிழந்த 2 பேருக்கு பார்வை கொடுக்க முடியும்.

    இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது. நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவி குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாக பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி?

    உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாக கொடுத்து உதவ வேண்டும். மண்ணில் புதைத்தவரை மீண்டும் இந்த உலகத்தை பார்க்க வைக்க, கண் தானத்தை தவிர வேறு சிறந்த வழி ஏது?

    • ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
    • ஐ மேக்கப்பை இரவில் முழுமையாக நீக்கி விட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.

    கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, ஒவ்வொரு பாகமாகப் பிரித்துப் பிரித்து வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம்னு பார்க்கலாம்.

    கண், புருவம்: தலையில் பொடுகு இருந்தால், அது உதிரும்போது புருவமுடிகளின் இடையில் சிக்கிக்கொள்ளும். இதேபோல முக பவுடர், தூசு போன்றவையும் புருவங்களில் சிக்கிவிடும். இதைச் சுத்தம் செய்யாதபட்சத்தில், இயற்கையாக அடர்ந்த புருவம் உள்ளவர்களுக்குக்கூட நாளடைவில் முடிகள் உதிர்ந்து, புருவம் மெல்லியதாகிவிடும். இதைத் தவிர்க்க, தினமும் குளிக்கும்போது விரல் நகங்களால் புருவத்தை மென்மையாக சுரண்டிவிட்டு, பின் சோப்பு போட்டு அலசுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

    தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில் கொஞ்சம் விளக்கெண்ணைய் ஊற்றி, அதற்குள் ஐபுரோ பென்சிலின் நுனி மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். தினமும் இரவு, புருவ முடி வளர்ந்துள்ள திசையிலேயே, இந்த பென்சிலைக் கொண்டு அழுத்தமாக வரைந்து, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். ஐபுரோ பென்சிலில் உள்ள லனொலின் மற்றும் விளக்கெண்ணெய் இவை இரண்டும் இணைந்து, மெல்லிய புருவங்களை அடர்த்தியாக்கவும், உதிர்ந்த புருவ முடியை திரும்ப வளரவைக்கவும் உதவும்.

    குறிப்பு: தினமும் புருவத்துக்கு ஐபுரோ பென்சில் போடும்போது, முடிகளில் மட்டும் இல்லாமல், சருமத்திலும் மை பட்டு, சருமத் துவாரங்கள் அடைத்துக்கொள்ளும். இதற்கு காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும் டிரான்ஸ்பரன்ட் மஸ்காராவை ஐபுரோவின் மேல் போட்டால், முடியைத் தவிர சருமத்தில் பட்டுள்ள மையை நீக்கிவிடும்.

    இமை முடி: ஐஸ்க்ரீம் செய்யத் தேவைப்படும் ஜெலட்டினை (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) பத்து நிமிடம் சுடு தண்ணீரில் போட்டால், ஜெல் போல் மாறிவிடும். இதில் பத்து கிராம் எடுத்து, இதனுடன் விளக்கெண்ணெய் ஒரு பத்து கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் இந்தக் கலவையை காட்டனில் தொட்டு கண்களில் ஒற்றி எடுத்து, பத்து நிமிடங்கள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இதை, தொடர்ந்து செய்தால், இமையில் முடிகள் வளர்வதுடன் கண்களும் பிரகாசமாக ஒளிரும்.

    கண் இமைகளின் மேல்தோலில் கருமையும், சுருக்கமும் ஏற்படுவதைத் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஐ மேக்கப் போட வேண்டிய கட்டாயம் இருந்தால், இரவு அதை முழுமையா அலசிவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.

    கருவளையம்: கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.

    • இந்த மசாஜை இரவு செய்து விட்டு படுக்கைக்கு செல்லுங்கள்.
    • இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

    காபித் தூளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட பகுதியைச் சரி செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய் கண்களின் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

    தேவையான பொருட்கள்

    காபி தூள் - 1/4 கப்,

    இனிப்பு பாதாம் எண்ணெய் - 1/2 கப்,

    ஆமணக்கு எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

    முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள். இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள். பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

    • அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
    • சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது.

    குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் முன், உங்களது கைகளை நன்றாகக் கழுவி கொள்ளுங்கள். சமையல் வேலை, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்துவிட்டு கைகளை சரியாக கழுவாமல் குழந்தைக்கு அருகில் வருவது சரியல்ல. சாஃப்ட் பருத்தி துணி அல்லது பஞ்சை இளஞ்சூடான தண்ணீரில் நனைத்து, கண்களை சுற்றி மெதுவாக துடைக்கவும்.

    கண்களில் அதிக நீர் வழிந்திருந்தாலும், அழுக்கு இருந்தாலும் மென்மையாகத் துடைத்து எடுக்கவும். குழந்தையின் சருமம் மிகவும் சென்ஸிடிவ் என்பதால், சோப், லிக்விட் சோப், ஃபேஸ்வாஷ் போன்ற எதுவும் பயன்படுத்த வேண்டாம். வெறும் தண்ணீரே போதுமானது. குழந்தையின் கண்களை சுத்தம் செய்யும் சமயத்தில், குழந்தையிடம் பேசுவது அல்லது பாடுவது போன்றவற்றை செய்யலாம். இதனால் குழந்தையின் கவனம் உங்கள் மீது இருக்கும். நீங்கள் எளிதில் குழந்தையின் கண்களை சுத்தம் செய்திட முடியும்.

    பஞ்சு அல்லது வெள்ளை பருத்தி துணியால், குழந்தையின் மூக்கு அருகில் உள்ள கண்ணின் ஓரப் பகுதியிலிருந்து குழந்தையின் கண்களின் வெளிப் பகுதியில் உள்ள ஓரப்பகுதி வரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். இரு கண்களுக்கும் இரண்டு பருத்தி துணி அல்லது பஞ்சை பயன்படுத்துங்கள். ஒரே துணி அல்லது பஞ்சால் சுத்தம் செய்தால், இந்த கண்களில் உள்ள தொற்று அடுத்த கண்ணுக்குப் பரவலாம். எனவே, இருவேறு துணிகள் அல்லது பஞ்சை பயன்படுத்துவது நல்லது.

    சில குழந்தைகளுக்கு கண்களை சுத்தம் செய்தாலே பிடிக்காது. வேண்டாம் என்ற எதிர்ப்பை காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் நீங்கள் இளஞ்சூடான தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்துவிட்டால் உடனடியாக சுத்தம் செய்து முடித்து விடலாம். குழந்தைகளும் அழுக மாட்டார்கள். சாதாரண தண்ணீரால் அவ்வளவு சீக்கிரம் சுத்தம் செய்ய முடியாது.

    அடிக்கடி கண்களை சுத்தம் செய்வதால், குழந்தைக்கு தொற்று வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை தொற்றோ காயமோ கண்களில் இருந்தால், அவற்றை சுத்தம் செய்யும் போது சுத்தமான பஞ்சை பயன்படுத்தி, அதை தூக்கி எறிந்து விடுங்கள். குழந்தையின் கண்களுக்கு உள்ளே சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டும். வெளிப்புறம், உள் ஓரம், வெளி ஓரம் சுத்தம் செய்தாலே போதுமானது. எப்போதும் இளஞ்சூடான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள். வெந்நீர் பயன்படுத்த கூடாது.

    6 + மாத குழந்தைகளுக்கு சமச்சீரான சத்துகள் உள்ள உணவுகளைக் கொடுக்கிறீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள். விட்டமின், தாதுக்கள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துகள் உள்ள உணவுகளை அன்றாடம் கொடுக்க வேண்டும். கண்களும் பார்வை திறனும் அப்போதுதான் நன்றாக இருக்கும். குழந்தைநல மருத்துவரிடம் சரியான இடைவெளிக்கு ஒருமுறை குழந்தையை காண்பியுங்கள். சில குழந்தைகளுக்கு அதிகமாக கண்ணீர் வழியலாம். அதே முறையாகத் தொடர்ந்து சுத்தம் செய்து வருவது நல்லது.

    • கண் சீரம் என்பது கண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக் கூடியது.
    • வீட்டிலேயே உங்கள் கண்களுக்கு ஏற்ற சீரத்தினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    கண்களுக்குக் கீழ் உள்ள சருமம் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக அளவில் கவனிப்புத் தேவைப்படுகிறது. ஆனால் இந்த பகுதிக்கு நாம் தேவையான அளவு கவனம் செலுத்துவதில்லை. இதனால் விரைவிலேயே வீங்கிய கண்கள், கரு வளையங்கள் மற்றும் சோர்வான கண்கள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    எனவே, உங்கள் கண்களைப் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கண் சீரம் என்பது கண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. நீங்கள் இதுவரை எந்த சீரமும் உபயோகிக்கவில்லை என்றால் வீட்டிலேயே உங்கள் கண்களுக்கு ஏற்ற சீரத்தினை தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    கரு வளையங்கள் ஏற்பட்ட கண்களுக்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் தேவைப்படுகிறது. ரோஸ்ஷிப் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் சருமத்தை ஈரப்பதமாக்கி கண்களைச் சுற்றியுள்ள இருண்ட வட்டங்களைச் சரி செய்து சுருங்கிய சருமத்தை சரி செய்ய உதவுகிறது. பாதாம் எண்ணெயில் உள்ள ரெட்டினோல் மற்றும் வைட்டமின் ஈ கண்களின் கீழ் உள்ள கருவளையங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகிறது. வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கண்களைச் சுற்றி இருக்கும் கரு வளையங்களைச் சரி செய்து சருமத்தினை புத்துயிர் பெறச் செய்ய உதவுகிறது.

    7 தேக்கரண்டியளவு இனிப்பு பாதாம் எண்ணெய், 5 தேக்கரண்டியளவு ரோஸ்ஷிப் எண்ணெய், 2 வைட்டமின் ஈ மாத்திரை எண்ணெய் எடுத்து பாட்டிலில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து ஷேக் செய்து கொள்ளுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன்பு இந்த கலவையை எடுத்து மெதுவாக கண்களைச் சுற்றித் தடவி மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் எழுந்து கழுவுங்கள். இதனை இரண்டு வாரம் தொடர்ந்து செய்வதினால் நல்ல மாற்றத்தினை விரைவில் காணலாம்.

    குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் கண்களில் ஏற்படும் தொற்று நியோனேட்டரம் எனப்படும். அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையின்மையை ஏற்படுத்திவிடும்.
    இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1,000 குழந்தைகளுக்கு 0.8 என்ற அளவில் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியன் குழந்தைகள் கண் பார்வை இல்லாமல் உள்ளனர். மேலும் 18 மில்லியன் குழந்தைகள் மிதமான மற்றும் கடுமையான பார்வைக் குறைபாட்டுடன் உள்ளனர்.

    அவர்களில் நான்கில் 3 பேர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கு குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1000-க்கு 1.5 என்ற அளவில் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு கார்னியா தொடர்பான பிரச்சினைகளே காரணமாக இருக்கிறது.

    கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது ஆஸ்டிஜிமாடிசம் (அருகாமை மற்றும் தொலைதூர பார்வை மங்கலாக தெரிவது) போன்ற ஒளிவிலகல் பிழைகள், கண்ணாடிகளை பயன்படுத்தாதது அல்லது முறையற்ற கண்ணாடியைப் பயன்படுத்துவது போன்றவையும் பார்வை இழப்பு பிரச்சினைக்கு வழிவகுக்கின்றன. அத்துடன் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக கற்றல் குறைபாடு பிரச் சினையை எதிர்கொள்ள நேரிடும்.

    அமெரிக்கன் அகாடமி ஆப் ஆப்தமாலஜி (ஏ.ஏ.ஓ) ஆய்வின் படி, குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தட்டம்மை நோய் பாதிப்பாகும். ஊட்டச்சத்து குறைபாடுதான் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடு கண் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. இரவில் பார்வை இழப்பு ஏற்படுவது வைட்டமின் ஏ குறைபாட்டுக்கான முக்கியமான அறிகுறியாகும். அதனை கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுத்துவிடும்.

    உலக சுகாதார அமைப்பின் கருத்து படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் குழந்தைகள் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள். அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்குள் பாதி பேர் இறந்து விடுகிறார்கள்.

    குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் கண்களில் ஏற்படும் தொற்று நியோனேட்டரம் எனப்படும். அதற்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையின்மையை ஏற்படுத்திவிடும். பொதுவாக வயதாகும்போது கண் புரை பிரச்சினை ஏற்படும் என்றாலும் பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு கண் புரை பாதிப்பு உண்டாகும். இதுவும் குழந்தை பருவ பார்வை இழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்.

    குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு மற்றொரு காரணம் கிளேகோமா ஆகும். கண்களில் உருவாகும் திரவ அழுத்தம் பார்வை நரம்புகளை சேதப்படுத்தும்போது இந்த பிரச்சினை உண்டாகும். பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் இந்த பாதிப்பை எதிர்கொள்வார்கள். ஆதலால் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்களில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதும் அவசியமானது.
    ×