search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காபி"

    • நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள்.
    • இதய துடிப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

    ஒரு காபி குடிச்சாத் தான் வேலை செய்ய மூடு வரும் என்று, செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே அரை குறையாக போட்டுவிட்டு எழுந்து சென்று காபி குடித்து விட்டு வருபவர்களை பார்க்கலாம்.

    வேலைக்கு புறப்பட்டு செல்லும்போதும், சரி திரும்பி வரும்போது சரி டீ கடை ஓரத்தில் வண்டியை நிறுத்தி ஒரு டீயோ அல்லது காபியோ குடித்துவிட்டுத் தான் உற்சாகமாக புறப்படுவார்கள்.

    காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்வதற்குள் எப்படியும் ஐந்தாறு காபி குடித்து விடுவேன் என்று சொல்லும் பலரை தினமும் பார்த்து இருப்போம்.

    ஆனால் அந்த காபிக்குள் உற்சாகம் மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விவகாரமும் ஒளிந்து இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.

    டெல்லியில் அமெரிக்கன் கல்லூரியின் இதயவியல் துறையில் நடந்த கருத்தரங்கில் இந்த அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தினமும் 4 காபி குடிப்பதே இதயக்கோளாறுக்கு வழிவகுக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

    நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். அதிகப்படியான டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு 400 மில்லி காபியின் நுகர்வு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும். இது உடலின் 'பாராசிம்பேடிக்' அமைப்பை தொந்தரவு செய்யலாம். இது உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும்.

    இதய துடிப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள். காபி, டீ மற்றும் பெப்சி, ரெட் புல், மான்ஸ்டர் ஆகிய பானங்களை அடிக்கடி குடிக்கும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள். அதில் பலருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.

    இந்த ஆய்வின் போது பெண்களிடமும் அதிக அளவு காபி அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. நகர வாழ்க்கை முறை மற்றும் தொழில் ரீதியான பழக்கங்கள் தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

    • டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது.
    • காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    1950... இரண்டாம் உலகபோர் முடிந்து ஜப்பான் மறுசீரமைக்கபட்டது. பொருளாதாரம் முன்னேறி வந்தது. நெஸ்லே கம்பனி ஜப்பானில் காபி விற்பனை செய்யலாம் என முனைந்தது. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. ஜப்பானியர்கள் க்ரீன் டீ பிரியர்கள். நாள் முழுக்க ஏராளமான க்ரீன் டீ குடிப்பார்களே ஒழிய காபி குடிக்க மாட்டார்கள்.

    ஜப்பானியர்களுக்கு காபி குடிக்க கொடுத்து சோதனை செய்தார்கள். காபி குடித்த ஜப்பானியர்கள் "ஆகா, அருமை, அற்புதம்" என்றார்கள். அதன்பின் நெஸ்கபே ஜப்பானில் ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான பொருள்செலவில் விளம்பரம், கடைகளில் ஸ்டாக் எல்லாம் செய்தும் விற்பனை சுத்தமாக இல்லை.

    காபியை குடிக்க சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கு என்கிறார்கள். ஆனால் அதன்பின் பழைய வழக்கமான க்ரீன் டீக்கு போய்விடுகிறார்கள். காபியை குடிப்பது இல்லை. இவர்களை என்ன செய்வது?

    பிரபல மனிதவியல் நிபுணர், மனநல நிபுணர் க்லோடேர் ராபில்லியை அழைத்து வந்து ஐடியா கேட்டார்கள்.

    "இப்ப அமெரிக்காவில் எல்லாரும் காபி குடிக்கிறீர்கள். திடீர்னு க்ரீன் டீக்கு மாற சொன்னால் மாறுவீர்களா?"

    "அது எப்படி மாறுவோம்?"

    "அந்த மாதிரிதான். க்ரீன் டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையை குறிவைத்தால், அவர்களை காபிக்கு பழக்கபடுத்தலாம். அதற்கு ஒரு பத்து ஆண்டுகளாவது ஆகும். காத்திருக்க தயாரா?"

    "தயார். என்ன செய்யவேண்டும்"

    "குழந்தைகளுக்கு காபி மிட்டாய்களை அறிமுகபடுத்துங்கள். தினமும் அவர்கள் காபிக்கு பழக்கபடுத்தினால், திரவமாக அதை பின்னாளில் சந்தைப்படுத்துவது எளிது"

    நெஸ்கபே அதன்பின் காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்து ஆண்டுகள் பொறுத்திருந்து இன்ஸ்டன்ட் காபியை அறிமுகபடுத்த, இளைய தலைமுறையிடம் பெரிய ஹிட் ஆனது

    காபிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கொகோகோலா கம்பனி, கேன் வடிவில் ஜார்ஜியா ஐஸ் காபி எனும் பானத்தை அறிமுகபடுத்தியது. கேன்களில் கிடைத்த குளிர்ந்த ஐஸ் காப்பியை இளைஞர்கள் வாங்கி குடித்தார்கள். இன்று கொகோகோலாவை விட அதிகமாக விற்கும் பானமாக ஜார்ஜியா ஐஸ் காபி மாறியது

    பன்னாட்டு பிசினஸ்பிஸ்தாக்கள் நீண்டகால ஆட்டத்தை ஆடுவதில் கைதேர்ந்தவர்கள். ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கத்தை ஒரே தலைமுறையில் மாற்றுவது என்றால் சும்மாவா என்ன?

    பொறுத்தார் பூமி ஆள்வார்

    - நியாண்டர் செல்வன்

    • டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.
    • ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. 150 மில்லி கிராம் காபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது. டீயில் 30-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது.

    ஆகவே ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர், காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    ஏனெனில் உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் டீ, காபி போன்ற பானங்களால் தடைப்படக்கூடும் எனவும் இதனால் அனீமியா, ரத்த சோகை போன்ற உடல் நலக்குறைபாடு ஏற்படலாம் எனவும் அதிகளவில் காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

    அதே சமயம் பால் இல்லாமல் தேநீர் அருந்துவதால் ரத்த ஓட்டம் சீராகிறது எனவும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பு குறைகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தேநீர் மற்றும் காபி குடிப்பதை கட்டுப்படுத்தி, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைவான அளவே எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது.
    • தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புனே:

    பலரும் விரும்பி பருகும் பானங்களில் காபி முதன்மையானது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிட்டாலும் பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்திய காபி வெளிநாடுகளுக்கு செல்கிறது.

    இந்நிலையில் உலக அளவில் பிரேசில், வியட்நாமில் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கர்நாடகாவின் சிக்கமளூருவில் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து தரமான காபி கொட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளனர். ரோபஸ்டா மற்றும் பீப்ரி ரக காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.580 ஆக இருந்தது. தற்போது இது ரூ.64 முதல் ரூ.650 வரை விற்கப்படுகிறது.

    ரொபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா ரக விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மாதம் காபி விலை உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சில சிறிய காபி விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டனர்.

    காபி விளையும் சிக்கமகளூரு பகுதிகளில் காலநிலை மாற்றமும் உற்பத்தியை பாதித்துள்ளது. பூக்கும் நாட்களில் பருவமழை பெய்ததால் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விளைச்சல் குறைந்துள்ளதாக காபி எஸ்டேட் ஊழியர்கள் கூறுகின்றனர்.

    இந்தியாவில் 70 சதவீத காபி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    காபி உற்பத்தியாகும் பகுதிகளில் பழங்கள் சரியாக பழுக்காததால் வழக்கமான 2 அறுவடைகளுக்குப் பதிலாக 4 சுற்றுகள் தேர்ந்தெடுத்து அறுவடை செய்துள்ளனர். பிரேசிலின் அராபிகா காபி விலைகள் சர்வதேச சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளன. இருப்பினும், உள்நாட்டு சந்தையில் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சில நிறுவனங்கள் கடந்த ஆண்டு 200 கிராம் ஜாடியின் விலை 280 ரூபாயில் இருந்து அதே ஜாடியின் விலையை 360 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த காலாண்டில் மேலும் 10 சதவீதம் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அரேபிகாவிற்கும் ரொபஸ்டாவிற்கும் இடையேயான விலை வேறுபாடு குறைந்துள்ளதால், அராபிகா ரக காபியை மக்கள் விரும்புவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    காபி பயிரிடுதற்கு தொழிலாளர் செலவில் இருந்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் வரை அதிகரித்து உள்ளது. ஆனால் அரபிகா காபி விலை கடந்த ஆண்டை விட இப்போது கொஞ்சம் குறைவாக உள்ளது. வணிகர்கள் அதை பொதுவாக மொத்தமாக வாங்குகிறார்கள், எனவே விலை உயரும் சூழல் உள்ளது என்று என்று கர்நாடக காபி தோட்டக்காரர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில அரசு திறந்து விட மறுப்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் கருகி வருவதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆரம்பத்தில் காபியை குடிக்கவில்லை; அப்படியே சாப்பிட்டார்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள்.
    • கச்சா எண்ணெயை அடுத்து உலக நாடுகளிடையே அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் காபிதான்.

    தேநீருக்கு அடுத்து உலகில் அதிகம் பேர் சுவைக்கும் உற்சாக பானமான காபி பற்றி சில தகவல்கள்...

    * எத்தியோப்பிய ஆடு மேய்ப்பவர்கள்தான் முதன்முதலில் காபி தரும் உற்சாகத்தை அறிந்தவர்கள். அவர்கள் மேய்த்த ஆடுகள், காபி கொட்டையை பழத்தோடு தின்றதும் உற்சாகமாக நடனம் புரிவதைப் பார்த்தனர். 'இதற்குள் ஏதோ இருக்கிறது' என காபி கொட்டையை மனிதர்கள் தின்பதற்கு வழிகாட்டியவர்கள் அவர்களே..!

    * ஆரம்பத்தில் காபியை குடிக்கவில்லை; அப்படியே சாப்பிட்டார்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள். காபி கொட்டை மீது கொழுப்பு நிறைந்த உணவுகளைப் பூசி, உடலுக்கு சக்தி தரும் உற்சாக உருண்டையாக மென்று சாப்பிட்டார்கள்.

    * பூமத்திய ரேகையை ஒட்டிய மற்றும் கீழே இருக்கும் நாடுகளில்தான் காபி விளைகிறது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் மட்டும் காபி பயிரிடப்படுகிறது.

    * 1675-ம் ஆண்டில் இங்கிலாந்தில் காபி ஷாப்களுக்கு மன்னர் தடை விதித்தார். அங்கே பலரும் கூடி தனக்கு எதிராக சதி செய்வதாக அவர் பயந்தார்.

    * உலகில் 70 சதவீதம் மக்கள் அராபிகா காபியையும், 30 சதவீதம் மக்கள் ரோபஸ்டா காபியையும் அருந்துகிறார்கள். ரோபஸ்டாவில் கசப்பு கொஞ்சம் அதிகம்.

    * காபிச்செடி 30 அடி உயரத்துக்கு வளரக்கூடியது. ஆனால் காபிக்கொட்டைகளைப் பறிப்பது சிரமம் என்பதால், 10 அடி தாண்டி வளர விடுவதில்லை.

    * தயாரிக்கும் முறையைப் பொறுத்து அமெரிக்கானோ, எஸ்பிரஸோ, மோச்சா, கப்புசினோ என பல ரகங்கள் காபியில் உண்டு.

    * கச்சா எண்ணெயை அடுத்து உலக நாடுகளிடையே அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள், காபிதான்..!

    * காபியில் இருக்கும் 'கஃபைன்' நமது உடலுக்குள் போனதும் டோபமைன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அதோடு பிட்யூட்டரி சுரப்பியும் தூண்டப்பட, அது அட்ரினல் சுரப்பிக்கு அர்ஜன்ட் மெசேஜ் அனுப்புகிறது. இதையடுத்து அது அட்ரினலினை அதிகமாக சுரந்து உடலுக்குள் பாய்ச்சுகிறது. காபி குடித்ததும் உற்சாகம் பிறக்கக் காரணம் இதுதான்!

    • காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.
    • கோத்தகிரி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    கோத்தகிரி பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை 6 மாதங்கள் பெய்வது வழக்கம். இதை பயன்படுத்தி குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பணப்பயிரான காபி, தேயிலை, குறுமிளகு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    குறிப்பாக காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.வழக்கமாக மே மாதம் கோடை மழையை தொடர்ந்து காபி செடிகள் பூக்க தொடங்கி விடும். அதன் பின்னர் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து காபி விளைச்சல் இருக்கும்.

    பின்னர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காபி அறுவடை சீசன் தொடங்கும். இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காபி செடிகள் பூத்துக்குலுங்கி உள்ளதோடு, காய் பிடிக்க தொடங்கி உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி மேலும் விளைச்சலும் அதிகரித்து வருகிறது.

    தற்போது மாமரம் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் காய்கள் கொத்து கொத்தாக காய்த்து உள்ளன. உரிய விலை கிடைக்கும் பட்சத்தில், விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோத்தகிரி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இது காபி செடிகளுக்கு உகந்ததாக உள்ளது. இதன் மூலம் காபி விளைச்சல் அதிகரித்து வருவதுடன், காபி செடிகளில் காய்கள் காய்த்து குலுங்கி வருகிறது. இதனால் காபி பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா, ராமச்சந்திரன், இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காபி’ படத்தின் முன்னோட்டம்.
    ‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.

    நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை சொல்லும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கை கட்டப்பட்ட நிலையில் இனியா நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றது.
    ×