search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
    • 24-ந்தேதி முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5 மணிக்கு தீபாராதனையும் மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி பூஜை தீபாராதனை நடக்கிறது. 23-ந்தேதி காலை 7 மணிக்கு பூர்ணகிரி, கோ பூஜை, தீபாராதனை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை ,தனலட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை இரவு 8 மணிக்கு வயலின் இசை நடக்கிறது. 24-ந்தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரியா பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலை பூஜை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ந்தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை கிரிய பூஜை காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடகம் எடுத்து வந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் அலங்கார தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தமும் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம் பி ,தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபி ஷேகத்தையொட்டி திருப்பணிகள் முடிந்து தற்போது கோவில் வளாகத் தில் 27 யாக குண்டங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடி மரத்தில் பொருத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல் பகுதி யில் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • 27 யாக குண்டங்கள் அமைப்பு
    • கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் கும்பாபி ஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. 5 மணிக்கு தீபாராதனையும் மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 8 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை பிரவேச பலி பூஜை தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி காலை 7 மணிக்கு பூர்ணகிரி, கோ பூஜை, தீபாராதனை மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை ,தனலட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை இரவு 8 மணிக்கு வயலின் இசை நடக்கிறது.

    24-ந்தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் காலயாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரியா பூஜை ஆரம்பம், காலை 10 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மாலை 6.30மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலை பூஜை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந்தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை கிரிய பூஜை காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடகம் எடுத்து வந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் அலங்கார தீபாராதனை அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தமும் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம் பி ,தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடு களை இணை ஆணை யர் ஞானசேகர் தலைமை யில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபி ஷேகத்தையொட்டி திருப்பணிகள் முடிந்து தற்போது கோவில் வளாகத் தில் 27 யாக குண்டங்கள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

    கொடிமரத்தை சுற்றி செம்பால் ஆன வெண்டயம் புதுப்பிக்கப்பட்டு கொடி மரத்தில் பொருத்தப்பட்டது. கொடி மரத்தின் மேல் பகுதி யில் நந்தி தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • திருஞானசம்பந்தருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
    • வருகிற மே மாதம் 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

    இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

    சட்ட நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை விரைந்து முடித்து மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில், வக்கீல் பாலாஜி, அரசு மருத்துவமனை மருந்தா–ளுநர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது.
    • வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதற்காக கடந்த சில நாட்களாக கோவில் முழுவதும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் இன்று காலை முதல் தொடங்கியது.

    காலை 9 மணி அளவில் மலைக்கோவிலில் உள்ள ராஜகோபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தாபனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமான பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சசை பூஜையும், அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு யாகசாலையில் தீப வழிபாடும் நடைபெறுகிறது. அதன்பின் மங்கள இசையுடன் பழனி கோவில் தவில் நாதஸ்வர குழுவின ர்களின் தீபத்திருமகள் வழிபாடு, திருவிள க்கேற்றுதல், கோவில் ஓதுவார் மூர்த்திகள் பண்ணிசை திருநேரிசை, 4-ம் திருமுறை, இறைவன் அனுமதி பெறுதல், முழு முதற்கடவுள், முதல்நிலை வழிபாடு, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருஒளி வழிபாடு, திருநீறு, அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் ஜனவரி 23ந் தேதி முதல் தொடங்குகிறது. தண்டாயுதபாணி சுவாமி கலசத்தில் ஆவாஹனம் செய்த பின் யாகசாலையில் எழுந்தருளுவார்.

    வருகிற 26ந் தேதி படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் அதுவரை பக்தர்கள் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுவார்கள். 27ந் தேதி நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவில் இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கும் நபர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கான அனுமதி அவரவர் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். அதனை கோவில் நிர்வாகத்திடம் காட்டி கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

    நாளை மாலைவரை மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலம் வருகை தருகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்கார் உறுதி தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19ந் தேதி) நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாக பூஜைகள் வருகிற 18ந் தேதி தொடங்குகிறது. 23ந் தேதி மாலை முதல் கால யாகை பூஜை அதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி ஆவாஹனம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பழனி கோவில் மண்டபத்தில யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகுறது.

    இதில் 90க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. யாகசாலையில் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தில கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலின் இணையதளம் மற்றும் இத்துறைக்கான வலைதளங்களில் பக்தர்கள் வருகிற 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முன்பதிவுக்கு பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போட், வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும். மேலும் செல்போன் எண்ணுடன் மின் அஞ்சல் முகவரி இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.

    21ந் தேதியன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு அந்த எண் அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். உறுதி செய்யப்பட்ட மின் அஞ்சல், குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் 23ந் தேதி முதல் 24ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அந்த கட்டணமில்லா சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு பின்பு வருபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் சேவைக்கு சலுகை வழங்கப்படாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே பழனி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்துக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தொடர் விடுமுறை என்பதாலும் கும்பாபிஷேகத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் பழனி முருகனை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது
    • கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில் உள்ளது.

    தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள்

    அமைந்துள்ளன. இந்த தலத்தில் சாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு

    அருள்பாலிக்கிறார். மேலும் காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது என்பது சிறப்பு

    அம்சமாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று

    வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் தரிசனம்

    செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சீர்காழியில் சட்டை நாதர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து வருகிற மே மாதம் 24-ந்தேதி

    குடமுழுக்கு விழா நடக்கிறது. முன்னாக 20-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கு

    குடமுழுக்கும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கும் நடைபெற உள்ளது. இதில்

    18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து சீர்காழி தமிழ்ச் சங்கத்தை ஆதீனம் தொடங்கி வைத்தார். பேட்டியின் போது தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத

    தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகி செந்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர்

    சரண்ராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், கோவி நடராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பூச்செடிகளை ஆதீனம் நட்டு வைத்தார்.

    • வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது.

    பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர். பின்னர் கருப்பணகவுண்டன்வலசு அருகே பைபாஸ் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கவும், அங்கிருந்து பழனி நகருக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பின்னர் கும்பாபிஷேகம் குறித்து கோவில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந்தேதி மாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மலைக்கோவிலில் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும். மேலும் 23-ந்தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின்பு வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் நடைபெறும். அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும்.

    இந்தவகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம். கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதிகளில் 18 பெரிய டி.வி.க்கள் மற்றும் கிரிவீதி, மத்திய பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் 8 எல்.இ.டி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும், மேலும், மின்பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் ரசீது வழங்க ஏதுவாக குறிப்பு காலத்தில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடவும்.

    அதேபோல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைப்பொருட்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி, தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு பதிவு செய்யும் அலுவலகத்தில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தினமும் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தலில் மக்களின் குறைதீர்த்து அருள்பாலித்து வரும் இசக்கியம்மன் (கிழக்கு) கோவில் உள்ளது. மூவேந்தர்கள் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை ஒற்றுமையாக்க தமிழ் மூதாட்டியான அவ்வை மன்னர்களை அழைத்து ஒரே இடத்தில் மூன்று பந்தல் அமைத்து அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை அகற்றி ஒரு சேர விருந்துண்ண வைத்து அளவளாவிய மகிழ்ச்சி பெற்ற சிறப்பு தலமே முப்பந்தல் ஆகும். அவ்வையின் வேண்டுகோளை ஏற்று பராசக்தியின் மறு உருவான இசக்கி என்ற இசக்கியம்மனை இங்கு அமர வைத்து கோவில் கொண்டதால் முப்பந்தல் சிறந்த புண்ணிய தலமானதாக கூறப்படுகிறது.

    இங்கு வந்து அம்மனை வழிபட்டால் தடைபட்டு வரும் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பகைமை விலகும், தீராத பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோவிலுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.

    இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு பூஜையும், தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. ஆடி மாத கொடை விழா இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்று. ஆரம்பத்தில் ஓட்டு கட்டிடத்தில் இருந்த இக்கோவில் கடந்த 2006-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று பெரிய அளவிலான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மீண்டும் அடுத்த கும்பாபிஷேகம் எப்போது? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    நாகர்கோவில் வடசேரி தேவி சுப்பிரமணியம்:-

    நான் 30 ஆண்டுகளாக கோவில் திருவிளக்கு பூஜை மகளிர் குழு தலைவராக உள்ளேன். தமிழ் மாத கடைசி செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். இந்த திருவிளக்கு பூஜை கொரோனாவிற்கு பிறகு தடைபட்டு விட்டது. அது தொடர்ந்து நடைபெற திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிறது. எனவே விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் செருப்புகளை பாதுகாக்கும் வசதியும், வெளியூர் பக்தர்களுக்காக தங்கும் வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னதானம் பெற வரிசையில் நிற்பவர்களுக்கு வெயில், மழை படாமல் இருக்க அப்பகுதியில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

    ஆரல்வாய்மொழி முருகேசன்:-

    நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் அருகே ஓட்டல் நடத்தி வருகிறேன். கோவிலுக்கு தினமும் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எண்ணம்.

    இதற்கிடையே கோவிலில் இதுதொடர்பாக வந்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனால் விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தங்குவதற்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தால் கோவிலுக்கு இன்னும் கூட்டம் அதிகமாக வரும். பூஜை நேரங்களில் கூட்டம் கோவில் முன்பு நிற்பதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதிகாரி விளக்கம்

    கோவில் செயல் அலுவலர் பொன்னி கூறுகையில், "இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு திருப்பணிகள் முடிவடைந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது தமிழக அரசின் உத்தரவுபடி கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்த கோவில்களுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான ஆயத்த பணிகள் நடந்துள்ளன. திருப்பணிகள் தொடர்பான மண்டல ஆய்வு குழு, மாநில ஆய்வு குழு களின் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேக திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி பெற்றவுடன் கும்பாபிஷேகம் நடைபெறும்" என்றார்.

    • வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
    • ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 27.01.2023 குடமுழுக்கு அன்று நடைபெறவுள்ளது.

    அதனையொட்டி இன்று நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவில் ராஜ கோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணிகள், ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மலைக் கோவில் நீராழி பத்தி மண்டபத்தினைச் சுற்றிலும் தற்போதுள்ள இரும்பு மற்றும் எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகளுக்கு பதிலாக கோவில் அமைப்பிற்கேற்றவாறு, பித்தளையிலான தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள் அமைத்தல், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நீராழிபத்தி மண்டபத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையில் இரும்பிலான தடுப்பு வேலிகளை அகற்றி பித்தளை கம்பி வேலி அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலியினை அகற்றி பித்தளையிலான பாதுகாப்பு வேலியினை அமைத்தல் ஆகிய திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பழமையான பெட்டி காளி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்டி காளியம்மன் கோவில் வீடு சேதமடைந்தது. இந்த கோவிலின் குடிமக்கள், ேகாவில் வீட்டை புதுப்பித்து கும்பாபிஷேக விழாவை நடத்தினர். கோவில் வீட்டில் பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரிய தேக்கு பெட்டியில் காளி வாசம் செய்வதாக ஐதீகமாகும். கும்பாபிஷேக விழாவிற்காக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பெட்டிக்காளிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 25-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
    • ஜனவரி 18-ந்தேதி பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது என கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், பழனி தண்டாயுதபாணிசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி காலை 9 மணிமுதல் பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன. ஜனவரி 23-ந்தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஜனவரி 26-ந்தேதி காலை 9.05 முதல் 11 மணிக்குள் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையடுத்து ஜனவரி 27-ந்தேதி காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் தங்ககோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார். கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அறங்காவலர் குழுவினர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

    • சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுகை சாலையில் செட்டி ஊரணி குளக்கரையில் தென்புறம் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் அருகில் யாகசாலை அமைத்து மூன்று கால பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர் .பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

    ×