search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    • தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

    சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத் தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.

    இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதி களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கீழ்தளத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் மழை தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலமாக வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று மழை பாதிப்பு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அதிகா ரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை வெள்ளத்தில் நாய், பூனை போன்ற விலங்குகளும் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசு கிறது. அந்த பகுதியில் மின் கம்பிகளும் பொது மக்களை அச்சுறுத்தம் வகையில் இருப்பதாகவும் அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது.

    இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று புழல் பகுதியில் மட்டும் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    இதனால் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று காலை 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலை சென்று அடைகிறது.

    இதனால் தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள சாமியார் மடம், வட பெரும் பாக்கம், வடகரை ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியி ருப்புகளில் புகுந்து பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விளாங்காடுபாக்கத்தில் உள்ள மல்லிகாநகர் நியூ ஸ்டார் சிட்டி விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் மற்றும் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி, விவேக் நகர் ஆகிய நகரங்களில் வெள்ள நீர்புகுந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புழல் விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள மல்லிகா கார்டன், தாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    குறிப்பாக நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம் அந்த பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் அப்பகுதி மக்களை அச்சு றுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடிவு காலம் பிறக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு மழை காலத்திற்குள்ளாவது தங்களது பகுதியில் நீடிக்கும் வெள்ள பாதிப்புகளை மாதவரம் எம்.எல்.ஏ. சுதர் சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகி யோர் தீர்த்து வைப்பார் களா? என்றும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    விளாங்காடுபாக்கம் ஊருக்குள்ளும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

    இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கால்வாயை முறையாக பராமரிக்காததால் அதில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
    • மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    வடசென்னை பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கி றது. புழல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மற்றும் சென்ட்ரம் பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. செங்குன்றம் பகுதியில் இருந்து அப்பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரே இந்த பகுதியில் வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

    செங்குன்றத்தில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் புள்ளிலைன், தீர்த்தங்கரைப்பட்டு, அழிஞ்சிவாக்கம் வழியாக விளாங்காடுப்பாக்கம் ஊரை ஒட்டி செல்கிறது.

    மேற்கண்ட பகுதிகளில் இருந்து கால்வாயில் இரு புறமும் அடித்து வரப்படும் வெள்ளம் விளாங்காடுப்பாக்கம் ஆர்.சி.குடியிருப்பு அருகே ஒன்றாக சேர்ந்து அங்கிருந்து கொசப்பூர் கால்வாயை சென்றடைய வேண்டும்.

    இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் அதில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    இந்த கால்வாயால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளால் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த கால்வாய் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாய் என்றும், அதனை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டியது பொதுப்பணித்துறை அதிகாரிகளே என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், பொது மக்களின் நலன் கருதி முன்கூட்டியே வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருந்ல் இதுபோன்ற பாதிப்புகளை தடுத்திருக்கலாம் என்றே அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும் போது, "மாதவரம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி பகுதிகள் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளாகும். எனவே மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுராஜ் ஆகியோரும் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் ஆர்.சி.குடியிருப்புக்கு அருகில் கால்வாய் கரையில் ஏற்பட்ட உடைப்பை விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

    இருப்பினும் இந்த கால்வாயில் பல இடங்களில் கரைகள் பலமின்றி உடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று பாரதி சரவணன் தெரிவித்தார்.

    தற்போது தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • 2002 பருவமழையின் போது 753 பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
    • சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனே வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் பருவமழை தொடர்ந்து பெய்து வந்த போதிலும் சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்குவது இல்லை. கடந்த காலங்களில் பருவமழையின் போது பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சென்னையில் இனி மழைநீர் தேங்காமல் சீராக செல்ல மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி 2 வருடமாக நடந்து முடிந்து உள்ளது. புதிதாக விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சியின் நடவடிக்கையால் சென்னையில் இந்த பருவமழைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரையில் பெய்த மழையால் 54 இடங்களில் மழைநீர் தேங்குவது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    அதனால் மழைநீர் தேங்கும் என்று எதிர்பார்த்த 54 இடங்களில் 37 பகுதிகளில் மட்டுமே தேங்கியது என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    2002, பருவமழையின் போது 753 பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதுவே 2022-ல் 354 ஆக குறைந்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதனால் சாலை கள், தெருக்களில் தேங்கி நிற்க கூடிய மழைநீர் தற்போது உடனே வடிந்து விடுகிறது. மிக கனமழை பெய்தால் கூட அடுத்த சில மணி நேரங்களில் மழைநீர் வடிந்துவிடும்.

    இந்த ஆண்டு 54 பகுதிகளில் வெள்ளம் தேங்கும் என்று கண்டறியப்பட்ட நிலையில் அதற்கும் குறைவாக 37 இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. அதனையும் விரைவில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    மழைநீர் தேங்கும் பகுதிகளில் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. சுரங்கப்பாதைகளில் மழை உடனே வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.
    • வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தத நிலையில் நெல்லையை அடுத்துள்ள மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள குளம் நிறைந்து கரை உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதையடுத்து வீடுகளில் உள்ள பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே குளம் உடைந்து வெள்ளநீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்ததால் 500 ஏக்கர் நிலங்கள் மூழ்கியது.

    தொடர்ந்து அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில் மணல் மூடைகள் வைத்து அடைக்கப்பட்டது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்பகுதியில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

    மழையால் சங்கரன்கோவில் டவுன் பகுதியில் ஒரு வீடும், தாலுகா பகுதியில் 2 வீடுகள் என மொத்தம் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. ஓட்டு வீடுகள் என்பதால் தொடர்ந்து பெய்த மழையால் சுவர் நனைந்து இடிந்துள்ளது. ஏற்கனவே வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    அதேபோல் அங்குள்ள அய்யாபுரம் சாய மலை வலசை கிராமத்தில் 15 வருடங்களுக்கு பின்னர் குளம் நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளில் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழையால் அங்கு விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி காணப்படுகிறது.

    தூத்துக்குடி மாநகரில் நேற்று முதல் பெய்த மழை காரணமாக உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரெயில்வே நிலையம் செல்லும் சாலை, ரெயில்வே தண்டவாளம், ரெயில்வே பணிமனை, வ.உ.சி.சாலை, ஜார்ஜ் ரோடு, பழைய மாநகராட்சி அலுவலக பகுதி, தமிழ்நாடு சுற்றுலா மாளிகை, சிவந்தாகுளம், லெவிஞ்சிபுரம், முத்தையாபுரம், ஸ்பிக்நகர், முள்ளக்காடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
    • அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதள பரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது.

    அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்பகாட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தொடர் மழை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்ற நிலையில் வெள்ள அபாயத்திலிருந்து பொது மக்களை காப்பாற்ற நாகை மாவட்ட காவல்துறையின் சார்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஅறிவுறுத்தலின்படி மீட்பு பணிகள் மேற்கொள்ள காவல்துறையினரைக் கொண்டு பேரிடர் மீட்புக் குழு அமைத்து 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அமைக்கப்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா என நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

    மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.

    அவசர உதவிக்கு உங்கள் நாகை போலீஸ் சூப்பிரண்ட்யிடம் பேசுங்கள் என 84281 03090 என்ற எண்ணையும் வெளியிட்டார். 

    • கிண்டி ரேஸ்கோர்ஸ் வழியாக செல்லும் 5 பர்லாங் சாலையில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை கொட்டியது. இரவில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

    வடசென்னை பகுதிகளை விட தென்சென்னை பகுதிகளில் அதிகளவு மழை பதிவாகி உள்ளது. ஆலந்தூர், பெருங்குடி, மீனம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    பெரிய அளவில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. கிண்டி கத்திப்பாரா அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன.

    பரங்கிமலை-மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளும் நடப்பதால் மழை தண்ணீர் எங்கும் செல்ல முடியாமல் ரோடுகளில் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.

    கிண்டி ரேஸ்கோர்ஸ் வழியாக செல்லும் 5 பர்லாங் சாலையில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதற்கு 140 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவருடன் அமைந்து உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்குள் தேங்கிய மழை நீரை மோட்டார்கள் மூலம் மழை நீர் கால்வாய்க்குள் வெளியேற்றியதே காரணம் என்று மாநகராட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    இவ்வாறு தண்ணீரை வெளியேற்றி விட மாநகராட்சியில் அனுமதி எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

    வளசரவாக்கம், நங்கநல்லூர், முகப்பேர், புரசைவாக்கம் டானா தெரு பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், வேகத்தடை அமைந்துள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    விட்டு விட்டு மழை பெய்வதால் தண்ணீர் வடிந்து விடுகிறது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் இந்த சிறு மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் ரோடுகள் சிதைந்து குண்டும் குழியுமாகி விட்டன. ஒரு மாதத்துக்கு முன்பு சீரமைத்த ரோடுகள் கூட சிதைந்து விட்டதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டார்கள்.

    வேளச்சேரி தண்டீஸ்வரம் ரோட்டில் வழக்கமாக அதிக அளவு தண்ணீர் தேங்கும். ஆனால் இப்போது மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டிருப்பதால் சிறிதளவு தண்ணீர் தேக்கம் இருந்தது. அதுவும் சிறிது நேரத்தில் வடிந்து விட்டது.

    மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    பேரிடர் மேலாண்மை துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து தண்ணீர் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த ஆண்டுகளை விட தண்ணீர் தேக்கம் பெருமளவு குறைந்து விட்டது. வேளச்சேரி மெயின்ரோடு, ஏ.ஜி.எஸ். காலனி 4 மற்றும் 5வது தெரு ஆகிய பகுதிகள் அதிக அளவு தண்ணீர் தேங்கும் பகுதிகளாக இருந்தன. அந்த நிலை இல்லை என்றார்.

    • திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வயல் வழியில் வெள்ளம் செல்கிறது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு, ஒருநூறாம்வயல், கற்றுவா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழையும், கனமழையும் பெய்து வருவதால், நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.இதனால் ஆறுகள், கால்வாய்கள், குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பிரதான, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குமரியில் உள்ள பிரதான அணை களான பேச்சி பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு -1,சிற்றாறு -2 ஆகிய அணைகள் முழு கொள்ள ளவை எட்டி வருகிறது.மேலும் அதிக அளவில் வெள்ளம் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.இந் நிலையில் சிதறால் மலை கோயிலை அடுத்த திக்குறிச்சி ஏலா பகுதியில் 40 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாழை மரச்சீனி, தென்னை ஆகியவை மூழ்கியுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதி உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வயல் வழியில் வெள்ளம் செல்கிறது. இதனால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
    • வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி?

    தஞ்சாவூர்:

    பேரிடர்களினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 1989-ம் ஆண்டு முதல் அக்டோபர் 13-ம் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக ஐக்கிய நாடு பொது சபையினால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    பேரிடர்களின் தன்மையை அறிந்து அதன் அபாயத்தை எவ்வாறு குறைப்பது, பேரிடர் காலத்தில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

    இந்த நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

    இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியானது தஞ்சாவூர் அழகி குளத்தில் முடிவடைந்தது.

    மன்னர் சரபோஜி கல்லூரி , பாரத் கல்லூரி, மருதுபாண்டியர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி, டாக்டர் நல்லி குப்புசாமி மகளிர் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ- மாணவிகள் பேரிடர் குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.

    பேரணியின் முடிவில் அழகிகுளத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியினை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி, செல்வம் மற்றும் தீயணைப்பு, மீட்புத்துறையினர், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் ஆத்தபுத்திரா தன்னார்வலர்களுடன் இணைந்து வழங்கினார்கள்.

    இதில் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு செயல்களை பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் செய்து காண்பித்தனர்.

    இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி, தாசில்தார் சீமான், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர் , ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ், 108 ஆம்புலன்ஸ் மேலாளர் விமல், பேரிடர் பயிற்றுனர்கள் பெஞ்சமின், சுரேஷ், மாநகர உறுப்பினர் செந்தில்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    காங்டாக்:

    வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது.

    இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுங்தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்லி,பாக்யாங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. தீஸ்தா ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல பாலங்கள் இடிந்தது.

    பர்டாங் என்ற இடத்தில் 23 ராணுவ வீரர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் வெள்ளத்தோடு வெள்ளமாக சென்றது. இதையடுத்து மீட்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. இதில் பலர் சடலமாக மீட்கப்பட்டனர்.

    கடந்த 3 நாட்களில் சிக்கிமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளம் தீஸ்தா ஆற்றில் இருந்து ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் இறந்துவிட்டதாக அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.

    இன்னும் 140 -க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அம்மாநில முதல் - மந்திரி பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    லாச்சென் மற்றும் லாச்சுங் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி தவிக்கும் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் இந்திய விமான படையை சேர்ந்த ராணுவ ஹெலி காப்டர்கள் பயன்படுத்தபட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மங்கன் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் 5 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.
    • நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்நகரமே முடங்கி போய்விட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.

    நியூயார்க் நகரை பொறுத்தவரை ரெயில் போக்குவரத்து மிக முக்கியமாக உள்ளது. சுமார் 420 ரெயில் நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.

    இந்த ரெயில் நிலையங்களில் பயணிகள் செல்வதற்காக சுரங்கபாதைகள் உள்ளன. பலத்த மழையால் இந்த சுரங்க பாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் பயணிகள் நடந்து சென்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மேற்கூரைகளில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியது. இதனால் ரெயில் நிலைய சுரங்கபாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள்.

    நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    ×