search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், நேபாளத்தில் இருந்து 10 டன் தக்காளியை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் செய்துள்ளது. அந்த தக்காளி, இன்றும், நாளையும் உத்தரபிரதேசத்தில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

    வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    • கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.
    • உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு நேற்று ஓரே நாளில் தக்காளி வரத்து 130 டன்களாக அதிகரித்தது. இதனால், நாட்டுத்தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக சரிந்தது.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், கோவை க்கு வழக்கமாக வரும் உள்ளூர் தக்காளிகளின் வரத்து குறைவாக இருந்தது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து இருந்தது.

    இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கோவைக்கு உள்ளூர் தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தக்காளியின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை விலை குறைந்து வருகிறது.

    இதுகுறித்து கோவை தியாகி குமரன் மார்க்கெட்டின் அனைத்து மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு தக்காளி வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.

    நேற்று எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு உள்ளூர் பகுதிகளில் இருந்து நாட்டுத்தக்காளி 100 டன்னும், தியாகி குமரன் மார்க்கெட்டுக்கு 30 டன்னும் வந்துள்ளது.

    அதே சமயம் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆப்பிள் தக்காளி வரத்து குறைந்துள்ளது. நாட்டுத் தக்காளி கிலோ ரூ.50, ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும்.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை சரிந்து வருகிறது.

    வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். விலை உச்சத்தில் இருந்தபோது 20 முதல் 30 லாரிகள் என்ற அளவிலேயே தக்காளி வரத்து இருந்தன.

    இப்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது.

    மேலும் தக்காளி வரத்தும் கடந்த சில நாட்களாக சராசரியாக 35 லாரிகளாக வரத் தொடங்கியது.

    இதற்கிடையே இன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. விலை அதிகரிப்புக்கு பிறகு கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் தக்காளி வரத்து 40 லாரியாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தக்காளி விலை மேலும் குறைந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.200 வரை சென்று உச்சம் தொட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை மேலும் படிப்படியாக குறைந்து வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
    • இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது.
    • தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    போரூர்:

    தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது. கிலோ ரூ.200-வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் இறங்கி வருவதால் இல்லத்தரசிகள் இப்போது நிம்மதி அடைந்து உள்ளனர்.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வழக்கமாக 60 லாரிகளுக்கு மேல் தக்காளி வரும். கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது. 25 லாரிகளே சராசரியாக வந்தன. இதனால் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

    தற்போது வடமாநிலங்களில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லாததாலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் வடமாநில வியாபாரிகளின் தக்காளி கொள்முதல் குறைந்ததாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    இப்போது 30 லாரிகளுக்கு மேல் தக்காளி வரத்து நீடித்து வருகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன.

    இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சுமார் 40 நாட்களை கடந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தக்காளியின் விலை தற்போது குறைந்து அனைத்து இடங்களிலும் ரூ.100-க்கு கீழ் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    காய்கறிகளில் பீன்ஸ் கிலோ ரூ.70-க்கும், கேரட் ரூ.60க்கு விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கும் கீழ் உள்ளது. அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய்-ரூ.30, உஜாலா கத்தரிக்காய்- ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது.

    • ஒரு கிலோ ரூ.120 ஆக குறைந்தது
    • கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருந்தது. தக்காளியின் உற்பத்தி குறைந்ததையடுத்து விலை உயர்ந்து காணப்பட்டது. விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது.

    ரேஷன் கடைகள் மூல மாகவும், தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்திற்கு ஏற்கனவே குமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக இங்கிருந்து தக்காளி விற்பனைக்கு வரவில்லை. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளியின் விலை தினமும் ஏறுமுகமாக காணப்பட்டது.

    அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை உயர்ந்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளியின் பயன்பாட்டை குறைத்தனர். தற்போது தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கி யுள்ளது. ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடியிலிருந்து தக்காளி விற்பனைக்காக வர தொடங்கியதையடுத்து விலை குறைய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே ஆரல்வாய்மொழி, பணகுடி பகுதியில் இருந்து 5 பாக்ஸ் தக்காளிகள் வந்த நிலையில் தற்போது 100 பாக்ஸ் தக்காளி விற்பனைக்கு வருகிறது. உள்ளூரில் இருந்து தக்காளிகள் வரத் தொடங்கியதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 1 கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. மிளகாய், கத்தரிக்காய், கேரட், பீன்ஸ் விலை குறைந்துள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, தக்காளி ரூ.120, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70, வழுதலங்காய் ரூ.50, சேனை ரூ.70, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.25, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50.

    • கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'திடீர்' மழை மற்றும் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழ் குறைந்தால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை அரசு தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 30 லாரிகளுக்கும் மேல் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதனால் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் சரியத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து உள்ளதால் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளிலும் தக்காளி விலை குறையத்தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த வாரத்தில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்து இருந்தது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி விலை குறையத்தொடங்கி விட்டன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. மற்ற பச்சை காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கு கீழ் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டல்களிலும் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலையை காண முடிகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். ஓட்டல்களிலும் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலையை காண முடிகிறது. தக்காளி சட்னியை மக்கள் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு காய்கறி சந்தையில் தக்காளி ஒன்றிற்கு ரூ.17 என விற்கப்பட்டுள்ளது. அதற்கான 'பில்' தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள சந்தையில் காய்கறி வாங்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வியாபாரியிடம் தக்காளியின் விலை கேட்டுள்ளார். பின்னர் விலைக்கேற்ப ஒரே ஒரு தக்காளியை மட்டும் வாங்கிய அவருக்கு இந்த 'பில்' வழங்கப்பட்டுள்ளது. அந்த 'பில்'லை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து 'பில்' வைரலாகி வருகிறது. இதைபார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • தக்காளி விலை உயர்சை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மயிலாடுதுறை:

    தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையுடன் இணைந்து 10 கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தக்காளி விற்பனையை மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேலாண்மை இயக்குனர் அண்ணாமலை, மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தொடர் மழை, நோய் தொற்றால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • விலை குறைந்து ரூ. 40 முதல் 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தருமபுரி,  

    தமிழ் நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும்.

    ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. நாடு முழுவதும் தொடர் மழை, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறையவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளி விலை தொடர்ந்து 40-வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து தருமபுரியில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. நேற்று உழவர் சந்தையில் 68 ரூபாய்க்கு விற்ற நிலையில் தக்காளி இன்று சற்று விலை குறைந்து ரூ. 40 முதல் 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் தக்காளி நிறுத்தப்ப ட்டுள்ளது. தக்காளி விலை குறைந்தாலும் வெளி மார்க்கெட்டில் விலையை குறைக்க வியாபாரி களுக்கு மனம் இல்லாததால் கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

    • தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார்.
    • விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தக்காளி விவசாயி சந்திக்கும் சூழல்களை விளக்கும் குறும்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

    பல குறும்படங்களை இயக்கிய அப்துல்மஜீத் இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்ட முத்துநகர் திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் முருகேசன், நடிகர்கள் முருகேசன், ஜாகிர் உசேன், சக்திவேல், தங்கராஜ், டேனியல் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அத்திமரபட்டி வயல்வெளிகளில் நடத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார். விலை இல்லை என்று மறு வருடம் மாற்றுப்பயிர் விதைக்கிறார். ஆனால் தக்காளி விலை கூடுகிறது.

    இதனால் விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    • தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.
    • அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

    திருப்பதி:

    தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதேபோல் தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் ஒரே மாதத்தில் லட்சாதிபதிகளாகவும்,கோடீஸ்வரர்களாகவும் மாறி உள்ளனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து சந்தைகளில் விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.

    தங்கம், வெள்ளி திருடிய திருட்டு கும்பல் தக்காளி பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.

    சித்தூர் மற்றும் அன்னமய்யா மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது.

    அன்னமய்யா மாவட்டம் நெக்குண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.

    நேற்று மர்ம நபர்கள் இரவோடு இரவாக தோட்டத்தில் புகுந்து 450 கிலோ தக்காளி திருடி சென்றுவிட்டனர்.

    இதேபோல் மதனப்பள்ளி மார்க்கெட் பகுதியில் கடையில் கதவை உடைத்து திருட்டு கும்பல் புகுந்தனர்.

    அங்கிருந்த 50 கிலோ தக்காளியை திருடி சென்றனர்.

    சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த நக்க பண்டாவை சேர்ந்தவர் லோகராஜ். இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் இருந்த தக்காளியை அறுவடை செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்தார்.

    பின்னர் தக்காளி விற்பனையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். கஞ்சா போதையில் இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் லோகராஜை வழிமறித்தனர்.

    பீர் பாட்டிலால் லோகராஜ் மீது சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.4.50 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து லோகராஜ் புங்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சித்தூர் மற்றும் அன்னமய மாவட்டத்தில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் தக்காளி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ×