search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைமுருகன்"

    முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை என்றார் அமைச்சர் துரைமுருகன்.
    தேனி:

    கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையே, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். அணையைப் பார்வையிட்டபின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முல்லைப் பெரியாறு அணை

    தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை. இப்போது போராட்டம் நடத்துகிறார்களா?

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை.

    முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை. 80 வயதிலும் நான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன்.

    30 ஆண்டு சராசரி கணக்கீட்டு படி நவம்பர் 30-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கலாம் என தெரிவித்தார்.

    தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்று முதல்வருக்கு துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளதை பார்கும்போதே நமக்கு வெற்றி உறுதி என்பது தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும்போது, வீடற்ற 25ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார். நீங்கள் என்ன மந்திரியான்னு கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார்.

    மக்களுக்கு செய்ய வேண்டிய மந்திரிகளே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கனும் போல் உள்ளது. அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை தி.மு.க.விற்கு அழைத்து வந்து விட்டோம்.

    கருணாநிதி இலவச மின்சாரத்தை தந்தார். அதை ஜெயலலிதா ரத்து செய்ய முயற்சித்தபோது நாங்கள் போராடி அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம். புகழூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதற்கான திட்ட அறிக்கையை காட்டுங்க, எப்ப நிதி ஒதுக்கீடு செய்தீங்க? பொய் சொல்லி மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்ட சபையில் எங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.


    இந்த இடைத்தேர்தலோடு அவரின் முதல்வர் பதவி முடிவுக்கு வரப்போகிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னதுக்கே சசிகலா அவரின் முதல்வர் பதவியை பறித்து விட்டார்.

    ஆனால் நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம். மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் வங்கி வாசலில் மக்களை நிறுத்தியதால் அவரது ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் முடிவு கட்ட உள்ளனர்.

    ஸ்டாலின் முதல்வரானால் 100 நாள் திட்டத்தின் வேலை நாட்கள் உயர்த்தப்படுவதுடன் 5 பவுனுக்கு கீழான நகை கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

    துரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது.

    இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் வீட்டிற்கு செல்வார்கள் என பிரசார கூட்டத்தில் துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தெற்கு மாவட்ட சார்பில் மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கனிமொழிக்கு பிரசாரம் செய்ய தூத்துக்குடிக்கு நான் வந்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி தொகுதி ஒதுக்கப்பட்டு பணியாற்ற வேண்டியது இருந்ததால் வரமுடியவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கன்னியாகுமரியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்றும் சென்னையில் அவருக்கு பல தொகுதிகள் இருந்தும் நான் தூத்துக்குடியில் நின்றால் சரியாக வரும் என்று சொன்னேன். காய்ந்த பகுதியாக இருக்கும் தொகுதியை வளமான தொகுதியாக மாற்றும் திறமை கனிமொழிக்கு உண்டு என்று கருதினேன்.

    கே.வி.கே. சாமி பெயரை சொன்னால் வீரம் கொப்பளிக்கும். தன்னடக்கம், எடுத்தேன், கவிழ்த்தேன் என்றில்லாமல் இரக்ககுணம் கொண்டவர் கனிமொழி. சோதனைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தவர். பாராளுமன்றத்திற்கு செல்பவர்கள் இந்தி அல்லது ஆங்கிலம் பேச தெரியனும். கனிமொழி சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர். பெண்ணுரிமைக்காக போராடுபவர்.

    இங்குள்ள குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும், தொழிற்பேட்டை அமைக்கவும் கனிமொழியால் தான் முடியும். நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் முருகன் பெயரை கொண்டவர்கள். அவர்கள் வெற்றிப் பெறுவார்கள். இது பெரிய பஞ்சாயத்தாக இருப்பதால் நகராட்சியாக கூட மாற்றலாம்.

    பெண்கள் ஓரமாக ஒதுங்கி இருந்த காலம் மாறி இப்போது ஆண்கள் ஒதுங்கி இருக்கும் நிலை வந்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். காரணம் கேஸ் விலை உயர்வு என பல உள்ளன. தேர்தல் முடிவுக்கு பிறகு மோடியும், எடப்பாடியும் வீட்டிற்கு செல்வார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கனவு காணலாம். நீங்கள் இனி ஆட்சிக்கு வருவதற்கு கனவே காணமுடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நான் இங்கு போட்டியிட்டதற்கு காரணம் துரைமுருகன் தான். மக்களைப்பற்றி கவலைப்படாத முதல்வர் எடப்பாடி, ஓ.பி.எஸ்., ஆகியோர் எம்.எல்.ஏவாக இருப்பதற்கு கூட தகுதி இல்லாதவர்கள். பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக நடந்த பாலியல் கொடுமை ஏராளம். அதனால் சிலர் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்தனர். அரசு முறையாக எந்த நடிவடிக்கையும் எடுக்காமல் புகார் கொடுக்க சென்ற பெண்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மிரட்டல் இப்படி ஒரு ஆட்சி தேவையா? ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லி பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு இதுதானா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று ஓ.பி.எஸ். கூறினார். இப்படி தன்னை ஆளாக்கிய தலைமைக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். #DMK #DuraiMurugan
    தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார் என்று துரைமுருகன் பேசியுள்ளார். #duraimurugan #mkstalin #dmk #edappadipalanisamy
    கோவை:

    சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் சூலூரில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வுக்கு நிகரான கட்சி இந்தியாவில் எங்கும் இல்லை. எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை ஆட்டி பார்க்க முடியவில்லை. பண பலம், போலீஸ் பலம் என அனைத்தும் வைத்துள்ள அ.தி.மு.க.வினர் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்ட முடிந்ததா?.

    மத்திய, மாநில ஆட்சிகளை ஒரே நேரத்தில் தூக்கி எறியும் சக்தியை கலைஞர் பெற்றிருந்தார். இப்போது தலைவர் இல்லாத நேரத்தில் யார் பிரதமர் என்பதை சொல்லும் சக்தியை தளபதி பிடித்துள்ளார். தளபதியின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக பார்க்கிறேன். கண்ணை மூடினால் கலைஞராக தோன்றுகிறார்.

    கலைஞரிடத்தில் கற்ற வரம் தமிழகத்தில் தளபதிக்கு கிடைத்துள்ளது. தளபதி 50 ஆண்டுகள் ஆட்சி புரிவார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 37 எம்.பி. தொகுதிகள் தளபதியின் கையில் வந்து விடும். ஒன்று அல்லது இரண்டில் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 5 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தான் ஆட்சி கிடைக்கும் என்பதால் தான் மீண்டும் 3 எம்.எல்.ஏ.க்களை களை எடுக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சூலூரில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என கோடிகளை இறக்கி உள்ளனர். கோவை மக்கள் பணத்திற்கு மோசம் போக மாட்டார்கள். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 100 சதவீதம் வெற்றி பெறுகிறோம். சூலூரையும் ஜெயித்து காட்டுங்கள். கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று கூறினார் எடப்பாடி. உலகத்தில் மோடியை போல் வெறுப்பை பெற்ற பிரதமர் யாருமே கிடையாது. மீண்டும் பிரதமராக வர மோடிக்கு வாய்ப்பே இல்லை. 

    தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார். ராகுல் பிரதமராக அமர்வார். 

    இவ்வாறு அவர் பேசினார். #duraimurugan #mkstalin #dmk #edappadipalanisamy
    தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
    வேலூர்:

    காட்பாடியில் டான் போஸ்கோ பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம். நடுநிலையோடு செயல்படுகின்ற சி.பி.ஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்க கூடாது.

    இதுவரையில் தேர்தல் கட்டங்களில் எதிர் கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டு ஏவியது கிடையாது. இந்தியாவில் இதுவே முதல் முறை. நிர்வாகம் நீதிமன்றம், சட்டமன்றம் தனியாக இயங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம்.

    தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது சர்வாதிகார போக்கின் முதற்கட்டம். இது தவிர்க்கப்பட வேண்டும். வாக்குபதிவு சமயத்தில் கூட வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
    பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார்.  

    வேலூர் தொகுதியில் முதல்கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.

    கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார்.



    இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர் ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி இருந்தது. கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்பிதல் அளித்தார்.

    இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #VelloreLSpolls #KathirAnand #Duraimurugan #VelloreITraids #LSPolls2019
    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #EC #VelloreConstituency
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் முன்னாள் அமைச்சரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, டி.டி. வி.தினகரன் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார்கள்.

    மொத்தம் 23 வேட்பாளர்கள் வேலூர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    வெற்றியை பறிக்க அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. வார்டு வாரியாக பணம் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மறுநாள் (30-ந்தேதி)யும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது.

    சோதனையின்போது கணக்கில் இல்லாத 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    இந்த சோதனைக்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வேலூரில் தேர்தலை நிறுத்த திட்டமிட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை கைவிடவில்லை. துரை முருகனின் கல்லூரி, பள்ளியிலும் சோதனை நடத்தினார்கள்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி காட்பாடி அருகே தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அருகில் உள்ள சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகள், அட்டை பெட்டிகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அந்த பணத்தை கணக்கிட்டபோது 11 கோடியே 48 லட்சம் ரூபாய் இருந்தது. ஒவ்வொரு பணக்கட்டு மீதும் வார்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தன. எனவே அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    பணம் பதுக்கி வைத்திருந்த தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் மீது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து பூஞ்சோலை சீனிவாசனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி கணவர் தாமோதரன் ஆகியோர் மீது தலா 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்வது பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் இது தொடர்பாக காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி னார்கள்.

    முடிவில் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கதிர்ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் தொகுதியில் பணப்பட்டு வாடா செய்ய ஏற்பாடுகள் நடந்து இருப்பது உறுதியானதால், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் சிக்கியது பற்றிய தகவல் அறிக்கையை வருமான வரித்துறையிடம் இருந்து தமிழக தேர்தல் ஆணையம் பெற்றது.

    அந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் வேலூர் தொகுதி நிலவரம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது.

    இந்த விவகாரத்தில் நேற்று மதியம் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கு திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் நேற்று மாலை இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பியது.

    இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற திடீர் பரபரப்பு உருவானது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தனது வேட்பு மனுவில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் பணப்பட்டுவாடாவுக்கு கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

    தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்ட அறிவிக்கையில் ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்து போட்டு இருப்பதால் அதை ரத்து செய்ய ஒப்புதல் கேட்டு ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்று காலை வரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ரத்து தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்று காலை தேர்தல் ஆணையம் அதை மறுத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி சரண் கூறியதாவது:-

    வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவையும் தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #EC #VelloreConstituency

    வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல என்று பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #DuraiMurugan #Kathiranand
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-

    தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.

    வழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

    தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை இடமாறி என்னிடம் கேட்டுவிட்டீர்கள் என்றார்.


    வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் குடியாத்தம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand
    ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை என்னை காரணம் காட்டி நிறுத்திவிடலாம் என நினைக்கின்றனர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். #DuraiMurugan #DMK

    ஆம்பூர்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஆம்பூரில் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

    வருமானவரித் துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர்களின் ஒருவர் வீட்டிலும் இதுவரை சோதனை நடத்தவில்லை. எனது வீட்டில் நடந்த சோதனையில் என்னுடைய மகன் கதிர்ஆனந்தை சாப்பிட விடாமலும், கழிப்பறைக்கு கூட செல்ல விடாமலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதை பார்த்த என்னுடைய மனைவி நமக்கு இருப்பது ஒரே ஒரு மகன். அவருக்கு இந்த எம்.பி. பதவியெல்லாம் வேண்டாம். அவரை விட்டு விடுங்கள் என்று கண்ணீர் வீட்டார். அந்த கண்ணீருக்கு அனைவரும் பதில் சொல்லியே தீர வேண்டும்.


    தேர்தலில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் இருவரும் பிரசாரம் செய்யட்டும், மக்கள் வாக்களிக்கட்டும், வெற்றி பெறுபவர் பாராளுமன்றம் செல்லட்டும். இது நியாயம். ஆனால் குத்து சண்டையில் ஒரு போட்டியாளரின் கையையும், காலையும் கட்டிப்போட்டு விட்டு அதன் மூலம்தான் வெற்றி பெற்றதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்.

    அதுபோல எங்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த செய்து, தேர்தல் பணிகளை முடக்கி விட்டு அதன் மூலம் தேர்தலில் வீழ்த்தி விட்டோம் என்று கூறுவது நியாயமாக இருக்காது. ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.

    அதனால் இந்த 2 சட்டமன்ற இடைத்தேர்தலையும் என்னை காரணம் காட்டி நிறுத்திவிடலாம் என நினைக்கின்றனர். எனது மகன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாக பணியாற்றி தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார். #DuraiMurugan #DMK

    காட்பாடியில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்று தி.மு.க.வினருக்கு தெரியும் என்று வேலூரில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். #vijayaprabhakaran #duraimurugan

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்தார்.

    வேலூர் எங்க அம்மாவோட சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் ஒரே மருமகன் விஜயகாந்த் தான். தற்போது ‘டாக் ஆப் தி டவுன்’ என வேலூரை தான் அழைக்கிறார்கள். வேலூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக மாறிவிட்டது. ஏனென்றால் ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அது யாருடையது என்று உங்களுக்கே தெரியும்.

    விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் சீண்டி பார்த்து விட்டார். அதன் விளைவை தெரிந்து கொண்டிருப்பார். ஸ்டாலின் சொல்கிறார் எங்களுக்கு மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை என்று. இதை விஜயகாந்த் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனம் இருக்கிறது. அதனால் தான் மாட்டிக் கொண்டீர்கள். ஏ.சி.சண்முகம் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவார்.

    ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். என்னிடம் கூட சிலர் ஸ்டாலினை பற்றி கேட்டார்கள். நான் அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்று கூறினேன். எதை எடுத்தாலும் அதை எதிர்த்தால் அவர்கள் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கனுமோ அதை தான் எதிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாடு வளரும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் தான் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று விஜயகாந்த் கூறினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், தே.மு.தி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். #vijayaprabhakaran #duraimurugan

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Duraimurugan #DMK #Raid

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    வருமான வரித்துறை அதிகாரிகளும், தேர்தல் பறக்கும் படையினரும் காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இல்லம் மற்றும் வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியிலும் சென்று வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் அதிரடியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் தேர்தல் நடவடிக்கையை முடக்கும் வகையிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. வருமான வரித்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருவது ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் மத்திய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறிவிட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.


    தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை அமைந்துள்ளது. தேர்தல் காலங்களில் எதிர்க் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களை அச்சுறுத்தும் போக்கினை வருமான வரித்துறை கைவிடவேண்டும். ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் மூலம் வருமான வரி சோதனை நடத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    தி.மு.க. பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரை முருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருவது கண்டனத்திற்குரியது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து மத்திய அரசு காபந்து அரசாக செயல்படும் நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையை ஏவிவிட்டு தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் சோதனை நடத்துவதுஎன்பது அப்பட்டமான ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் ஏற்பட விருக்கும் தோல்வி குறித்த பயத்திலும் விரக்தியிலும் மத்திய அரசில் இருக்கும் பாஜக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி துறையின் சோதனை என்ற பெயரில் பயத்தையும் பதட்டத்தையும் உருவாக்க நினைப்பது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Duraimurugan #DMK #Raid

    ×